Sunday, November 23, 2014

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம்

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம் 


रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥११- २२॥

ருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |
க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||


ருத்ரா = ருத்திரர்களும்
ஆதித்யா = ஆதித்தன் வழி வந்தவர்களும்
வஸவோ = வசுக்களும்
யே = அவர்களும்
ச = மேலும்

ஸாத்யா =  சாத்யர்களும்

விஸ்²வே = அனைத்து கடவுள்களும்

அஸ்விநௌ = அஸ்வினி குமாரர்களும்

மருதஸ் = காற்றின் கடவுளும்

ச = மேலும்

உஷ்மபாஸ் = அக்னி கடவ்ளும்

ச = மேலும்

கந்தர்வ = கந்தர்வர்களும்

யக்ஷாஸுர = யக்ஷர்களும் அசுரர்களும்

ஸித்த = சித்தர்களும்

ஸங்கா = கூட்டம்

வீக்ஷந்தே = பார்க்கிறார்கள்


த்வாம் = உன்னை

விஸ்மித்தாஸ் = ஆச்சர்யத்துடன்

ச = மேலும்

இவ = நிச்சயமாக

ஸர்வே = அனைத்தையும்


ருத்திரர்களும், ஆதித்யன் வழி வந்தவர்களும் , வசுக்களும், சாத்யர், விசுக்களும் , அசுவினி தேவர்களும் , காற்று மற்றும் அக்னி தேவர்களும் , கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் என்று அனைத்து கூட்டத்தாரும் உன்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் 

எல்லோருக்குமே ஆச்சரியம்.

ஏன் ஆச்சரியம் ?

புரியாதது புரியும்போது அட, இது இப்படியா இருக்கிறது என்று ஆச்சரியம் விளையும்.

அறியும் வரைதானே ஆச்சரியம் இருக்க வேண்டும். மேலே கூறியவர்கள் விஸ்வரூபத்தை  அறியாதவர்களா ? பின் ஏன் ஆச்சர்யம் ?

ஆச்சர்யம் ஏன் என்றால், அவர்களால் அதை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை .

அறிய அறிய மேலும் மேலும் புதிதாக ஏதோ தோன்றிக் கொண்டே இருப்பதால் அவர்களின் ஆச்சர்யம் தீரவில்லை.

உயிர்ப்புள்ள எதுவும் மாறிக் கொண்டே இருக்கும். உயிரில்லாதது மாறாமல் அப்படியே இருக்கும்.

உண்மையான ரோஜா மாறிக் கொண்டே இருக்கும்.

காகிதப் பூ என்றும் அப்படியே இருக்கும்.

விஸ்வரூபம் என்பது உயிருள்ளதது. நாளும் விரிந்து கொண்டே போவது.

எனவே ஆச்சர்யம் தொடர்கிறது.



Saturday, November 22, 2014

கீதை - 11.21 - எல்லோரும் உன்னை அடைகின்றனர்

கீதை - 11.21 - எல்லோரும் உன்னை அடைகின்றனர் 


अमी हि त्वां सुरसंघा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसंघाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥११- २१॥

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா⁴ விஸ²ந்தி கேசித்³பீ⁴தா: ப்ராஞ்ஜலயோ க்³ருணந்தி |

ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்³த⁴ஸங்கா⁴: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி

அமீ = அவர்கள்

ஹி = நிச்சயமாக

த்வாம் = உன்னை

ஸுர ஸங்கா = தேவர்களின் கூட்டம் (சுர - அசுர )

விஸ²ந்தி = அடைகிறார்கள் 

கேசித் = வேறு சிலரோ

பீ⁴தா: = பயத்தில்

ப்ராஞ்ஜலயோ = ப்ர + அஞ்சலி = கூப்பிய கைகளோடு - வணங்கிக் கொண்டு 

க்³ருணந்தி = போற்றி

ஸ்வஸ்தி = மங்களம் உண்டாகட்டும் என்று

இதி = இப்படி

யுக்த்வா  = கூறிக் கொண்டு (வாக் = வாக்கு , வார்த்தை )

மஹர்ஷி = மகரிஷிகள்

ஸித்த = சித்தர்கள்

ஸங்கா = கூட்டம்

ஸ்துவந்தி  = போற்றி

த்வாம் = உன்னை

ஸ்துதிபி: = துதி செய்து கொண்டு

புஷ்கலாபி = உரத்து சொல்லிக் கொண்டு


தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுகின்றது. சிலர் பயம் கொண்டு உன்னை கை தொழுது உன்னை புகழ்கின்றனர். மகரிஷிகளும், சித்தர்களும் உன்னை உரத்த குரலில் தொழுது அடைகின்றனர். 


மூன்று வகையான விஸ்வரூப தரிசனங்களை எங்கே கீதை சொல்கிறது.

முதலாவது......

கடவுளை நாம் எப்போது நினைக்கிறோம் ?

துன்பம் வரும்போது, பயம் வரும்போது கடவுளை நினைக்கிறோம்.

நம்மால் முடியாது என்ற நிலை வரும் போது கடவுளை நினைக்கிறோம்.

மனித சக்தியை மீறிய ஒன்று இருக்கிறது என்ற நினைவு வரும்போது கடவுள் நினைவு வருகிறது.

அதை கடவுள் என்று சொல்லாவிட்டாலும் விதி, இயற்கை , மனிதனை மீறிய சக்தி என்று  பல பெயர்களில் கூறுகிறோம்.

இது ஒரு வகையில், இந்த உலகம் என்பது என்னைத் தாண்டி விரிந்து பட்டது என்று அறிய  உதவுகிறது. இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தில் நான் ஒரு சின்ன துகள். இந்த பிரமாண்டத்தின் முன் நான் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு வர உதவுகிறது.

இது ஒரு வகை விஸ்வரூப தரிசனம். இதைத்தான் 

நான், என் திறமை, என் சாமர்த்தியம் , என் சமர்த்து என்ற நிலை கடந்து என்னால் ஆவது  ஒன்றும் இல்லை அறிவது.

இதைத்தான் "சிலர் உன் மீது பயம் கொண்டு உன்னை கைதொழுது அடைகிறார்கள்" என்கிறது கீதை.

அறியாமையினால் பயம் வருகிறது.


இன்னொரு வகையான விஸ்வரூப தரிசனம் எது வென்றால் , படித்து அறிந்து,  தெளிந்து அதை உணர்வது.

இந்த உலகம் தோன்றியது எப்படி, அதன் பிரமாண்டம், அதன் விரிந்துபட்ட வடிவம் , இதில் நம் நிலை என்று அறிந்து அந்த பிரமாண்டத்தை அறிவது இன்னொரு வகையான  விஸ்வரூப தரிசனம். இது அறிவின் பாற்பட்டது. அறிவு சலனம் கொண்டது. சந்தேகம் கொண்டது. ஒரு நாள் தெளியும், மறு நாள் சந்தேகம் கொள்ளும். தெளிவுக்கும், சந்தேகத்திற்கும் இடையே தர்க்கம் பண்ணிக்  கொண்டே இருக்கும். இந்த தர்க்கம் தான் இரைச்சல், கேள்வி, பதில், வாதம், பிரதி வாதம் என்று நீண்டு கொண்டே போகிறது.

இதைத்தான் கீதை "ரிஷிகளும், சித்தர்களும் உரத்த குரலில் கூறிக் கொண்டே உன்னை அடைகிறார்கள் " என்கிறது.

பூஜை, பஜனை, பாடல், ஆடல், திருவிழா, சடங்குகள், சம்ப்ரதாயங்கள், மந்திர உச்சாடனங்கள்  என்ற ஆரவாரம் கொண்டது.

இது இன்னொரு வகை.

மூன்றாவது வகை, இந்த விசவரூபத்தை அறிந்து, தெளிந்து, சந்தேகம் இல்லாமல், சப்த்தம் இல்லாமல் இது தான் உண்மை என்று அறிந்து அதில் இரண்டற கலப்பது. இன்னும் சொல்லப் போனால் அது வேறு தான் வேறு என்ற வித்யாசம் மறைந்து ஒன்றாகி விடுவது.  இதைத்தான் "தேவர்களின் கூட்டம் உன்னுள்ளே புகுகிறது" என்கிறது கீதை.

அவர்கள் இரண்டற கலக்கிறார்கள்.  புகுந்து விடுகிறார்கள். அந்த விஸ்வரோபத்தில் அவர்களும்  ஒரு பகுதியாகி விடுகிறார்கள்.

பயத்தினால் , அறியாமையினால் தன்னை காக்க வேண்டி அந்த உணர்வு பெறுவது ஒரு வகை.

அறிவின் துணை கொண்டு, இது இப்படித்தான் இருக்குமோ என்று உணரத் தலைப் படுவது இன்னொரு வகை.

பரிபூர்ணமாக உணர்ந்து, அதில் இரண்டற கலப்பது என்பது மூன்றாவது வகை.

பயம், அறியாமை, அறிவு, தெளிவு என்று இந்த பிரமாண்டத்தை அறியும் படிகள்  இவை.

மேலும் அறிவோம்....




Tuesday, October 28, 2014

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து 


द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥११- २०॥

த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் ||

த்யாவா ப்ருதிவ்யோ = தியா என்றால்  தீபம்.ஒளி.  ஒளி வீசும் விண்ணுக்கும்; ப்ரித்வி என்றால் நிலம். பூமி. ஆகாயத்திற்கும் பூமிக்கும்

இதம் = இந்த 

அந்தரம் = உள்ளே 

ஹி = நிச்சயமாக

வ்யாப்தம் = வியாபித்து , நிறைந்து

த்வயை = உன்னால்

ஏகேன = ஒருவனாய்

திஸ = திசைகளிலும்

ச = மேலும்

ஸர்வா:  = அனைத்து

த்ருஷ்ட = காணும் 

ஆத்புதம்  = அற்புதம்

ரூபம் = வடிவம்

உக்ரம்  = உக்கிரமான

லோகத்ரயம்= மூன்று உலகங்களிலும்

ப்ரவ்யதி²தம் = நடுங்கும்படி

மஹாத்மந் = உயர்ந்த

விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒன்றாய் நிறைந்த உன் உக்கிரமான வடிவைப் பார்த்து மூன்று உலகங்களும் நடுங்குகின்றன 

நீங்கள் இருக்கும் அறை . அதையும் மற்ற அறைகளையும் சேர்த்து உங்கள் வீடு. உங்கள் வீட்டையும், மற்ற வீடுகளையும் சேர்த்து உங்கள் apartment . உங்கள் அபர்த்மென்ட் -டையும் மற்றவற்றையும் சேர்த்து உங்கள் தெரு. உங்கள் தெரு போல  பல தெருக்கள் சேர்த்த உங்கள் இடம் அல்லது ஊர். உங்கள் ஊரோடு பல  ஊர்கள் சேர்ந்து உங்கள் நாடு.

உங்கள் நாட்டைப் போல பல நாடுகள் சேர்ந்து இந்த பூமி. உங்கள் பூமியைப்   போல  பல கிரகங்கள் சேர்ந்து இந்த சூரிய குடும்பம். உங்கள் சூரிய குடும்பம் போல  சூரிய குடும்பங்கள் சேர்ந்து உங்கள் பால் வெளி என்று இந்த உலகம  விரிந்து கொண்டே போகிறது.

மாடியில் இருந்து பார்த்து பார்த்தால் அறைகள் தெரியாது...வீடுகள் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால் வீடுகள் தெரியாது, நகரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் நகரம் தெரியாது நாடு தெரியும்.

இப்படி நம் பார்வை விசாலமாக விசாலமாக மேடு பள்ளங்கள், ஏற்றத் தாழ்வுகள்  மறைந்து அனைத்தும் சமம் என்று தோன்றும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உள்ள அனைத்தும் ஒரு  சக்தியின் வெளிப்பாடு  என்று பார்க்கும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அது நிறைந்து  நிற்கிறது. எங்கும் வியாபித்து நிற்கிறது.

மாமன், மச்சான், குரு, தாத்தா, என்று பிரித்துப் பார்த்த அர்ஜுனன் இப்போது  சேர்த்துப்  பார்க்கிறான். எங்கும் நிறைந்து நிற்கும் ஒன்றைப் பார்க்கும் போது அவனுக்கு  நடுக்கம் வருகிறது. இதுவரை கண்டிராத ஒன்று.

அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வரூப தரிசனம்.

சூரியனையும், சந்திரனையும், கிரகங்களையும், பால்வெளியையும் ஒன்றாக  சேர்த்து பாருங்கள்.

எவ்வளவு பெரிய பிரமாண்டம். அதை நினைக்கும் போது அர்ஜுனனக்கு நடுக்கம் வருக்கிறது .

இதுவரை அப்படி அவன் பார்த்தது இல்லை.

தான் பெரிய வில்லாளி, அழகன் என்ற ஆணவம் எல்லாம் அவனை விட்டுப் போகிறது. நடுங்குகிறான். இதன் முன்னால் நாம் ஒன்றும் இல்லை என்ற பயம் வருகிறது.

அவன் மட்டும் என்ன ?  நாமும்தான்.

உலகை பிரித்து பிரித்து பார்த்தே நாம் பழகி விட்டோம். சேர்த்துப் பார்க்க பழகுவோம்.

சேரச் சேர அதன் பிரமாண்டம் தெரியும். நம் ஆணவம் விலகும்.  பணிவு வரும். எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றுமை உணர்வு வளரும்.

உள்ளே போகப் போக ஆத்மா என்ற ஒன்றை அடைவோம்.

அதை உணர்வது கடினம் ஏன் என்றால் அதை பார்க்க முடியாது.

உள்ளே செல்லும் பார்வையை வெளியே செலுத்தினால் உலகம் விரிந்து கொண்டே போகும்.

அந்த பிரமாண்டம்தான் விஸ்வரூபம்.

நம் பார்வை விரியட்டும்.

விஸ்வரூபம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. நாம் தான் நம் பார்வையை குறுக்கிக் கொண்டு  அதை உணர்வதை தவிர்க்கிறோம்.

நீங்கள் நினைத்தால் இன்றே அந்த விஸ்வரூப தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


கீதை - 11.19 - சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு

கீதை - 11.19 -  சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு   


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

----------------------------------/ சூரியனையும் சந்திரனையும் கண்களாக/---------------------

சூரியனையும் சந்திரனையும் கண்களாக என்றால் ஏதோ நிஜமாகவே ஒரு கண்ணு சூரியன் போல  பெரிதாக, நெருப்பாக இருக்கும், இன்னொரு கண்ணு    சந்திரனைப்போல  சின்னதாக குளிர்ச்சியாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல. அப்படி இருந்தால்  பார்க்க சகிக்குமா ?

அதன் அர்த்தம் என்ன ?

இரவு பகல் என்று அனைத்து நேரங்களிலும் சர்வ சாட்சியாக இருப்பவன் அவன். யாரும் பார்க்கவில்லை என்று தவறு செய்யக் கூடாது. சூரியனோ, சந்திரனோ சாட்சியாக இருக்கும் வரை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கக் கூடாது.

கோவலன் வெட்டுப் பட்டான். அவன் குற்றமற்றவனா இல்லையா என்று என்று  உலகுக்கு எப்படி அறிவிப்பது ?

 கண்ணகி கேட்கிறாள் , யாரிடம் தெரியுமா ?

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-

என்று கதிரவனிடம் கேட்கிறாள். அவன் தான் எல்லாவற்றிற்கும் சாட்சி. 

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு பார்வையாளனாக நின்று வேடிக்கை பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு மூன்றாம் மனிதர் போல் தள்ளி நின்று  கவனித்துப் பாருங்கள். வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் தெரியும்.

ஓடுவதும், ஆடுவதும், பொய் சொல்லுவதும், ஏமாற்றுவதும், உருகுவதும்,  எல்லாம்  ஒரு திரைப் படம் போல, நாடகம் போலத் தெரியும்.

இந்த உலகம் அனைத்தையும் பார்க்கும் கண்கள் சூர்யனும் சந்திரனும்.

அந்த கண்களை உன்னில் காண்கிறேன் என்கிறான் அர்ஜுனன்.

ஆழ்ந்து சிந்தித்தால் அந்த கண்கள் என்ன என்று உங்களுக்கும் புரியும் ...


Sunday, October 12, 2014

கீதை - 11.19 - தொடக்கம், நடு , முடிவு இல்லாத

கீதை - 11.19 - தொடக்கம், நடு ,  முடிவு இல்லாத  


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

Sunday, September 21, 2014

கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ

கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ 



त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥११- १८॥

த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||

த்வம் = நீயே

அக்ஷரம் = அழிவற்றவன் (க்ஷரம் = அழியக்  கூடியது. அக்ஷரம் = அழிவற்றது)

பரமம்  = உயர்ந்தவன்

வேதிதவ்யம்= அறியத்தக்கதவன்

த்வம் = நீ 

அஸ்ய = இந்த

விஸ்வஸ்ய = இந்த பிரபஞ்சத்தில்

பரம் = ஆதி, உயர்ந்தது

நிதாநம் = உறைவிடம்

த்வம் = நீயே 

அவ்யய: = மாறாத

ஸாஸ்வத = நிரந்தரமான

தர்ம = தர்மத்தின்

கோப்தா = காவலன்

ஸநாதந = நிரந்தரமான, அழிவற்ற

த்வம் = நீயே

புருஷோ =  புருஷன்

மதோ மே = என்று நான் நினைக்கறேன்

நீயே அழிவில்லாதவன், அறியதக்கவற்றில் உயர்ந்தவன் நீ, என்றும் உள்ள அறத்தினை காக்கும் புருஷன் நீ. 

எது அழிவில்லாதது ?

பிறக்கும் எதுவும் அழியும்.

தோன்றும் எதுவும் மறையும்.

எனவே அழிவில்லாதது பிறக்காத, தோன்றாத ஒன்றாக இருக்க வேண்டும்.

பிறக்காத, தோன்றாத என்றால் எப்போதும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

எது அது ?

அது பொருளாக இருக்க முடியாது. பொருள் என்றால் தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டும்.

அது எந்த ஒரு உயிராகவும் இருக்க முடியாது. உயிர் என்றால் பிறந்திருக்க வேண்டும்.

பின் எது அது ?

இந்த உலகை நடத்திச் செல்லும் அறம் அல்லது உண்மை.

எந்த உண்மை, எந்த விதி, எந்த அறம் என்றும் நிலைத்து நிற்கிறதோ அதுவே  நீ என்று  அர்ஜுனன் அறிகிறான்.

அதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்த மாதிரி.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

பொருள்கள் கீழே விழுகின்றன.  ஆப்பிள் விழுகிறது, கல் விழுகிறது, இல்லை விழுகிறது, மழை விழுகிறது...ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா ? இல்லை அனைத்தையும் இயக்கம் ஒரு விதி இருக்கிறதா ?

ஒரு விதி அனைத்தையும் கட்டுப் படுத்துகிறது. அந்த விதி சாஸ்வதமானது. என்றும் உள்ளது. அழிவில்லாதது.

அதை அறிந்தால், கீழே விழும் பொருள்கள பற்றிய அனைத்தையும் அறிந்த மாதிரி.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா அல்லது கீழே விழுவது, மேலே எழுவது, பக்கவாட்டில் நகர்வது என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து ஒரு விதி இருந்தால் எப்படி இருக்கும் ?

அதை அப்படியே இன்னும் விரிவாக்கினால், மனிதர்களின் எண்ணங்களை,  செயல்களை, இவற்றை கட்டுப் படுத்தும் ஒரு விதி இருக்கும் என்றால் அதை  அறிவது எவ்வளவு முக்கியம். அந்த விதியை இறைவனாக காண்கிறான் அர்ஜுனன்.








Wednesday, September 3, 2014

கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம்

கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம் 



किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥११- १७॥

கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |
பஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||

கிரீடிநம் = கிரீடம்

கதிநம் = கதை

சக்ரிணம் = சக்ராயுதம்

ச = மேலும்

தேஜோராஸிம் = ஒளி வீசும்

ஸர்வதோ = அனைத்து திக்குகளிலும்

தீப்திமந்தம் = ஒளியூட்டும்

பஸ்யாமி = நான் பார்க்கிறேன்

த்வாம் = உன்னை

துர் நிரீக்ஷ்யம் = மனதில் நிறுத்த கடினமான

ஸமந்தா த் = அனைத்து பகுதிகளிலும்

தீ³ப்தாநலார்கத்³ = சூரியனைப் போல ஒளி விடும்

அப்ரமேயம் = அளவிட முடியாத



கிரீடமும், கதையும், சக்ராயுதமும் கொண்ட சூரியனைப் போல ஒளிவிடும் உன் அளவிட முடியாத உருவத்தை நான் காண்கிறேன் 

கண்ணனின் அந்த விஸ்வரூபம்  தலையில் கிரீடம், கையில் கதை  மற்றும் சக்கரம்  ஏந்தி  இருக்கிறது. மிக மிக பிரகாசமாய் ஒளி விட்டுக் கொண்டு இருக்கிறது.


திருமாலை வர்ணிக்கும் போது சங்கு, சக்கரம், கதை, கிரீடம், பட்டு பீதாம்பரம்  என்று வர்ணிப்பது  வழக்கம்.


இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது.

இதன் உள் அர்த்தம்  என்ன.

சங்கு - கடமையைச்  செய்ய விடும் அழைப்பு

கதை - கடமையில் இருந்து  தவறுபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை ஒழுங்கு  படுத்தும் கருவி.

சக்கரம் - தானும் கடமையைச் செய்யாமல், செய்பவர்களையும் தடுத்து   அக்கிரமம் செய்பவர்களை   அழிக்க வந்த கருவி.

மகுடம், பட்டு பீதாம்பரம் - கடமையை சரிவர செய்தால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்

ஒளி வீசும் உருவம் - அஞ்ஞான இருளை போக்கும் ஞான ஒளி .

மேலே சொன்னவற்றை  தெளிவாக உணர்த்தும் ஞானம் தான் ஒளி .

விஸ்வரூபம் தரும் பாடம்...

மேலும் படிப்போம்.



Tuesday, August 26, 2014

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப


अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥११- १६॥

அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||

அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.

பஸ்²யாமி = காண்கிறேன்

த்வாம் = உன்

ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை

நா = இல்லை

அந்தம் = முடிவு

 ந = இல்லை

மத்யம் = நடு

ந = இல்லை

புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்

பஸ்யாமி = காணுதல்

விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே  

விஸ்வரூப = விஸ்வ + ரூபம் =  அனைத்தையும் கொண்ட வடிவமாணவனே

பல தோள்களும், பல வாய்களும் , பல வயிறுகளும், பல விழிகளையும் கொண்ட உன் தோற்றத்திற்கு தொடக்கத்தையும், நடுவையும், முடிவையும் நான் காண்கிலேன். 


தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, நடுவும் இல்லை. எங்கும் நிறைந்து இருக்கிறது.

நாம் முன்பே சிந்தித்தது போல அனைத்து உலகும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உருவை, வடிவை கற்பனை செய்து பார்த்தால் அது தான் விஸ்வ ரூபம்.

என்ன அர்த்தம்.

எல்லா உலகும் என்று  சொல்லும் போது சில விஷயங்கள் நமக்கு புரிபடுகிறது.

முதலாவது, அனைத்தும்  ஒன்றுதான்.ஏற்றத் தாழ்வு இல்லை. அனைத்தும் இறை  வடிவம் தான்.

இரண்டாவது, ஒன்று மற்றொன்றாய் மாறும். ஆனால், இங்கே புதிதாக ஒன்று வருவது இல்லை, இருப்பது இல்லாமல் போவதும் இல்லை.

மூன்றாவது, அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. எதுவும் தனித்து இல்லை. என்னது, உன்னது என்று பிரித்துப் பார்ப்பது அர்த்தம் அற்ற செயல்.

 நான்காவது,உலகம் அனைத்தும் இறை வடிவம் என்ற எண்ணம் வரும் போது எப்படி  தவறு செய்ய மனம் வரும் ? யாரையும் திட்டுவதோ, கோவித்து பேசுவதோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதோ, உயிர்களை வதைப்பதோ, கொலை, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்கள் செய்வதோ முடியாத ஒன்று. இந்த எண்ணம் வரும்போது சர்வம் ஈஸ்வர மயம் என்று தோன்றும்.

விச்வேஸ்வரா - விஸ்வ ரூப ...

சிந்திப்போம்.




Monday, August 25, 2014

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில் காண்கிறேன்

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில்  காண்கிறேன் 


अर्जुन उवाच
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसंघान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥११- १५॥

அர்ஜுந உவாச
பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பஸ்²யாமி = நான் காண்கிறேன்

தேவாம்ஸ் = தேவர்களை 

தவ = உன்னுடைய

தேவ = தேவா !

தேஹே = தேகத்தில்

ஸர்வாம்ஸ் = அனைத்தும்

ததா = அந்த வகையில்

பூதவிஸே = அனைத்து உயிர்களின் 

ஷஸங்கா⁴ந் = கூட்டத்தை

ப்ரஹ்மா = பிரம்மா

ஈசம் = ஈசன்

கமலாஸநஸ்தம் = தாமரை மலரில் அமர்ந்து இருப்பவன்

ரிஷி = ரிஷிகள்

ச = மேலும்

ஸர்வ = அனைத்து

உரகன்  = பாம்புகள்

ச = மேலும்

தி³வ்யாந் = தெய்வீகமான


அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே ! உன் உடலில் அனைத்து தேவர்களையும், ,தாமரை மலாரில் இருக்கும் ஈசனான பிரமனையும், எல்லா ரிஷிகளையும், அனைத்து பூதங்களின் தொகுதிகளையும், தேவ சர்பங்களையும்  இங்கு காண்கிறேன் 

அது என்ன பிரம்மா, பூதங்களின் தொகுதி  சொல்லி விட்டு உடனே தேவ சர்ப்பங்கள் என்று  சொல்கிறார்.அதில் என்ன அர்த்தம் இருக்கும் ?

விசரூபம் என்பது அனைத்தையும் தன்னுள் அடக்கியது என்று பார்த்தோம்.

ஒரு கோடியில் பிரம்மா. இன்னொரு கோடியில் கீழான பாம்பு.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்வது போல.

வானும் நிலமும் சாட்சியாக என்று சொல்வது போல.

இரண்டு எதிர் எதிர் துருவங்களை சொல்லிவிட்டால் இடையில் உள்ளதை அனைத்தும்  சொன்ன  மாதிரி.

உரகன் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு - மார்பில் நகர்வது என்று  பொருள்.உர்ஸ் என்றால்  மார்பு என்று பொருள். மார்பில் நகர்வது பாம்பு.

பிரமா முதல் பாம்பு வரை அனைத்து பூதங்களின் தொகுதிகளையும் நான் காண்கிறேன்  என்றான் அர்ஜுனன்.

பிரமாவும் , பாம்பும் ஏதோ ஒரு மாபெரும் சக்தியின் இரண்டு துருவங்கள். இடைப்பட்ட  அனைத்தும் அதில் அடக்கம்.

இதில் தாத்தா, மாமா, குரு , பங்காளிப் பிள்ளைகள் , அண்ணன் , தம்பி என்பதெல்லாம்  புறத்  தோற்றங்கள்.

பாசத்தைக் காட்டி, கடமையில் இருந்து விலகப் பார்த்தான் அர்ஜுனன்.

பாசம் என்பது பிரித்துப் பார்பதால்  வருகிறது.

பகையும் அப்படியே.

என் பிள்ளை, என்  மனைவி,என் நாடு, என்று பிரிக்கும் போது பாசமும் வருகிறது, பகையும் வருகிறது.

இதைப் போக்க கண்ணன் விஸ்வரூபத்தை  காட்டினான் அல்லது உணர்த்தினான்.

வெவ்வேறு நாடு, வெவ்வேறு சமயம், வெவ்வேறு உறவுகள் என்று பிரித்துப் பார்க்காமல்  அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் சக்தியை தந்தான் அர்ஜுனனுக்கு கண்ணன்.



Sunday, August 17, 2014

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி 


ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनंजयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥११- १४॥

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |
ப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||


தத: = அப்புறம். அதன் பின்

ஸ = அவன்

விஸ்மயாவிஷ்டோ = ஆச்சரியப்பட்டு

ஹ்ருஷ்ட ரோமா = மயிர் கூச்செரிந்து 

த⁴நஞ்ஜய: | = தனஞ்சயன்

ப்ரணம்ய = வணங்கி

ஸி²ரஸா = தலையால்

தே³வம் = தேவனை

க்ருதாஞ்ஜலி = கைகளால் கும்பிட்டு

அ பா⁴ஷத = சொல்லத் தொடங்கினான்

அப்போது தனஞ்ஜயன் ஆச்சரியம் அடைந்து , மயிர் கூசெறிந்து , அந்த தேவனை தலையால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு, சொல்லத் தொடங்குகிறான்

நேரில் பார்த்தது அர்ஜுனன்.

எங்கோ அமர்ந்து இருக்கும் தனஞ்சயன், அந்தக் காட்சியை கண்டு மெய் சிலிர்க்கிறான்.

அவன் ரோமம் எல்லாம் குத்திட்டு நிற்கிறது.

கை கூப்பி, தலையால் வணங்குகிறான்.

வணங்கி மேலும் சொல்கிறான்...



Wednesday, August 13, 2014

கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான்

கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான் 


तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥११- १३॥

தத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |
அபஸ்²யத்³தே³வதே³வஸ்ய ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||

தத்ர = அங்கு

ஏக ஸ்தம் = ஒரே இடத்தில்

ஜகத் = உலகம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ப்ர வி பக்த = பல கூறுகளாய்

அ நேக தா = பல வடிவங்களில்

அபஸ்²யத் = அவன் கண்டான்

தேவ தேவஸ்ய = கடவுள்களின் கடவுள்

 ஸரீரே = உடலில்

பாண்டவ ஸ்ததா = பாண்டவன் கண்டான்



அங்கே, பல கூறுகளைக் கொண்ட, உலகம் முழுவதும், அந்த தேவ தேவனுடைய சரீரத்தில் ஒன்றாக இருப்பதை பாண்டவன் கண்டான்

இறைவன் இந்த உலகைப் படைத்தான், இறைவனால் எல்லாம் கூடும் என்றால் உலகில் ஏன் இவ்வளவு துன்பங்கள், வலிகள் , துரோகங்கள், நோய்கள், வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்....

கடவுளால் இவற்றை போக்க முடியாதா ? பசியால் உயிர்கள் வருந்துகின்றன, போரில் மடிகின்றன...இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் கடவுள்  எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும் ?

இந்த கேள்வி காலம் காலமாக கேட்கப் பட்டு வருகிறது.

சரியான விடை வியாசர் தருகிறார்.

இறைவன் என்பவன் அல்லது என்பது ஒரு தனி மனிதன் என்று நாம் நினைப்பதால் வரும் குழப்பம் இது. தனி மனிதனுக்கு பொறுப்புகள் இருக்க  வேண்டும்.இறைவனை தனி மனிதனாக நினைத்து நாம் அவன் இப்படி பொறுப்பு இல்லாமல்  இருக்கிறானே என்று வருந்துகிறோம்.

இறைவன் என்பவன் தனி மனிதன் அல்ல. அனைத்தின் தொகுதிதான் இறை என்பது.

நல்லதும், கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்ந்ததும் அனைத்தும் சேர்ந்த கலவைதான் இறைவன்.

உலகின் அத்தனை கூறுகளையும் தன்னில் கொண்டதுதான இறைவன் என்ற தத்துவம்.

இதை விட தெளிவாக கூற முடியாது.

அதை பாண்டவன் கண்டான்.

பாண்டவன் அப்படி பார்த்ததை சஞ்சயன் கண்டான்.

உங்களுக்கும் அந்த காட்சி கிடைக்கட்டும்.


Tuesday, August 12, 2014

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம்

கீதை - 11.12 - ஆயிரம் சூரிய பிரகாசம் 



दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥११- १२॥

தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |
யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||

திவி = ஒளி பொருந்திய

ஸூர்ய ஸஹஸ்ர ஸ்ய = ஆயிரம் சூரியன்கள் சேர்ந்தாற்போல

பவேத் = அதுவானது

யுகபத் = ஒன்றாக, ஒரே சமயத்தில் 

உதுத்திதா = உதித்தால்

யதி = எப்படி இருக்குமோ

பா = அவ்வளவு பிரகாசத்துடன்

ஸத்ருஸீ =  அதைப் போல

ஸா = அது

ஸ்யாத்  = இருந்தது

பா⁴ஸஸ்தஸ்ய = அதன் ஒளியும்

மஹாத்மந: = மகா ஆத்மா

ஒரே சமயத்தில் ஆயிரம் சூரியன்கள் தோன்றினால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படி இருந்தது அந்த மகாத்மாவின் வடிவம் .

உலகில் ஒளியும் இருக்கிறது. இருளும் இருக்கிறது.

இரண்டும் தனித்தனியே இருக்க முடியுமா ?

ஒளி இல்லாதது இருளா ? அல்லது

இருள் இல்லாதது ஒளியா ?

ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும்.

Is the absence of light is darkness or absence of darkness is light ?

This is the core of Existentialism. Which one exists ? Darkness or Light ?

வாழ்வில் இன்பமும் துன்பமும் இருக்கிறது ?

இன்பம் இல்லாதது துன்பமா ?

துன்பம் இல்லாதது இன்பமா ?

ஒரு துன்பமும் இல்லை என்றால் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லுவீர்களா ?

ஒரு இன்பமும் இல்லை இன்றால் துன்பப் படுகிறேன் என்று சொல்லுவீர்களா ?

Is the absence of happiness is sadness or absence of sadness is happiness ? Which exists ? Happiness or Sadness ?

விஸ்வரூபம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது என்றால் இருளும் இருந்திருக்க  வேண்டும்.

ஏன் ஆயிரம் சூர்ய பிரகாசம் என்று சொல்ல வேண்டும் ? ஆயிரம் அம்மாவாசை  இருள் என்று ஏன் சொல்ல வில்லை. ?

ஏன் என்றால் இருள் என்று ஒன்று கிடையாது. ஒளி  மட்டும்தான்   உண்டு. ஒளி இல்லாததை  நாம் இருள் என்கிறோம். என்று தனியாக ஒன்று கிடையாது.

இருக்கும் அனைத்தின் தொகுதி என்றதால், இருப்பது ஒளி மட்டும்தான்.  அத்தனை  ஒளியையும் சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த  உருவம்.

உலகில் ஒளி மட்டும்தான் உண்டு. இருள் கிடையாது. ஒரு விளக்கைக் கொண்டு வந்து  இருளைத் தேடித் பாருங்கள். கிடைக்கவே கிடைக்காது.

அது போல

வாழ்வில் இன்பம் மட்டும்தான் உண்டு.  துன்பம் என்பது கற்பனை. இல்லாத ஒன்று. இருப்பதாய் நாம் நினைத்துக் கொண்டு வருந்துகிறோம்.

இன்பத்தை விட்டு நாம் விலகினால் துன்பத்தில் இருப்பது போல  தெரியும். விலகியது  நம் குற்றம்.

உருகி, பெருகி, புவனம் அனைத்தும் நிறைத்து தத்தி கரை புரளும் பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரிநாதர்


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை என்பார் அபிராமி பட்டர்

வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

நினைக்கும் போதெல்லாம், காணும்போது எல்லாம், பேசும்போது எல்லாம் எப்போதும் ஆனந்தத் தேன் சொரியும் என்பார் மணிவாசகர்

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்,
அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

உலகில் இன்பம், ஆனந்தம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத ஆனந்தம்.


இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை என்பார் நாவுக்கரசர்

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே


விஸ்வரூப தரிசனம் காட்டுவது எல்லாம் வாழ்வில் நல்லவையே நிறைந்து கிடக்கிறது  என்ற உண்மையத்தான்.

- சிறந்த நறுமணம்,
- ஆயிரம் சூரிய ஒளி

என்று இப்படி பட்டியல் போகிறது. எல்லாமே உயர்ந்தவை, சிறந்தவை இவற்றின்  தொகுதிதான் இந்த உலகம். அதுதான் இறைவன்.

இந்த விஸ்வரூப் தரிசனம் உங்களுக்கும் கிடைக்கட்டும்


Monday, August 11, 2014

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு

கீதை - 11.11 - அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு 


दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥११- ११॥

தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ந்தா⁴நுலேபநம் |
ஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||

திவ்யமால்யாம்பரதரம் = திவ்ய + மாலா + அம்பற + தர = திவ்யமான மாலைகளை மற்றும் உடைகளை

திவ்யகந்தாநுலேபநம் = திவ்ய + கந்த + அனுலுபேன = திவ்யமான மணம் வீசும் பொருள்களை பூசிக் கொண்டு
 
ஸர்வாஸ்சர்யமயம் = சர்வ + ஆச்சர்ய +   மயம் =  அனைத்து   ஆச்சரியங்களையும் கொண்ட

தேவமநந்தம் = தேவம் + அநந்தம் = முடிவில்லா தேவ வடிவம் 

விஸ்²வதோமுக²ம் = அனைத்து திக்குகளிலும் பார்க்கும் முகங்கள்

திவ்ய மாலையும், ஆடையும் அணிந்து கொண்டு, வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு, மிக மிக ஆர்ச்சரியப்  படத்  வகையில் அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு இருந்தது அந்த வடிவம். 

அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவை எப்படி வர்ணிப்பது. நம்மால் நினைத்து பார்க்க முடியும்.  அதை எழுத்தில் வடிப்பது என்றால் எவ்வளவு சிக்கல்.

உலகனைத்தையும் ஒன்றடக்கிய உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உருவம் , வியாசர் காட்டும் விஸ்வ ரூபத்தோடு மிகச் சரியாக  பொருந்தும்.

அனைத்து திசைகளிலும் பார்த்துக் கொண்டு. உலகில்  உள்ள அனைத்து ஜீவராசிகளும்  சேர்ந்த ஒரு உருவம் என்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு  பக்கம் பார்த்துக் கொண்டு  இருக்கும் தானே ? அதனால், "அனைத்து  திசைகளிலும் பார்த்துக் கொண்டு"  என்றார்.

இப்படி ஒரு வடிவை இது வரை நாம் கற்பனை செய்து கூட பார்த்து இருக்க மாட்டோம்.

அப்படி  நினைத்துப் பார்க்கும் போது "அட, ஆமா, சரியாத்தான் இருக்கு " என்ற ஆச்சரியம்   மேலிடும்.அதைத்தான் சொல்கிறார் "மிகவும் ஆச்சரியப் படத் தக்க வகையில் " என்று.

 இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல.

எல்லாம் சேர்ந்த ஒன்றைத்தான்  இறைவன் என்று நாம் சொல்கிறோம்.

அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உயர்வும் உண்டு, தாழ்வும் உண்டு.

அப்படிப் பட்ட விஸ்வரூபத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


Saturday, August 9, 2014

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம்

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம் 


अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥११- १०॥

அநேகவக்த்ரநயநமநேகாத்³பு⁴தத³ர்ஸ²நம் |
அநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||

அநேக வக்த்ர நயநம் = பல வாய்களையும் பல விழிகளையும் கொண்டது. ஏகம் என்றால் ஒன்று. அந் - ஏகம் என்றால் ஒன்று அல்ல. அப்படி என்றால் பல. வக் என்றால் பேசுவது. வக்த்ர என்றால் பேசும் புலன், அதாவது வாய்  

அநேக அத்புத தர்ஸநம் = பல வித அற்புதமான தரிசனம்

அநேக திவ்யாபரணம் = பல வித திவ்ய ஆபரணங்கள்

 திவ்ய அநேக உத்யாத ஆயுதம் = பல வித உயர்ந்த ஆயுதங்கள்

அந்த வடிவம் பல வாய்களையும், விழிகளையும், திவ்ய படைகளையும் கொண்டது. பல அற்புத வடிவங்களை கொண்டது.

விவரூபத்தை விளக்க வேண்டும். இது வரை யாரும் கண்டிராத ஒன்று. காணாத ஒன்றை எப்படி விளக்குவது ?

தெரிந்த ஒன்றில் இருந்துதான் தெரியாத ஒன்றை விளக்க முடியும்.

புலி எப்படி இருக்கும் என்று தெரியாது.

அது பூனை போல இருக்கும், கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று சொன்னால் புரியும்.

அது போல, வியாசர் ஆரம்பிக்கிறார். 

அந்த உருவத்திற்கு பல வாய்கள் இருக்கின்றன, பல விழிகள் இருக்கின்றன , பலவிதமான ஆபரணங்களை அணிந்து இருக்கிறது என்று.

என்ன அர்த்தம்.

அது ஒரு தொகுதி. பல உயிர்களின் தொகுதி...எனவே அதற்கு பல வாய்கள், பல விழிகள். 

இறை என்பது அனைத்தின் தொகுதி. இந்த உலகம் அனைத்தையும் சேர்த்து ஒன்றாகப் பாருங்கள்...ஒன்றான அந்த உருவத்திற்கு எத்தனை வாய்கள் இருக்கும் , எத்தனை விழிகள் இருக்கும் ?

அதைத்தான் சொல்கிறார். 

பிரித்தது போதும். சேர்த்துப் பாருங்கள். 

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று பாரதி கூறியது போல...எல்லாம் ஒன்று சேர்ந்த தொகுதி தான் இறைவன். 

மணிகளின் நடுவே ஊடாடும் நூல் போல, அனைத்து உயிர்களையும் ஒன்று சேர்த்து வைத்து இருப்பது இந்த இறை சக்தி.

நீங்களும், நானும், அவரும், இவரும் , அதுவும் , இதுவும் எல்லாம் ஏதோ ஒன்றின் கூறுகள் என்று பறை சாற்றுவதுதான் இறை சக்தி. 

இதை விளக்குவத்தான் விஸ்வரூபம். 


Thursday, August 7, 2014

கீதை - 11.9 - விஸ்வரூபம்

கீதை - 11.9 - விஸ்வரூபம் 


संजय उवाच
एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥११- ९॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே³ஸ்²வரோ ஹரி: |
த³ர்ஸ²யாமாஸ பார்தா²ய பரமம் ரூபமைஸ்²வரம் || 11- 9||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவ = அப்படி
உக்த்வா = அப்படி சொல்லிய பின் (உனக்கு ஞானக் கண்களைத் தருகிறேன் என்று சொல்லிய பின் )

ததோ = அதன் பின்
ராஜ = இராஜனே

மஹாயோகே³ஸ்²வரோ = மகா யோகேஸ்வரனான

ஹரி: = ஹரி

த³ர்ஸ²யாமாஸ = காண்பதற்கு அருளினான், காட்டினான் 

பார்தாய = பார்த்தனுக்கு 

பரமம் ரூபமைஸ்²வரம் = தன்னுடைய பரம ஐஸ்வர்ய வடிவை

சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, அவ்வாறு சொன்ன பின் , பெரிய யோகத் தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உன்னதமான தன் கடவுள் வடிவைக் காட்டினான்.


போர்க்களத்தில் நடப்பதை கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொல்லி வந்தான்.

இப்போது, கீதை போர்களத்தை விட்டு, அஸ்தினாபுரம் அரண்மனைக்கு போகிறது.

சஞ்சயன் சொல்கிறான் , "அவ்வாறு சொன்னபின் கண்ணன் தன் தெய்வீக வடிவை  அர்ஜுனனுக்கு காட்டினான் " என்று.

அர்ஜுனனுக்குத் தெரிந்தது. சஞ்சயனுக்கு தெரிந்தது. வேறு யாருக்கும் தெரியவில்லை.

அறிவுள்ளவர்களுக்கு உண்மை புலப்படும்.

திருதராஷ்ரனிடம் தான் கண்ட விஸ்வரூபத்தை சஞ்சயன் சொல்கிறான்.

 அவனுக்கு புரியவில்லை.

பக்குவப்  படவில்லை.அவன் அறிவுக்கு அது எட்டவில்லை.

புரிந்திருந்தால், ஒரு வேலை மாபாரதப் போர் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

சஞ்சயன் என்ன கண்டான் ?


Wednesday, August 6, 2014

கீதை - 11.8 - உனக்கு ஞானக் கண்களைத் தருகிறேன்

கீதை - 11.8 - உனக்கு ஞானக் கண்களைத்  தருகிறேன் 


न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥११- ८॥

ந து மாம் ஸ²க்யஸே த்³ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |
தி³வ்யம் த³தா³மி தே சக்ஷு: பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் || 11- 8||


ந = இல்லை

து = அதனால்

மாம் = நான்

ஸக்யஸே = உன்னால் முடியும்

த்ரஷ்டும் = பார்க்க

அநேந = இதனால்

எவ = நிச்சயமாக

ஸ்வசக்ஷுஷா = இயற்கையான  கண்களால் (ஸ்வ = இயற்கையான)

திவ்யம் = தெய்வீக

ததாமி = தருகிறேன்

தே = உனக்கு

சக்ஷு:= காண்பதற்கு

பஸ்²ய =  நீ பார்க்க வேண்டும்

மே = என்

யோகம்  = யோகம் 

ஐஸ்வரம் = ஐஸ்வர்யம், மகிமை , பெருமை

உன்னுடைய இந்த இயற்கையான கண்களால் என்னை காண முடியாது.  உனக்கு நான் ஞானக் கண்களை  கொடுக்கிறேன். என்னுடைய மகிமையைப்  பார்.


நம்பிக்கையும், ஞானமும்.

ஆத்மா அழிவற்றது, அது நீரால் நனையாது, நெருப்பால் வேகாது என்றெல்லாம் சொன்னால்  அதை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும். கண்ணால் காண  முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை என்பது எல்லோராலும் முடியாது.

அதுவம் அறிவியல் வளர்ந்து வரும் இந்த நேரத்தில், இளைய தலைமுறை எல்லாவற்றையும்  கேள்வி கேட்க்கும். எனக்கு காட்டு, நான் பார்க்க வேண்டும். காண முடியாத ஒன்றை நம்ப முடியாது என்று சொல்லும்.

எல்லாவற்றிற்குள்ளும் ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள நம்பிக்கை வேண்டும்.

எல்லாம் ஒன்றினில் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள அறிவு போதும். கண்ணால் காண  முடியும். ஒன்றினுக்குள் ஒன்று இருப்பதை அறிவால் அறிந்து கொள்ள முடியும்.

அனைத்திலும் ஆத்மா இருக்கிறது என்பது நம்பிக்கை.

அனைத்தும் என்னில் இருக்கிறது என்பது அறிவு.

நீங்கள் நம்பிக்கையை கொண்டு சென்றாலும் சரி, அறிவை கைபிடித்து சென்றாலும்  சரி நீங்கள் அடையும் இடம் ஒன்றுதான்.

அர்ஜுனன் ஆத்மாவை நம்பிய மாதிரி தெரியவில்லை.

நீ சொன்னது எல்லாம் சரி, இருந்தாலும் எனக்கு அதை காட்டு என்று அறிவின் பால் செல்கிறான்.

சரி, உனக்கும் புரிய வைக்க வேண்டும் என்று கண்ணன் தன் விஸ்வரூபத்தை அவனுக்கு காட்டினான்.

உனக்கு ஞான கண்களை தருகிறேன் என்று சொன்னான். உடனே ஏதோ இன்னொரு  கண்ணை தந்தான் என்று அர்த்தம் இல்லை.

நாம் இந்த உலகை புலன்கள் மூலம்  அறிகிறோம். கண்டு,  கேட்டு,தொட்டு, சுவைத்து  அறிகிறோம்.

இந்த புலன்களை பொறிகள் என்று  சொல்லுவார்கள்.

ஐந்து புலன்களும் ஐந்து ஞானேந்திரியங்கள்.

ஐந்து புலன்கள் மூலம் மட்டும் அறிவு பெறுவது என்பது ஐந்து அறிவு உள்ள உயிர்களின் இயல்பு.

மனிதன் மட்டும் ஆறறிவு உள்ளவன் என்கிறோம். ஏன் ?

எது ஆறாவது அறிவு ?

மனம், ஞானம், சிந்திக்கும் திறன் - அது ஆறாவது அறிவு.  அது ஆறாவது ஞானேந்திரியம்.  அதன் மூலம் அறிவது ஞானக் கண் கொண்டு  காண்பது.

நாம் ஒரு   விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் போது அதை நம் மனக் கண்ணில் காண்கிறோம்.  அதுதான் ஞானக் கண்.

அந்த கண்ணின் மூலம் இதை காண முடியும் என்கிறான் கண்ணன்.

இந்த உலகம் அனைத்தும் ஒரு தொகுதி என்று அறிய ஞானம் வேண்டும்.

அந்த ஞானத்தை, அறிவை அர்ஜுனனுக்கு கண்ணன் கொடுத்தான்.

சரி, அர்ஜுனனுக்கு கண்ணன் கொடுத்தான். அர்ஜுனன் அதனால் பலன் அடைந்தான். அதனால் நமக்கு என்ன ?

நமக்கு என்ன என்று மேலும் பார்ப்போம்.


Tuesday, August 5, 2014

கீதை - 11.7 - எதை பார்க்க வேண்டும் என்றாலும் இங்கே பார்

கீதை - 11.7 - எதை பார்க்க வேண்டும் என்றாலும் இங்கே பார் 



इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि ॥११- ७॥

இஹைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் பஸ்²யாத்³ய ஸசராசரம் |
மம தே³ஹே கு³டா³கேஸ² யச்சாந்யத்³ த்³ரஷ்டுமிச்ச²ஸி || 11- 7||

இஹை = இங்கே

எகஸ்தம் = ஓரிடத்தில் (ஏக = ஒன்று; ஸ்த = ஸ்தானம், இடம் )

ஜக³த் = உலகம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

பஸ்யா = நீ பார்

த்ய = இன்றே, இப்போதே

ஸசராசரம்  = ச + சர + அசர = அனைத்து அசையும் மற்றும் அசையாதனவற்றின்
 
மம = என்

தேஹே = உடலில்

குடாகேஸ = கேசம் என்றால் முடி. குடா கேச என்றால் அடர்ந்த முடி உள்ளவன். அர்ஜுனன் 

யச் = அது , எதுவோ

ச = மேலும்

அந்யத் = மற்றவை

த்ரஷ்டு = நீ பார்

இச்சஸி = நீ விரும்பியபடி


அனைத்து உலகங்களும் ஒன்றாக என் உடலில் இருப்பதைப் பார். அது மட்டும் அல்ல, நீ வேறு எதையெல்லாம் காண விரும்புகிறாயோ, அவை அனைத்தையும் நீ காணலாம்.

மிக மிக  முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே வியாசர் சொல்கிறார்.

இறைவன் என்பது என்ன ?

இறைவன் என்பது அனைத்தின் தொகுதி.

இறைவன் என்பது ஒரு தனி மனிதன் அல்ல. இந்த பிரபஞ்சம் அனைத்தின் மொத்த  தொகுதிதான் இறை என்பது.

The Existence is Godliness.

மனித மனம் எதையும் பிரித்துப் பார்த்துதான் புரிந்து கொள்ள  முயல்கிறது.

சேர்த்துப் பார்க்க பழகவில்லை.

பூவில் அழகு எங்கே இருக்கிறது  என்று ஒவ்வொரு இதழாகப் பிய்த்து பார்த்தால்  அழகு எங்கும் இருக்காது. அழகு என்பது அனைத்தும் சேர்ந்த ஒன்றில் இருக்கிறது.

ஒரு தனி மனிதன்  இருக்கிறான். அது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமான ஒன்று அல்ல.

அவன் திருமணம் செய்து  கொள்கிறான். ஒரு பெண் அவன் வாழ்வில் வருகிறாள். வாழ்வில் சுவை கூடுகிறது.

பின் குழந்தைகள்  வருகின்றன. வாழ்வு மேலும் அர்த்தப் படுகிறது.

பின் குழந்தைகள் திருமணம் செய்து கொள்கின்றன. மருமகனோ, மருமகளோ வருகிறார்கள். குடும்பம்  பெரிதாகிறது. மேலும் அர்த்தப் படுகிறது.

குடும்பங்கள் சேர்ந்து  சமுதாயம் உண்டாகிறது. சமுதாயங்கள் சேர்ந்து ஊர் உண்டாகிறது. ஊர் கூடி நாடு உண்டாகிறது. நாடுகள் கூடி உலகம் உண்டாகிறது. இப்படி பெரிதாக பெரிதாக அர்த்தம் விரிந்து கொண்டே போகிறது.

எல்லாவற்றின் மிகப் பெரிய தொகுதிதான் இறைவன்.

அவ்வளவு பெரிய ஒன்றை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியாது.

எனவே, சின்ன ஒன்றில் இருந்து ஆரம்பித்து பெரிதான ஒன்றுக்கு போகிறோம்.

பிள்ளையார் சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாரை  வணங்குகிறோம்.பின் அதை கொண்டு   போய் கடலில் போட்டு விடுகிறோம் . ஏன் கடலில் போட வேண்டும் ? அது கடவுளை அவமரியாதை செய்வது போல் இல்லையா ?

இல்லை.

அதன் தத்துவம் என்ன என்றால், ஒரு களிமண் உருவத்தில் அடைபட்டு இருந்த  இறை தன்மை இப்போது பிரமாண்டமான கடலில் கலந்து விட்டது.

கடலைப் பார்க்கும் போது அந்த களிமண் பிள்ளையார் மனதில் வருவார்.

நாளடைவில் அந்த பிள்ளையார் சிலை மறந்து போகும் கடல் மட்டும் நிற்கும்.

அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒன்றை காண்பதுதான் விஸ்வரூபம்.

கண்ணனின் அந்த உருவத்தில் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அர்ஜுனன் தனக்கு  வேண்டியதை மட்டும் தேடுகிறான். எனவே கண்ணன் சொல்கிறான் "நீ எதை  காண விரும்புகிறாயோ அதைக் காணலாம் " என்கிறான்.

இறைவன் என்பவன் அனைத்தின் தொகுதி. ஆனால், நாம் அதை பிரித்து நமக்கு  வேண்டியதை மட்டும் பார்க்கிறோம். அது தான் உண்மை, இறைவன் என்று   சாதிக்கிறோம்.மற்றதும் இருக்கிறது.  எங்கே பார்க்கிறோம்.

நான் கண்டது மட்டும் தான் உண்மை என்று அடம் பிடிக்கிறோம்....குருடர்கள் கண்ட  யானை போல.

உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள்.  உங்கள் கலர் கண்ணாடிகளை தூக்கி எறியுங்கள்.

ஒன்றுபட்ட உலகம் தெரியும். 

மதங்களை கடந்து,  ஜாதிகளை கடந்து, நாடு, இனம் , மொழி வேறுபாடுகளை கடந்து  ஒன்றுபட்ட காட்சி தெரியும்.

அதுவே விஸ்வரூபம்.


Monday, August 4, 2014

கீதை - 11.6 - விஸ்வரூப தரிசனம்

கீதை - 11.6 - விஸ்வரூப தரிசனம் 


पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा ।
बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥११- ६॥

பஸ்²யாதி³த்யாந்வஸூந்ருத்³ராநஸ்²விநௌ மருதஸ்ததா² |
ப³ஹூந்யத்³ருஷ்டபூர்வாணி பஸ்²யாஸ்²சர்யாணி பா⁴ரத || 11- 6||

பஸ்²ய = நீ பார்

ஆதித்யாந் = ஆதித்யர்களை

வஸூந் = வசுக்களை

ருத்³ராந = ருதிரர்களை

அஸ்²விநௌ = அஸ்வினி குமாரர்களை

மருதஸ் = காற்றின் கடவுளை 

ததா = அப்படி அப்படியே

ப³ஹூந்ய = பல்வேறுவிதமான

த்ருஷ்ட = பார்

பூர்வாணி = பழமையான

அஸ்²யாஸ்²சர்யாணி = ஆச்சரியப் படும்படி

பா⁴ரத  = பாரதனே

விஸ்வரூபம் என்றால் என்ன ?

பார்த்தா, என்னில் ஆதித்யர்களைப் பார், வசுக்களைப் பார், அஸ்வினி குமார்களைப் பார், காற்றின் கடவுளைப் பார். அனைத்தையும் என்னில் நன்றாகப் பார். 


எப்படி எல்லாம் ஒரு உருவத்தில் வந்து நிற்க முடியும் ? இது இயற்கைக்கு விரோதமாக இருக்கிறதே ? ஏதோ மாயாஜாலக் கதை போல இருக்கிறதே. அறிவுக்கு ஒத்து வரதா  விஷயம் போல இருக்கிறதே என்று நமக்குத் தோன்றும்.

வேற்றுமையில் ஒற்றுமை.

இதுதான் விஸ்வரூபம்.

அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்று சொல்ல வரும் தத்துவம் தான் விஸ்வரூபம்.

விஸ்வரூபம் என்றால்  மிகப் பெரிய உருவம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

விஸ்வ என்றால் உலகளாவிய என்று அர்த்தம்.

உலகம் ஒன்றுபட்டது என்பதை கீதை இரண்டு விதங்களில் சொல்கிறது.

அனைத்துக்குள்ளும் இருப்பது ஒன்றுதான். அது தான் ஆத்மா (Self ) என்று ஒரு விதத்தில் சொல்கிறது.

இன்னொரு பக்கம் எல்லாம் ஒன்றினுள் அடங்கி இருக்கிறது என்று  சொல்லுவது.

அனைத்தும் அடங்கிய ஒன்றுதான் விஸ்வரூபம்.

அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்பார் மணிவாசகர்

அனைத்துக்குள்ளும் இருப்பது, அனைத்தையும் தன்னுள் வைத்து இருப்பது.

இது வரை சொன்னது ஆத்ம தத்துவம்.

சிலருக்கு ஆத்மா என்றால் என்ன, அது எப்படி இருக்கும், அதுக்கு எடை உண்டா, நிறம் உண்டா என்று கேள்வி கேட்பார்கள்.

காணும் அனைத்தும் ஏதோ ஒன்றின் கூறு, அல்லது பகுதி என்றால் எளிதாக சிந்திக்க முடியும்.

பூ என்பது கிளையின் கூறு.

கிளை என்பது மரத்தின் கூறு.

மரம் என்பது தோட்டத்தின் ஒரு பகுதி.

தோட்டம் என்பது ஊரின் ஒரு பகுதி.

ஊர் என்பது  நாட்டின்,நாடு என்பது இந்த  உலகின், உலகம் என்பது இந்த பரந்த பால் வெளியில் ஒரு பகுதி என்று நம்மால்  அறிய,உணர முடிகிறது.

பூ என்பது பால் வெளியின் ஒரு பகுதி என்று சட்டென்று நினைக்க முடியாது. ஆனால் சிந்திக்க சிந்திக்க அது புலப்படும்.

அதைத்தான் இந்த விஸ்வரூபம் காட்டுகிறது.

இந்த உலகில் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒன்றாக இருக்கிறது.

நாம் தான் அதை பிரித்துப்  போடுகிறோம் - நாடு என்றும், மொழி என்றும், மதம் என்றும், ஆண் பெண் என்றும், பல விதங்களில் பிரித்து பிரித்து பின்னால் அந்த பிரிவினையால் துன்பப்படுகிறோம்.

சேர்த்துப் பாருங்கள் - குழப்பம் விலகும்.

இதுதான் விஸ்வரூபம். இதைப் புரிந்து கொண்டால் பின்னால் வரும் ஸ்லோகங்கள் எளிதாக இருக்கும்.

இல்லை என்றால் என்னடா இது கண்ணன், என்னில் அதைப் பார், இதைப் பார் என்று பெரிய பட்டியலே போடுகிறான். சரி அது எல்லாம் கண்ணனில் இருந்து விட்டு போகட்டும். அதனால் எனக்கு என்ன என்ற கேள்வி நிற்கும்.

உங்களுக்கு என்று இருப்பது - ஒன்றாகக் காணும் காட்சி.

இந்த உலகில் உள்ள அனைத்தும் ஏதோ ஒன்றின் கூறு என்று  அறியுங்கள்.

என் இடது கண்ணும் வலது கண்ணும் என் உடலின் கூறுகள். இதில் எது உயர்ந்தது ? எது தாழ்ந்தது ?

வேற்றுமை மறையும் போது சமநிலை  பிறக்கும்.

சம நிலை பிறக்கும் போது சாந்தி பிறக்கும். மனதில் அமைதி  நிலவும்.

இதுதான் விஸ்வரூப தரிசனம்.


Sunday, August 3, 2014

கீதை - 11.5 - என்னைப் பார்

கீதை - 11.5 - என்னைப் பார் 


श्रीभगवानुवाच
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥११- ५॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பஸ்²ய மே பார்த² ரூபாணி ஸ²தஸோ²ऽத² ஸஹஸ்ரஸ²: |
நாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11- 5||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

பஸ்²ய மே = நீ பார்

பார்த = பார்த்தா

ரூபாணி = ரூபங்களை

ஸ²தஸோ = நூற்றுக்கணக்கான

அத = மேலும் , நிச்சயமாக

ஸஹஸ்ரஸ = ஆயிரக்கணக்கான
|
நாநாவிதாநி = பல்வேறு விதமான

திவ்யாநி = திவ்யமான

நாநாவர்ணாக்ருதி = பலவிதமான வர்ணங்களிலும், வடிவங்களிலும்

ச  = மேலும்


ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் , பார்த்தா என்னைப் பார்...நூற்றுக்  கணக்கில்,ஆயிரக் கணக்கில் பலவித வடிவங்களிலும், நிறங்களிலும், உள்ள என் தெய்வீக வடிவைப் பார் 

உவாச = வாச என்றால் வாசித்தல், சொல்லுதல். உ-வாச அவன் சொன்னான். கண்ணன் சொன்னான். பகவான் சொன்னான்.

பச்ய = நீ கட்டாயம் அல்லது உறுதியாகப் பார். உண்மை கண்ணுக்கு முன் கிடந்தாலும் நாம்  .பார்ப்பது இல்லை. ஆப்பிள் எல்லோர் தலையிலும் தான் விழுந்தது. நியூட்டன் மட்டும் அதை சரியாகப்  பார்த்தார். அவர்க்கு புவி ஈர்ப்பு உண்மை புலப் பட்டது. நாம் பார்ப்பது இல்லை. கண் ஒரு  பக்கம்,மனம் ஒரு பக்கம்...

முதலில் நூற்றுக்கணக்கான உருவங்களைப் பார்  என்றான்.

பின் ஆயிரக்கணக்கான உருவங்களைப் பார் என்றான். பார்க்க பார்க்க விரிந்து கொண்டே போகும்.

நுண்ணோக்கி (microscope ) முன்னால் ஒரு சொட்டு இரத்தத்தை வைக்கிறோம். அதை சரியாக  அமைக்க வில்லை என்றால் ஒரு துளி இரத்தம் தெரியும். அதை இன்னும் கொஞ்சம் சரியாக அமைத்தால் (focus செய்தால் ) அந்த இரத்தத்தில் உள்ள நுண்ணுயிர்கள் தெரியும். அதை இன்னும், மேலும் சரியாக focus செய்தால் மிகத் தெளிவாக ஆயிரக்கணக்கான கோடிகணக்கான நுண்ணுயிர்கள் தெரியும். அது போல கண்ணன்  சொல்கிறான், என்னை நன்றாகப் பார் என்று.

நானா-விதாணி = த என்றால்  பகுத்தல்.விதா என்றால் பகுதி. நானா விதாணி என்றால் பல்வேறு பகுதிகள்.

பல வித  வர்ணங்கள் = இதை பல நிறங்கள் என்றும் சொல்லலாம், அல்லது பலவித மனித கூறுகள் என்றும் சொல்லலாம். (பிராமணன், சத்ரியன், வைசியன்,   சூத்திரன் என்ற வர்ணங்களாகவும் கொள்ளலாம்). எல்லாம் அவனின் பகுதிகள் தான்.

திவ்ய ரூபம் என்றால் ஒளி வீசும், மங்களகரமான வடிவம் என்று பொருள்.

அனைத்து உயிர்களும் ஒன்றுதான், அதில் வேறு பாடு கிடையாது என்றெல்லாம் சொல்லி  வந்தான். எப்படி நம்புவது ? எல்லாம் ஒன்றென்று எப்படி நாம் நம்ப முடியும் ? சுற்றி பார்த்தால் எத்தனையோ வேறு பாடுகள் தெரிகிறது.

கம்மல் ஒரு மாதிரி  இருக்கிறது,வளையல் வேறு மாதிரி இருக்கிறது. சங்கிலி இன்னொரு மாதிரி இருக்கிறது.  இவை எல்லாம் தங்கத்தின் பல்வேறு வடிவங்கள் என்று அறிய அறிவு  வேண்டும்.

பானை ஒரு மாதிரி இருக்கிறது, சட்டி வேறு மாதிரி இருக்கிறது..இவை எல்லாம் வேறு வேறு அல்ல, எல்லாம் களிமண் தான் என்று அறிய அறிவு வேண்டும்.

சொன்னால் புரியவில்லை என்றால் கண்ணால் காணும்படி செய்ய வேண்டும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு  காண்பிக்கிறான்.




Saturday, August 2, 2014

கீதை - 11.4 - நான் காண முடியும் என்றால், எனக்கு காண்பி

கீதை - 11.4 - நான் காண முடியும் என்றால், எனக்கு காண்பி  


मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥११- ४॥

மந்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |
யோகே³ஸ்²வர ததோ மே த்வம் த³ர்ஸ²யாத்மாநமவ்யயம் || 11- 4||


மந்யஸே = மன் என்றால் மனம், சிந்தனை. நீ நினைத்தால்

யதி =  என்றால் (if )

தத் = அதை 

சக்யம் = முடியும் என்றால்

மயா = என்னால்

த்ரஷ்டும் = காண (திருஷ் = காணுதல் )

இதி = இதனால் (thus )

ப்ரபோ = பிரபோ

யோகே³ஸ்²வர = யோகங்களின் ஈஸ்வரனே. 

ததோ = பின், அதனால்,

 மே = எனக்கு

த்வம்  = நீ

த³ர்ஸ²ய = காண்பி

ஆத்மாநம் = சுயம், தனதான,

அவ்யயம் = மாறாத

பிரபுவே, யோகேஸ்வரா, நான் காண்பது சாத்தியம் என்று நீ கருதினால், எனக்கு அழிவற்ற ஆத்மாவை காண்பி. 

பிரபுவே = ப்ர என்றால் உயர்வு. பு என்றால் இருத்தல். உயர்ந்தவனாக இருத்தல். நாம் சாப்பிட்டால் அது சாதம். இறைவனுக்கு படித்தால் அது ப்ர - சாதம். உயர்வான சாதம்

யோகேஸ்வரா = யோகம் என்பது யுஜ் என்ற வேர் சொல்லில் இருந்து  வந்தது.
யுஜ் என்றால் நுகந் தடி. மாட்டை வண்டியில் பூட்டும் அந்த தடிக்குப் பெயர் நுகந் தடி.






யோகம் என்றால் இணைப்பது. integrate. எதையும் எதையும் இணைப்பது ?

பிரிந்து கிடப்பவற்றை இணைப்பது யோகம். மனமும் செயலும், உள்ளும் புறமும் இப்படி எல்லாம் சிதைந்து பிரிந்து கிடக்கிறது. இவற்றை ஒன்று சேர்ப்பது யோகம்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளாலார். உள்ளும் புறமும் பிரிந்து போய் கிடக்கிறது.

நாம் எல்லாவற்றையும் வேறு வேறாகப் பார்க்கிறோம். பிரித்துப் பார்க்கிறோம்.  ஆண் ,பெண் , உயர்ந்தவன், தாழ்தவன், படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, இப்படி எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறோம். அதனால் இவ்வளவு சிக்கல்.  குழப்பம்.யோகம் இவற்றை  ஒன்றிணைக்கிறது.

(From Old English ġeoc,
from Proto-Germanic *juką,
from Proto-Indo-European *yugóm.
Cognate with West Frisian jok,
From Dutch juk,
From German Joch,
Danish åg,
Swedish ok,
Gothic 𐌾𐌿𐌺 (juk),
Latin iugum (English jugular),
Greek ζυγός (zugós, “yoke”),
  Sanskrit युग (yugá, “yoke, team”),
Old Church Slavonic иго (igo)
(Russian иго (igo)),
Persian یوغ (yuğ).

http://en.wiktionary.org/wiki/yoke )

அவ்யயம் என்றால் மாறாத. வ்யயம் என்றால் வியாபித்து இருத்தல், பரந்து இருத்தல், மாறிக்கொண்டே இருத்தல். அ-வ்யயம் என்றால் மாறாமல் இருத்தல். எப்போதும் ஒரே மாதிரி இருப்பது.


மாறுகின்ற வடிவங்கள், தோற்றங்கள் இவற்றின் பின்னால் மாறாத ஏதோ ஒன்று  இருக்க வேண்டும். அதை எனக்கு நீ காண்பிப்பாயா என்று கண்ணனை வேண்டுகிறான்  அர்ஜுனன்.

அதுவும், என்னால் காண முடியும் என்று நீ நினைத்தால் எனக்கு காண்பி என்கிறான்.

எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிவிட முடியாது. குழந்தை அம்மாவிடம் கேட்க்கும்..."அம்மா நீ அப்பாவுடன் சந்தோஷமாய் இருக்கிறேன் என்று சொல்கிறாயே  ...அது என்ன சந்தோசம், எனக்குச் சொல் " என்றால் எப்படி சொல்லுவது ?

முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ஙனனே.

உயர்ந்த உண்மைகளை பெற்றுக் கொள்ளவும் தகுதி வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

உயர்ந்த விஷயங்களை தாழ்ந்தவனுக்கு சொன்னால் அவன் அதை கீழ்மைப் படுத்துவான்.

தனக்கு அந்தப் பக்குவம் இருக்கிறதா என்று அர்ஜுனனுக்குத் தெரியவில்லை. எனவே, கண்ணனிடம் கேட்கிறான்.   என்னால் காண முடியும் என்றால் காண்பி  என்று.


Thursday, July 31, 2014

கீதை - 11.3 - உன் ஈஸ்வர ரூபத்தை காண விரும்புகிறேன்

கீதை - 11.3 - உன் ஈஸ்வர ரூபத்தை காண விரும்புகிறேன் 



एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥११- ३॥

ஏவமேதத்³யதா²த்த² த்வமாத்மாநம் பரமேஸ்²வர |
த்³ரஷ்டுமிச்சா²மி தே ரூபமைஸ்²வரம் புருஷோத்தம || 11- 3||

எவம் = அப்படியே 

தத் = இருக்கட்டும், உள்ளது

யதா = அது

அத்த = கூறியது

த்வம் = நீ

ஆத்மாநம் = தன்னைப் பற்றி (Self )

பரமேஸ்²வர = பரமேஸ்வர

த்ரஷ்டும் = காணும்படி

இச்சா²மி = இச்சை கொண்டு இருக்கிறேன்

 தே  = உன்னுடைய

ரூபம் = வடிவை

ஐஸ்வரம் = ஐஸ்வர்யமான, திவ்யமான, மங்களமான

புருஷோத்தம = புருஷ + உத்தமா = மனிதர்களில் உயர்ந்தவனே


உன்னைப் பற்றி நீ சொன்னபடியே உள்ள அந்த திவ்ய ரூபத்தை நான் காண விரும்புகிறேன்.

ஏவம் எதத் = அப்படியே ஆகட்டும்.

புருஷோத்தமா - நீ சொன்ன மாதிரியே ஆகட்டும். எல்லாம் உன்னில் இருந்து வந்தது  என்கிறாய். எல்லாம் உன்னில் அடங்கும் என்கிறாய். இந்த உலகை உன்  சக்தியின் ஒரு பகுதியால் நிர்வகிக்கிறேன் என்கிறாய்.

நான் அதை காண விரும்புகிறேன்.

தியரி புரிகிறது. இருந்தாலும் சோதனைச் சாலையில் சென்று அதை ஒரு முறை  செய்து பார்த்து உறுதி செய்து  கொள்வது போல...

இது வரை கண்ணன் சொன்னது புரிந்தது இருந்தும் இது எல்லாம் சரிதானா, இல்லை கண்ணன்  தன்னை போர் புரியச் செய்ய செய்யும் தந்திரங்களா என்று தெரியவில்லை  அர்ஜுனனுக்கு.

நீ சொன்ன மாதிரி உன்னை காட்டு  என்கிறான்.

கண்ணன் சற்று முகம் சலித்திருப்பான்...என்னடா இவன் இத்தனை சொன்ன பிறகும்  நம்மை நம்ப மாட்டேன் என்கிறானே என்று.

கண்ணனின் அந்த சலிப்பை கண்டவுடன் அர்ஜுனன் கொஞ்சம் சுதாரித்துக் கொள்கிறான்....

அடுத்து அவன் தன் வசனத்தை மாற்றுகிறான்....

அது ....

Wednesday, July 30, 2014

கீதை - 11.2 - உயிர்களின் தோற்றமும் முடிவும்

 கீதை - 11.2 - உயிர்களின் தோற்றமும் முடிவும் 


भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥११- २॥

ப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம் ஸ்²ருதௌ விஸ்தரஸோ² மயா |
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 11- 2||

ப⁴வாப்யயௌ = தோற்றமும் மறைவும். தோற்றம் என்று சொல்வதை விட இருத்தல் என்று  சொல்லலாம்.பு என்றால் இருத்தல். பாவ என்றால் existence .

ஹி = உறுதியாக

பூதாநாம் = உயிர்களின்

ஸ்ருதௌ = கேட்கப்பட்டது. ஸ்ருதி கேட்டல், கவனித்தல்

விஸ்தரஸோ = விரிவாக

 மயா  = என்னால்

த்வத்த:= உன்னிடம் இருந்து

கமலபத்ராக்ஷ = தாமரை போன்ற கண்களை உள்ளவனே

மாஹாத்ம்யம் =  பெருமை, மகிமை 

அபி =  இருந்தும் 

 சா = மேலும் 

அவ்யயம் = மாறாத

உயிர்களின் இருக்கும் நிலையம், அவை மறையும் தன்மை பற்றியும் விரிவாகக் கேட்டேன் .  தாமரையிதழ் போன்ற விழிகளை உடையவனே 
உன் முடிவற்ற பெருமையைக் கேட்டேன் .

உயிர்கள் எவ்வாறு தோன்றுகின்றன, எப்படி மறைகின்றன என்று  இதுவரை சொல்லப் பட்டது.

அதாவது, கர்ம யோகம், ஞான யோகம், விபூதி யோகம், விஷாத யோகம் என்ற இவை எல்லாம் சொல்லுவது ஒன்றைத்தான் - உயிர்களின் தோற்றமும் மறைவும்.

தோற்றம் என்று கூறுவதை விட உயிர்களின் இருப்பு என்பது சரியாக இருக்கும். உயிர்கள் எவ்வாறு  வாழ்கின்றன அல்லது வாழ வேண்டும் என்று இதுவரை  கூறப் பட்டது.

மீண்டும் மீண்டும் அர்ஜுனன் சொல்வது எல்லாம் ஒன்றுதான் "கேட்டேன்" என்ற  ஒன்றைத்தான்.

"பார்க்கவில்லை". என் கண்ணால் நான் அவற்றை பார்க்க வில்லை. ஏதோ நீ சொன்னாய்  கேட்டுக் கொண்டேன். அது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. நீ பொய் சொல்ல மாட்டாய் என்பதால் நம்புகிறேன் ஆனால் அது என் அனுபவம்  இல்லை என்று சொல்கிறான்.

கண்ணனே சொன்ன பிறகும், அர்ஜுனனக்கு நம்பிக்கை  வரவில்லை.

ஆனால், நம் அர்ஜுனர்களுக்கோ, கண்ணன் என்ன கண்டவர்கள் சொல்வதில் எல்லாம் நம்பிக்கை.

 அர்ஜுனனின் சந்தேகம் தீர வில்லை. அவன் கேள்வி கேட்க்கிறான். சந்தேகம் போகவில்லை  என்கிறான்.அவன் தேடல் தொடர்கிறது.

அந்த தேடலினால் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.

"கண்ணா, உன்னை நம்புகிறேன். நீ சொல்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று  " அர்ஜுனன் சொல்லி இருந்தால் அவனுக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்திருக்காது.

அவன் நம்பவில்லை. கேள்வி கேட்டுக்  கொண்டிருந்தான். எனக்கு காண்பி. நான் பார்த்தால் தான்  நம்புவேன் என்று அடம் பிடித்தான்.

விஸ்வரூப தரிசனம் உங்களுக்கும் வேண்டுமா ? அர்ஜுனன்  காட்டிய வழியில்  செல்லுங்கள். அது கீதை காட்டிய வழி.

உங்கள் சொந்த அனுபவம் வரும் வரை எதையும் நம்பாதீர்கள்.

உங்களின் விடாத தேடல், சந்தேகம், விஸ்வரூப தரிசனத்தை உங்களுக்குத் தரும்.

உங்கள் நம்பிக்கை அல்ல - உங்களின் நம்பிக்கை இன்மை - உங்களுக்கு உண்மையின் தரிசனத்தை தரும்.



Monday, July 28, 2014

கீதை - 11.1 - மயக்கம் தீர்ந்தது

கீதை - 11.1 - மயக்கம் தீர்ந்தது 



अर्जुन उवाच
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥११- १॥

மத³நுக்³ரஹாய பரமம் கு³ஹ்யமத்⁴யாத்மஸம்ஜ்ஞிதம் |
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விக³தோ மம || 11- 1||



அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

மத் அநுக்ரஹாய = என் மீது அருள் கொண்டு

பரமம் கு³ஹ்ய = பரம இரகசியமான

அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம் = ஆத்ம ஞானம் என்ற

யத் = எந்த

த்வய = உன்னால் 

உக்டம் = சொல்லப் பட்டதோ

வசஸ் = வசனகளால்

தேந = அதனால்

மோஹோ = மயக்கம்

அயம் = அந்த

விகத = அகன்று விட்டது

மம = எனக்கு

அர்ஜுனன் சொல்லுகிறான்:  என் மீது அருள் கொண்டு, ஆத்ம ஞானம் என்ற பரம இரகசியத்தை நீ எனக்கு கூறியதன் மூலம் என் மயக்கம் தெளிந்தது.


மயக்கம் அல்லது குழப்பம் தெளிந்தது என்றால் அறிவு அல்லது ஞானம் பிறந்து விட்டது என்று அல்ல அர்த்தம். குழப்பம் தீர்ந்தது. அவ்வளவுதான். அதுவே அறிவு அல்ல.

அறிவு பெறுவதில் மூன்று படிகள் உண்டு.

ஐயம் திரிபற கற்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

முதலில் ஐயம் , பின் திரிபு பின் அறிவு தெளிவு பெறும் .

அது என்ன ஐயம் , திரிபு ?

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம். பாம்போ கயிறோ என்ற ஐயம். சரியா தவறா என்ற குழப்பம். இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம்.

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைத்துக் கொள்வது. அது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

பாம்பை கயிறாகவும், கயிரை பாம்பாகவும் மாற்றி அறிந்து கொள்வது திரிபு.

கண்ணன் இது வரை சொன்னதை வைத்து தனது ஐயம் தீர்ந்து விட்டது என்கிறான். இருந்தாலும் தான் உண்மை எது என்று தெரியவில்லை.

பாம்பு இல்லை என்று தெரிந்து போனது. ஆனால் கயிறா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை.

விஸ்வரூப தரிசனம் தொடரும்....





Sunday, July 27, 2014

கீதை - பதினோராவது அத்யாயம் - ஒரு முன்னோட்டம்

கீதை - பதினோராவது அத்யாயம் - ஒரு முன்னோட்டம் 


முந்தைய அத்யாயத்தில் கண்ணன் தன் பெருமைகளை, மகிமைகளை வெகு நீளமாக எடுத்துச் சொன்னான்.

அர்ஜுனனுக்கு நம்பிக்கை வர வேண்டுமே.

நீ சொல்வது எல்லாம் சரிதான்...நீ என்ன பொய்யா சொல்லப் போகிறாய்...இருந்தாலும் இதை நான் எப்படி நம்புவது...நான் பார்த்தால் அன்றி என்னால் நம்ப முடியாது என்று நாசுக்காக சொல்கிறான்.

 இந்த குழப்பம் யாருக்குத்தான் இல்லை ?

கடவுளை மிக ஆழமாக நம்புபவர்கள் கூட சில சமயம் சந்தேகம் கொள்வார்கள்....ஒரு வேளை நாம் நம்பியது எல்லாம் தவறோ என்றோ சந்தேகம் சில சமயம்  எழலாம்.

கண்ணன் எதிரில் நிற்கிறான். அவனே சொல்கிறான். இருந்தும் அர்ஜுனனால் நம்ப முடியவில்லை.

நான் என் கண்ணால் பார்த்தால் அன்றி நம்ப மாட்டேன் என்று நேரடியாகவே சொல்லி விடுகிறான்.

கண்ணுக்குப் புரிந்து விட்டது. நாம் எவ்வளவு சொன்னாலும் இவன் நம்பப் போவது இல்லை. இவனுக்கு உண்மையை  காட்டி விட வேண்டியதுதான் , அப்போதுதான் இவன் நம்புவான் என்று கண்ணன் தன் உண்மையான சொரூபத்தை  காண்பிக்கிறான்.

சாதாரண கண் கொண்டு பார்க்க முடியாது. எனவே ஞானக் கண்ணைத் தந்து தன்னுடைய விஸ்வரூபத்தை பார்க்க வைக்கிறான்.

அந்த விஸ்வ ரூப தரிசனம்தான் இந்த அத்யாயம்.

 நாளை முதல் விஸ்வ ரூப தரிசனம் காண்போம்.




Friday, July 25, 2014

கீதை - அத்யாயம் 10 - ஒரு தொகுப்பு

கீதை - அத்யாயம் 10 - ஒரு தொகுப்பு 


யாரும் என் பெருமையை உணர மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மூலம் நானே.

நான் பிறப்பு இல்லாதவன். தொடக்கம் இல்லாதவன்.  இந்த உணர்ந்தவன் எல்லா மயக்கங்களும் நீங்கப் பெறுவான்.


  1. மதியையும், 
  2. ஞானத்தையும் , 
  3. மயக்கமின்மையும், 
  4. பொறுத்தலையும் , 
  5. வாய்மையும், 
  6. அடக்கத்தையும் 
  7. அமைதியும், 
  8. இன்பத்தையும் 
  9. துன்பத்தையும் 
  10. உண்மையும், 
  11. இன்மையும், 
  12. அச்சத்தையும் 
  13. அஞ்சாமையும், 
  14. துன்புறுத்தாமையும், 
  15. நடுமையும், 
  16. மகிழ்ச்சியையும் 
  17. ஈகையும், 
  18. தவமும், 
  19. இகழும், 
  20. புகழும்,

இவற்றை எல்லாம் உயிர்கள் என்னிடம் இருந்து  பெறுகின்றன.


மகரிஷிகள் ஏழு பேரும் நான்கு மனுக்களும் மனத்தால் என் இயல்பைப் பெற்றார்கள் .  அவர்களுடைய மரபினரே இந்த மக்கள் எல்லாம்.

இதை அறிந்தவன் யோகத்தில் இருப்பான்.

நானே தொடக்கம், என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றின என்று உணர்ந்தவன் என்னை அன்புடன் தொழுவான். அவன் மகிழ்ச்சியும் இன்பமும்  அடைவான். அவனுக்கு நான் புத்தி யோகம் அளிப்பேன். இதனால் அவன் என்னை அடைவான். அவர்களின் அஞ்ஞான இருளை நான் விலக்குவேன்



  1. உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். 
  2. அவ்வுயிர்களின் முதலும், முடிவும், இடையும் நானே 
  3. விஷ்ணு; 
  4. ஞாயிறு; 
  5. காற்றுகளில் மரீசி; 
  6. நக்ஷத்திரங்களில் சந்திரன்.
  7. வேதங்களில் சாமவேதம்; 
  8. தேவரில் இந்திரன்; 
  9. புலன்களில் மனம் ; 
  10. உயிர்களிடத்தே உணர்வு .
  11. ருத்திரர்களில் சங்கரன்; 
  12. இயக்கர் அரக்கருள் குபேரன். 
  13. வசுக்களில்  தீ;
  14.  மலைகளில் மேரு.
  15. புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி  
  16. படைத்தலைவரில் கந்தன். 
  17. நீர் நிலைகளில்  கடல்.
  18. மகரிஷிகளில்  பிருகு; 
  19. வாக்குகளில் ‘ஓம்’ 
  20. யக்ஞங்களில் ஜபயக்ஞம்; 
  21. ஸ்தாவரங்களில் இமாலயம்.
  22. மரங்களனைத்திலும் அரசமரம். 
  23. தேவரிஷிகளில்  நாரதன்; 
  24. கந்தர்வருள்ளே சித்ரரதன்; 
  25. சித்தர்களில் கபில முனி.
  26. குதிரைகளிடையே உச்சை சிரவம் . 
  27. யானைகளில் என்னை ஐராவதம் , 
  28. மனிதரில் அரசன்
  29. ஆயுதங்களில் வஜ்ரம்; 
  30. பசுக்களில் காமதேனு; 
  31. பிறப்பிப்போரில்  மன்மதன்; 
  32. பாம்புகளில் வாசுகி.
  33. நாகர்களினிடை  அநந்தன்; 
  34. நீர் வாழ்வோரில் வருணன்; 
  35. பிதிர்க்களில்  அரியமான்; 
  36. தம்மைக் கட்டினவர்களில்  யமன்.
  37. அசுரரில் பிரகலாதன் ;
  38.  இயங்குனவற்றில் காலம் ; 
  39. விலங்குகளில் சிங்கம்; 
  40. பறவைகளில் கருடன்.
  41. தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று ; 
  42. படைதரித்தோரில்  ராமன்; 
  43. மீன்களில் சுறா; 
  44. ஆறுகளில் கங்கை.
  45. படைப்புகளின் ஆதியும் அந்தமும் . 
  46. வித்தைகளில் அத்யாத்ம வித்தை; 
  47. பேசுவோரிடையே  பேச்சு.
  48. எழுத்துகளில் அகரம்; 
  49. புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; 
  50. அழிவற்ற காலம்; 
  51. அனைத்தையும்   சுமப்போன் .
  52. எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் . 
  53. எதிர்காலப் பொருள்களின் பிறப்பு . 
  54. பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை
  55. சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; 
  56. சந்தஸ்களில் காயத்ரி; 
  57. மாதங்களில்  மார்கழி; 
  58. பருவங்களில் இளவேனில்.
  59. வஞ்சகரின் சூது . 
  60. ஒளியுடையோரின் ஒளி . 
  61. நான் வெற்றி; நான் நிச்சயம். 
  62. உண்மையுடையோரின் உண்மை .
  63. விருஷ்ணி குலத்தாரில்  வாசுதேவன்; 
  64. பாண்டவர்களில் தனஞ்ஜயன்; 
  65. முனிகளில் வியாசன்; 
  66. கவிகளில் சுக்கிர கவி.
  67. ஆள்வோரிடத்தே கோல் ; 
  68. வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி . 
  69. ரகசியங்களில் நான் மௌனம்! 
  70. ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.
  71. எல்லா உயிர்களிலும் விதை . 
  72. சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.

என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

எவை எவை பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ  -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது

அன்றி, இதைப் பற்றி தெரிந்து கொள்வதால் உனக்குப் பயன் யாது? எனது மகிமையின் ஒரு பகுதியால் இந்த உலகை நிலை நிறுத்தியுள்ளேன்.



இப்படி ஒரு நீண்ட பட்டியலையும் கொடுத்து பின் இதைஎல்லாம் அறிந்து உனக்கு என்ன  ஆகப் போகிறது என்று கேள்வியும் கேட்கிறான் கண்ணன்.

இந்த பட்டியலின் மூலம் கண்ணன் என்ன சொல்ல வருகிறான் ?

இந்த பட்டியலின் அடி நாதமாக விளங்குவது என்ன ?

ஒவ்வொன்றிலும் எது  சிறந்ததோ,உயர்ந்ததோ அது நான்  என்கிறான்.

இன்னும் சொல்லப் போனால், அதை மிகத் தெளிவாக கடைசியில் சொல்கிறான்

"எவை எவை பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ  -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது"

இதில் இருந்து நாம் பல விஷயங்களை புரிந்து கொள்ளலாம்:

1. ஒவ்வொரு உயிருக்குளும் அது சிறந்ததாக மாறும் சக்தி இருக்கிறது. அந்த சக்தி தான்  இறை சக்தி. நம்மை உயர்த்தும் சக்தி.

2. அந்த சக்திதான் potential சக்தி. அந்த சக்தியை வெளிக் கொணர்வதன் மூலம் நாம் இறைத் தன்மையை அடைகிறோம்.

3. எது நமது அடிப்படை  சக்தியோ,அதை முழுமையாக அடையும்வரை நாம் மனிதனும்  அல்லாமல் இறைவனும் அல்லாமல் அல்லாடிக் கொண்டு  இருப்போம்.

4. ஒவ்வொரு உயிரும் இறைத் தன்மையை அடைய முடியும் என்பதால் அனைத்து உயிரும் சமம் தான். உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.

5. நாம் நம் துறை எதுவாக இருந்தாலும், அதில் சிறந்தவர்களாக ஆகும் போது நாம்  இறைத் தன்மையை அடைகிறோம்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பார்ப்போம்.


Wednesday, July 23, 2014

கீதை - 10.42 - இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது

கீதை - 10.42 - இந்த உலகம் என் சக்தியால் இயங்குகிறது 



अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन ।
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥१०- ४२॥

அத²வா ப³ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்நமேகாம்ஸே²ந ஸ்தி²தோ ஜக³த் || 10- 42||

அத = மேலும் 

வா  = அது, அதைப் பற்றி,

ப³ஹுன = பலப் பல 

ஏதேந = அதன் மூலம்

கிம் = எதற்கு ?

ஜ்ஞாதேந = அறிவு, அறிவது

த்வா = நீ

அ ர்ஜுந  = அர்ஜுனா

விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்

அஹம் = நான்

இதம் = இதை

க்ருத்ஸ்நம் = முழுவதும்

ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்

ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து

ஜக³த் = உலகை

அர்ஜுனா, இந்த உலகம் அத்தனையும் என் சக்தியின் ஒரு கூறில் நான் நிலை நிறுத்தி இருக்கிறேன். என்னைப் பற்றிய அறிவு மிக விரிந்து பட்டது. இதை அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய் 

கடவுள்  யார், அவர் இருக்கிறாரா, இல்லையா, அவர் குணங்கள் என்ன, அவர் மகிமை என்ன, அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. 

இதை எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகிறோம் ? அவரைத் தெரிந்து கொண்டு அவரிடம் பேசி நமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளலாம் என்றா ? அவரை காக்கா பிடித்து நம்மை தண்டிக்காமல் பார்த்துக் கொள்வதற்கா ? இல்லை  எல்லாவற்றிக்கும் நன்றி சொல்வதற்க்கா ? 

ஏன் இந்த ஆராய்ச்சி ? ஏன் மனிதன் கடவுளைத் தேடிக் கொண்டே இருக்கிறான் ? 

கண்டு பிடித்து என்ன செய்யப் போகிறான் ?

கற்பனவும் இனி அமையும் என்றார் மணிவாசகர். வேண்டாம், இந்த ஆராய்ச்சியே  வேண்டாம், இந்த அறிவும் வேண்டாம், இந்த படித்தவர்களும் வேண்டாம் என்றார் அவர்.

சும்மா இரு சொல் என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்றார் அருணகிரி.தேடுதலை நிறுத்து. சும்மா இரு என்றார் முருகன் அவரிடம். 


ஒரு அத்யாயம் முழுவதும் நீட்டி முழக்கி தன் பெருமையை சொல்லிவிட்டு கடைசியில்  இதை எல்லாம் அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்வியோடு முடிக்கிறார்.

மேலும் சிந்திப்போம்...



Tuesday, July 22, 2014

கீதை - 10.41 - பெருமை, அழகு, உண்மை, வலிமை

கீதை - 10.41 - பெருமை, அழகு, உண்மை, வலிமை 


यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम् ॥१०- ४१॥

யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோம்ऽஸ²ஸம்ப⁴வம் || 10- 41||

யத்³யத்³விபூ⁴திமத் = எது எது பெருமை உடையதோ

ஸத்த்வம் = சாத்தியமானதோ

ஸ்ரீமத் = அழகு, கம்பீரம் உடையதோ

உர்ஜிதம் ஏவ வ = வலிமை உடையதோ

தத் தத் ஏவ = அவைகளின்

வக³ச்ச = அறிந்து கொள்

த்வம் = உன் 

மம = என்

தேஜோம்ऽஸ = ஒளியின், பெருமையின், மகிமையின்

²ஸம்ப⁴வம் = சம்பவிக்கிறது

எவை எல்லாம் பெருமை, உண்மை, அழகு, வலிமை உடையதோ அவை எல்லாம் என் மகிமையின் அம்சத்தில் இருந்து பிறந்தது என்று நீ அறிந்து கொள் 


இதுவரை 54 உதாரணங்கள் தந்தான் கண்ணன். கருடன், வியாசன், மேரு மலை, மௌனம் ,  அர்ஜுனன்,கந்தன், சுறா என்று ஏதேதோ தான் யார் என்பதற்கு  உதாரணங்கள் தந்தான். 

அந்த பட்டியல் முடிவு இல்லாதது. சொல்லிக் கொண்டே போகலாம். 

அதை மொத்தமாக சொல்வது என்றால் எதெது பெருமை, உண்மை, அழகு, வலிமை  உள்ளதோ அவை என் அம்சத்தில் பிறந்தது என்று அறிந்து கொள் என்று   முடிக்கிறான். 

இந்த அத்யாயத்தை படிப்பவர்கள் , என்ன இதில் ஒன்றுமே இல்லையே, ஏதோ நான் அது, நான் இது என்று கண்ணன் தன் பெருமையைக் சொல்லிக் கொண்டுப் போகிறான். இதில் எனக்கு என்ன பிரயோஜனம். கண்ணன்தான் அவதாரம் என்று தெரியுமே. அவன் வலிமையானவன் என்று  தெரியும்.எதற்கு ஒரு முழு  அத்யாயம் இதற்கு என்று ? 

இந்த அத்யாம் மூலம் வியாசர் என்ன சொல்ல வருகிறார் ? 

அடுத்த கடைசி ஸ்லோகத்தையும் பார்த்து விட்டு இந்த இந்த பட்டியலின் நோக்கம் என்ன்னவாக இருக்கும்  என்று  சிந்திப்போம்.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த பட்டியலின் அடி நாதம் என்ன என்று சிந்திப்போம்.




Sunday, July 20, 2014

கீதை - 10.40 - முடிவில்லா மகிமை

கீதை - 10.40 - முடிவில்லா மகிமை 


नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥१०- ४०॥

நாந்தோऽஸ்தி மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தப |
ஏஷ தூத்³தே³ஸ²த: ப்ரோக்தோ விபூ⁴தேர்விஸ்தரோ மயா || 10- 40||



ந அந்தோ அஸ்தி = முடிவு  இல்லை 

மம் = என்

திவ்யாநாம் = ஒளி பொருந்திய, தெய்வீகத் தன்மை உள்ள

விபூதீநாம் = பெருமைகளை

பரந்தப  = எதிரிகளை வெல்பவனே

ஏஷ = இந்த 

தூ = மேலும் , அந்த

உத்தே³ஸ²த: = தோராயமாக. ஒரு குறிப்பிட்ட அளவில்

ப்ரோக்தோ = கூறினேன்

விபூ⁴தேர் = பெருமைகளை, வலிமையை

விஸ்தரோ  = விஸ்தாரமாக, விரிவாக

மயா = என்னால்

பார்த்தா, என் பெருமைகளுக்கு, வலிமைகளுக்கு முடிவே இல்லை.
விஸ்தாரமான என் பெருமைகைளில் சிலவற்றை மாத்திரமே உனக்கு நான் சொன்னேன்.

தெரிந்த ஒன்றைச் சொல்லித்தான் தெரியாத ஒன்றை விளங்க வைக்க முடியும்.

தன்னுடைய பெருமைகளை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்த கண்ணன்,  இதுவரை  சொல்லியது எல்லாம் சில உதாரணங்கள்  தான்.என் பெருமைக்கு முடிவே இல்லை என்கிறான் கண்ணன்.

தங்கத்தை வைத்து மோதிரம்  செய்யலாம்,வளையல் செய்யலாம் , சங்கிலி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவுதான் சொன்னாலும்  தங்கத்தின் பெருமையை முழுமையாக சொல்லி முடியாது. அது  போல...54 உதாரணங்களை சொன்னான் கண்ணன்.


முடிவில், என் மகிமைகளுக்கு முடிவே இல்லை என்று சொல்லி முடிக்கிறான்.

இந்த உதாரணங்களில் இருந்து நமக்குத் தெரிவது என்ன ?



Friday, July 18, 2014

கீதை - 10.39 - அனைத்தின் விதை நான்

  கீதை - 10.39 - அனைத்தின் விதை நான் 


यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन ।
न तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ॥१०- ३९॥

யச்சாபி ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜம் தத³ஹமர்ஜுந |
ந தத³ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ⁴தம் சராசரம் || 10- 39||

யச் = அவைகள்
ச அபி= மேலும்
ஸர்வபூ⁴தாநாம் = அனைத்து உயிர்களும்
பீ³ஜம் = விதை, மூலம்
தத = அது
அஹம் = நான்
அர்ஜுந = அர்ஜுனா
ந = இல்லை
தத்  = அது
அஸ்தி = விளங்குகின்றது
விநா = இல்லாமல்
யத் = அவைகள்
ஸ்யாத் = இருக்கும் 
மயா = என்னால்
பூ⁴தம் = உலகில்
சராசரம் = அசைபவையும், அசையாமல் இருப்பவையும்

அனைத்து உயிர்களிலும் விதை  நான். சராசரங்களில் எனையன்றி வேறு எதுவும் இல்லை. 

இந்த இரண்டு வரியின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

அனைத்து உயிர்களிலும் விதை  நான்.

இந்த உயிர்கள் எல்லாம் இறையின் வெளிப்பாடு என்றால் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது ?  நல்லவனும்,கெட்டவனும், அறிஞனும், மூடனும், எல்லாம் ஒன்றின் வெளிப்பாடு என்று எப்படி கொள்வது?

ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது என்றால், தோன்றியதற்கும், தோற்றுவித்ததற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் அல்லவா ?

நம்மை சுற்றிப் பார்த்தால் அப்படி ஒரு தொடர்பு இருபதாகத் தெரியவில்லை.

நல்லதும் கெட்டதும் விரவிக் கிடக்கிறது.  இரண்டும் ஒன்றில் இருந்து வந்தது என்று அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் நம்மை தோற்றுவித்தானா ? அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவன் நம்மை தோற்றுவித்தவன் என்றால் தோற்றுவித்த பின் அவன் என்ன ஆனான் ? நாம் இறந்த பிறகு நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

இந்த கேள்விகள் அனைத்துக்கும் இந்த இரண்டு வரியில் விடை தருகிறார் வியாசர்.

அனைத்து உயிர்களுக்கும் விதை நான்.

விதையில் இருந்து மரம் வருகிறது. மரம் வந்த பின் விதை என்னவாகிறது ? விதைதான் மரமாக மாறியது.  மரத்தில் இருந்து மீண்டும் விதை வரும். ஒரு விதையில் இருந்து ஒரு மரம் வரும். ஒரு மரத்தில் இருந்து பல விதைகள் வரும். பல விதைகளில் இருந்து பல மரங்கள் வரும்.

ஒரு மாந்தோப்பில் எத்தனையோ மரங்களைப் பார்க்கிறோம். இவை அனைத்தும் ஒரு விதையில் இருந்து வந்தது என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க  முடியும். வந்தும் இருக்கலாம்.

இப்படி எத்தனையோ உயிர்களைப் பார்க்கும் போது அவை அனைத்தும் ஒன்றில் இருந்து வந்தது என்று நினைப்பது கடினமா ?

சரி, விதையில் இருந்து மரம் வரும்.

மரம் விதையில் இருந்து மட்டும்தான் வருமா , வேறு ஏதாவதில் இருந்தும் மரம் வருமா ?

"இந்த உலகில் என்னை அன்றி வேறு எதுவும் இல்லை "

அவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

  


Tuesday, July 15, 2014

கீதை - 10.38 - நான் யார் ? - பாகம் 1

கீதை - 10.38 - நான் யார் ? - பாகம் 1



दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् ।
मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ॥१०- ३८॥

த³ண்டோ³ த³மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் |
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் || 10- 38||

த³ண்டோ³ த³மயதாமஸ்மி = ஆள்பவரிடம் நான் செங்கோல் (தண்டம்)

நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம்  = வெற்றியை விரும்புவோர் இடத்தில் நீதி நான்

மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் = மௌனம் நான் இரகசியங்களில் 

ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் = ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான்


அரசு செலுத்துவோரில் செங்கோல் நான். வெற்றியை விரும்புவோரில் நீதி நான். இரகசியங்களில் மௌனம் நான். ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான். 

இந்த உலகில் ஒவ்வொரு பொருளுக்கும், உயிருக்கும் பின்னால் ஏதோ ஒரு  தனித் தன்மை இருக்கிறது. அந்தத் தனித்தன்மை இருப்பதால் தான் அது அதுவாக இருக்கிறது. கடினமாக இருப்பதால் இரும்பு இரும்பாக இருக்கிறது. அதுவே  மென்மையாக இருந்தால் அதை இரும்பு என்று சொல்ல மாட்டோம்.

அது போல, ஒவ்வொரு உயிருக்கு பின்னாலும் ஏதோ சிறப்பு, தனித் தன்மை இருக்கிறது. பாடும் திறமை, ஆடும் திறமை, திருடும் தன்மை, கொலை செய்யும் தன்மை , கணக்குப் போடும் திறமை என்று ஏதோ ஒன்று இருக்கிறது.

 இவை அனைத்தும்  ஒரு சக்தியின் வெளிப்பாடு. அந்த சக்தி நான் என்கிறான்   கண்ணன்.

அதையே சற்று நீட்டித்து யோசித்தால் "நான்" என்று சொல்லக் கூடியது எது ? எது நான் ?  இந்த உடலா ? உயிரா ? என் ஞாபகங்களா ? எது எனது தனித் தன்மையோ  அந்த தனித் தன்மையின் தொகுதி நான். அது உடலின் வடிவாக இருக்கலாம், படிப்பாக இருக்காலாம், திறமையாக இருக்கலாம்...இவை  அனைத்தின்  தொகுதிதான் தான் நான்.

ஆள்வோரில் செங்கோல் நான்.

 அரசன், அவனுடைய உருவம்,  குரல், தோரணை, பிறப்பு எல்லாம் அவனை  அரசனாக்க   முடியாது. செங்கோல் என்பது அரசின்  சின்னம். அரசர்கள் மாறலாம்.  ஆட்சி செலுத்தும் செங்கோல் ஒன்று தான். செங்கோல் தான் அரசனுக்கு அதிகாரத்தைத்  தருகிறது.

இன்று அரச முறைகள்  இல்லை. ஜனநாயகம் வந்து  விட்டது. செங்கோல் என்பதிற்கு பதில்  பதவி என்று  சொல்லலாம். ஆட்சி செய்வோரில் பதவி நான்.  பதவி இல்லாவிட்டால் ஆட்சி செய்ய முடியாது. அது போல, நான் என்பது என்  தனிக் குணங்களின்  தொகுப்பு. அவை  இல்லாவிட்டால் நான் இல்லை.

அரசன் என்பவன் தான் என்ற உடல் என்று நினைக்கக் கூடாது  அரசு என்பது ஒரு ஆள்  அல்ல. அது ஆட்சி செய்யும்  முறை. நீதி நெறி வழுவாமல் கோலோச்சும் முறை.

உங்கள் தனித் தன்மைகளை மாற்றும் போது நீங்கள் மாறுகிறீர்கள்.

கீதையை முழுவதும் படித்து உணர்ந்த பின் நீங்கள் புது ஆள்.

உங்கள் அனுபவங்களால், படிப்பால், நீங்கள் நாளும் மாறிக் கொண்டே இருக்கிறீர்கள்.  ஒரு நாளில் இருந்து மற்றொரு நாளுக்கு இடையில் உள்ள  மாற்றம்  மிக மிகக் குறைவாக இருபதால் அது உங்களுக்குத் தெரிவதில்லை. ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில் நிகழும் மாற்றங்கள் உங்களுக்குப்  புரிய  வரலாம்.

உங்கள் உணவு பழக்கத்தை ஒரு வருடத்திற்கு மாற்றிப் பாருங்கள், மாற்றம் தெரியும்.

நீங்கள் மாறிப் போவீர்கள்.

 என்ன அர்த்தம் ...?

நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். நான் இப்படித்தான் என்று எதுவும் இல்லை.  நீங்கள் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் நல்லவர்களாக மாற முடியும்.

உங்கள் தனித் தன்மைகளை பட்டியல்  போடுங்கள்.

நல்லவற்றை வைத்துக்  கொள்ளுங்கள்.

அல்லாதவற்றை என்ன செய்வது என்று முடிவு  பண்ணுங்கள்.

பட்டியலில் இல்லாததில் எதைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு பண்ணுங்கள்.

உங்களை நீங்கள் மாற்றலாம்.




Sunday, July 13, 2014

கீதை - 10.37 - ,முனிகளில் நான் வியாசன்

கீதை - 10.37 - ,முனிகளில் நான் வியாசன் 


वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनंजयः ।
मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः ॥१०- ३७॥

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: || 10- 37||


வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி = விருஷினி குலத்தில் நான் வாசுதேவன்

பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய:  = பாண்டவர்களில் நான் தனஜ்ஜயன்

முநீநாமப்யஹம் வ்யாஸ: = முனிவர்களில் நான் வியாசன்

 கவீநாமுஸ²நா கவி: = கவிகளில் நான் உஷாணன்



விருஷ்ணி குலத்தில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் நான்  தனஞ்ஜயன்; முனிவர்களில் நான்  வியாசன்; கவிகளில் நான் உஷாணன்.


யாதவர்களின் முதன்மையானன்வன் யது. யதுவின் மகன் விருஷினி. அவனின் வழித்  தோன்றல்கள் விர்ஷுனி குலம் என்று அழைக்கப் பட்டார்கள். அந்த குலத்தில் தோன்றியவன் வாசுதேவன்.

தனஞ்சயன் என்றால் தனத்தை ஜெயித்தவன் என்று பொருள். பாண்டவர்களில் நான் தனஞ்சயன்.

முனிவர்களில் நான் வியாசன்.

கவிகளில் நான் உஷாணன்.


Saturday, July 12, 2014

கீதை - 10.36 - சூது, ஒளி , உண்மை, வெற்றி, நிச்சயம்

 கீதை - 10.36 - சூது, ஒளி , உண்மை, வெற்றி, நிச்சயம்




द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥१०- ३६॥

த்³யூதம் ச²லயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 10- 36||


த்³யூதம் ச²லயதாமஸ்மி = வஞ்சகரில் சூது நான்

தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |= ஒளி உடையோரின் ஒளி நான்

ஜயோऽஸ்மி = வெற்றி நான்

வ்யவஸாயோऽஸ்மி = உறுதி நான்

ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் = உண்மை உடையோரின் உண்மையாக நான் இருக்கிறேன்


வஞ்சகரில்  சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். வெற்றி நான். உறுதி நான்.  உண்மை உள்ளவர்களில் உண்மை நான்.

சிறந்தவைகளை  மட்டும் அல்ல, கீழான ஒன்றையும் தன் வடிவம் என்கிறான் கண்ணன்.

சிறந்தவைகளை மட்டும்  சொல்லிக் கொண்டே போனால் , சமுதாயத்தில் கீழாக  உள்ளவர்கள் இந்த கீதைக்கும் நமக்கும்  சம்பந்தம் இல்லை என்று போய் விடுவார்கள். அவர்களையும் சேர்த்து கடைந்தேற்ற வேண்டும்.

வஞ்சகர்களில் சூது நான்.

எல்லாம் அவன் என்றானபின் சூது மட்டும் எப்படி அவன் இல்லாததாக இருக்க  முடியும்.

நம்மிடையே வாழ்ந்த ஞானப் புலவன் பாரதி.

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.


குப்பையும் மலமும் கடவுள் என்றான். உலகில் எந்த மதம் சொல்லும் இதை ? ஜீரணிக்க  முடியாத உண்மை.

எல்லாம் கடவுள் தான் என்றால் குப்பையும், மலமும், சூதும் கடவுள்தான்.

ஒளி உடையோரின் ஒளி நான்.

விளக்கில் இருந்து ஒளி வருகிறது. ஆனால் ஒளிக்கும் விளக்குக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  விளக்கு பல வடிவங்களில்  இருக்கும். எண்ணெய் , திரி , விளக்கு என்பவை பலவாக இருந்தாலும் ஒளி ஒன்றாகத்தான் இருக்கிறது.

உயிர்கள் பலவாக இருந்தாலும், அவற்றின் வெளிபாடு ஒன்றுதான்.

நல்லதும் கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்த்தும் எல்லாம் ஒன்றே.

இந்த ஸ்லோகங்கள் வாசித்து விட்டு போவதற்கு அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.


Thursday, July 10, 2014

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 2

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 2


बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத்சாமம்
ஸாம்நாம் கா³யத்ரீ  ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
 மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்


சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ ; சந்தங்களில்  நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் இளவேனில்.

மாதங்களில் நான் மார்கழி.....

மனிதனின் குணம் மாறிக் கொண்டே இருக்கும் என்று பார்த்தோம்.

கால நிலைகள் மனிதனின் குணத்தை பெரிதும் பாதிக்கின்றன.

காலையில் இருக்கும் மன நிலை, மதியம் இருப்பது இல்லை.

மதியம் இருக்கும் மன நிலை மாலை இருப்பது இல்லை.

இப்படி கால நிலைகள் மனித மனத்தை பாதிக்கின்றன.

ஒரு நிலையில் இருந்து காலம் மற்றொன்றுக்கு மாறும் அந்த நேரங்களில் மனம்  குழப்பம் அடைகிறது. அந்த குழப்பத்தை வழிபாட்டின் மூலம் சமம் செய்ய முடியும்  என்று நம் முன்னோர்கள் கண்டார்கள்.

அதாவது இரவு முடிந்து பகல் தோன்றும் அந்த அதிகாலை, பகல் முடிந்து இரவு தோன்றும்  அந்த அந்தி மாலை ...இவை மனதில் குழப்பம் ஏற்படுத்தும் நேரங்கள்.

அந்த நேரத்தில் வழிபாடு செய்து மனதை சம நிலை படுத்த முடியும் என்று உணர்ந்து  சொன்னார்கள்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் இடம் - சந்தியா காலம்.

அந்த நேரத்தில் செய்யும் வழிபாடு, வந்தனம் - சந்தியா வந்தனம்.

அந்த சந்தி நேரங்களில் மனதை ஒருமுகப் படுத்தி, வழிபாடு செய்வது சந்தியா வந்தனம்.

அது போல....

சூரியன் நில நடுக் கோட்டுக்கு மேலே இருக்கும் காலம் உத்தராயணம். கீழே இருக்கும் காலம் தக்ஷினாயனம் என்று அழைக்கப் படும்.

உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பிப்பது தை மாதத்தில் இருந்து.

அதாவது மார்கழி மாதம் என்பது தக்ஷினாயனம் கழிந்து உத்தராயணம் ஆரம்பிப்பது.

அந்த மாதத்தில் மிகுந்த வழிபாடு செய்வார்கள்...திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை என்பதெல்லாம் மார்கழி மாதத்தில் செய்யப்படும் பாராயணங்கள்.

எனவே, மார்கழி மாதம் புண்ணிய மாதம் என்று அழைக்கப் படுகிறது.

மாதங்களில் நான் மார்கழி.



Tuesday, July 8, 2014

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 1

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 1


बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத்சாமம் 
ஸாம்நாம் கா³யத்ரீ  ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
 மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்


சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ ; சந்தங்களில்  நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் இளவேனில்.

மாதங்களில் நான் மார்கழி.....

மனித மனம் மாறிக் கொண்டே இருக்கிறது. சிலசமயம் நல்லது நினைக்கிறது, சில சமயம் அல்லதையும் நினைக்கிறது. கோபம், காமம், அன்பு, அருள், வெறுப்பு...என்று மாறி மாறி சுழன்று கொண்டே இருக்கிறது.

மனத்தின்  நிலைகளை பொதுவாக மூன்று வகையாக பிரித்தார்கள் நம் முன்னோர்கள்.

ரஜோ குணம்
தமோ குணம்
சாத்வீக  குணம்

மனிதனின் அனைத்து மன நிலைகளும் இந்த மூன்று பிரிவில் அடங்கி விடுகிறது. அனைத்து இராகங்களும் ஏழு ஸ்வரங்களில் அடங்கி விடுவது போல.

அது என்ன மூன்று தானா ? மூன்றுக்கு மேல் கிடையாதா ? என்று கேள்வி எழலாம். மிக மிக உன்னிப்பாக கவனித்து மூன்று என்று சொல்லி இருக்கிறார்கள். கேள்வி மூன்றா நான்கா அல்லது அதற்கும் மேலேயா என்பதல்ல. மனித குணம் மாறிக் கொண்டே இருக்கிறது.  மூன்றோ, முப்பதோ அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

மனித குணம் மாறும் இயல்புடையது என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது ?

பல காரணங்கள்.

நாம் உண்ணும் உணவு ஒரு முக்கிய காரணம். மது போன்ற போதை ஊட்டும் பொருள்களை  உண்டால் ஒரு குணம் வருகிறது.  அது போல ஒவ்வொரு உணவும் ஒரு  குணத்தை தூண்டும். நீங்கள் உங்கள் உள் உணர்வை கூர்மை  படுத்தி  வைத்துக் கொண்டால் உங்கள் மன நிலை, உங்கள் குணம் எப்படி மாறுகிறது என்று  நீங்கள் அறிய முடியும்.

நான் ரஜோ குணத்தில் இருக்கிறேன், நான் தமோ குணத்தில் இருக்கிறேன் என்று  நீங்கள் அறிய முடியும்.

உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள்.

ஒரு காப்பி குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் மனம் மாறுவதை நீங்கள் உணர முடியும்.

சோர்வு நிலை மாறி, உற்சாகம் பிறக்கும்.

உணவைப் போல, கால நிலைகளும் மனிதனின் குணத்தை பாதிக்கின்றன.

அதிகாலையில் சாத்வீகம் உயர்ந்து நிற்கும். காலையில் படிப்பது தெளிவாக மனதில் நிற்கும். மாலையில் ராஜச குணம் உயர்ந்து  நிற்கும். நாள் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வந்தால் உங்கள் குணம்  மாறுவதை நீங்கள் உணர முடியும்.

அதனால் தான் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

சரி, இதற்கும் "மாதங்களில் நான் மார்கழி" என்பதற்கும் என்ன சம்பந்தம்.....

தொடரும்