Sunday, August 17, 2014

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி

கீதை - 11.14 - மயிர் கூச்செறியும் காட்சி 


ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनंजयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥११- १४॥

தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |
ப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||


தத: = அப்புறம். அதன் பின்

ஸ = அவன்

விஸ்மயாவிஷ்டோ = ஆச்சரியப்பட்டு

ஹ்ருஷ்ட ரோமா = மயிர் கூச்செரிந்து 

த⁴நஞ்ஜய: | = தனஞ்சயன்

ப்ரணம்ய = வணங்கி

ஸி²ரஸா = தலையால்

தே³வம் = தேவனை

க்ருதாஞ்ஜலி = கைகளால் கும்பிட்டு

அ பா⁴ஷத = சொல்லத் தொடங்கினான்

அப்போது தனஞ்ஜயன் ஆச்சரியம் அடைந்து , மயிர் கூசெறிந்து , அந்த தேவனை தலையால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு, சொல்லத் தொடங்குகிறான்

நேரில் பார்த்தது அர்ஜுனன்.

எங்கோ அமர்ந்து இருக்கும் தனஞ்சயன், அந்தக் காட்சியை கண்டு மெய் சிலிர்க்கிறான்.

அவன் ரோமம் எல்லாம் குத்திட்டு நிற்கிறது.

கை கூப்பி, தலையால் வணங்குகிறான்.

வணங்கி மேலும் சொல்கிறான்...



No comments:

Post a Comment