Saturday, August 9, 2014

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம்

கீதை - 11.10 - விஸ்வரூப வடிவம் 


अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥११- १०॥

அநேகவக்த்ரநயநமநேகாத்³பு⁴தத³ர்ஸ²நம் |
அநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||

அநேக வக்த்ர நயநம் = பல வாய்களையும் பல விழிகளையும் கொண்டது. ஏகம் என்றால் ஒன்று. அந் - ஏகம் என்றால் ஒன்று அல்ல. அப்படி என்றால் பல. வக் என்றால் பேசுவது. வக்த்ர என்றால் பேசும் புலன், அதாவது வாய்  

அநேக அத்புத தர்ஸநம் = பல வித அற்புதமான தரிசனம்

அநேக திவ்யாபரணம் = பல வித திவ்ய ஆபரணங்கள்

 திவ்ய அநேக உத்யாத ஆயுதம் = பல வித உயர்ந்த ஆயுதங்கள்

அந்த வடிவம் பல வாய்களையும், விழிகளையும், திவ்ய படைகளையும் கொண்டது. பல அற்புத வடிவங்களை கொண்டது.

விவரூபத்தை விளக்க வேண்டும். இது வரை யாரும் கண்டிராத ஒன்று. காணாத ஒன்றை எப்படி விளக்குவது ?

தெரிந்த ஒன்றில் இருந்துதான் தெரியாத ஒன்றை விளக்க முடியும்.

புலி எப்படி இருக்கும் என்று தெரியாது.

அது பூனை போல இருக்கும், கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று சொன்னால் புரியும்.

அது போல, வியாசர் ஆரம்பிக்கிறார். 

அந்த உருவத்திற்கு பல வாய்கள் இருக்கின்றன, பல விழிகள் இருக்கின்றன , பலவிதமான ஆபரணங்களை அணிந்து இருக்கிறது என்று.

என்ன அர்த்தம்.

அது ஒரு தொகுதி. பல உயிர்களின் தொகுதி...எனவே அதற்கு பல வாய்கள், பல விழிகள். 

இறை என்பது அனைத்தின் தொகுதி. இந்த உலகம் அனைத்தையும் சேர்த்து ஒன்றாகப் பாருங்கள்...ஒன்றான அந்த உருவத்திற்கு எத்தனை வாய்கள் இருக்கும் , எத்தனை விழிகள் இருக்கும் ?

அதைத்தான் சொல்கிறார். 

பிரித்தது போதும். சேர்த்துப் பாருங்கள். 

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று பாரதி கூறியது போல...எல்லாம் ஒன்று சேர்ந்த தொகுதி தான் இறைவன். 

மணிகளின் நடுவே ஊடாடும் நூல் போல, அனைத்து உயிர்களையும் ஒன்று சேர்த்து வைத்து இருப்பது இந்த இறை சக்தி.

நீங்களும், நானும், அவரும், இவரும் , அதுவும் , இதுவும் எல்லாம் ஏதோ ஒன்றின் கூறுகள் என்று பறை சாற்றுவதுதான் இறை சக்தி. 

இதை விளக்குவத்தான் விஸ்வரூபம். 


No comments:

Post a Comment