Friday, April 29, 2016

கீதை - 15.8 - பூவும் மணமும்

கீதை - 15.8 - பூவும் மணமும்  


शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहित्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥१५- ८॥

ஸ²ரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர: |
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்க³ந்தா நிவாஸ யாத் || 15- 8||
வாயு: ஆஸ யாத் க ந்தாந் இவ


ஸரீரம் = உடல்

யத் = எப்போது

அவாப்நோதி = அடைகிறானோ

யட் = எது

ச = மேலும்

அபி = அதுவன்றி

யுத்க்ராமதி = வெளியே செல்லும்போது

ஈ ஸ்வர: = ஈஸ்வரன்

க்ருஹித்வ = எடுத்துக் கொண்டபின்

எதாநி = இவைகளை

ஸம்யாதி = அவன் அடைகிறான்

வாயு = காற்று

க³ந்தா = மணம்

இவ = அதைப்போல

அசையாத் = மனம்

பூவின் வாசனையை காற்று கவர்ந்து செல்வது போல , ஈஸ்வரன் உடலை அடையும் போதும் , அதை விட்டு விலகும் போதும் இந்திரியங்களை பற்றிச் செல்கிறான். 

நாம் இந்த பிரபஞ்சத்தில் தனி ஒரு மனிதன் அல்ல.

நாம் ஒரு தீவு அல்ல.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்த உலகை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது.

நீங்கள் நல்லது செய்தாலும் சரி, அல்லது செய்தாலும் சரி , அது உங்களோடு முடிவது இல்லை.

உங்கள் செயல் , அதன் விளைவு உலகம் எங்கும் பரவுகிறது.

மனிதன் இதை உணர்வது இல்லை.

நான் பெரியவன். நான் முக்கியம். என் சந்தோஷம் முக்கியம். என் மகிழ்ச்சிக்காக நான் எனக்கு வேண்டியதை செய்து கொள்கிறேன். இதில் யாருக்கு என்ன நட்டம் என்று நினைக்கிறான்.

அப்படி நினைத்துத் தான் இன்று இந்த உலகம் இப்படி ஆகி விட்டது.

காற்றும் நீரும் மாசு பட்டு கிடக்கிறது.

பசுமை எங்கும் மறைந்து உலகம் வெப்பமயமாக இருக்கிறது.

வறட்சி, மழை இல்லை.

சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை.

ஏன்,  சுயநலமாக செய்த வினைகளின் விளைவு.

பூவில் இருந்து மணத்தை காற்று கொண்டு செல்வது போல....

பூ தன் பாட்டுக்கு இருக்கிறது.  அதில் இருந்து வரும் நறுமணத்தை காற்று  எங்கும் கொண்டு செல்கிறது.

பூவுக்குத் தெரியாது தன்னில் இருந்து வரும் நறுமணம் உலகம் எங்கும்  பரவுகிறது என்று.

காற்று அந்த வேலையைச் செய்கிறது.

நீங்கள் (பூ) செய்யும் வேலைகளின் பலன் (நறுமணம்) உலகம் எங்கும் பரவும்.

கீதை பூவையும் நறுமணத்தையும் மட்டுமே சொல்கிறது. குப்பை கூளத்தையும் அதில் இருந்து வரும் துர்நாற்றத்தியும் பற்றி சொல்லவில்லை. நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரிகம் கருதி சொல்லாமல் சொல்லிப் போகிறது கீதை.

இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உண்மை புலப்படும்.

பூ ஒன்றும் வேலை செய்வது இல்லை. அது பாட்டுக்கு இருக்கிறது.

அது போல, நீங்கள் ஒன்றும் வேலை செய்ய வேண்டாம், உங்கள் மனதில் எழும் எண்ணங்களே எங்கும் பரவும்.

எப்போதும் நல்லதையே  நினையுங்கள். எல்லோருக்கும் நல்லதையே நினையுங்கள். நினைத்தால் போதும். செய்யக் கூட வேண்டாம். அந்த நல்ல நினைவுகளே , அந்த அதிர்வுகளே உலகம் எல்லாம் பரவும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், உலகில் உள்ள எல்லோரும் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று.

அறம் செய்ய விரும்பு என்றாள் அவ்வை.

விரும்பினால் போதும். செய்யக் கூட வேண்டாம்.

நல்லதையே நினையுங்கள். நல்லதையே பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்.

அந்த நன்மை உலகம் எங்கும் பரவும்.

எப்படி பரவும் ?

காற்று பூவில் இருந்து நறுமணத்தை கொண்டு செல்வது போல, ஈஸ்வரன் இந்த்ரியங்களை கொண்டு செல்கிறான்.

இந்திரியங்களை கொண்டு செல்கிறான் என்றால் ஏதோ நம் காது, மூக்கு  இவற்றை கொண்டு செல்கிறான் என்று அர்த்தம் அல்ல.

முந்தைய ஸ்லோகத்தில் கூறிய மனம் முதலான ஆறு இந்திரியங்கள் செய்யும்  செயலை கொண்டு செல்கிறான்.

ஊர் உறங்கிற்று என்றால் ஊரில் உள்ளவர்கள் உறங்கி விட்டார்கள் என்று பொருள்.

அந்த வீடு இனிமையான வீடு என்றால், அந்த வீட்டில் உள்ள செங்கலும் சுண்ணாம்பும் அருமையானவை என்று அர்த்தம் அல்ல. அந்த வீட்டில் உள்ளவர்கள் இனிமையானவர்கள் என்று அர்த்தம்.

அது போல ஈஸ்வரன் இந்திரியங்களை கொண்டு செல்கிறான் என்றால் இந்திரியங்கள் செய்யும் செயல்களை கொண்டு செல்கிறான் என்று அர்த்தம்.

மனம் செய்யும் செயல், நினைப்பது. அந்த நினைவுகளை கொண்டு செல்கிறான்.

தீயவற்றை நினைத்தால் , தீயவை பரவும்.

மனத்துக்கன் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர்.

உலகம் திருந்த வேண்டும் என்றால், உலகில் நல்லவை நடக்க வேண்டும் என்றால்...உங்களில் இருந்து தொடங்குங்கள்.

நல்லவற்றையே நினைப்போம்

நல்லவற்றையே சொல்வோம்.

நல்லவற்றையே செய்வோம்.

நன்மை எங்கும் பரவும்.

உலகம் உயர இதுதான் வழி.

உலகம் உயர நீங்கள் தான் வழி.

அந்த வழியில் முதல் அடியை இன்றே எடுத்து வைப்போமா ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/158.html )


Thursday, April 28, 2016

கீதை - 15.7 - எல்லாம் ஒன்றே

கீதை - 15.7 - எல்லாம் ஒன்றே 


ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥१५- ७॥

மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந: | 
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||

மம = என் , என்னுடைய 
ஏவ = நிச்சயமாக 
அம்சா = அம்சம், பகுதி

ஜீவலோகே = உயிருள்ள உலகில் 

ஜீவபூத: = உயிர்களில் 

ஸநாதந: = காலம் காலமாக 

மந:= மனம் முதலான 

ஷஷ்ட = ஆறு 

இந்த்ரியாணி = இந்திரியங்களும் 

ப்ரக்ருதி = பிரகிரிதியில் 

ஸ்தாநி = நிலை நிறுத்தப்பட்டு 

கர்ஷதி = ஈர்க்கிறது 

எனது அம்சமே , இந்த உயிருள்ள உலகில் என்றும் நிலைத்து உள்ள ஜீவனாகி, மனம் முதலிய ஆறு இந்திரியங்களை கவர்கிறது 

என் அம்சமே எல்லா உயிர்களிலும் இருக்கிறது. 

இது சரிதானா ? இது எப்படி சாத்தியமாகும் ? நாம் காணும் உலகில்  ஒவ்வொன்றும் வேறு வேறாகவே இருக்கிறது. ஒன்றைப் போல ஒன்று இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி எல்லாம் ஒன்றின் அம்சம் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும் ?

இதை விளக்க எப்போதும் சொல்லப்படும் ஒரு உதாரணம் உண்டு. இந்த வெளி, ஆகாயம் ஒன்று தான். ஆனால் குடத்துக்குள் இருக்கும்  ஆகாயம் வேறு என்றும் அதற்கு வெளியில் இருக்கும் ஆகாயம் வேறு என்றும் நமக்குத் தோன்றுகிறது அல்லவா ? 

அவை வேறு வேறா ? 

இல்லை , ஒரே ஆகாயம்தான். அதில் பிரிவு என்று ஒன்று இல்லை. பிரிவு இருப்பது போலத் தெரிவது ஒரு தோற்றப் பிழையே அன்றி உண்மை அல்ல. 


சூரியன் ஒன்றுதான். அதன் பிம்பம் , நிழல் குளத்தில், குட்டையில், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் என்று ஒவ்வொரு இடத்திலும் தனித் தனியாக தெரிகிறது. 


நீரின் தன்மைக்கு ஏற்ப அதன் தோற்றம் மாறித் தெரியலாம்.

தெளிந்த , அசைவற்ற நீரில் அது ஒரு மாதிரித் தெரியும்.

சலனம் உள்ள நீரில் வேறு மாதிரி தெரியும்.

சூரியன் ஒன்றுதான். பிம்பம் மாறிக் கொண்டே இருக்கும்.

அனைத்து உயிரிலும்  இருக்கும் சக்தி ஒன்றுதான். ஒவ்வொரு உடைலையும் பொறுத்து அது மாறித் தெரியும்.


"மனம் முதலிய ஆறு இந்திரியங்களை அது ஈர்க்கிறது"

ஐந்து புலன்கள், மற்றும் மனம் சேர்ந்து ஆறு இந்திரியங்கள். இவை ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும்.அப்போதுதான் ஒரு உயிர் சரிவர செயல் பட முடியும். 

இந்த ஐந்து புலன்களையும், மனதையும் இழுத்து ஒன்றாக இணைப்பது அந்த சக்திதான். 

Consciousness என்று சொல்லக் கூடிய அந்த தன் உணர்வு, நான் என்ற அறிதல் எப்படி வருகிறது. புலன்கள் அறிவை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கின்றன. அனுபவங்கள் சேர்ந்து கொண்டே போகிறது. இந்த அறிவும், அனுபவமும், சேர்ந்து "நான்" என்ற என்னை உருவாக்குகிறது.  

புலன்களையும், மனதையும் சேர்த்து வைக்க ஒரு சக்தி வேண்டும். 

அந்த சக்தி எல்லா உயிரிலும் இயங்குகிறது. 

பாத்திரம் மாறினாலும், அதனுள் இருக்கும் ஆகாயம் மாறுவது இல்லை..


"எனது அம்சமே அனைத்து உயிரிலும் நிறைந்து இருக்கிறது" என்று தினமும் சொல்லிப் பாருங்கள். அது கிருஷ்ணன் சொன்னது இல்லை. நீங்கள் சொல்ல வேண்டியது. ஒருமுறை சொல்லிப் பாருங்கள்.

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவர் முன்னாலும் ஒரு நொடி "எனது அம்சமே அனைத்து உயிரிலும் நிறைந்து இருக்கிறது" என்று நினைத்துப் பார்த்து விட்டு பேசத் தொடங்குங்கள்.

உங்கள் பேச்சு இனிமையாக இருக்கும்.

உருவங்கள் மாறினாலும், நாம் எல்லாம் ஒன்றுதான்.

அந்த எண்ணம் வரும்போது பிரிவினை மறையும், கோபம் மறையும், போட்டி பொறாமை மறையும்.

மனதில் அமைதியும், சாந்தியும் நிலவும்.

நிலவட்டும்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/157.html

Tuesday, April 26, 2016

கீதை - 15.6 - அதுவே பரமபதம்

கீதை - 15.6 - அதுவே பரமபதம் 



न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥१५- ६॥

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக: |
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம || 15- 6||


ந = இல்லை

தத்= அது

பாஸயதே = ஒளிரச் செய்வது

ஸூர்யோ = சூரியனோ

ந = இல்லை

ஸஸாங்கோ = சந்திரனோ

ந = இல்லை

பாவக: =நெருப்போ

யத் = எதை

கத்வா = சென்ற பின்

ந = இல்லை

நிவர்தந்தே = திரும்பி வருவது இல்லையோ

தத் = அது

தாம = வீடு , பதம்

பரமம் = பரம

மம  என்னுடைய


அதை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளி ஏற்றுவதில்லை. எதை அடைந்தபின் அவர்கள் மீளுவதில்லையோ, அதுவே என் பரம பதம்.


ஏதோ விடுகதை மாதிரி இருக்கிறது.


பரம பதம் என்றால் என்ன ? பரம பதம் என்றால் ஏதோ சொர்கம், இறந்த பின் , நல்லது செய்தால் அங்கே போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் கூட பிரிவுகள் உண்டு. மனித மனம் எதைத்தான் பிரிக்காது ? பரம பதம், வைகுண்டம், கைலாயம், சொர்க்கம், என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. இதிலும் சில  உயர்த்து, மற்றது தாழ்ந்தது என்றும் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

இந்த பரம பதத்தை பற்றி கீதை என்ன சொல்கிறது ?

பரம பதம் என்பது இறந்த பின் போகும் இடம் அல்ல. இறப்பதற்கு முன்பே பரம பதத்தை அடைய முடியும் என்கிறது கீதை.

அப்படிச் சொன்னால் நிறைய பேருக்கு சங்கடமாக இருக்கும்.

ஏன் ?

ஒருவேளை மற்றவன் எனக்கு முன் அதை அடைந்து விடுவானோ என்ற பயம். இறந்த பின் என்றால் ஒரு போட்டியும் இல்லை.

ஆனால் கீதை இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

பரம பதத்துக்கும் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

அப்படித்தான் கீதை சொல்கிறது.

சரி, அப்படி என்றால் எதுதான் பரமபதம் ?

பரம பதத்திற்கு இரண்டு குறிப்புகள் சொல்கிறது கீதை....

முதலாவது, எது சூரிய , சந்திர மற்றும் நெருப்பால் ஒளிஏற்றப் படுவது இல்லையோ....

அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

நாம் இந்த உலகில் உள்ள பொருள்களை பார்க்க இரண்டு விஷயங்கள் வேண்டும்.

ஒன்று, பார்க்கும் நம் கண். கண் நன்றாக வேலை செய்யவேண்டும். கண் இருந்தால் தான் பார்க்க முடியும்.

சரி, கண் மட்டும் இருந்துவிட்டால் பார்த்து விட முடியுமா ?

இருட்டில் எவ்வளவுதான் விழித்து விழித்துப் பார்த்தாலும் கண் தெரியாது. தட்டு தடுமாறுவோம்.

எனவே, பார்பற்கு கண்ணோடு கூட வெளிச்சமும் வேண்டும்.

வெளிச்சம் இரண்டு வகையில் வரலாம்.

இயற்கையான வெளிச்சம் - சூரியன் மற்றும் சந்திரனில் இருந்து வருவது.

இரண்டாவது செயற்கை வெளிச்சம் - நாம் மூட்டும் நெருப்பில் இருந்து வருவது.

இவற்றில் இருந்து வரும் வெளிச்சம் பொருள்கள் மேல் பட்டு நம் கண்ணை வந்து அடைகிறது. நம் கண் அவற்றை இனம் கண்டு கொள்கிறது.

வெளிச்சம் அனைத்து பொருள்கள் மேலும் விழும். அவற்றின் மேல் பட்டுத் தெறிக்கும்.

சூர்யனும், சந்திரனும், நெருப்பும் அனைத்து பொருள்களையும் ஒளியூட்டும்.

பரமபதம் என்பது இவற்றால் ஒளியூட்டப் படாதது என்கிறது கீதை.

எது இவற்றால் ஒளியூட்டப்படாதது ?

வெளியில் உள்ள எதன் மீதும் ஒளி விழும் என்றால், ஒளி விழாத ஒன்று வெளியில் இல்லை. அது நமக்குள்ளே இருக்கிறது.

நமக்குள் இருக்கும் ஒன்றை எப்படி சூரியன் ஒளியூட்ட முடியும் ?

அப்படி என்றால் பரம பதம் என்பது வெளியே இல்லை. அது நமக்குள் இருக்கிறது.

பாற்கடல், பனிமலை, பதும பீடத்து அந்நகர் என்று எங்கோ இருக்கும் உலகம் அல்ல பரமபதம்.

அது உங்களுக்குள்ளே இருப்பது.

சரி, அது சூரிய, சந்திர  மற்றும் நெருப்பால் ஒளியூட்டப் படுவது இல்லை என்றால் வேறு எதனால் என்ற கேள்வி எழும் அல்லவா.

இருட்டில் எப்படி அதை அறிய முடியும் ?

அறிவால் , ஞானத்தால் அதை அறிய முடியும்.

இது முதலாவது.

இரண்டாவது, எதை அடைந்தபின் மீள்வது இல்லையோ, அதுவே என் பரம பதம்.

அது என்ன அடைந்த பின் மீள்வது இல்லை ?

நாம் நிறைய படிக்கிறோம். படித்தவர் சொல்லக் கேட்கிறோம். பக்தியோடு இருக்கிறோம். பூஜை புனஸ்காரம் செய்கிறோம். தான தர்மங்கள் செய்கிறோம்.

நம் மனதில் சில சமயம் ஒரு நிம்மதி, ஒரு சாந்தி, ஒரு திருப்தி எழலாம்.

அது தான் பரமபதமா ?

நமக்குள் , நாம் உபாசிக்கும் இறைவன் இருப்பதாய் உணரலாம். அதுதான் பரமபதமா ?

எதை அடைந்தால் நீங்கள் மீள்வது இல்லையோ, அதுவே பரமபதம்.

ஒருமுறை அடைந்து விட்டால், அதை இழப்பது என்பது இல்லை. அது நிரந்தரமானது.

மீண்டும் ஒரு குறை, துன்பம், சந்தேகம், குழப்பம் இவை வந்தால் நீங்கள் உணர்ந்தது பரமபதம் அல்ல.

பரம பதம் என்றால் உயர்ந்த நிலை, உயர்ந்த இடம் அவ்வளவுதான்.

அது உங்களின் நிலை.

அது ஒரு இடமோ, கட்டிடமோ, கடலோ, மலையோ, இல்லை.

அதை வெளியில் தேடக் கூடாது. நீங்கள் வெளியில் எதையாவது காண முடியுமானால் , அது பரமபதம் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள். அதன் மேல் ஒளி விழும் என்றால் அது அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்.

அது உங்களுக்குள் இருக்கிறது.

வெளிச்சம் படாத இடத்தில் இருக்கிறது.

அதை அறிந்து கொண்டால், அதைப் பற்றிய சந்தேகம் மீண்டும் வராது.

அவ்வளவு சர்வ நிச்சயமான ஒன்று அது.

அந்த நிலையை நீங்கள் அடைய வாழ்த்துக்கள்.

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/156.html )

Monday, April 25, 2016

கீதை - 15.5 - நாசமற்ற பதம் - பாகம் 4

கீதை - 15.5 - நல்வழி  - பாகம் 4



निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||


நிர்மாநமோஹா  = அகந்தையும், மயக்கமும் இன்றி

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)

அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

 ஸுக து:க = சுகம் துக்கம்

ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அ மூடா:  = மூடத் தன்மை அற்றவர்கள்

பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

தத் = அது

அகந்தையும், மயக்கமும் இன்றி;
பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
ஆசைகளில் இருது நீங்கி ,
சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
மடமையற்றோர்,  அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்

 என்ன ஒரு அற்புதமான சுலோகம். மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க அதன் அருமை, இனிமை புரியும்.

இது போல எத்தனை அற்புதமான ஸ்லோகங்களை கீதை நமக்குத் தருகிறது.

கீதை என்பது ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது ஒரு வாழ்கை நூல். நம் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு நூல்.

 சம்சாரம் என்ற மரத்தை வீழ்த்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறினார் அல்லவா ?

எல்லா பற்றியும் விட்டு விட்டு என்ன வாழ்க்கை என்று சலிப்பவர்கள் உண்டு .

அப்படி பற்றில்லாமல் வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேள்விக்கு விடை தர வேண்டும் அல்லவா ? சும்மா பற்றில்லாமல் இரு, பற்றற்ற வாளால் சம்சாரம் என்ற மரத்தை வெட்டு என்று சொல்லுவது எளிது. செய்தால் என்ன  நடக்கும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?

இன்னும் சில பேர், இதெல்லாம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். வியாசர் இதைத்தான் சொல்லுவார். ஆனால், இதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை என்று தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள்.

கீதை பற்றற்று இரு என்று ஏதோ சாமியார் வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை. நீங்கள் மிக மிக சந்தோஷமாக, எப்போதும் இன்பமாக வாழ வழி சொல்கிறது.

வாழ்க்கையில் துன்பம் ஏன் வருகிறது ?

இரண்டு வழிகளில் துன்பம் வருகிறது.

முதலாவது, நம்மை பற்றிய தவறான எண்ணம். இரண்டாவது, இந்த உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

தன்னைப் பற்றிய தவாறன எண்ணத்திற்குப் பெயர் அகந்தை, மமதை, செருக்கு.

எப்படி அது துன்பத்திற்கு வழி வகுக்கும் ?

யாராவது என்னை "நீ பெரிய அறிவாளி" என்று சொல்லிவிட்டால், அந்த அறிவாளி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள  நான் படாத பாடு படுகிறேன். விழுந்து விழுந்து படிக்கிறேன். பல பட்டங்களை பெறுகிறேன். மேலும் மேலும்  படிக்கிறேன். கிடைக்கின்ற சந்தர்பத்தில் எல்லாம் என் மேதாவிலாசத்தை நிரூபிக்க முயல்கிறேன். என்னை யாராவது அறிவாளி இல்லை என்று சொன்னால் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். அவர்கள்  எண்ணம் தவறு என்று நிரூபிக்க முயல்கிறேன். நான் அறிவாளியா இல்லையா என்பதல்ல கேள்வி.  என்னைப்பற்றிய   ஒரு எண்ணத்தை நான் நிரூபிக்க முயல்கிறேன். அதற்காக வாழ் நாள் எல்லாம்  முயற்சி செய்கிறேன்.  அதற்காக மற்றவற்றை தியாகம் செய்கிறேன்.

முடிவில் , அடடா வாழ்க்கையில் என்னென்னவோ இருந்திருக்கிறது.  நான் ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு  வாழ்கை பூராவும் இதிலேயே செலவழித்து விட்டேனே என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.

இது அறிவாளி என்ற பட்டத்துக்கு மட்டும் அல்ல.

சிறந்த பக்திமான், ஆசாரமானவன், ஆத்திகன், நாத்திகன், தலைவன், தொண்டன், தியாகி, சாது, தீவிரவாதி  என்று எத்தனை பட்டங்கள் உண்டோ  அத்தனை பட்டத்துக்கும் ஒரு ஆள் இருக்கிறான். அதற்காகவே உயிரை விட. இது தன்னைப் பற்றிய  தவறான எண்ணங்களினால் வரும் துன்பம்.

அகந்தையினால் வரும் துன்பம் இது. பட்டங்களின் மேல் உள்ள பற்றுதலால் வரும் துன்பம்.

இன்னொரு பக்கம் உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

ஆங்கிலத்தில் Delusion என்று சொல்லுவார்கள்.

உலகம் நிரந்தரமானது, மற்றவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள், நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தல் கெட்டது நடக்கும் , நல்லது செய்தால் சொர்க்கம் போகலாம், கெட்டது செய்தால் நரகம் கிடைக்கும் என்று வெளி உலகைப் பற்றி ஆயிரம் அபிப்ராயம் உண்டு நம்மிடம்.  நமக்கு உள்ள அபிப்ராயம் எல்லாம் சரியானது என்றே நாம் உறுதியாக நினைக்கிறோம்.  அதில் சந்தேகம் இல்லை. அது தான் மயக்கம் அல்லது  delusion எனப்படுவது. இந்த தவறான எண்ணத்தினால் என்ன நிகழ்கிறது என்றால், வெளி உலகம் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் நமக்கு கோபமும் வருத்தமும் வருகிறது.

"நான் அவனுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன்...எனக்கு தேவை என்ற போது அவன் எனக்கு உதவி செய்ய வில்லையே "

"எப்படி அவளை/அவனை காதலித்தேன்...கடைசியில் கை விட்டுவிட்டாளே /விட்டுவிட்டானே"

"நான் எவ்வளவு பூஜை செய்தேன்....இந்த சாமிக்கு நன்றியே இல்லை "

என்று வருந்துகிறோம்.  கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தன்னிரக்கம் மேலிடுகிறது.

தன்னைப் பற்றிய தவறான எண்ணம்.

வெளி உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

இந்த இரண்டையும் , பற்றற்ற வாளால் சம்சாரம் என்று மரத்தை வெட்டியவர்கள், விட்டு விடுவார்கள்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.

முதல் ஒரு வரியில், முதல் பாதிக்கு இவ்வளவு அர்த்தம்.

மேலும் வரும்.

நல்லா இருக்கு தானே ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155.html )

================ பாகம் 2 ================================================

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)


அது என்ன எப்ப பார்த்தாலும் பற்றை விடு, பற்றை விடு என்று  சொல்லிக் கொண்டு....பற்றை விடுவது என்றால் பிள்ளைகளை என்ன செய்வது, உடன் பிறப்புகளை என்ன செய்வது,  சேர்த்து வைத்த செல்வத்தை என்ன செய்வது, செல்வம் இல்லாமல்  எப்படி வாழ்வது....இந்த பற்றை விடுவது என்பது நடை முறைக்கு ஒவ்வாத  ஒன்றாக இருக்கிறது. 

சாமியார்களுக்கு வேண்டுமானால் இது சரியாக வரலாம். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு   சரி வருமா ? உறவுகளை எல்லாம் உதறி விட்டுப் போக முடியுமா ? கீதை நடை முறைக்கு ஏற்ற நூல் தானா ?


சிந்திப்போம். 

பற்று என்றால் என்ன ?

முழுமையை விட்டு விட்டு பகுதியைப் பிடித்துக் கொள்வது. 

நாட்டுப் பற்று. 

நாட்டுப் பற்று என்றால் என்ன ? உலகம் முழுவதும் இருக்க...அதை எல்லாம் விட்டு விட்டு  ஒரு பகுதியை மட்டும் நேசிப்பது , தான் பிறந்த இடத்தை மட்டும் நேசிப்பது.  அது மட்டும் அல்ல, தான் பிறக்காத மற்ற இடங்களை வெறுப்பது. அங்கு  பிறந்தவர்களை எதிரிகளாக நினைப்பது, அவர்களை கொல்லவும் துணிவது. எல்லா நாடும் என் நாடு என்றே நினையுங்கள். எல்லா நாட்டையும் நேசியுங்கள். யாது ஊரே, யாவரும் கேளிர் என்று எண்ணுங்கள். எல்லா நாடும் உங்கள் நாடு என்றால் எந்த நாட்டின் மேல் பற்று வைப்பீர்கள் ? நாட்டுப் பற்று விட்டுப் போய் விடும் அல்லவா ?

சமயப் பற்று என்றால் என்ன ?

உண்மை ஒன்றுதான். எல்லாம் சமயங்களும் அந்த உண்மையைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன.  ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வழியை சொல்கின்றன.  என் வழிதான் சரி  என்று சொல்வது சமயப் பற்று.  அது மட்டும் அல்ல, மற்ற வழிகள் தவறு, அதை பின் பற்றுபவர்கள் தீயவர்கள், அவர்களை கொல்ல வேண்டும்  என்று நினைப்பது சமயப் பற்று. என் சமயம் உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தவை என்ற பாகு பாடு எதுக்கு ? ஒரு சமயத்தின் மேல்தான் பற்று வைக்க  வேண்டும் என்று யார் சொன்னது. எல்லா சமயமும் உங்களுக்காகவே. அனைத்து சமயங்களையும் நீங்கள் பின் பற்றினால், சமயப் பற்று  எங்கிருந்து வரும்.


இப்படி மொழிப் பற்று, இனப் பற்று என்று ஒவ்வொரு பற்றும் நம்மை பிரித்து, சிறிய வட்டத்துக்குள் அடைத்து விடுகின்றன. 

என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்...மற்ற பிள்ளைகள் எக்கேடும் கெட்டு போகட்டும் என்பது பிள்ளை மேல் வைத்த பற்று. 

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பே எவ்வளவு சுகம்.

எல்லா நாடும் நன்றாக இருக்க வேண்டும், எல்லா மொழியும் தழைக்க வேண்டும், அனைத்து மதங்களும் உயர வேண்டும்....

இப்படி அனைத்தும் உங்களது என்று ஆகிவிட்டால் எப்படி பற்று வரும் ?

என்றாவது உங்கள் வலது கண்ணின் மேல் பற்று வைத்து இருகிறீர்களா ? முழுவதும் இருக்க , பகுதியில் மட்டும் ஏன் பற்று வைக்க வேண்டும் ?

கீதை இந்த பற்றை விடச் சொல்கிறது. 

பற்று என்ற தீய எண்ணம் விலகி, எல்லோருக்கும் மனம் விரியட்டும். 

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-2.html )


================= பாகம் 3 ===============================================


அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

எதற்காக ஆத்ம ஞானத்தில் நிலைக்க வேண்டும் ? ஆத்மாவைப் பற்றி நினைப்பதால் என்ன கிடைக்கும் ? முதலில் ஆத்மா ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.  அது உறுதியானால் அல்லவா அது பற்றிய  ஞானத்தில் இலயிப்பது.

ஆத்மா என்ற பெயரை விட்டு விடுவோம். 

நம் மனம் எப்போதும் வெளி நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது.  பொருள்கள், உறவுகள், அனுபவங்கள் என்று ஆலாய் பறக்கிறது. இது வேண்டும், அது வேண்டும், என்று அனைத்துக்கும் ஆசைப் படுகிறது.  ஆசைப் படுவது மட்டும் அல்ல, அவற்றை அடைய முயற்சி செய்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால் மனம்    மகிழ்கிறது. இல்லை என்றால் வருந்துகிறது. 

சரி, முயற்சி செய்து அடைந்த பின்னும், அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கிடைக்கும் வரை தான் ஆவல். கிடைத்த பின், அதன் மேல் உள்ள   ஆர்வம் போய் போய் விடுகிறது. அடுத்த ஒன்றை மனம் துரத்தத் தொடங்குகிறது. 

முடிவில்லா ஓட்டம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

இதை விட்டால் வேறு வழி என்ன  ? ஆசைப் படாமலும் இருக்க முடியவில்லை. ஆசைப்படுதலும் சரி இல்லை என்று தெரிகிறது. என்னதான் செய்வது. 

ஒன்றும் செய்யாமல் இருக்க முடியுமா ?

சும்மா எப்படி இருப்பது ?

கீதை சொல்கிறது...வெளியே ஓடும் மனதை உள் நோக்கித் திருப்பு என்று. 

எது ஆசைப் படுகிறது ? ஏன் ஆசைப் படுகிறது ? ஆசைப் பட்டு இதுவரை அடைந்தது என்ன ? 

மனம் ஏதோ ஒன்றைப் பற்ற வேண்டும். வெளி உலகைப் பற்றுவதை விட, இன்பத்தை, மகிழ்ச்சியை வெளியே தேடுவதை விட, அந்த இன்பத்தின் தன்மை, அதை அறியும் விதம் பற்றி சிந்தித்தால், அது பற்றிய தெளிவு வந்தால், மனம் நிலைப்படும். 

ஓட்டம் குறையும். 

நிற்கும். 

"ஆத்ம ஞானத்தில் நிலைத்து இருப்பது " என்றால் வெளி நோக்கி ஓடும் மனத்தை உள் நோக்கி திருப்புவது. 

தன்னைத் தான்  அறிவது.

இது எப்போதோ பொழுது போகாத நேரத்தில் செய்வது அல்ல. நித்யமும். எப்போதும். அந்த நினைவிலேயே இருக்க வேண்டும் என்கிறது கீதை. அதாவது, தன் உணர்வு, தான் யார் என்ற எண்ணம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். 

அப்படி இருக்கும் போது உலக இன்பங்களின் பின்னால் மனம் ஓடாது. அது தான் இப்போது வேறு ஒன்றைப் பற்றிக் கொண்டு இருக்கிறதே. 

மனம் ஓடாத போது , சலனம் இல்லாத போது , ஆசைகளினால் வரும் துன்பம் தொலையும். 

ஆனந்தம் பிறக்கும். 

பிறக்கட்டும். 


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-3.html )

==================   பாகம் 4 ========================

விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

 ஸுக து: = சுகம் துக்கம்

ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

மூடா:  = மூடத் தன்மை அற்றவர்கள்

பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

தத் = அது

ஆசைகளை விட்டு விலகி ....

நடக்கிற காரியமா ? அப்படியே நடந்தாலும் , ஆசை இல்லாத வாழ்கை ஒரு  வாழ்கையா ? மரம், கல்லு, மண்ணு கூடத்தான் ஆசை இல்லாமல்  இருக்கிறது. அப்படி இருந்து என்ன சுகம் ?

நீங்கள் உங்கள் காரில் ஏறி ஒரு ஊருக்குப் போகிறீர்கள். போகிற வழியில் , இடது புறத்தில் ஒரு நல்ல சோலை இருக்கிறது. அடடா, என்ன அழகான சோலை, அதை பார்த்து விட்டுப் போவோம் என்று அங்கே போகிறீர்கள். அங்கு போனால், அதிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு அருவி. சரி, அதில் ஒரு குளியல் போட்டு விட்டு போகலாம் என்று  அங்கே போகிறீர்கள். குளித்தவுடன் பசி எடுக்கிறது. கொஞ்சம் தூரம்  போனால்   ஒரு நல்ல உணவு விடுதி இருக்கும். சாப்பிட்டு விட்டு போகலாம் என்று  அங்கே போகிறீர்கள். சாப்பிட்டவுடன், அந்த கடை வீதியில் ஒரு நல்ல  புத்தகக் கடை இருக்கிறது என்று கேள்விப் பட்டு அங்கே போகிறீர்கள். அங்கே போனால், இங்கே பக்கத்தில் ஒரு பெரிய கோவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள்...


இப்படியே ஒன்றை விட்டு மற்றதன் பின்னால் போய் கொண்டு இருந்தால் எப்போது ஊர் போய்  சேர்வது ?

அடடா, இதெல்லாம் அனுபவிக்காமல் ஊர் போய் சேர்ந்து என்ன பிரயோஜனம் என்று கேட்பீர்களா அல்லது ஊருக்கு காலாகாலத்தில் சென்று சேர வேண்டும் என்று நினைப்பீர்களா. 

போகிற வழியில் ஆயிரம் இருக்கும். எல்லாவற்றிற்கும் ஆசைப் பட்டுக் கொண்டிருந்தால் ஊர் போய் சேர முடியாது. 

அது போல,  வாழ்வில் ஒரு இலக்கை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது , இந்த சில்லறை ஆசைகள் நம்மை திசை திருப்பி விடும்.

சிக்கல் என்ன என்றால், நமக்கு வாழ்வில் எங்கு போகிறோம் என்று தெரியாது. வண்டி போகிற போக்கில் நாமும் போகிறோம். எங்கு போகிறோம் என்று தெரியாததால் எங்கு வேண்டும் என்றாலும் போகலாம். இங்கே, அங்கே என்று அலைந்து கொண்டு இருக்கிறோம்.

வாழ்வின் குறிக்கோளை, இலக்கை தேர்ந்து கொண்டால், ஆசைகள் தானே கழன்று விடும்.

சரி. அந்த வாழ்வின் நோக்கத்தை, குறிக்கோளை எப்படி அறிந்து கொள்வது ? யார் வந்து சொல்லித் தருவார் ? எந்த புத்தகத்தில் அது இருக்கிறது ? அதை எப்படி கண்டு பிடிப்பது ?

அதற்குத்தான் முந்தைய வரி....

ஆத்ம ஞானத்தில் இலயித்து....

முதலில் தன்னைத்தான் அறிய வேண்டும். அப்போது தான் எங்கு போகப் போகிறோம் என்று  தெரியும். அதன் பின் அந்த இடத்தை நோக்கி நகரலாம். ஒரு வேளை நீங்கள்  போய் சேர வேண்டிய இடத்தில் தான் இருக்கிரீர்களோ என்னவோ ? யாருக்குத் தெரியும் ? நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்த பின்னும், இறங்காமல் வண்டியில்  உட்கார்து கொண்டு , இது என்ன அடம். 

உங்கள் சிந்தனைகளை  உள் நோக்கி செலுத்தத் தொடங்கும் போது , நீங்கள் யார், உங்கள் நோக்கம் என்ன, உங்கள் குறிக்கோள் என்ன என்பது புலனாகும். 


"சுகம் துக்கம் என்ற இருமைகளில் இருந்து விடுபட்டு "

நமது உடலில் வலம் இடம் என்று இரண்டு இருக்கிறது அல்லவா ? வலக் கை, இடக் கை, வலது காது, இடது காது என்று பிரித்து வைத்திருக்கிறோம்.

இந்த வலது எங்கே முடிகிறது ? இந்த இடது எங்கே தொடங்குகிறது ? இந்த உடல் ஒரு முழுமையான ஒன்று. இதில் வலம் , இடம் என்ற பிரிவுகள் கிடையாது. நாம் நமது வசதிக்காக இது வலது கை, இது இடது கை என்று பெயரிட்டு வைத்திருக்கிறோம். மற்றபடி இந்த உடல் முழுமையான ஒன்றுதான்.

அது போல, இந்த உலகம் முழுமையான ஒன்று. அதில் நடக்கும் நிகழ்வுகளை நாம் சுகம், துக்கம் என்று பகுத்து வைத்திருக்கிறோம். 

ஆத்ம ஞானத்தில் மூழ்கியவர்கள், ஆசைகளை விட்டு விலகியவர்கள் இந்த சுகம் துக்கம் என்ற இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பார்கள். 

அது எப்படி சுகமும் துக்கமும் ஒன்றாக இருக்க முடியும் ? 

திருமணம் முடித்துக் கொண்டால் சுகம். கணவனோ மனைவியோ இறந்து போனால் துக்கம். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?

வாதத்திற்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம், நடை முறையில் சாத்தியமா ?

ஆரோக்கியமாக இருந்தால் சுகமாக இருக்கிறது. 

நோய் வந்தால் துக்கமாக இருக்கிறது. 

பிள்ளைகள் படித்து நல்ல மதிப்பெண் வாங்கினால் சுகம். 

பிள்ளைகள் படிக்காமல் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினால் துக்கம். 

எப்படி இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியும் ?


வெற்றியும் தோல்வியும் ஒன்றா ?

சற்று சிந்திப்போம். 

வாழ்வில் சுகமும், துக்கமும் தனித்தனியாக இருப்பது இல்லை. 

சுகம் தலை என்றால், துக்கம் வால். 

தலையைப் பிடித்து தூக்கினால், வாலும் கூடவே வரும். 

கல்யாணம் சுகம் என்றால், அப்போதே எழுதிக் கொள்ளலாம் என்று ஒரு நாள் கணவன் மனைவி  இருவரில் ஒருவர் முந்தி இறக்கப் போகிறார். அன்று துக்கம் வரத்தான் செய்யும். 


அந்த துக்கத்திற்கு காரணம், இந்த சுகம். 

பதவி உயர்வு பெற்றதற்காக பார்ட்டி தரும் எவனும் அது முடிந்து வீடு செல்லும் போது  அழத்தான் செய்வான். 

அந்த துக்கத்திற்கு, இந்த சுகம் அச்சாரம். 

இந்த சுக துக்கத்திற்கு இடையே காலம் தான் நடுவில் நிற்கிறது. காலத்தை சுருக்கினால் இரண்டும் ஒன்று என்று தெரியும். 

செல்வம் வரும்போது சந்தோஷம் வந்தால், அது போகும் போது கட்டாயம் துக்கம் வரும். 

வருவதற்கும் போவதற்கும் நடுவில் சிறிது கால இடைவெளி ...அவ்வளவுதான். 

சுகத்தின் கருவில் துக்கமும், துக்கத்தின் கருவில் சுகமும் இருக்கின்றன.

இதை அறிந்தவன் சுகத்தையும் துக்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான். 


சக்ரவர்த்தி பட்டம் கொடுத்த போதும் மகிழவில்லை. 

அதை மறுத்து கானகம் போ என்று சொன்னபோதும் "அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்ததம்மா " அவன் முகம் என்று இருந்தான் இராமன். 

அப்படி பார்காதவனுக்கு இயற்கை பாடம் நடத்திக் கொண்டே இருக்கும், அவன் அப்படி பார்க்கும் வரை. 


சுகத்திலும் துக்கத்திலும் நிலை தடுமாறாமல் நில்லுங்கள். 

அதுவே கீதை காடும் நல் வழி.

அந்த வழி உங்களுக்காக காத்திருக்கிறது. 

அடி எடுத்து வையுங்கள்.  


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-4.html )

Sunday, April 24, 2016

கீதை - 15.5 - நாசமற்ற பதம் - பாகம் 3

கீதை - 15.5 - நாசமற்ற பதம் - பாகம் 3



निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||


நிர்மாநமோஹா  = அகந்தையும், மயக்கமும் இன்றி

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)

அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

 ஸுக து:க = சுகம் துக்கம்

ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அ மூடா:  = மூடத் தன்மை அற்றவர்கள்

பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

தத் = அது

அகந்தையும், மயக்கமும் இன்றி;
பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
ஆசைகளில் இருது நீங்கி ,
சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
மடமையற்றோர்,  அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்

 என்ன ஒரு அற்புதமான சுலோகம். மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க அதன் அருமை, இனிமை புரியும்.

இது போல எத்தனை அற்புதமான ஸ்லோகங்களை கீதை நமக்குத் தருகிறது.

கீதை என்பது ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது ஒரு வாழ்கை நூல். நம் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு நூல்.

 சம்சாரம் என்ற மரத்தை வீழ்த்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறினார் அல்லவா ?

எல்லா பற்றியும் விட்டு விட்டு என்ன வாழ்க்கை என்று சலிப்பவர்கள் உண்டு .

அப்படி பற்றில்லாமல் வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேள்விக்கு விடை தர வேண்டும் அல்லவா ? சும்மா பற்றில்லாமல் இரு, பற்றற்ற வாளால் சம்சாரம் என்ற மரத்தை வெட்டு என்று சொல்லுவது எளிது. செய்தால் என்ன  நடக்கும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?

இன்னும் சில பேர், இதெல்லாம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். வியாசர் இதைத்தான் சொல்லுவார். ஆனால், இதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை என்று தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள்.

கீதை பற்றற்று இரு என்று ஏதோ சாமியார் வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை. நீங்கள் மிக மிக சந்தோஷமாக, எப்போதும் இன்பமாக வாழ வழி சொல்கிறது.

வாழ்க்கையில் துன்பம் ஏன் வருகிறது ?

இரண்டு வழிகளில் துன்பம் வருகிறது.

முதலாவது, நம்மை பற்றிய தவறான எண்ணம். இரண்டாவது, இந்த உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

தன்னைப் பற்றிய தவாறன எண்ணத்திற்குப் பெயர் அகந்தை, மமதை, செருக்கு.

எப்படி அது துன்பத்திற்கு வழி வகுக்கும் ?

யாராவது என்னை "நீ பெரிய அறிவாளி" என்று சொல்லிவிட்டால், அந்த அறிவாளி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள  நான் படாத பாடு படுகிறேன். விழுந்து விழுந்து படிக்கிறேன். பல பட்டங்களை பெறுகிறேன். மேலும் மேலும்  படிக்கிறேன். கிடைக்கின்ற சந்தர்பத்தில் எல்லாம் என் மேதாவிலாசத்தை நிரூபிக்க முயல்கிறேன். என்னை யாராவது அறிவாளி இல்லை என்று சொன்னால் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். அவர்கள்  எண்ணம் தவறு என்று நிரூபிக்க முயல்கிறேன். நான் அறிவாளியா இல்லையா என்பதல்ல கேள்வி.  என்னைப்பற்றிய   ஒரு எண்ணத்தை நான் நிரூபிக்க முயல்கிறேன். அதற்காக வாழ் நாள் எல்லாம்  முயற்சி செய்கிறேன்.  அதற்காக மற்றவற்றை தியாகம் செய்கிறேன்.

முடிவில் , அடடா வாழ்க்கையில் என்னென்னவோ இருந்திருக்கிறது.  நான் ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு  வாழ்கை பூராவும் இதிலேயே செலவழித்து விட்டேனே என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.

இது அறிவாளி என்ற பட்டத்துக்கு மட்டும் அல்ல.

சிறந்த பக்திமான், ஆசாரமானவன், ஆத்திகன், நாத்திகன், தலைவன், தொண்டன், தியாகி, சாது, தீவிரவாதி  என்று எத்தனை பட்டங்கள் உண்டோ  அத்தனை பட்டத்துக்கும் ஒரு ஆள் இருக்கிறான். அதற்காகவே உயிரை விட. இது தன்னைப் பற்றிய  தவறான எண்ணங்களினால் வரும் துன்பம்.

அகந்தையினால் வரும் துன்பம் இது. பட்டங்களின் மேல் உள்ள பற்றுதலால் வரும் துன்பம்.

இன்னொரு பக்கம் உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

ஆங்கிலத்தில் Delusion என்று சொல்லுவார்கள்.

உலகம் நிரந்தரமானது, மற்றவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள், நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தல் கெட்டது நடக்கும் , நல்லது செய்தால் சொர்க்கம் போகலாம், கெட்டது செய்தால் நரகம் கிடைக்கும் என்று வெளி உலகைப் பற்றி ஆயிரம் அபிப்ராயம் உண்டு நம்மிடம்.  நமக்கு உள்ள அபிப்ராயம் எல்லாம் சரியானது என்றே நாம் உறுதியாக நினைக்கிறோம்.  அதில் சந்தேகம் இல்லை. அது தான் மயக்கம் அல்லது  delusion எனப்படுவது. இந்த தவறான எண்ணத்தினால் என்ன நிகழ்கிறது என்றால், வெளி உலகம் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் நமக்கு கோபமும் வருத்தமும் வருகிறது.

"நான் அவனுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன்...எனக்கு தேவை என்ற போது அவன் எனக்கு உதவி செய்ய வில்லையே "

"எப்படி அவளை/அவனை காதலித்தேன்...கடைசியில் கை விட்டுவிட்டாளே /விட்டுவிட்டானே"

"நான் எவ்வளவு பூஜை செய்தேன்....இந்த சாமிக்கு நன்றியே இல்லை "

என்று வருந்துகிறோம்.  கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தன்னிரக்கம் மேலிடுகிறது.

தன்னைப் பற்றிய தவறான எண்ணம்.

வெளி உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

இந்த இரண்டையும் , பற்றற்ற வாளால் சம்சாரம் என்று மரத்தை வெட்டியவர்கள், விட்டு விடுவார்கள்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.

முதல் ஒரு வரியில், முதல் பாதிக்கு இவ்வளவு அர்த்தம்.

மேலும் வரும்.

நல்லா இருக்கு தானே ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155.html )

================ பாகம் 2 ================================================

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)


அது என்ன எப்ப பார்த்தாலும் பற்றை விடு, பற்றை விடு என்று  சொல்லிக் கொண்டு....பற்றை விடுவது என்றால் பிள்ளைகளை என்ன செய்வது, உடன் பிறப்புகளை என்ன செய்வது,  சேர்த்து வைத்த செல்வத்தை என்ன செய்வது, செல்வம் இல்லாமல்  எப்படி வாழ்வது....இந்த பற்றை விடுவது என்பது நடை முறைக்கு ஒவ்வாத  ஒன்றாக இருக்கிறது. 

சாமியார்களுக்கு வேண்டுமானால் இது சரியாக வரலாம். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு   சரி வருமா ? உறவுகளை எல்லாம் உதறி விட்டுப் போக முடியுமா ? கீதை நடை முறைக்கு ஏற்ற நூல் தானா ?


சிந்திப்போம். 

பற்று என்றால் என்ன ?

முழுமையை விட்டு விட்டு பகுதியைப் பிடித்துக் கொள்வது. 

நாட்டுப் பற்று. 

நாட்டுப் பற்று என்றால் என்ன ? உலகம் முழுவதும் இருக்க...அதை எல்லாம் விட்டு விட்டு  ஒரு பகுதியை மட்டும் நேசிப்பது , தான் பிறந்த இடத்தை மட்டும் நேசிப்பது.  அது மட்டும் அல்ல, தான் பிறக்காத மற்ற இடங்களை வெறுப்பது. அங்கு  பிறந்தவர்களை எதிரிகளாக நினைப்பது, அவர்களை கொல்லவும் துணிவது. எல்லா நாடும் என் நாடு என்றே நினையுங்கள். எல்லா நாட்டையும் நேசியுங்கள். யாது ஊரே, யாவரும் கேளிர் என்று எண்ணுங்கள். எல்லா நாடும் உங்கள் நாடு என்றால் எந்த நாட்டின் மேல் பற்று வைப்பீர்கள் ? நாட்டுப் பற்று விட்டுப் போய் விடும் அல்லவா ?

சமயப் பற்று என்றால் என்ன ?

உண்மை ஒன்றுதான். எல்லாம் சமயங்களும் அந்த உண்மையைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன.  ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வழியை சொல்கின்றன.  என் வழிதான் சரி  என்று சொல்வது சமயப் பற்று.  அது மட்டும் அல்ல, மற்ற வழிகள் தவறு, அதை பின் பற்றுபவர்கள் தீயவர்கள், அவர்களை கொல்ல வேண்டும்  என்று நினைப்பது சமயப் பற்று. என் சமயம் உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தவை என்ற பாகு பாடு எதுக்கு ? ஒரு சமயத்தின் மேல்தான் பற்று வைக்க  வேண்டும் என்று யார் சொன்னது. எல்லா சமயமும் உங்களுக்காகவே. அனைத்து சமயங்களையும் நீங்கள் பின் பற்றினால், சமயப் பற்று  எங்கிருந்து வரும்.


இப்படி மொழிப் பற்று, இனப் பற்று என்று ஒவ்வொரு பற்றும் நம்மை பிரித்து, சிறிய வட்டத்துக்குள் அடைத்து விடுகின்றன. 

என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்...மற்ற பிள்ளைகள் எக்கேடும் கெட்டு போகட்டும் என்பது பிள்ளை மேல் வைத்த பற்று. 

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பே எவ்வளவு சுகம்.

எல்லா நாடும் நன்றாக இருக்க வேண்டும், எல்லா மொழியும் தழைக்க வேண்டும், அனைத்து மதங்களும் உயர வேண்டும்....

இப்படி அனைத்தும் உங்களது என்று ஆகிவிட்டால் எப்படி பற்று வரும் ?

என்றாவது உங்கள் வலது கண்ணின் மேல் பற்று வைத்து இருகிறீர்களா ? முழுவதும் இருக்க , பகுதியில் மட்டும் ஏன் பற்று வைக்க வேண்டும் ?

கீதை இந்த பற்றை விடச் சொல்கிறது. 

பற்று என்ற தீய எண்ணம் விலகி, எல்லோருக்கும் மனம் விரியட்டும். 

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-2.html )


================= பாகம் 3 ===============================================


அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

எதற்காக ஆத்ம ஞானத்தில் நிலைக்க வேண்டும் ? ஆத்மாவைப் பற்றி நினைப்பதால் என்ன கிடைக்கும் ? முதலில் ஆத்மா ஒன்று இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.  அது உறுதியானால் அல்லவா அது பற்றிய  ஞானத்தில் இலயிப்பது.

ஆத்மா என்ற பெயரை விட்டு விடுவோம். 

நம் மனம் எப்போதும் வெளி நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறது.  பொருள்கள், உறவுகள், அனுபவங்கள் என்று ஆலாய் பறக்கிறது. இது வேண்டும், அது வேண்டும், என்று அனைத்துக்கும் ஆசைப் படுகிறது.  ஆசைப் படுவது மட்டும் அல்ல, அவற்றை அடைய முயற்சி செய்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால் மனம்    மகிழ்கிறது. இல்லை என்றால் வருந்துகிறது. 

சரி, முயற்சி செய்து அடைந்த பின்னும், அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கிடைக்கும் வரை தான் ஆவல். கிடைத்த பின், அதன் மேல் உள்ள   ஆர்வம் போய் போய் விடுகிறது. அடுத்த ஒன்றை மனம் துரத்தத் தொடங்குகிறது. 

முடிவில்லா ஓட்டம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

இதை விட்டால் வேறு வழி என்ன  ? ஆசைப் படாமலும் இருக்க முடியவில்லை. ஆசைப்படுதலும் சரி இல்லை என்று தெரிகிறது. என்னதான் செய்வது. 

ஒன்றும் செய்யாமல் இருக்க முடியுமா ?

சும்மா எப்படி இருப்பது ?

கீதை சொல்கிறது...வெளியே ஓடும் மனதை உள் நோக்கித் திருப்பு என்று. 

எது ஆசைப் படுகிறது ? ஏன் ஆசைப் படுகிறது ? ஆசைப் பட்டு இதுவரை அடைந்தது என்ன ? 

மனம் ஏதோ ஒன்றைப் பற்ற வேண்டும். வெளி உலகைப் பற்றுவதை விட, இன்பத்தை, மகிழ்ச்சியை வெளியே தேடுவதை விட, அந்த இன்பத்தின் தன்மை, அதை அறியும் விதம் பற்றி சிந்தித்தால், அது பற்றிய தெளிவு வந்தால், மனம் நிலைப்படும். 

ஓட்டம் குறையும். 

நிற்கும். 

"ஆத்ம ஞானத்தில் நிலைத்து இருப்பது " என்றால் வெளி நோக்கி ஓடும் மனத்தை உள் நோக்கி திருப்புவது. 

தன்னைத் தான்  அறிவது.

இது எப்போதோ பொழுது போகாத நேரத்தில் செய்வது அல்ல. நித்யமும். எப்போதும். அந்த நினைவிலேயே இருக்க வேண்டும் என்கிறது கீதை. அதாவது, தன் உணர்வு, தான் யார் என்ற எண்ணம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். 

அப்படி இருக்கும் போது உலக இன்பங்களின் பின்னால் மனம் ஓடாது. அது தான் இப்போது வேறு ஒன்றைப் பற்றிக் கொண்டு இருக்கிறதே. 

மனம் ஓடாத போது , சலனம் இல்லாத போது , ஆசைகளினால் வரும் துன்பம் தொலையும். 

ஆனந்தம் பிறக்கும். 

பிறக்கட்டும். 


(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-3.html )

Saturday, April 23, 2016

கீதை - 15.5 - நாசமற்ற பதம் - பாகம் 2

கீதை - 15.5 - நாசமற்ற பதம் - பாகம் 2



निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||


நிர்மாநமோஹா  = அகந்தையும், மயக்கமும் இன்றி

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)

அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

 ஸுக து:க = சுகம் துக்கம்

ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அ மூடா:  = மூடத் தன்மை அற்றவர்கள்

பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

தத் = அது

அகந்தையும், மயக்கமும் இன்றி;
பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
ஆசைகளில் இருது நீங்கி ,
சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
மடமையற்றோர்,  அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்

 என்ன ஒரு அற்புதமான சுலோகம். மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க அதன் அருமை, இனிமை புரியும்.

இது போல எத்தனை அற்புதமான ஸ்லோகங்களை கீதை நமக்குத் தருகிறது.

கீதை என்பது ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது ஒரு வாழ்கை நூல். நம் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு நூல்.

 சம்சாரம் என்ற மரத்தை வீழ்த்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறினார் அல்லவா ?

எல்லா பற்றியும் விட்டு விட்டு என்ன வாழ்க்கை என்று சலிப்பவர்கள் உண்டு .

அப்படி பற்றில்லாமல் வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேள்விக்கு விடை தர வேண்டும் அல்லவா ? சும்மா பற்றில்லாமல் இரு, பற்றற்ற வாளால் சம்சாரம் என்ற மரத்தை வெட்டு என்று சொல்லுவது எளிது. செய்தால் என்ன  நடக்கும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?

இன்னும் சில பேர், இதெல்லாம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். வியாசர் இதைத்தான் சொல்லுவார். ஆனால், இதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை என்று தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள்.

கீதை பற்றற்று இரு என்று ஏதோ சாமியார் வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை. நீங்கள் மிக மிக சந்தோஷமாக, எப்போதும் இன்பமாக வாழ வழி சொல்கிறது.

வாழ்க்கையில் துன்பம் ஏன் வருகிறது ?

இரண்டு வழிகளில் துன்பம் வருகிறது.

முதலாவது, நம்மை பற்றிய தவறான எண்ணம். இரண்டாவது, இந்த உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

தன்னைப் பற்றிய தவாறன எண்ணத்திற்குப் பெயர் அகந்தை, மமதை, செருக்கு.

எப்படி அது துன்பத்திற்கு வழி வகுக்கும் ?

யாராவது என்னை "நீ பெரிய அறிவாளி" என்று சொல்லிவிட்டால், அந்த அறிவாளி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள  நான் படாத பாடு படுகிறேன். விழுந்து விழுந்து படிக்கிறேன். பல பட்டங்களை பெறுகிறேன். மேலும் மேலும்  படிக்கிறேன். கிடைக்கின்ற சந்தர்பத்தில் எல்லாம் என் மேதாவிலாசத்தை நிரூபிக்க முயல்கிறேன். என்னை யாராவது அறிவாளி இல்லை என்று சொன்னால் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். அவர்கள்  எண்ணம் தவறு என்று நிரூபிக்க முயல்கிறேன். நான் அறிவாளியா இல்லையா என்பதல்ல கேள்வி.  என்னைப்பற்றிய   ஒரு எண்ணத்தை நான் நிரூபிக்க முயல்கிறேன். அதற்காக வாழ் நாள் எல்லாம்  முயற்சி செய்கிறேன்.  அதற்காக மற்றவற்றை தியாகம் செய்கிறேன்.

முடிவில் , அடடா வாழ்க்கையில் என்னென்னவோ இருந்திருக்கிறது.  நான் ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு  வாழ்கை பூராவும் இதிலேயே செலவழித்து விட்டேனே என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.

இது அறிவாளி என்ற பட்டத்துக்கு மட்டும் அல்ல.

சிறந்த பக்திமான், ஆசாரமானவன், ஆத்திகன், நாத்திகன், தலைவன், தொண்டன், தியாகி, சாது, தீவிரவாதி  என்று எத்தனை பட்டங்கள் உண்டோ  அத்தனை பட்டத்துக்கும் ஒரு ஆள் இருக்கிறான். அதற்காகவே உயிரை விட. இது தன்னைப் பற்றிய  தவறான எண்ணங்களினால் வரும் துன்பம்.

அகந்தையினால் வரும் துன்பம் இது. பட்டங்களின் மேல் உள்ள பற்றுதலால் வரும் துன்பம்.

இன்னொரு பக்கம் உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

ஆங்கிலத்தில் Delusion என்று சொல்லுவார்கள்.

உலகம் நிரந்தரமானது, மற்றவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள், நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தல் கெட்டது நடக்கும் , நல்லது செய்தால் சொர்க்கம் போகலாம், கெட்டது செய்தால் நரகம் கிடைக்கும் என்று வெளி உலகைப் பற்றி ஆயிரம் அபிப்ராயம் உண்டு நம்மிடம்.  நமக்கு உள்ள அபிப்ராயம் எல்லாம் சரியானது என்றே நாம் உறுதியாக நினைக்கிறோம்.  அதில் சந்தேகம் இல்லை. அது தான் மயக்கம் அல்லது  delusion எனப்படுவது. இந்த தவறான எண்ணத்தினால் என்ன நிகழ்கிறது என்றால், வெளி உலகம் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் நமக்கு கோபமும் வருத்தமும் வருகிறது.

"நான் அவனுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன்...எனக்கு தேவை என்ற போது அவன் எனக்கு உதவி செய்ய வில்லையே "

"எப்படி அவளை/அவனை காதலித்தேன்...கடைசியில் கை விட்டுவிட்டாளே /விட்டுவிட்டானே"

"நான் எவ்வளவு பூஜை செய்தேன்....இந்த சாமிக்கு நன்றியே இல்லை "

என்று வருந்துகிறோம்.  கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தன்னிரக்கம் மேலிடுகிறது.

தன்னைப் பற்றிய தவறான எண்ணம்.

வெளி உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

இந்த இரண்டையும் , பற்றற்ற வாளால் சம்சாரம் என்று மரத்தை வெட்டியவர்கள், விட்டு விடுவார்கள்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.

முதல் ஒரு வரியில், முதல் பாதிக்கு இவ்வளவு அர்த்தம்.

மேலும் வரும்.

நல்லா இருக்கு தானே ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155.html )

================ பாகம் 2 ================================================

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)


அது என்ன எப்ப பார்த்தாலும் பற்றை விடு, பற்றை விடு என்று  சொல்லிக் கொண்டு....பற்றை விடுவது என்றால் பிள்ளைகளை என்ன செய்வது, உடன் பிறப்புகளை என்ன செய்வது,  சேர்த்து வைத்த செல்வத்தை என்ன செய்வது, செல்வம் இல்லாமல்  எப்படி வாழ்வது....இந்த பற்றை விடுவது என்பது நடை முறைக்கு ஒவ்வாத  ஒன்றாக இருக்கிறது. 

சாமியார்களுக்கு வேண்டுமானால் இது சரியாக வரலாம். இல்லறத்தில் இருப்பவர்களுக்கு   சரி வருமா ? உறவுகளை எல்லாம் உதறி விட்டுப் போக முடியுமா ? கீதை நடை முறைக்கு ஏற்ற நூல் தானா ?


சிந்திப்போம். 

பற்று என்றால் என்ன ?

முழுமையை விட்டு விட்டு பகுதியைப் பிடித்துக் கொள்வது. 

நாட்டுப் பற்று. 

நாட்டுப் பற்று என்றால் என்ன ? உலகம் முழுவதும் இருக்க...அதை எல்லாம் விட்டு விட்டு  ஒரு பகுதியை மட்டும் நேசிப்பது , தான் பிறந்த இடத்தை மட்டும் நேசிப்பது.  அது மட்டும் அல்ல, தான் பிறக்காத மற்ற இடங்களை வெறுப்பது. அங்கு  பிறந்தவர்களை எதிரிகளாக நினைப்பது, அவர்களை கொல்லவும் துணிவது. எல்லா நாடும் என் நாடு என்றே நினையுங்கள். எல்லா நாட்டையும் நேசியுங்கள். யாது ஊரே, யாவரும் கேளிர் என்று எண்ணுங்கள். எல்லா நாடும் உங்கள் நாடு என்றால் எந்த நாட்டின் மேல் பற்று வைப்பீர்கள் ? நாட்டுப் பற்று விட்டுப் போய் விடும் அல்லவா ?

சமயப் பற்று என்றால் என்ன ?

உண்மை ஒன்றுதான். எல்லாம் சமயங்களும் அந்த உண்மையைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன.  ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வழியை சொல்கின்றன.  என் வழிதான் சரி  என்று சொல்வது சமயப் பற்று.  அது மட்டும் அல்ல, மற்ற வழிகள் தவறு, அதை பின் பற்றுபவர்கள் தீயவர்கள், அவர்களை கொல்ல வேண்டும்  என்று நினைப்பது சமயப் பற்று. என் சமயம் உயர்ந்தது, மற்றவை தாழ்ந்தவை என்ற பாகு பாடு எதுக்கு ? ஒரு சமயத்தின் மேல்தான் பற்று வைக்க  வேண்டும் என்று யார் சொன்னது. எல்லா சமயமும் உங்களுக்காகவே. அனைத்து சமயங்களையும் நீங்கள் பின் பற்றினால், சமயப் பற்று  எங்கிருந்து வரும்.


இப்படி மொழிப் பற்று, இனப் பற்று என்று ஒவ்வொரு பற்றும் நம்மை பிரித்து, சிறிய வட்டத்துக்குள் அடைத்து விடுகின்றன. 

என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்...மற்ற பிள்ளைகள் எக்கேடும் கெட்டு போகட்டும் என்பது பிள்ளை மேல் வைத்த பற்று. 

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பே எவ்வளவு சுகம்.

எல்லா நாடும் நன்றாக இருக்க வேண்டும், எல்லா மொழியும் தழைக்க வேண்டும், அனைத்து மதங்களும் உயர வேண்டும்....

இப்படி அனைத்தும் உங்களது என்று ஆகிவிட்டால் எப்படி பற்று வரும் ?

என்றாவது உங்கள் வலது கண்ணின் மேல் பற்று வைத்து இருகிறீர்களா ? முழுவதும் இருக்க , பகுதியில் மட்டும் ஏன் பற்று வைக்க வேண்டும் ?

கீதை இந்த பற்றை விடச் சொல்கிறது. 

பற்று என்ற தீய எண்ணம் விலகி, எல்லோருக்கும் மனம் விரியட்டும். 

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155-2.html )