Tuesday, July 31, 2018

பகவத் கீதை - 1.45 - சுற்றத்தாரை கொன்று இன்பம் தேவையா ?

பகவத் கீதை - 1.45 - சுற்றத்தாரை கொன்று இன்பம் தேவையா ?



अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः॥४५॥

அஹோ ப³த மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்|
யத்³ராஜ்யஸுக²லோபே⁴ந ஹந்தும் ஸ்வஜநமுத்³யதா : ||1-45||

அஹோ ப³த = அந்தோ

மஹத் = பெரிய

பாபம் = பாவம்

கர்தும் = செய்கிறோம்

வ்யவஸிதா = உறுதி கொண்டோர்

வயம் யத்³= (அதை அடைய ) அதற்காக

ராஜ்யஸுக²லோபே⁴ந = அரச சுகங்களுக்காக

 ஹந்தும் = கொலை செய்து

ஸ்வஜநம் = உறவினர்களை

யுத்³யதா : = தயாராக இருக்கிறோம்


அரச இன்பங்களுக்காக சொந்த பந்தங்களை கொலை செய்ய வந்து பெரிய பாவத்தினை செய்ய தயாராக இருக்கிறோமே, அந்தோ 

மேலோட்டமாக பார்த்தால் அர்ஜுனன் சொல்வது சரியாகத் தான் இருக்கும். சொந்த பந்தங்களை கொன்று , அரச சுகத்தை அனுபவிக்க வேண்டுமா என்பது அவன் கேள்வி. அதில் என்ன தவறு இருக்க முடியும் ?


சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

யாருடைய சொந்த பந்தம் ? அர்ஜுனனின் சொந்த பந்தம். ஒரு வேளை அவர்கள் அர்ஜுனனின் சொந்தக் காரர்களுக்காக இல்லாமல் இருந்தால் அவர்களை கொல்வது சரியா ? அர்ஜுனன் சொல்வது அப்படித்தான் இருக்கிறது. சொந்தங்களைக் கொல்லக் கூடாது. சொந்தம் இல்லாவிட்டால் கொல்லலாம் என்பது அவனின் வாதம்.

அது சரியா ?


அரச இன்பத்தை அனுபவிக்க அவர்களை கொல்ல வேண்டுமா என்று கேட்கிறான். அரச இன்பம் இல்லாவிட்டால் கொல்லலாமா ?

அர்ஜுனனின் வாதம் எல்லாம் அவனை முன்னிறுத்தியே செல்கிறது.

என் சொந்தம், எனக்கு இராஜ போகம் என்றே சிந்திக்கிறான்.

அவனுடைய இடத்தில் இருந்து பார்த்தால், அவன் சொல்வது சரியாகத்தான் தெரியும்.

சுயநலத்தை முன்னிறுத்தியே நாம் இந்த உலகில் நடை போடுகிறோம்.

எனவே, இன்ப துன்பங்கள் வரமால் போகாது.

இன்பம் வேண்டும் என்றால் துன்பம் அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்த இன்ப துன்பம் இரண்டுக்கும் காரணம் , நம் சுயநலம்.

சுயநலத்தை கடந்தால் , இன்பம் துன்பம் என்ற இரண்டையும் கடக்கலாம்.

சுயநலம் இல்லாத வாழ்க்கையில் என்ன சுகம் இருக்க முடியும்? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா ? எல்லா உயிரும் இன்பத்தைத்தானே தேடுகின்றன. அப்படி இருக்க நாம் மட்டும் ஏன் அதைக் கண்டு ஓட வேண்டும் ?

கீதை அப்படிச் சொல்ல வில்லை.

எனக்கு எனக்கு என்று சுயநலமாய் பறக்காமல், புலன் இன்பங்களை மட்டுமே கொண்டு  காரியம் செய்யாமல், அறிவின் துணை கொண்டு (ஞான யோகம் ), எல்லோருக்கும் இன்பம் பயக்க வேண்டும் (பக்தி யோகம்)என்று அன்போடு காரியம் செய்தால் (கர்ம யோகம்) வரும் இன்பத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது கீதை.


எனக்கு இதில் என்ன இன்பம் அல்லது துன்பம் என்று சிந்திக்காமல் இருக்கச் சொல்லித் தருகிறது கீதை.

கேட்டுத்தான் பார்ப்போமே.

பிடித்திருந்தால் கடை பிடிப்போம். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது " அதெல்லாம்  சரி, இது நடைமுறைக்கு ஒத்து வராது " என்று சொல்லி மூட்டை கட்டி வைத்து விட்டு  நம் வழியே போகலாமே.

bhagavatgita.blogspot.com/2018/07/145.html


Monday, July 16, 2018

பகவத் கீதை - 1.44 - குல தர்மமும் , நரகமும்

பகவத் கீதை - 1.44 - குல தர்மமும் , நரகமும் 



उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन।
नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम॥४४॥

உத்ஸந்நகுலத⁴ர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
நரகே நியதம் வாஸோ ப⁴வதித்யநுஸு²ஸ்²ரும ||1-44||

உத்ஸந்ந = குறைகிறதோ, அழிக்கப் படுகிறதோ

குலத⁴ர்மாணாம் = குல தர்மம் ஆனது

மநுஷ்யாணாம் = மக்களின்

ஜநார்த³ந = ஜனார்தனா

நரகே = நரகம்

நியதம் = நிச்சயம்

வாஸோ = வாசம்

ப⁴வத்  = அது

இது = அவ்வாறு

அநுஸு²ஸ்²ரும = மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்


குல தர்மங்களை இழந்த மனிதர்களுக்கு எப்போதும் நரக வாசம் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். 

வாழ்க்கையை இன்பமாக வாழ, நாம் சில சட்ட திட்டங்களுக்கு கட்டுப் படத்தான் வேண்டும். எனக்கு இன்பம் தருகிறது என்று நான் மனம் போன போக்கில்  போக முடியாது.

சாலையில் வண்டி ஓட்டினால் , இடது புறம் தான் ஓட்ட வேண்டும் (இந்தியாவில்). எனக்கு வலது புறம் ஓட்டத்தான் பிடிக்கும் என்று தவறான பகுதியில் வண்டியை செலுத்தினால்  சிக்கல் எனக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் தான். ஆளாளுக்கு , மனம் போன வகையில் வண்டியை செலுத்தினால், என்ன ஆகும் ? போக்கு வரத்து நெரிசல், குழப்பம், விபத்து என்று  நிகழும் அல்லவா ?

அதே போல, எனக்கு வரி கட்ட விருப்பம் இல்லை என்று இருக்க முடியாது.

சட்டங்களை மதிக்க வேண்டும். இல்லை என்றால் சிறை, தண்டனை, அபராதம்  என்று வரும்.

சட்டம் பின்னால் வருகிறது.

முதலில் நமக்கு நாமே சில தர்மங்களை கடை பிடிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் சட்டம் போட்டுக் கொண்டு இருக்க முடியாது.  விருந்தினரை  உபசரிக்க, பெரியவர்களை மதிக்க, பொய் பேசாமல் இருக்க, மற்றவர்கள் மேல் அன்பு  செலுத்த என்று அனைத்துக்கும் சட்டம் போட முடியாது.

ஒவ்வொரு வீட்டிலும், பெற்றோர்கள் , பிள்ளைகளுக்கு இந்த நல்ல ஒழுக்கங்களை  சொல்லித் தருவார்கள். எது சரி, எது தவறு என்று பிள்ளைகளுக்கு  வழி காட்டுவார்கள். பிள்ளைகள் , சட்டம் பற்றி பின்னால் தெரிந்து  கொள்வார்கள். ஆனால், அதற்கு முன், பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை   சொல்லித் தருவார்கள்.

அதுவே குல தர்மம். வீட்டில் சொல்லித் தரப்பட்ட தர்மம். ஒழுக்கம்.

சட்டத்தை விட இந்த குல தர்மம் உயர்ந்தது. புகை பிடிக்காதே  என்பது சட்டம்  அல்ல. ஆனால், அப்பா அம்மா சொல்லுவார்கள், புகை பிடிக்காதே என்று. அது அவர்கள் விதித்த சட்டம்.

போர் என்று வந்தால், தகப்பன் இறந்து போகலாம்.   ஒரே வீட்டில் பலர் இறந்து போகலாம்.  பிள்ளைகளுக்கு யார் வழி காட்டுவார்கள் ? தாத்தா, மாமா, சித்தப்பா  என்று யாரும் இல்லாமல், பிள்ளைகள் வழி தெரியாமல், தங்களுக்கு  தெரிந்ததை செய்யத் தலைப் படுவார்கள்.

அவ்வாறு செய்யும் போது , தவறான பாதையில் செல்ல வாய்ப்பு அதிகம்.

அது நரகத்துக்கு இட்டுச் செல்லும்  என்கிறான் அர்ஜுனன்.

அப்படி என்றால், குல தர்மத்தை கடை பிடித்தால் சொர்கம் என்று பொருள் படும் அல்லவா.

பிள்ளைகள், பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை கேட்டு  நடக்க வேண்டும். அதே சமயத்தில் பெற்றோரும் வீட்டில் உள்ள பெரியவர்களும்  பிள்ளைகளை நல்ல வழியில் நடத்திச் செல்ல வேண்டும். அந்த பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

குல தர்மத்தை கடை பிடிக்க வேண்டும் என்பது உட்பொருள்.

கீதை, நேரடியாக இதைச் செய் என்று சொல்லவில்லை. உன் பெற்றோர் மற்றும் உன்  வீட்டில் உள்ள பெரியவர்கள் காட்டிய வழியில் நட என்கிறது.

நம்மிடம் உள்ள பல நல்ல குணங்கள், அவர்கள் சொல்லித் தந்ததாகத் தான் இருக்கும்.

நம்மிடம் உள்ள பல கெட்ட குணங்கள், அவர்கள் சொன்னதை நாம் கேட்காமல்  இருந்ததால் வந்ததாகத் இருக்கும்.

இதைப் படிக்கும், நீங்கள் குழந்தைகளாக இருந்தால், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் சொல்லுவதைக் கேளுங்கள்.

நீங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களாக இருந்தால், இளைய தலைமுறையை நல்ல வழியில்  கொண்டு செல்லுங்கள்.

தர்மத்தை தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமை இருவருக்கும் இருக்கிறது.

http://bhagavatgita.blogspot.com/2018/07/144.html

பகவத் கீதை - 1.43 - குலம் மற்றும் ஜாதி தர்மங்கள்

பகவத் கீதை - 1.43 - குலம் மற்றும் ஜாதி தர்மங்கள் 



दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः॥४३॥

தோ³ஷைரேதை : குலக்⁴நாநாம் வர்ணஸங்கரகாரகை :|
உத்ஸாத்³யந்தே ஜாதித⁴ர்மா : குலத⁴ர்மாஸ்²ச ஸா²ஸ்²வதா : ||1-43||


தோஷை = குற்றத்தால், பாவத்தால்

இதை : = இந்த

குலக்நாநாம் = குலத்தை அழிப்பவர்களும்

வர்ணஸங்கரகாரகை :| = வர்ண குழப்பங்களும்

உத்ஸாத்யந்தே = குறைக்கும்

ஜாதிதர்மா : = ஜாதி தர்மத்தையும்

குலதர்மாஸ் = குல தர்மத்தையும்

ச = மேலும்

ஸாஸ்வதா : = நிரந்தரமான


வர்ண குழப்பம் உண்டாக்கும் இந்த போரால், தொன்று தொட்டு வரும் குல மற்றும் ஜாதி தர்மங்கள் அழிந்து போகும். 

போர் என்பது நியாயம் அநியாயம் இதை மட்டும் நிலை நிறுத்துவது இல்லை. அது வருங்கால சந்ததிக்கு பெரிய தீங்கை விளைவிக்கும் என்கிறான் அர்ஜுனன்.

மனித குலம் தோன்றி வளர்ச்சியுற்ற பொழுதில், அது சில நியமங்களை, தர்மங்களை ஏற்படுத்திக் கொண்டது. நாடும், வீடும் அமைதியாக சென்று கொண்டு இருக்கும் போது, அந்த தர்மங்களை கடை பிடிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை.

போர் என்று வந்து, ஏராளமான பேர் இறந்து போனால், இவ்வளவு காலம் கடை பிடித்து வந்த  குல மற்றும் ஜாதி தர்மங்கள் சீர் குலைந்து போகும் என்பது அர்ஜுனனின் வாதம்.

மிகப் பெரிய குழப்பம் உண்டாகும். வருங்கால சந்ததி வழி தெரியாமல்  தவிக்கும் என்பது அர்ஜுனனின் பயம்.

யார் எதைச் செய்வது, எப்போது செய்வது, எவ்வளவு செய்வது என்ற கேள்விகளுக்கு  விடை காண்பது கடினமாகிப் போய் விடும்.

இப்படி எல்லாம் இருக்கும் போது, இந்த போர் தேவை தானா ? என்பது அர்ஜுனனின் வாதம்.


படுக்கப் போகும் போது , நாளை காலையில் எழுந்தவுடன் நடக்கப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்.

விடியல் காலை ஐந்து. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு, அப்புறம் போகலாம் என்று நினைப்போம். அஞ்சு நிமிஷம். அவ்வளவுதான் என்று நினைப்போம்.

படுத்தால் , அசந்து தூங்கி , அரை மணி ஆகி இருக்கும்.

சரி இன்னைக்கு போன மாதிரிதான் என்று நினைத்துக் கொள்வோம்.

போகப் போவதில்லை என்று முடிவு செய்து விடுவோம். நாளைக்குப் போகலாம் என்று நினைத்துக் கொள்வோம்.

நடக்கப் போவதில்லை என்று முடிவு செய்தவுடன் நம் நம் மனம் என்ன நினைக்கும் ?


- இரவு சரியாவே தூங்க வில்லை. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.

- இன்று அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கிறது. நடக்கப்  போனால், சக்தி எல்லாம் வீணாகி, அலுவலகம் போகும் போதே தளர்ந்து போவேன். நடக்கப் போகாததும் நல்லது தான்.

- கொஞ்ச நாளாவே இந்த முட்டி கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்கு. எதுக்கு வம்பு. இரண்டு நாளைக்கு ஓய்வு கொடுத்தால் எல்லாம் சரியா ஆயிரும்.

- வெளியே மழை வர்ற மாதிரி இருக்கு. பாதியில மழை வந்தா சிக்கல்.



நமக்கு ஒரு வேலையை செய்ய வேண்டாம் என்று தோன்றி விட்டால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் கண்டு பிடிப்போம். யோசிக்க யோசிக்க புது புது காரணம் தோன்றிக் கொண்டே இருக்கும்.

அர்ஜுனனுக்கு போர் செய்ய வேண்டாம் என்று தோன்றி விட்டது.  காரணங்களாக கண்டு பிடித்துத் தள்ளுகிறான்.

தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் முயற்சி இது.

இன்னும் இரண்டு மூணு ஸ்லோகங்கள் தான். புலம்பட்டும். முழுவதையும் கேட்டு விடுவோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/143.html







Friday, July 13, 2018

பகவத் கீதை - 1.42 குலத்தார்க்கும் , அதை அழித்தவர்களுக்கும்

பகவத் கீதை - 1.42  குலத்தார்க்கும் , அதை அழித்தவர்களுக்கும் 


सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः॥४२॥

ஸங்கரோ நரகாயைவ குலக்⁴நாநாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ³த³கக்ரியா : ||1-42||


ஸங்கரோ = குழப்பத்தால்

நரகாயை = நரகமே

எவ = நிச்சயமாக

குலக்நாநாம் = குலத்தை அழிப்பவர்களுக்கும்

குலஸ்ய  = குலத்தில் உள்ளவர்களுக்கும்

ச= மேலும்

பதந்தி = வாழ்கிறார்கள்

பிதரோ  = முன்னோர்கள்

ஹி = அதனால்

யேஷாம் = இதன்படி

லுப்தா  = விட்டுப் போகிறது

பிண்டோ³த³க = பிண்டம் அளிக்கும்

க்ரியா = காரியம்


இப்படி வரும் வர்ண குழப்பத்தால், குலத்தில் உள்ளவர்களுக்கும், அதை அழிப்பவர்களுக்கும் நரகமே கிட்டும். மேலும், பிதுர்களுக்கு கிடைக்கும் பிண்டமும் நீரும் கிடைக்காமல் போகும். 


போரால் விளையும் தீமைகளை அர்ஜுனன் அடுக்கிக் கொண்டே போகிறான். இந்தத் தலைமுறை மட்டும் அல்ல, வருகின்ற தலைமுறைகள் மட்டும் அல்ல, முன்பு இருந்த தலைமுறைகளும் பாதிக்கப் படும் என்கிறான்.

இன்று இவற்றைப் படிக்கும் இளைய தலைமுறைகள், இது என்ன பிதுருக்கள், பிண்டம் என்று. இதுக்கெல்லாம் ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம் ஏதாவது இருக்கிறதா? இறந்த முன்னோர்கள் , எங்கோ ஆகாயத்தில் இருக்கிறார்கள், இங்கே தரும் சோறும் நீரும் அங்கே எப்படி போகும் என்று கேள்வி கேட்கலாம். கேட்க வேண்டும்.

அந்த கேள்விக்கு பின்னால் வருவோம்.

நாம் , நம் வாழ்க்கையை சரியான படி கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? எப்படி வாழ்க்கையை நெறிப் படுத்துவது. எது சரி , எது தவறு என்று நமக்கு யார் சொல்லுவார்கள்? யாரை நாம் நம்புவது?

வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றால், முதலில் தேவை ஒழுக்கம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் , ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்

என்பார் வள்ளுவர்.

சரி, ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுக்கம் என்ற சொல் ஒழுகுதல் என்ற சொல்லில் இருந்து வந்தது.

நீர், மேல் இருந்து கீழே ஒழுகும்.  கீழ் இருந்து மேலே போகாது .

நம் முன்னோர்கள் காட்டிய வழியில் செல்வது ஒழுக்கம். அவர்கள் காட்டிய நல் வழியில் செல்வது ஒழுக்கம்.

நம் முன்னேற்றத்தில், நம் உயர்வில் நம் தாய் தந்தையரை விட யாருக்கு அக்கறை இருக்க முடியும்.  அவர்கள் நமக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து இருக்கிறார்கள். கஷ்டப் பட்டு இருக்கிறார்கள். நம் நன்மைக்காக எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள். செய்து இருக்கிறார்கள். அல்லும் பகலும் நாம் நன்றாக இருக்க வேண்டும் சிந்தித்தவர்கள் அவர்கள்.

அவர்கள் இருக்கும் வரை, சொல்லாலும், செயலாலும் வழி காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இறந்த பின், அவர்கள் சொன்னதை, நமக்குச் செய்ததை நாம் நினைவூட்டிக் கொள்ள  உதவும் ஒரு சடங்கு இந்த பிண்டம் வைப்பது, எள் நீர் இரைப்பது எல்லாம்.

இது அவர்களுக்குப் போகிறதோ இல்லையோ, அவர்கள் நினைவு, அவர்கள் காட்டிய   வழி, அவர்கள் சொல்லிய நல்ல சிந்தனைகள் மீண்டும் மீண்டும் வந்து நமக்கு வழி காட்டும்.

அதற்காக செய்யப்பட்ட ஒரு வழி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

போரினால், யார் நம் முன்னோர், அவர் நமக்கு என்ன சொன்னார் என்பதெல்லாம் விடுபட்டுப் போகும். வழி கட்டுதல் இல்லாமல் வருங்கால தலை முறை தவிக்கும் என்பது அர்ஜுனனின் வாதம் என்பது என் சிந்தனை.

இதற்கு வேறு வித வியாக்கியானங்கள் இருக்கலாம். இருக்கின்றன. அவற்றையும் படித்துப் பாருங்கள்.

எது உங்களுக்கு உதவியாக இருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

என்ன? சரிதானே?

http://bhagavatgita.blogspot.com/2018/07/142.html



Wednesday, July 11, 2018

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 2

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 1



अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥४१॥

அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய :|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர : ||1-41||

அத⁴ர்மாபிபவாத் = அதர்மம் தலை தூக்கும் போது

க்ருஷ்ண  = கிருஷ்ணா

ப்ரது³ஷ்யந்தி = அவர்கள் கெடுக்கிறார்கள்

குலஸ்த்ரிய :| = குலப் பெண்கள்

ஸ்த்ரீஷு = எப்போது பெண்கள்

து³ஷ்டாஸு  = கெடுகிறார்களோ

வார்ஷ்ணேய = விருஷினி குல தோன்றலே

ஜாயதே = பிறக்கிறது

வர்ணஸங்கர :  = வர்ண குழப்பங்கள் உண்டாகின்றன

கிருஷ்ணா, எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வர்ண குழப்பம் உண்டாகிறது.

வர்ணாசிரம தர்மத்தை கீதை தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச் சாட்டு இங்கிருந்து எழுகிறது.

வர்ணாசிரம கொள்கை தவறா ? சரியா என்ற விவாதத்திற்குள் போவதற்கு முன், வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.

ஒன்றை சரியாக அறிந்து கொள்ளாமலே அதை எவ்வாறு சரியா தவறா என்று எடை போடுவது ?  பலர் செய்கிறார்கள். அது பிழை.

சமுதாயத்தை ஒரு கட்டு கோப்பாக நடத்த நினைத்த நம் முன்னோர்கள், இதை எப்படிச் செய்யலாம் என்று சிந்தித்தார்கள்.

தனி மனிதனை உயர்த்த வேண்டும். அது எந்த வழி முறையாக இருந்தாலும், ஒரு  மனிதனை ஒவ்வொரு கால கட்டத்திலும் அவனை வழி நடத்த வேண்டும். அவனை ஒரு உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தேவை. தனி மனிதனை விட்டு விட்டு ஒரு வழி முறை கொண்டு வர முடியாது.

சரி, தனி மனித முன்னேற்றம் மட்டும் போதுமா ? நாடும், வீடும், இந்த சமுதாயமும் எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டு விடலாமா ? தனி மனித சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டா ? யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா ?

முடியாது.

தனி மனிதனும் முக்கியம். சமுதாயமும் முக்கியம். இந்த இரண்டையும் சேர்த்து ஒரு வழி முறை செய்ய வேண்டும் என்று சிந்தித்து உருவாக்கியதுதான் இந்த  வர்ணாசிரம தர்மம்.

உலகில் , எந்த மூலையிலும் இப்படி ஒரு கோட்பாடை சிந்தித்துக் கூட பார்த்தது இல்லை யாரும்.

ஒரு மிகப் பெரிய கோட்பாடு. சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அறிவின் ஆழத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.


அப்படி என்ன பெரிய தத்துவம் இது என்று கேட்கிறீர்களா? பெரிய விஷயம் தான்.  விரிவாக நாளை பார்ப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/141-1.html



---------------------------- பாகம் 2 -------------------------------------------------------------------------

தனிமனிதனையும் முன்னேற்ற வேண்டும்; அதே சமயம் அவன் கட்டுக்கு அடங்காமல் போய் விடக் கூடாது.  அது ஒரு புறம் இருக்க, சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும். அதே சமயம் சமுதாய முன்னேற்றம் தனி மனிதனை  அளவுக்கு மீறி பாதிக்கக் கூடாது.

இந்த இரண்டையும்  சமன் செய்து எப்படி ஒரு கோட்பாட்டை உருவாக்குவது?

அதன் விடைதான் வர்ணாசிரமம்.

முதலில் தனி மனிதனை எடுத்துக் கொள்வோம்.

அவனின் வாழ்க்கையை நான்காக பிரித்தார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் சில  கடமைகள், சில சலுகைகள் என்று விதி செய்தார்கள்.


முதல் பகுதி  - பிரம்மச்சரியம் - மாணவப் பருவம். படிப்பது ஒன்றுதான் கடமை. மற்ற பொறுப்புகள் கிடையாது. நன்றாகப்  படித்து, வாழ்வில் பொருள் சம்பாதிக்க  தன்னை தயார் செய்து கொள்ள வேண்டிய பருவம் என்று இதை  நிர்ணயம் செய்தார்கள்.

இரண்டாவது பகுதி - கிரகச்சரியம் - அதாவது  குடும்ப வாழ்க்கை. திருமணம் செய்து கொண்டு , மனைவி,கணவன், குழந்தைகள் என்று குடும்பமாக வாழ்வது. சமுதாய பொறுப்புகள் உண்டு. விருந்தினர்களை உபசரிப்பது,  வரி கொடுப்பது,  பெற்றோரை பேணுவது, பிள்ளைகளை சரியான படி வளர்ப்பது, என்று பல கடமைகள் உண்டு.

மூன்றாவது பகுதி  -  வனப்ரஸ்தம்  - அதாவது ஓய்வு பெறுவது. பொறுப்புகளை கொஞ்சம்  கொஞ்சமாக பிள்ளைகளிடம் , மருமகளிடம் ஒப்படைத்து விட்டு  ஒதுங்கி இருப்பது. அவர்கள் நடத்தட்டும் என்று தள்ளி நின்று  பார்ப்பது. யோசனை கேட்டால் சொல்லுவது. தானாக போய் அதைச் செய்,இதைச் செய்  என்று அதிகாரம் பண்ணுவது கிடையாது.

நான்காவது பகுதி - சந்நியாசம் - அதாவது அனைத்தையும் துறந்து வாழ்வது. பற்றில்லாமல்  இருப்பது.

ஒவ்வொன்றையும் பற்றி  விரிவாக சிந்தித்தால் நாள் பல ஆகும்.

இப்படி தனிமனிதனின் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தினார்கள்.  இதற்கு ஆசிரமம் என்று பெயர்.

சரி, தனி மனிதன் மட்டுமே ஒரு குடும்பம், சமுதாயம், நாடு ஆகி விட முடியாதே.  அவனுக்கு சில சமுதாய கடமைகள் இருக்கிறதே. அதை எப்படி  செய்வது? அதை எப்படி வரையறுப்பது.

தனி மனித திறமைகளை , சமுதாய முன்னேற்றத்திற்கு எப்படி பயன் படுத்துவது ?

தனி மனித திறமைகளை நான்கு வகையாகப் பிரித்தார்கள்.

சிலருக்கு உடல் உழைப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். பொருள்களை கையாள்வது, இயந்திரங்களை இயக்குவது, கட்டிடம் கட்டுவது, விளையாட்டு என்று உடலில் மூலம் செய்யும் வேலையில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

சிலருக்கு,  வியாபாரம் செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதை வாங்குவது, எங்கு வாங்குவது, யாரிடம் விற்பது, எப்படி விற்பது என்பதில் ஆர்வமும் திறமையும் இருக்கும்.

சிலருக்கு, நீதி, நேர்மை, ஒழுங்கு என்று இவற்றை பராமரிப்பதில் ஆர்வம் இருக்கும். அநியாயத்தை கண்டால் சகிக்க மாட்டார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு துடிப்பு இருக்கும்.

சிலருக்கு, படிப்பதில், சிந்திப்பதில், பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு சமுதாயம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் ?

முதலில் உற்பத்தி செய்ய வேண்டும். உணவு, உடை, இருக்க இடம், அதற்கு வேண்டிய  இரும்பு, சிமெண்ட், கட்டை, கண்ணாடி போன்றவை, போக்குவரத்து, மருந்து என்று பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தி இல்லாமல் உயிர் வாழ முடியாது. இது முதல் தேவை. (Production )

அடுத்தது, உற்பத்தி செய்த பொருளை வேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எங்கே கச்சாப் பொருள் (raw material ) கிடைக்கிறதோ அங்கு தான் உற்பத்தி செய்ய முடியும். கடற் கரையில் தான் உப்பு உற்பத்தி செய்ய முடியும். ஆனால், மலை மேல் இருப்பவனுக்கும் உப்பு தேவையாக இருக்கிறது. எனவே, உற்பத்தி செய்த பொருளை விநியோகம் செய்ய வேண்டும். (distribution and logistics ).

சரி உற்பத்தி செய்தாகி விட்டது, விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்தாகி விட்டது , போதுமா என்றால் முடியாது.  கள்ளர் பயம், மற்ற நாட்டு காரன் படை எடுத்து வந்து நம் பொருள்களை கொள்ளை அடித்துச் சென்று விடலாம், வலியவன் , எளியவனை அடித்து பொருள்களை பிடுங்கிக் கொள்ளலாம். எனவே, இவை சரியாக நடக்கிறதா என்று நிர்வாகம் பண்ண வேண்டும். இது மூன்றாவது தேவை (administration ).

சரி உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் செய்தாகி விட்டது. போதுமா என்றால் போதாது. இந்த மூன்று துறைகளையும் மேம்படுத்த வேண்டும். புதுப் புது முறைகளை கொண்டு வர வேண்டும். புது ஆயுதங்கள், புதிய நிர்வாக முறை, புதிய உற்பத்தி செய்யும் முறை என்று அனைத்து துறைகளையும் முன்னேற்ற வேண்டும். அதற்கு ஆராய்ச்சி தேவை. இது நான்காவது. (Research and Development ).

உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், ஆராய்ச்சி.

Production, distribution, administration , Research and Developement.

சரி, இந்த நான்கு சமுதாயத் தேவைகளை எப்படி தனிமனித தேவைகளோடு பொறுத்துவது ?

உடல் உழைப்பில் ஆர்வம் உள்ளவர்களை உற்பத்தி செய்ய விட வேண்டும்.

விநியோகத்தில் ஆர்வம் உள்ளவர்களை விநியோகம் செய்ய விட வேண்டும்.

மேற்பார்வை பார்ப்பது, செயல்களை ஒழுங்கு படுத்துவது, நீதி நேர்மை இவற்றில் ஆர்வம் உள்ளவர்களை நிர்வாகம் செய்ய விட வேண்டும்.

படிப்பு, சிந்தனை, என்று அதில் ஆர்வம் உள்ளவர்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

இதற்கு பெயர் கொடுப்பதில் வந்தது சிக்கல்.

உற்பத்தி செய்பவர்களை சூத்திரன் என்று குறிப்பிட்டார்கள். அவன் தான் சூத்திரதாரி. அனைத்துக்கும் அடிப்படை. அவன் உற்பத்தி செய்யாவிட்டால் அனைத்தும் உறைந்து நின்று போய் விடும். உணவு, உடை, இருப்பிடம், போக்கு வரத்து, மருந்து என்று ஒன்றும் இருக்காது.

விநியோகம் செய்பவர்களை வைசியர்கள் என்று அழைத்தார்கள்.

நிர்வாகம் செய்பவர்களை க்ஷத்ரியர்கள் என்று அழைத்தார்கள்.

படிப்பு, சிந்தனை , ஆராய்ச்சி என்று இருப்பவர்களை பிராமணர்கள் என்று அழைத்தார்கள்.

இது வர்ணம்.

நான்கு வர்ணம்.

நான்கு ஆசிரமம்.

எந்த ஒரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்துக்குள் வந்தே ஆக வேண்டும்.

இப்படி தனி மனிதனையும், சமுதாயத்தையும் ஒழுங்கு படுத்தி, இந்த ஒவ்வொரு கட்டத்துக்கும் விதி செய்தார்கள்.

சூத்திரன் - பிரமச்சாரி என்றால் என்ன செய்ய வேண்டும்.

பிராம்மணன் - கிரஹஸ்தன் என்றால் என்ன செய்ய வேண்டும்

என்று ஒவ்வொன்றுக்கும் விதை முறைகள் செய்து வைத்தார்கள்.

இதுவே வர்ணாசிரம தர்மம் ..

இது நாளடைவில் குழம்பிப் போனது. மனிதன் நல்ல விஷயங்களை எப்படி தன் சுயநலத்துக்காக மாற்றி போடுகிறானோ, அப்படியே இந்த வர்ணாசிரம தர்மமும் குலைந்து போனது.

அதற்குள் நாம் போக வேண்டாம்.

புரிந்து கொண்டால் போதும்.

உயரிய நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று, நாளடைவில் சிதிலமடைந்து சீரழிந்து போனது.

மீண்டும் கீதைக்கு வருவோம்.

அர்ஜுனன் சொல்கிறான்,

"கிருஷ்ணா, எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வர்ண குழப்பம் உண்டாகிறது."

அதர்மம் தலை தூக்கும் போது, க்ஷத்ரியர்கள் போராடுவார்கள். பல க்ஷத்திரியர்கள் மாண்டு போவார்கள். க்ஷத்திரிய பெண்கள் அதிகமாகவும், ஷத்ரிய ஆண்கள் குறைவாகவும் இருப்பார்கள். எனவே, ஷத்ரிய பெண்கள் மற்ற குலத்தில் திருமணம் செய்யத் தலைப் படுவார்கள். வர்ண குழப்பம் உண்டாகும். 

சமுதாய கட்டு கோப்பு கலையும் (social structure ). 

அது மட்டும் அல்ல, போர் என்று வந்தால், அப்பாவி மக்களும் கொல்லப் படுவார்கள். பெண்கள் சிறை பிடிக்கப் படுவார்கள். மான பங்கப் படுத்தப் படுவார்கள். தகப்பன் இல்லாத பிள்ளைகள் உருவாகும். இது வர்ண குழப்பத்தை உண்டாக்கும் என்கிறான். 

போர் என்பது ஒரு காலத்துக்குள் முடிவது இல்லை. இன்னும் வரப் போகும் பலப் பல சந்ததிகளை  அது பாதிக்கும். 

எனவே , போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன். 

ஆழமான வாதம். மறுக்க முடியாத வாதம். ஆணித்தரமான வாதங்கள்.

கண்ணன் என்னதான் சொல்லப் போகிறான் என்று நாம் ஆவலோடு காத்து இருக்கிறோம். 

அர்ஜுனன் தன் தரப்பு வாதங்களை இன்னும் முடித்தபாடில்லை.

என்னும் என்னதான் சொல்லப் போகிறான் , அர்ஜுனன்?

bhagavatgita.blogspot.com/2018/07/141-2.html

Tuesday, July 10, 2018

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 1

பகவத் கீதை - 1.41 - பெண்கள் கெடுவதால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது - பாகம் 1



अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥४१॥

அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய :|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர : ||1-41||

அத⁴ர்மாபிபவாத் = அதர்மம் தலை தூக்கும் போது

க்ருஷ்ண  = கிருஷ்ணா

ப்ரது³ஷ்யந்தி = அவர்கள் கெடுக்கிறார்கள்

குலஸ்த்ரிய :| = குலப் பெண்கள்

ஸ்த்ரீஷு = எப்போது பெண்கள்

து³ஷ்டாஸு  = கெடுகிறார்களோ

வார்ஷ்ணேய = விருஷினி குல தோன்றலே

ஜாயதே = பிறக்கிறது

வர்ணஸங்கர :  = வர்ண குழப்பங்கள் உண்டாகின்றன

கிருஷ்ணா, எப்போது அதர்மம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வர்ண குழப்பம் உண்டாகிறது.

வர்ணாசிரம தர்மத்தை கீதை தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச் சாட்டு இங்கிருந்து எழுகிறது.

வர்ணாசிரம கொள்கை தவறா ? சரியா என்ற விவாதத்திற்குள் போவதற்கு முன், வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.

ஒன்றை சரியாக அறிந்து கொள்ளாமலே அதை எவ்வாறு சரியா தவறா என்று எடை போடுவது ?  பலர் செய்கிறார்கள். அது பிழை.

சமுதாயத்தை ஒரு கட்டு கோப்பாக நடத்த நினைத்த நம் முன்னோர்கள், இதை எப்படிச் செய்யலாம் என்று சிந்தித்தார்கள்.

தனி மனிதனை உயர்த்த வேண்டும். அது எந்த வழி முறையாக இருந்தாலும், ஒரு  மனிதனை ஒவ்வொரு கால கட்டத்திலும் அவனை வழி நடத்த வேண்டும். அவனை ஒரு உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தேவை. தனி மனிதனை விட்டு விட்டு ஒரு வழி முறை கொண்டு வர முடியாது.

சரி, தனி மனித முன்னேற்றம் மட்டும் போதுமா ? நாடும், வீடும், இந்த சமுதாயமும் எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டு விடலாமா ? தனி மனித சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டா ? யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா ?

முடியாது.

தனி மனிதனும் முக்கியம். சமுதாயமும் முக்கியம். இந்த இரண்டையும் சேர்த்து ஒரு வழி முறை செய்ய வேண்டும் என்று சிந்தித்து உருவாக்கியதுதான் இந்த  வர்ணாசிரம தர்மம்.

உலகில் , எந்த மூலையிலும் இப்படி ஒரு கோட்பாடை சிந்தித்துக் கூட பார்த்தது இல்லை யாரும்.

ஒரு மிகப் பெரிய கோட்பாடு. சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அறிவின் ஆழத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.


அப்படி என்ன பெரிய தத்துவம் இது என்று கேட்கிறீர்களா? பெரிய விஷயம் தான்.  விரிவாக நாளை பார்ப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/141-1.html




Monday, July 9, 2018

பகவத் கீதை - 1.40 - குல நாசத்தால் , குல தர்மம் அழியும்

பகவத் கீதை - 1.40 - குல நாசத்தால் , குல தர்மம் அழியும் 



कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत॥४०॥

குலக்ஷயே ப்ரணஸ்²யந்தி குலத⁴ர்மா : ஸநாதநா :|
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமத⁴ர்மோऽபி⁴ப⁴வத்யுத ||1-40||

குலக்ஷயே = குலம் அழிவதால்

ப்ரணஸ்²யந்தி = அது அழிகிறது (எது?)

குலதர்மா : = குல தர்மம்

ஸநாதநா :| = பண்டைய, புராதான , தொன்று தொட்டு வரும்

த⁴ர்மே  = தர்மம்

நஷ்டே = சிதைந்தால்

குலம் = குலம்

க்ருத்ஸ்நம் = முழுவதும்

அத⁴ர்மோ = அதர்மம்

அபிபவத் = பரவும்

யுத = அதனால், மேலும்,


குலம் அழிவதால், குல தர்மங்கள் அழிகின்றன. குல தர்மங்கள் அழிவதால், அதர்மம் எங்கும் பரவும். (எனவே யுத்தம் வேண்டாம்)

இங்கு இரண்டு விஷயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஒன்று வர்ணாசிரம தர்மம். இன்னொன்று குலம் என்று சொல்லப்படுவது என்ன.

வர்ணாசிரம தர்மம் பற்றி எழுதப் புகுந்தால் அது மிக நீண்டு போய் விடுமோ என்ற அச்சத்தால் அதை இப்போதைக்கு விட்டு விடுகிறேன். (அது பற்றி அறிய விருப்பம் இருந்தால், நீண்ட ஒரு கட்டுரையை வாசிக்கும் பொறுமை இருந்தால் சொல்லுங்கள். தனியாக அது பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்).

இப்போது குலம் என்றால் என்ன என்று சிந்திப்போம்.

ஒரு சமுதாயம் செயல் பட வேண்டும் என்றால், அதில் உள்ள மக்களை ஏதோ ஒரு வகையில் குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு உள்ள கடமைகள், அந்த கடமைகளை தவறினால் அதற்கு உண்டான தண்டனைகள் என்று வரையறுக்க வேண்டும். இல்லை என்றால், ஒரு சமுதாயத்தை கட்டுப் படுத்த முடியாது.

உதாரணமாக, இன்றைய சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், கணக்கர்கள் (CA ) என்று பல குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதை சரியாகச் செய்ய வில்லை என்றால் அதற்கு தண்டனை உண்டு.

உதாரணத்துக்கு, மருத்துவ படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் என்ன ஆகும்.  நாளடைவில், மருத்துவர்களே இல்லாமல் போகும் ஒரு சூழ்நிலை உண்டாகும். அப்புறம், கண்டவனும் நான் தான் மருத்துவர் என்று போலி மருத்துவர்கள் வருவார்கள். தவறான சிகிச்சையால் மக்கள் இறப்பார்கள்.

குலம்  (மருத்துவ குலம் ) அழிவதால், அந்த குலத்துக்கு என்று வைத்த தர்மங்கள் அழியும். தர்மங்கள் அழிந்தால் அதர்மம் தலை தூக்கும்.

எனவே, குலத்தை அழிக்கும் வேலையான இந்த யுத்தத்தை நாம் செய்ய வேண்டாம் என்கிறான்.

சத்ரிய குலம் அழிந்து போகும். பின் நாட்டை யார் நிர்வாகம் பண்ணுவது? எதிரி வந்தால் யார் சண்டை போடுவது?  நாட்டில் நீதி நேர்மையை எவ்வாறு பரிபாலனம் பண்ணுவது?

குல நாசம் செய்யும் இந்த போர் வேண்டாம் என்பது அர்ஜுனனின் வாதம்.

அர்ஜுனன் சொல்வது சரிதானே ?

http://bhagavatgita.blogspot.com/2018/07/140.html




Saturday, July 7, 2018

பகவத் கீதை - 1.39 பாவத்தில் இருந்து விலகாமல் இருப்பது சரியா ?

பகவத் கீதை - 1.39  பாவத்தில் இருந்து விலகாமல் இருப்பது சரியா ?


कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्।
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन॥३९॥

கத²ம் ந ஜ்ஞேயமஸ்மாபி⁴ : பாபாத³ஸ்மாந்நிவர்திதும்|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் ப்ரபஸ்²யத்³பி⁴ர்ஜநார்த³ந ||1-39||

கதம்  = எப்படி

ந = இல்லை

ஜ்ஞேயம் = அறிவுள்ளவர்கள்

அஸ்மாபி⁴ = நாம்

பாபாத்  =  பாவத்தில் இருந்து

அஸ்மாந்  = இதில் இருந்து

நிவர்திதும் = நிறுத்தாமல், திரும்பி போகாமல், நிவர்த்தி செய்யாமல்

குலக்ஷய க்ரிதம் = குடும்பத்தை அழிக்கக் கூடிய

தோ³ஷம்  = பாவத்தை

ப்ரபஸ்²யத்³பி⁴ர் = தெரிந்தவர்கள்

ஜநார்த³ந = ஜனார்தனா


ஜனார்தனா, குல நாசம் விளைவிக்கும் இந்த பெரிய பாவத்தை தெரிந்த பின்னும்  நாம் இதை விட்டு விலகாமல் இருப்பதன் காரணம் என்ன. 


நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கும். ஆனால், அதை நமக்குச் செய்ய மனம் இருக்காது. அதைச் செய்யாமல் இருக்க ஆயிரம் நியாயங்களை நாம் சொல்லுவோம்.

" ரொம்ப களைப்பாக இருக்கிறது. அப்புறம் செய்கிறேன். "

"என்ன செஞ்சு என்ன பலன்? இதை செய்றதுக்கு செய்யாமலேயே இருக்கலாம்."

" செஞ்சு ஒண்ணும் ஆகப் போவது இல்லை. எதற்கு வம்பா இதை செய்யணும்."

" செஞ்சா மட்டும் என்ன உடனே பலன் கிடைத்து விடவா போகிறது. படிச்சவன் எல்லாத்துக்கும் வேலை கிடைச்சுருச்சா ? நான் படிச்சு என்ன ஆகப் போகிறது."

இப்படி ஆயிரம் சாக்கு போக்கு சொல்லுவோம். எல்லாமே கேட்க சரியாக இருப்பது போலத்தான் தெரியும்.

களைப்போ, பலன் இருக்கிறதோ இல்லையோ, பிடிக்கிறதோ இல்லையோ , நாம் செய்ய வேண்டியவற்றை நாம் செய்தே ஆக வேண்டும்.

தனி மனித இன்ப துன்பங்களை தள்ளி வைத்து விட்டு, ஒரு சமுதாய நோக்கில், ஒரு நாட்டின், இந்த மனித குலத்தின் மேம்பாட்டுக்காக சிந்திக்கிறது  கீதை.

மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/139.html

Friday, July 6, 2018

பகவத் கீதை - 1.38 - குலத்தை அழிப்பதால் வரும் தீங்கு

பகவத் கீதை - 1.38 -  குலத்தை அழிப்பதால் வரும் தீங்கு 



यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः।
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्॥३८॥

யத்³யப்யேதே ந பஸ்²யந்தி லோபோ⁴பஹதசேதஸ :|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் மித்ரத்³ரோஹே ச பாதகம் ||1-38||


யதி = இதனால்

அபி = மேலும்

ஏதத் = இவர்கள்

ந = இல்லை

பஸ்²யந்தி = அவர்கள் காணவில்லை

லோபோ = பேராசையில்

பஹதசேதஸ : = அகப்பட்டு

குலக்ஷயக்ருதம் = குடும்பத்தை அழித்து

தோ³ஷம்  = குற்றம்

மித்ர = நண்பர்கள், உறவினர்கள்

த்³ரோஹே = துரோகம் செய்து

ச = மேலும்

பாதகம் = பாவச் செயல்களை செய்து

பேராசையால், அறிவிழந்த இவர்கள் குடும்பத்தை அழிப்பதால் வரும் தீங்கையும், நண்பர்களுக்குச் செய்யும் துரோகத்தையும் அறிந்தார்கள் இல்லை. 

பலவிதங்களில், இது ஒரு முக்கியமான சுலோகம்

அர்ஜுனன் புலம்பல் தொடர்கிறது.

இந்த ஸ்லோகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எது என்றால்


"குலக்ஷயக்ருதம்" என்ற சொல்.

குலத்தை அழித்து என்று பொருள்.

ஆஹா, கீதை குல தர்மம் பேசுகிறது. மனு தர்மம் பேசுகிறது என்று ஒரு சாரார் இதில் குற்றம்  காண்கிறார்கள். போரில் , குலம் அழிந்து போகும் என்கிறான் அர்ஜுனன். அதைப் பற்றி மேலும் கூற இருக்கிறான்.

குலம் என்ற சொல்லுக்கு - குடும்பம், குழு , சமுதாயத்தின் ஒரு பகுதி (tribal ) என்று கூட சொல்லலாம்.

போர் என்று வந்தால், பல ஆண்கள் அழிந்து போவார்கள். குடும்பத் தலைவன் இல்லாத குடும்பம் சீரழியும். பெண்கள் விதவை ஆவார்கள். பிள்ளைகள், தகப்பன் இல்லாமல்  துன்பப் படும். சமுதாயம் சீரழியும்.

பெண் எவ்வாறு குடும்பத்தை நிர்வாகம் செய்வாள். பணத்துக்கு என்ன செய்வாள். பிள்ளைகள் எப்படி படிக்கும் ? அவர்கள் தவறான வழியில் போகும் சாத்திய கூறுகள் அதிகம்.

போர் என்பது ஒரு குறிப்பிட்ட தலைமுறையை மட்டும் அல்ல, வருங்கால சந்ததியையும் அழிக்கும் என்கிறான்.

உண்மை தானே.

போரால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை.

கௌரவர்கள்தான் ஏதோ பேராசையில் போர் தொடுக்க வந்து விட்டார்கள் என்றால், நாமும் ஏன் போர் செய்ய வேண்டும். நமக்கு அறிவு இல்லையா என்று கேட்கிறான்.

இவற்றை கேட்கும் போது நமக்கே அர்ஜுனன் சொல்வது எல்லாம் சரி என்றே தோன்றும்.

சரி என்றால், அர்ஜுனன் சொன்னதைக் கேட்டு கண்ணன் போர் களத்தை விட்டு அல்லவா போய் இருக்க வேண்டும். அர்ஜுனன் சொன்னது தவறு என்பது கண்ணன் எண்ணம். கண்ணன் இவற்றை எல்லாம் மறுத்து பின்னால் பேச இருக்கிறான்.

இன்னும் ஓரிரு ஸ்லோகங்கள்தான். அர்ஜுனன் புலம்பல் முடிந்து விடும். அதையும் பார்த்து விடுவோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/138.html






Tuesday, July 3, 2018

பகவத் கீதை - 1.37 - சுற்றத்தாரை கொன்றபின் என்ன இன்பம் ?

 பகவத் கீதை - 1.37 - சுற்றத்தாரை கொன்றபின் என்ன இன்பம் ?



तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव॥३७॥

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தா⁴ர்தராஷ்ட்ராந்ஸ்வபா³ந்த⁴வாந்|
ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா ஸுகி²ந : ஸ்யாம மாத⁴வ ||1-37||

தஸ்மாந்  = அதனால்

ந = இல்லை

அர்ஹா = உடமை உள்ளவன்

வயம் = நாம்

ஹந்தும் = கொல்வதால்

தார்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர கூட்டத்தினரை

ஸ்வபா³ந்த⁴வாந்  =  உறவினர்களோடு இருப்பவர்

ஸ்வஜநம் = சுற்றத்தார்

ஹி = நம்மால்

கத²ம் = எப்படி, எவ்வாறு

ஹத்வா = கொன்றபின்

ஸுகி²ந : = சுகமாக

ஸ்யாம  = நம்மால்

மாத⁴வ = மாதவா

எனவே, உறவினர்களான திருதராஷ்ட்ர கூட்டத்தாரை கொல்வது சரி அல்ல. உறவினர்களை கொன்றபின் நாம் எவ்வாறு இன்புற்றிருக்க முடியும் ?

அலுவலகத்தில் ஒரு வேலை இருக்கிறது. அவசரமான வேலை. இன்றே முடிக்க வேண்டும். மணியோ 6 ஆகி விட்டது. இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் முடித்து விடலாம். ஆனால், மனைவியையும் பிள்ளைகளையும் சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு போவதாக சொல்லி இருக்கிறோம். அனுமதி சீட்டும் (டிக்கெட்) வாங்கி ஆகி விட்டது. வீட்டுக்குப் போனால், வேலை கெடும். வேலையைப்  பார்த்தால், வீட்டில், மனைவி பிள்ளைகளோடு சினிமாவுக்கு செல்லும் சுகம் கெடும். எதை விடுவது ?

பரீட்சைக்கு இன்னும் 10 நாள் தான் இருக்கிறது. படித்து முடிக்க வேண்டியதுவை நிறைய இருக்கின்றன. நண்பர்கள் ஊர் சுற்ற கூப்பிடுகிறார்கள். எதை செய்வது, எதை விடுவது ?

தவறு செய்த உறவினர்களை தண்டிப்பது கடினம். விட்டு விட்டால் , எல்லோரும் ஒன்றாக இருக்கலாம். அது இன்பம்.  போர் செய்வது கடமை. ஆனால், கடமையை செய்வதால், நிச்சயம் இன்பம் வராது. நிறைய பேர் இறந்து போவார்கள். கடமையை செய்யாமல் விட்டு விடலாமா ?

இது அர்ஜுனனின் குழப்பம் மட்டும் அல்ல. நம் அனைவரின் குழப்பமும் கூட.

கடமையை செய்வதால் கட்டாயம் இன்பம் வராது என்று தெரிந்தால், அதை செய்யத்தான் வேண்டுமா ?

கடமையை செய்யாமல் விட்டு விட்டால் என்ன குடி முழுகி போகி விடும் ?

ஒரு ஆள், ஒரு முறை கடமை தவறினால் குடி முழுகிப் போகாது. ஆனால், அதுவே ஒரு நடைமுறையாகி விட்டால் ? எல்லோரும் தத்தமது இன்பத்திற்காக கடமையில் இருந்து நழுவ ஆரம்பித்தால் , குடி முழுகித்தான் போய் விடும்.

நாடே நாசமாகப் போய் விடும்.

சரி, அர்ஜுனன் இவ்வளவு கவலைப் படுகிறானே , போனால் போகட்டும் என்று அர்ஜுனனை விட்டு விட்டால், கண்ணனே சொன்னான், அர்ஜூனன் கடமையை விட்டு விட்டான், நாமும் அப்படியே செய்யலாம் என்று காலம் காலமாக எல்லோரும் கடமை தவறத் தலைப்படுவார்கள்.

இன்பமோ, துன்பமோ, இலாபமோ நட்டமோ, சுகமோ துக்கமோ, கடமையைச் செய்தே ஆக வேண்டும்  கீதை சொல்கிறது.

நம்மை நம்பி ஒரு வேலையை கொடுத்தால், அதை எப்பாடு பட்டாவது செய்தே தீர வேண்டும்.

இதுதான் கீதை சொல்ல வரும் தலையாய செய்தி.

அரசின் கடமை, பெற்றோரின் கடமை, ஆசிரியர்களின் கடமை, பிள்ளைகளின் கடமை, கணவன் மனைவியின் கடமை என்று எல்லோருக்கும் கடமைகள் இருக்கிறது.

கடமையில் இருந்து வழுவி அதை செய்யாமல் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். பலருக்கு தங்கள் கடமை என்ன என்றே தெரியாது. தெரிந்தால் அல்லவா செய்ய.

தனி மனித சுதந்திரம் பெரிதாகப் போய் விட்டது. தனி மனித கடமைகளை பற்றி யாரும் பேசுவது இல்லை.

Statute of Liberty இருக்கிறது.

Statue of Responsibility இல்லை.

கீதை போன்ற ஆழ்ந்த கருத்துகளை கொண்ட பொக்கிஷங்களை விட்டு விட்டோம். அனுபவிக்கிறோம்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/137.html

Sunday, July 1, 2018

பகவத் கீதை - 1.36 - பாவிகளை கொல்வதால் பாவமே வந்து சேரும்

பகவத் கீதை - 1.36 - பாவிகளை கொல்வதால் பாவமே வந்து சேரும் 



निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः॥३६॥

நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந : கா ப்ரீதி : ஸ்யாஜ்ஜநார்த³ந|
பாபமேவாஸ்²ரயேத³ஸ்மாந்ஹத்வைதாநாததாயிந : ||1-36||

நிஹத்ய = கொன்ற பின்

தார்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர கும்பலை

ந : = நமக்கு

கா  = என்ன

ப்ரீதி :  = இன்பம்

ஸ்யாஜ் = கிடைக்கும்?

ஜநார்த³ந|  = ஜனார்தனா

பாபம் = பாவம்

எவ = நிச்சயம்

அஸ்²ரயேத் = நம்மைச் சாரும்

அஸ்மாந் = நம்மை

ஹத்வ = கொன்ற பின்

எதன் = இந்த

வைதாநாததாயிந : = பாவிகளை, அக்கிரமக்காரர்களை

இந்த திருதராஷ்ட்ர கூட்டத்தை சேர்ந்தவர்களை கொல்வதன் மூலம் நமக்கு என்ன இன்பம் கிடைக்கும் ? பாவம்தான் வந்து சேரும் , ஜனார்தனா 

முதலில் உற்றார் உறவினர்களை ஏன் கொல்ல வேண்டும் என்றான். இப்போது, பாவிகளை ஏன் கொல்ல வேண்டும் என்கிறான்.

அர்ஜுனனின் குழப்பம் அதிரிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த குழப்பத்திற்கு எல்லாம் காரணம் என்ன? எது இதன் மூல காரணம்?

தான் யார் என்று அர்ஜுனன் அறிந்து கொள்ளாததே இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் மூல காரணம்.

அர்ஜுனன் என்பவன் , ஒரு வில் வீரன், ஒரு இராஜா, பாண்டவ சகதோரர்களில் ஒருவன், இன்னாருக்கு மாமா, இன்னொருவருக்கு அப்பா, மற்றும் ஒருவருக்கு  சீடன் என்று என்று தன்னை நினைத்துக் கொள்கிறான்.


உண்மையில் அர்ஜுனன் யார்?

அர்ஜுனனை விடுங்கள். அவன் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவன் இப்போது இல்லை. அவன் யார் என்பதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்.

நீங்கள் யார் என்று கேள்வி கேட்டுப் பாருங்கள்.

இன்னாரின் பிள்ளை, இன்னாரின் கணவன்/மனைவி, இவருக்கு சகோதரன்/சகோதரி, யாருக்கோ அம்மா/அப்பா, வேறு ஒருவருக்கு தாத்தா/பாட்டி  என்று  உங்களை நீங்கள் அடையாளம் காணலாம்.

வேறு ஒருவரின் துணை இன்றி உங்களை இன்னார் என்று உங்களால் அடையாளம்  காண முடியுமா ?

முடியலாம் !

நான் ஒரு ஆண் /பெண், இவ்வளவு உயரம், இன்ன நிறம், இன்ன எடை, நான் படித்தவை  இவை என்று சொல்லலாம்.

அவை சரியா ? உங்கள் எடையும், உயரமும், நிறமும் நிரந்தரமானதா ? மாறிக் கொண்டே இருக்கும்   அவை நீங்களா ?

இல்லை...பின் நீங்கள் யார் ?

வெளி உலகம் உங்களை நிர்ணயம் செய்கிறது. அதைத் தவிர்த்து நீங்கள் யார் ?

சிந்தித்துப் பாருங்கள்.

பாசம், நேசம், பற்று, குடும்பம், உறவு, பந்தம், எல்லாம் எப்படி வருகிறது என்று தெரியும்.

நீங்கள் இவற்றை எல்லாம் கடந்தவர்கள்.

நீங்கள் யாருக்கோ பேரன். அந்தத் தாத்தா இறந்து போனால், நீங்கள் யாருக்கும் பேரன் இல்லை. அதனால் உங்களுக்கு என்ன நேர்ந்தது. உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்தது. ஒன்றும் இல்லை. நீங்கள்,நீங்களாகவே இருக்கிறீர்கள். இந்த அடையாளங்கள் உங்களை எந்த விதத்திலும்  பாதிப்பது இல்லை.

அப்படி என்றால், நீங்கள் யார் ?

இதற்கு விடை தெரியாததால், அர்ஜுனன் கிடந்து குழம்புகிறான்.

பாவம், புண்ணியம், உறவு, பகை, இன்பம், துன்பம் என்று கிடந்து அல்லாடுகிறான்.


அவனை அந்த சிக்கலில் இருந்து கண்ணன் விடுவிக்கப் போகிறான்.

உங்களையும் தான்.

http://bhagavatgita.blogspot.com/2018/07/136.html