Thursday, July 11, 2019

பகவத் கீதை - 2.48 - யோகம் என்றால் என்ன ?

பகவத் கீதை - 2.48 - யோகம் என்றால் என்ன ?



योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते॥४८॥

யோக³ஸ்த²: குரு கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா ஸமத்வம் யோக³ உச்யதே ||2-48||

யோக³ஸ்த²: = யோகத்தில் இருப்பவன்

குரு = செய்வான்

கர்மாணி = காரியங்களை

ஸங்க³ம் = தொடர்பு

த்யக்த்வா = விட்டுவிட்டு

த⁴நஞ்ஜய = தனஞ்சய

ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: = சித்தி , அசித்தி (வெற்றி , தோல்வி)

ஸமோ = சமமாக

பூ⁴த்வா = அடைந்தபின்

ஸமத்வம்= ஒன்றாக

யோக³ =யோகம் என்பது

 உச்யதே = இதுவே


அர்ஜுனா, யோகத்தில் இருந்து, தொடர்பை, பற்றை விட்டுவிட்டு, வெற்றி தோல்விகளை சமமாக கருதி, காரியங்களைச் செய். நடு நிலையாக இருப்பதே யோகம் எனப்படும். 


கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்றெல்லாம் சொல்கிறார்களே. யோகம் என்றால் என்ன ? அதன் அடிப்படை என்ன என்று கண்ணன் இங்கே சொல்கிறான்.

முதலாவது, பற்றை விட்டு விட வேண்டும்.  பற்றை என்றால் எந்தப் பற்றை?

முதலில் ஒரு உதாரணம் பார்ப்போம். பின் இது எளிதில் விளங்கும்.

ஒரு மருத்துவர் இருக்கிறார். அறுவை சிகிச்சையில் வல்லவர். அவருடைய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அவர் செய்வாரா ? மாட்டார்.

ஏன்?

ஏன் என்றால், பிள்ளையின் மேல் உள்ள பற்று. பற்று வந்தவிட்டால் எவ்வளவு பெரிய  நிபுணர் ஆனாலும், செய்ய முடியாது. தவறு வந்து விடுமோ? தவறினால்  என் பிள்ளை இறந்து விடுமோ என்ற அச்சம் வரும். கை நடுங்கும். கட்டாயம் தவறு நிகழும்.

இதுவே வேறு ஒரு நோயாளியாக இருந்தால், அவருக்கு அந்த நோயாளி மேல் பற்று இல்லை. அவர் பாட்டுக்கு தன் கடமையைச் செய்வார். அது சரியாக இருக்கும்.

சரி, பற்று எப்படி விடும்? எப்படி பற்றை விடுவது?

சொல்லுவது எளிது. எப்படி செய்வது?

அதற்கும் வழி சொல்கிறான் கண்ணன்.

இரண்டாவது, வெற்றி தோல்வியில் சமமாக இருக்க வேண்டும்.  வெற்றி வந்தால் தலை கால் தெரியாமல் துள்ளுவது. தோல்வி வந்தால் துவண்டு விடுவது. இரண்டும் கூடாது. நான் என் வேலையைச் செய்தேன். வெற்றியோ,தோல்வியோ  அது பற்றி கவலை இல்லை என்று இருக்க வேண்டும்.

இந்த பற்றுக்கும், வெற்றி தோல்விக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கவனித்தீர்களா?

பற்று என்பது இறந்த காலத்தில் இருந்து வருவது. என் பிள்ளை, என் கம்பெனி, என் நிறுவனம், என் நாடு, என் உறவு என்பதெல்லாம் கடந்த காலத்தில் இருந்து வருவது.

வெற்றியோ தோல்வியோ எதிர் காலத்தில் இருந்து வருவது. இனிமேல் நடக்கப் போவது.

நாம் இருப்பதோ நிகழ் காலத்தில்.

நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியத்தை எதிர் காலத்தில் வரப் போகும் ஒன்றை நினைத்து  சரியாக செய்யாமல் விடுவதோ, அல்லது கடந்த காலத்தில்  உள்ளதை நினைத்துக் கொண்டு இருப்பதோ சரியா?

சமையல் செய்யும் போது, சமையலில் கவனம் வேண்டும். யார் சாப்பிடுவார்கள், சாப்பிட்ட பின் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டே உப்பு புளி எல்லாம் போட்டால் எப்படி இருக்கும் சமையல்?

பரீட்சை எழுதும் போது பதிலில் கவனம் இருக்க வேண்டும். பரீட்சை முடிந்து  , தேர்ச்சி பெற்று, வேலை கிடைத்து, அதில் நிறைய சம்பாதித்து என்று  கனவு கண்டுகொண்டே இருந்தால், பதில் எப்போது எழுதுவது?

தொழில் மேல் பற்றியும் விட்டுவிட வேண்டும், அதில் இருந்து வரும் இலாப நட்ட கணக்கையும் விட்டு விட வேண்டும்.

செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும். தொழில் மட்டும் தான் கவனத்தில் இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்கக் கூடாது.

அப்படி

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில்

கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் நடுவில் இருப்பதுதான்

யோகம்.

கண்ணன் ஏன் இப்படிச் சொல்கிறான்?

வெற்றி தோல்வி பற்றி சிந்திக்கமால் இருக்க முடியுமா?

வெற்றியினை அடைய வேண்டும், தோல்வியினை தவிர்க்க வேண்டும் என்பதுதான்  அனைவரின் விருப்பமும்.

அப்படி இருக்க எது வந்தாலும் கவலைப் படாதே என்றால் எப்படி?

சரி, அப்படி இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் பெரிதாக என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.

சாமியார் மாதிரி அலைய வேண்டியத்துதான்...வேறு என்ன நிகழ்ந்து விடும்?

கண்ணனிடமே கேட்போம்.

https://bhagavatgita.blogspot.com/2019/07/248.html

Wednesday, July 10, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 4

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 4


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


(முதல் மூன்று பாகங்களும் கீழே இருக்கிறது. Scroll down )

ஆயிரம்தான் சொன்னாலும் நாம் கேட்க மாட்டோம். பலன் இல்லாமல் காரியமா...நடக்கவே நடக்காது என்று அடம் பிடிப்போம். அளவான பலன், கொஞ்சம் பலன், தேவையான அளவு பலன் என்று ஏதாவது ஒன்று வேண்டும். 

ஒண்ணுமே எதிர்பார்க்காமல் ஒன்றைச் செய்வது என்பது முடியவே முடியாது என்று நாம் நினைப்போம்.

ஆனால்,

நாம் நிதமும் அதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா. 

வீட்டுக்கு, குடும்பத்துக்கு செய்வதை சொல்லவில்லை. நாம் நம் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பலன் எதிர்பார்க்காமல் காரியம் செய்கிறோம் என்றால் ஆச்சரியமாக   இருக்கிறது அல்லவா?

நாம் வருமானவரி காட்டுகிறோமே !

அதற்கு பலன் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நான் இவ்வளவு வரி கட்டினேன் , எனக்கு இவ்வளவு  பலன் வேண்டும் என்று யாரும் கோர்ட்டுக்குப் போக முடியாது. 

பலன் கருதாமல் கட்ட வேண்டியதுதான். 

கீதை சொன்னால் அதோடு நாம் வாதம் செய்வோம். 

அரசாங்கம் சட்டம் போட்டு பிடுங்கிக் கொண்டு போனால், வாயை மூடிக் கொண்டு இருப்போம். 

தனிமனிதன் மாற மறுப்பதால், வருமான வரி போன்றவற்றை வலிந்து திணிக்க வேண்டி இருக்கிறது. 

அது மட்டும் அல்ல, Corporate Social Responsibility (CSR) என்று கம்பெனி சட்டத்தில் ஒன்று இருக்கிறது. அதன் படி ஓரளவுக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்கள் கண்டிப்பாக அந்த   வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நன்மைக்கு செலவிட வேண்டும் என்று சட்டம்  இருக்கிறது. 

பள்ளிகள் கட்டுவது, மருத்துவ மனைகள் கட்டுவது, போன்றவற்றை அவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். 

கீதை மென்மையாக சொன்னதை, அரசாங்கம் சட்டம் போட்டுச் சொல்கிறது. 

நம் நூல்கள் சொன்னவற்றை நாம் கேட்பது இல்லை. 

"ஹா...அதெல்லாம் நடை முறைக்கு ஒவ்வாதவை " என்று தள்ளி வைத்து பழக்கப் பட்டுவிட்டோம். 

சட்டம் என்று வந்தால், வாய் மூடிச்  செய்வோம். 

இன்று எவற்றோடெல்லாம் நீங்கள் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ நாளை அவை சட்டமாக வரும். 

அறம் என்பதை விட்டு விலகவே முடியாது. 

நாளடைவில் அவை சட்டமாக  வந்து நம்மை மிரட்டுகின்றன. இப்ப என்ன செய்வாய் என்று கேட்கின்றன.


பாகம் 4 



பாகம் 3
https://bhagavatgita.blogspot.com/2019/07/247-3.html

பாகம் 2  : 



பாகம் 1:

Monday, July 8, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 3

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 3


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


(முதல் இரண்டு பாகங்களும் கீழே இருக்கிறது. Scroll down )

கடமையைச் செய். பலனில் மனதை வைக்காதே என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 

இதை இன்னொரு தளத்தில் இருந்து பார்ப்போம். 

பலனை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். பலன் இல்லாமல் வேலை செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்து வராத சிந்தாந்தம். ஒரு ஆள் அப்படி செய்ய மாட்டார்கள். 

சரி. பலன் வேண்டும் தான். 

எவ்வளவு பலன் வேண்டும் ?

மனிதன் ஆசைக்கு அளவு உண்டா ? எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அது மட்டும் அல்ல,  அளவுக்கு அதிகமாக இன்று கொடுத்தாலும், நாளை இன்னும் வேண்டும் என்று  அதிக எதிர்பார்ப்பான்.

இதன் ஆபத்தை நாம் இன்னும் முழுவதுமாக உணர்ந்து கொள்ளவில்லை. 

உதாரணமாக,


ஒரு மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வைத்தியம் பார்க்கிறார். அதற்கு உரிய தொகையை பெற்றுக் கொள்கிறார்.  அவருக்கு அந்த பலன்  போதாது. இன்னும் வேண்டும் என்று  நினைக்கிறார்.நோயாளியிடம் இருந்து  நிறைய வேண்டும் என்று நினைக்கிறார். 

சாதாரண பிரசவத்தை சிசேரியனாக மாற்றுகிறார்.  ஒன்றுக்கு பத்தாக பலன் கிடைக்குமே.

தேவை இல்லாத சோதனைகளை செய்து கொண்டு வா என்கிறார். மருத்துவ பரிசோதனை நிலையம் (லேப்), அவருக்கு ஒரு பங்கை கொடுத்து விடும். நிறைய பலன் கிடைக்கிறதே. 

அளவுக்கு அதிகமான மருந்துகளை எழுதித் தருகிறார். மருந்து நிறுவனங்கள் அவருக்கு ஒரு தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடும்.  பலன். 

இது ஒரு ஒரு தொழில் நடப்பது மட்டும் அல்ல. 

பள்ளியில் பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியர் சரியாக சொல்லித் தராமல், டியூஷன் எடுத்துக் கொள்ள வீட்டுக்கு வா  என்கிறார். மேலும் பலன் கிடைக்குமே. 

ஒழுங்காக செய்ய வேண்டிய நேரத்தில் வேலையை செய்யாமல், overtime இல் செய்தால் மேலும்  பலன் கிடைக்குமே என்று தொழிலாளிகள் வேலை செய்யும் வேகத்தை குறைக்கிறார்கள்.  

தொழிற்சாலையில் இருந்து வரும் மாசுபட்ட கழிவு நீர் மற்றும் புகையை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும். அப்படி செய்ய பணம் செலவு செய்ய வேண்டும். இலாபம் குறையும். பலன் குறையும். எனவே, அசுத்த நீரையும், காற்றையும் அப்படியே விட்டு விடுகிறார்கள்.  சுற்றுச் சூழ்நிலை கெடுகிறது. 

வேலை செய்ய வேண்டிய அரசாங்க அதிகாரிகள் கையூட்டு (இலஞ்சம்) வாங்குகிறார்கள். பலனில் புத்தி போனதால். இலஞ்சம் கொடுக்கும் போது மனம் எப்படி வலிக்கிறது. அப்போது தோன்ற வேண்டும், இந்த சுலோகம் , நடைமுறைக்கு  உகந்ததா இல்லையா என்று. 

வீட்டில் மாடு இருக்கிறது. கன்று போட்ட சில மாதங்களுக்கு அது பால் தரும். கன்றுக்குப் போக  கொஞ்சம் மிச்சம் இருந்தால் நாம் அதை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் தான் கிடைக்கும்.  அதிக பலன் வேண்டும் என்று என்ன செய்கிறார்கள் ?

கன்றுக்கு விடாமல் ஒட்ட கறந்து விடுகிறார்கள். 

நீண்ட நாள் பால் தர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். 

பால் மடி வற்றி விட்டால், அடி மாட்டுக்கு விற்று விடுகிறார்கள். 

உயிர்கள் மேல் அன்பு போய் விட்டது. 

இயற்கை மேல் அன்பு போய் விட்டது. 

சக மனிதர்கள் மேல் அன்பு போய் விட்டது. 

காரணம் என்ன ?

பலன். பெரிய பலன். மேலும் பலன்...என்ற பேராசை. 

நோயாளி வந்தால், அவரின் நோயை எப்படி குணப்படுத்துவது, வலியில் இருந்து அவருக்கு எப்படி  விடுதலை தருவது, எப்படி சீக்கிரம் குணப்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். 

மாணவனை எப்படி உயர்ந்த படித்த பண்பாளனாக மாற்றுவது என்று ஆசிரியர் சிந்திக்க வேண்டும். 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

பலனில் மனம் போனதால் நாடு சீரழிந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு துறையும் சீரழிகிறது. 

நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் பணத்தின் முன் (பலன்) அடிபட்டுப் போகிறது. 

இப்போது சொல்லுங்கள், இது நடைமுறைக்கு ஒவ்வாத ஸ்லோகமா என்று. 

நீங்க சொல்றது எல்லாம் சரிதான். இருந்தாலும், என்னவோ மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே  ....என்ன செய்யலாம்? 

என்ன செய்யலாம் என்று நாளை சிந்திப்போமா ?

பாகம் 3

பாகம் 2  : 



பாகம் 1:

Thursday, July 4, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 2

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 2


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


(முதல் பாகம் கீழே இருக்கிறது. Scroll down )

கடமையைச் செய். பலனில் மனதை வைக்காதே என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 

ஒரு வீடும், சமுதாயமும், நாடும், உலகும் முன்னேற வேண்டும் என்றால், எல்லோரும் தங்கள் சுயநலத்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். 

எனக்கு என்ன கிடைக்கும், எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று எதிலும் கணக்கு போட்டுக் கொண்டிருந்தால், வீடு, நாடு, உலகம் உயராது. வீடும், நாடும், உலகும் உயரவில்லை என்றால், அதில் உள்ள நாமும் உயர முடியாது. 

ஒரு தாய், பிள்ளை வளர்க்கும் கடமையைச் செய்கிறாள். இதில் எனக்கு என்ன கிடைக்கும், இந்த பிள்ளைக்கு பால் ஊட்டுவதன் மூலம் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று  அவள் ஒரு நொடி கூட யோசிப்பது கிடையாது. 

ஐயோ என் பிள்ளைக்கு பசிக்கிறதே என்று பால் தருகிறாள். அது உண்டு, திருப்தியாக  உறங்குவதைக் கண்டு அவள் மகிழ்கிறாள். அவளுக்கு கிடைத்தது என்ன?  ஒன்றும் இல்லை. 

அதே போல், கணவனும் கடுமையாக உழைக்கிறான். பல சங்கடங்களை பொறுத்துக் கொள்கிறான்.  பல அவமானங்களை ஏற்றுக் கொள்கிறான். எதற்கு? தன்  குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று. அவனுக்கு என்ன பலன் அதில் என்றால், ஒன்றும் இல்லை. நாளை பிள்ளைகள் படித்து முடித்து, திருமணம் செய்து கொண்டு போய் விடுவார்கள். 

அது சரி, இங்கே, என் பிள்ளை, என் குடும்பம் என்று வருகிறது. அதில் நான் பலன் எதிர்பார்க்காமல்  செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்காக நான் வேலை செய்யும்  நிறுவனத்திலும் அப்படியே இருக்க முடியுமா ?

முடியும். முடிய வேண்டும். 

எப்படி என்றால்....

குடும்பத்துக்காக நாம் செய்வது குடும்பத்தின் மேல் உள்ள அன்பினால். கருணையால். 

அந்த அன்பும் கருணையும் கொஞ்சம் அப்படியே சமுதாயத்தின் மேலும் திருப்பினால், இது என் சமூகம், என் சமுதாயம், என் நாடு ...இது உயர நான் என் பங்களிப்பை தருவேன் என்று ஒவ்வொருவரும் முன் வந்தால்.....?

இந்த தலைமுறை மட்டும் அல்ல, இனி வரும் தலைமுறைகளும் செழித்து வளரும் அல்லவா?

மேலும், 

நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எதற்காக வேலை செய்கிறேன் என்றால், எனக்கு சம்பளம் வருகிறது எனவே வேலை செய்கிறேன் என்று சொல்லலாம். அது ஒரு வழி.

நான் வேலை செய்வதன் மூலம், பலருக்கு இந்த நிறுவனத்தில் வேலை நிலைக்கிறது, அவர்கள் குடும்பம் பிழைக்கிறது, இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் மூலம் பலர் பலன் அடைவார்கள். நான் அவர்களின் நன்மைக்காகவும்  வேலை செய்கிறேன் என்று நினைத்து செய்தால், சக ஊழியர்கள், அந்த நிறுவனத்தின் பொருள்களை வாங்குபவர்கள் என்று எல்லோர் நலனும் என் கண் முன் வந்து போகும். நான், எனக்காக மட்டும் வேலை செய்யவில்லை. ஒரு சமுதாய நோக்கத்துடன் வேலை செய்கிறேன் என்ற எண்ணம் வரும். அப்படி வந்தால், என் சம்பளம் என்பது முக்கியம் தான். ஆனால், அது மட்டுமே  முக்கியமாக இருக்காது. 

நான் செய்யும் வேலையே மிக இனிதாக மாறிவிடும். நான் இந்த நிறுவனம் இலாபகரமாக செயல் பட  உதவி செய்தால், இன்னும் பலருக்கு வேலை கிடைக்கும், இன்னும் பல பயனாளிகள் (consumers ) பலன் பெறுவார்கள் என்பது மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும். 

தொழில் என்பது மாறி, தொண்டு என்பது வந்து விடும். 

எனக்கு பலன் கிடைக்காது என்று நினைத்தால், யார் ஒரு மாமரத்தையோ, புளிய மரத்தையோ  நடுவார்கள். வரும் கால சந்ததி பயன் பெற வேண்டும் என்றும் நினைத்தால் தான்  அது முடியும். 

இரண்டாவது தளம், தன்னைத் தாண்டிய ஒரு சமுதாய நோக்கு. 

கட்டாயமாக கீதை சுயநலத்தை விடச் சொல்கிறது. கீதையின் நோக்கம், ஒரு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான்.அதற்கு கொஞ்சம் தியாகம் தேவை தான். சமுதாயம் உயராவிட்டால், அதில் உள்ள தனி மனிதன் உயரவே முடியாது. 

சரி மாதிரித்தான் இருக்கிறது...இருந்தாலும், பலனை எதிர்பார்க்காமல் எப்படி வேலை செய்வது ...கொஞ்சம் எங்கேயோ இடிப்பது மாதிரி இருக்கிறதே...மூளைக்கு எட்டுகிறது, மனதுக்கு எட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா ?

மேலும் சிந்திப்போம்....நாளை சந்திப்போமா ?

------------------------------------------------------------இரண்டாம் பாகம் முற்றிற்று -----------------------

முதலாம் பாகம், கீழே 




இது என்ன சுத்த போங்காக இருக்கிறதே.

வேலை செய்யணுமாம், அதன் பலனை எதிர் பார்க்கக் கூடாதாம். சரி, பலன் இல்லாத  வேலையை ஏன் செய்ய வேண்டும் , பேசாமல் சும்மா இருக்கக் கூடாதா என்றால், அதுவும் கூடாதாம்.

சுத்த அழுகுணி ஆட்டமா இருக்கே என்று நாம் நினைப்போம்.

கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது.  பொதுவாக யாரைக் கேட்டாலும், கீதை என்ன சொல்கிறது என்று கேட்டால், "கடமையைச் செய், பலனை  எதிர் பார்க்காதே" என்று சொல்கிறது என்று இந்த ஸ்லோகத்தைத்தான்  கீதையின் சாரமாகச் சொல்லுவார்கள்.

அது எப்படி முடியும்?

முனிவர்களும் கூட பலன் வேண்டித்தானே தவம் செய்கிறார்கள். யாகம் செய்கிறார்கள்.

பலன் இல்லாமல் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்?

இந்த ஸ்லோகத்தை இரண்டு தளங்களில் இருந்து நாம் அணுக வேண்டும்.

முதலாவாவது,  ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால்  நாம் அதில் இருந்து கிடைக்கும் பலனை  எடை போடுகிறோம். நிறைய பலன் கிடைக்கும் என்றால், அந்த காரியத்தை செய்வோம். இல்லை என்றால், செய்ய மாட்டோம். இல்லையா? நாள் முழுவதும் வேலை செய்தால், ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் தருவார்கள், இன்னொரு நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் தான் தருவார்கள் என்றால், நாம் பத்தாயிரம் தரும் நிறுவனத்துக்குத்தான் வேலைக்குப் போவோம். இல்லையா.

சரி, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தருகிறேன் என்றால் போவோமா?  மாட்டோம். ஐயோ, அது என்ன மாதிரி வேலையோ. நம்மால் முடியாது என்று ஒதுங்கி விடுவோம்.

சில பேர் சொல்லலாம், இல்லை இல்லை நான் போவேன் என்று.

நிறைய மாணவர்கள்,  CA , IIT, IAS எல்லாம் எழுதப் போவது கிடையாது. ஏன்? ஐயோ, மூணு வருஷம் CA படிச்சு , பாஸ் பண்ணாவிட்டால் என்ன ஆகும் வாழ்க்கை என்று பயந்து முயற்சி செய்வது கிடையாது.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர், சில கோடி முதல் போட்டால் பெரிய அளவில் வரலாம். நட்டம் வந்து விட்டால்  என்ன செய்வது என்று பணத்தைப் போடாமல் நிறுவனத்தை  சின்னதாகவே வைத்துக் கொண்டு இருப்பார்.

பலனில் மனம் போனால், அது கிடைக்காதோ என்ற பயமும் வரும். எனவே, நாம் பெரிய  முயற்சிகள் எதையும் செய்வது இல்லை. ஏன் என்றால், அவ்வளவு முயற்சி செய்து, பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து,  வேலை செய்யாமலேயே விட்டு விடுவோம்.

புது முயற்சிகள், புது அனுபவங்கள், பெரிய முயற்சிகள், புதிதாக எதையும் கற்றுக் கொள்வது என்று   எதுவும் இல்லாமல், பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம் என்று பல கோடி பேரின் வாழ்க்கை அப்படியே போய்  விடுகிறது.

பெரிய முயற்சிகள் செய்து, அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும், அந்த முயற்சி  உங்களை பெரிய அளவில் மேலே கொண்டு போய் விடும்.

உதாரணமாக, நான் மாரத்தான் ஓட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் நினைக்கிறேன்.

இத்தனை வயதுக்கு மேல், அதெல்லாம் நடக்காது என்று பலன் மேல் நாட்டம் போனால்,  நான் வீட்டை விட்டு கூட வெளியே வர மாட்டேன்.

அதற்கு மாறாக, முடியுதோ இல்லையோ, நான் முயற்சி செய்வேன் என்று பலனை நினைக்காமல்  பயிற்சியை தொடங்கினால் இரண்டில் ஒன்று நிகழும்.

ஒன்று, நான் மாரத்தான் ஓடி,  அதை சாதித்து இருப்பேன்.

அல்லது, ஓட முடியாமல் போகலாம். ஆனால், அந்த ஓடும் பயிற்சியில், என் உடல்  வலிமை பெற்று இருக்கும், நீண்ட நாட்களுக்கு நோய் வராது, முட்டு வலி வராது,  காலையில் எழுந்து ஓடும் ஒரு ஒழுக்கம் வந்திருக்கும், சர்க்கரை வியாதி  போன்றவை கிட்டத்தில் கூட வராது.  மாரத்தான் ஓட முடியாவிட்டாலும், இது போன்ற பல பலன்கள் நிச்சயமாக எனக்கு கிடைக்கும் அல்லவா.

பதக்கம் வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தால் , போன வரும் பதக்கம் வாங்கியவன்  2 மணி நேரத்தில் ஓடினான். என்னால் முடியாது என்று முதலிலேயே மூட்டை கட்டி வைத்து விடுவேன் அல்லவா.

பலன் மேல் மனம் போனால், பெரிய முயற்சிகள் குன்றும்.

இது ஒரு தளம்.

அடுத்த தளம் என்ன என்று நாளை சிந்திப்போமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/07/247.html

Tuesday, July 2, 2019

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே

பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||


கர்மணி  = வேலை செய்வதில்

ஏவ = நிச்சயமாக

அதி⁴காரஸ் = அதிகாரம்

தே = உன்

மா = இல்லை

ப²லேஷு  = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.

கதா³சந| = என்றும் , எப்போதும்

மா = இல்லை

கர்ம = வேலையின்

ப²லஹேதுர்  = வேலையின் பலன்களில்

பூ⁴ர் =  கொள்ளாதே

மா = இல்லை

தே = உன்

ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு

அஸ்த்  = இருக்க வேண்டும்

அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது. 


இது என்ன சுத்த போங்காக இருக்கிறதே.

வேலை செய்யணுமாம், அதன் பலனை எதிர் பார்க்கக் கூடாதாம். சரி, பலன் இல்லாத  வேலையை ஏன் செய்ய வேண்டும் , பேசாமல் சும்மா இருக்கக் கூடாதா என்றால், அதுவும் கூடாதாம்.

சுத்த அழுகுணி ஆட்டமா இருக்கே என்று நாம் நினைப்போம்.

கீதையின் மிக மிக முக்கியமான சுலோகம் இது.  பொதுவாக யாரைக் கேட்டாலும், கீதை என்ன சொல்கிறது என்று கேட்டால், "கடமையைச் செய், பலனை  எதிர் பார்க்காதே" என்று சொல்கிறது என்று இந்த ஸ்லோகத்தைத்தான்  கீதையின் சாரமாகச் சொல்லுவார்கள்.

அது எப்படி முடியும்?

முனிவர்களும் கூட பலன் வேண்டித்தானே தவம் செய்கிறார்கள். யாகம் செய்கிறார்கள்.

பலன் இல்லாமல் எப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்?

இந்த ஸ்லோகத்தை இரண்டு தளங்களில் இருந்து நாம் அணுக வேண்டும்.

முதலாவாவது,  ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால்  நாம் அதில் இருந்து கிடைக்கும் பலனை  எடை போடுகிறோம். நிறைய பலன் கிடைக்கும் என்றால், அந்த காரியத்தை செய்வோம். இல்லை என்றால், செய்ய மாட்டோம். இல்லையா? நாள் முழுவதும் வேலை செய்தால், ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் தருவார்கள், இன்னொரு நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் தான் தருவார்கள் என்றால், நாம் பத்தாயிரம் தரும் நிறுவனத்துக்குத்தான் வேலைக்குப் போவோம். இல்லையா.

சரி, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தருகிறேன் என்றால் போவோமா?  மாட்டோம். ஐயோ, அது என்ன மாதிரி வேலையோ. நம்மால் முடியாது என்று ஒதுங்கி விடுவோம்.

சில பேர் சொல்லலாம், இல்லை இல்லை நான் போவேன் என்று.

நிறைய மாணவர்கள்,  CA , IIT, IAS எல்லாம் எழுதப் போவது கிடையாது. ஏன்? ஐயோ, மூணு வருஷம் CA படிச்சு , பாஸ் பண்ணாவிட்டால் என்ன ஆகும் வாழ்க்கை என்று பயந்து முயற்சி செய்வது கிடையாது.

ஒரு நிறுவனத்தை நடத்துபவர், சில கோடி முதல் போட்டால் பெரிய அளவில் வரலாம். நட்டம் வந்து விட்டால்  என்ன செய்வது என்று பணத்தைப் போடாமல் நிறுவனத்தை  சின்னதாகவே வைத்துக் கொண்டு இருப்பார்.

பலனில் மனம் போனால், அது கிடைக்காதோ என்ற பயமும் வரும். எனவே, நாம் பெரிய  முயற்சிகள் எதையும் செய்வது இல்லை. ஏன் என்றால், அவ்வளவு முயற்சி செய்து, பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து,  வேலை செய்யாமலேயே விட்டு விடுவோம்.

புது முயற்சிகள், புது அனுபவங்கள், பெரிய முயற்சிகள், புதிதாக எதையும் கற்றுக் கொள்வது என்று   எதுவும் இல்லாமல், பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம் என்று பல கோடி பேரின் வாழ்க்கை அப்படியே போய்  விடுகிறது.

பெரிய முயற்சிகள் செய்து, அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும், அந்த முயற்சி  உங்களை பெரிய அளவில் மேலே கொண்டு போய் விடும்.

உதாரணமாக, நான் மாரத்தான் ஓட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் நினைக்கிறேன்.

இத்தனை வயதுக்கு மேல், அதெல்லாம் நடக்காது என்று பலன் மேல் நாட்டம் போனால்,  நான் வீட்டை விட்டு கூட வெளியே வர மாட்டேன்.

அதற்கு மாறாக, முடியுதோ இல்லையோ, நான் முயற்சி செய்வேன் என்று பலனை நினைக்காமல்  பயிற்சியை தொடங்கினால் இரண்டில் ஒன்று நிகழும்.

ஒன்று, நான் மாரத்தான் ஓடி,  அதை சாதித்து இருப்பேன்.

அல்லது, ஓட முடியாமல் போகலாம். ஆனால், அந்த ஓடும் பயிற்சியில், என் உடல்  வலிமை பெற்று இருக்கும், நீண்ட நாட்களுக்கு நோய் வராது, முட்டு வலி வராது,  காலையில் எழுந்து ஓடும் ஒரு ஒழுக்கம் வந்திருக்கும், சர்க்கரை வியாதி  போன்றவை கிட்டத்தில் கூட வராது.  மாரத்தான் ஓட முடியாவிட்டாலும், இது போன்ற பல பலன்கள் நிச்சயமாக எனக்கு கிடைக்கும் அல்லவா.

பதக்கம் வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்தால் , போன வரும் பதக்கம் வாங்கியவன்  2 மணி நேரத்தில் ஓடினான். என்னால் முடியாது என்று முதலிலேயே மூட்டை கட்டி வைத்து விடுவேன் அல்லவா.

பலன் மேல் மனம் போனால், பெரிய முயற்சிகள் குன்றும்.

இது ஒரு தளம்.

அடுத்த தளம் என்ன என்று நாளை சிந்திப்போமா ?


https://bhagavatgita.blogspot.com/2019/07/247.html