Tuesday, October 28, 2014

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து 


द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥११- २०॥

த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் ||

த்யாவா ப்ருதிவ்யோ = தியா என்றால்  தீபம்.ஒளி.  ஒளி வீசும் விண்ணுக்கும்; ப்ரித்வி என்றால் நிலம். பூமி. ஆகாயத்திற்கும் பூமிக்கும்

இதம் = இந்த 

அந்தரம் = உள்ளே 

ஹி = நிச்சயமாக

வ்யாப்தம் = வியாபித்து , நிறைந்து

த்வயை = உன்னால்

ஏகேன = ஒருவனாய்

திஸ = திசைகளிலும்

ச = மேலும்

ஸர்வா:  = அனைத்து

த்ருஷ்ட = காணும் 

ஆத்புதம்  = அற்புதம்

ரூபம் = வடிவம்

உக்ரம்  = உக்கிரமான

லோகத்ரயம்= மூன்று உலகங்களிலும்

ப்ரவ்யதி²தம் = நடுங்கும்படி

மஹாத்மந் = உயர்ந்த

விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒன்றாய் நிறைந்த உன் உக்கிரமான வடிவைப் பார்த்து மூன்று உலகங்களும் நடுங்குகின்றன 

நீங்கள் இருக்கும் அறை . அதையும் மற்ற அறைகளையும் சேர்த்து உங்கள் வீடு. உங்கள் வீட்டையும், மற்ற வீடுகளையும் சேர்த்து உங்கள் apartment . உங்கள் அபர்த்மென்ட் -டையும் மற்றவற்றையும் சேர்த்து உங்கள் தெரு. உங்கள் தெரு போல  பல தெருக்கள் சேர்த்த உங்கள் இடம் அல்லது ஊர். உங்கள் ஊரோடு பல  ஊர்கள் சேர்ந்து உங்கள் நாடு.

உங்கள் நாட்டைப் போல பல நாடுகள் சேர்ந்து இந்த பூமி. உங்கள் பூமியைப்   போல  பல கிரகங்கள் சேர்ந்து இந்த சூரிய குடும்பம். உங்கள் சூரிய குடும்பம் போல  சூரிய குடும்பங்கள் சேர்ந்து உங்கள் பால் வெளி என்று இந்த உலகம  விரிந்து கொண்டே போகிறது.

மாடியில் இருந்து பார்த்து பார்த்தால் அறைகள் தெரியாது...வீடுகள் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால் வீடுகள் தெரியாது, நகரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் நகரம் தெரியாது நாடு தெரியும்.

இப்படி நம் பார்வை விசாலமாக விசாலமாக மேடு பள்ளங்கள், ஏற்றத் தாழ்வுகள்  மறைந்து அனைத்தும் சமம் என்று தோன்றும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உள்ள அனைத்தும் ஒரு  சக்தியின் வெளிப்பாடு  என்று பார்க்கும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அது நிறைந்து  நிற்கிறது. எங்கும் வியாபித்து நிற்கிறது.

மாமன், மச்சான், குரு, தாத்தா, என்று பிரித்துப் பார்த்த அர்ஜுனன் இப்போது  சேர்த்துப்  பார்க்கிறான். எங்கும் நிறைந்து நிற்கும் ஒன்றைப் பார்க்கும் போது அவனுக்கு  நடுக்கம் வருகிறது. இதுவரை கண்டிராத ஒன்று.

அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வரூப தரிசனம்.

சூரியனையும், சந்திரனையும், கிரகங்களையும், பால்வெளியையும் ஒன்றாக  சேர்த்து பாருங்கள்.

எவ்வளவு பெரிய பிரமாண்டம். அதை நினைக்கும் போது அர்ஜுனனக்கு நடுக்கம் வருக்கிறது .

இதுவரை அப்படி அவன் பார்த்தது இல்லை.

தான் பெரிய வில்லாளி, அழகன் என்ற ஆணவம் எல்லாம் அவனை விட்டுப் போகிறது. நடுங்குகிறான். இதன் முன்னால் நாம் ஒன்றும் இல்லை என்ற பயம் வருகிறது.

அவன் மட்டும் என்ன ?  நாமும்தான்.

உலகை பிரித்து பிரித்து பார்த்தே நாம் பழகி விட்டோம். சேர்த்துப் பார்க்க பழகுவோம்.

சேரச் சேர அதன் பிரமாண்டம் தெரியும். நம் ஆணவம் விலகும்.  பணிவு வரும். எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றுமை உணர்வு வளரும்.

உள்ளே போகப் போக ஆத்மா என்ற ஒன்றை அடைவோம்.

அதை உணர்வது கடினம் ஏன் என்றால் அதை பார்க்க முடியாது.

உள்ளே செல்லும் பார்வையை வெளியே செலுத்தினால் உலகம் விரிந்து கொண்டே போகும்.

அந்த பிரமாண்டம்தான் விஸ்வரூபம்.

நம் பார்வை விரியட்டும்.

விஸ்வரூபம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. நாம் தான் நம் பார்வையை குறுக்கிக் கொண்டு  அதை உணர்வதை தவிர்க்கிறோம்.

நீங்கள் நினைத்தால் இன்றே அந்த விஸ்வரூப தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


கீதை - 11.19 - சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு

கீதை - 11.19 -  சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு   


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

----------------------------------/ சூரியனையும் சந்திரனையும் கண்களாக/---------------------

சூரியனையும் சந்திரனையும் கண்களாக என்றால் ஏதோ நிஜமாகவே ஒரு கண்ணு சூரியன் போல  பெரிதாக, நெருப்பாக இருக்கும், இன்னொரு கண்ணு    சந்திரனைப்போல  சின்னதாக குளிர்ச்சியாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல. அப்படி இருந்தால்  பார்க்க சகிக்குமா ?

அதன் அர்த்தம் என்ன ?

இரவு பகல் என்று அனைத்து நேரங்களிலும் சர்வ சாட்சியாக இருப்பவன் அவன். யாரும் பார்க்கவில்லை என்று தவறு செய்யக் கூடாது. சூரியனோ, சந்திரனோ சாட்சியாக இருக்கும் வரை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கக் கூடாது.

கோவலன் வெட்டுப் பட்டான். அவன் குற்றமற்றவனா இல்லையா என்று என்று  உலகுக்கு எப்படி அறிவிப்பது ?

 கண்ணகி கேட்கிறாள் , யாரிடம் தெரியுமா ?

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-

என்று கதிரவனிடம் கேட்கிறாள். அவன் தான் எல்லாவற்றிற்கும் சாட்சி. 

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு பார்வையாளனாக நின்று வேடிக்கை பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு மூன்றாம் மனிதர் போல் தள்ளி நின்று  கவனித்துப் பாருங்கள். வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் தெரியும்.

ஓடுவதும், ஆடுவதும், பொய் சொல்லுவதும், ஏமாற்றுவதும், உருகுவதும்,  எல்லாம்  ஒரு திரைப் படம் போல, நாடகம் போலத் தெரியும்.

இந்த உலகம் அனைத்தையும் பார்க்கும் கண்கள் சூர்யனும் சந்திரனும்.

அந்த கண்களை உன்னில் காண்கிறேன் என்கிறான் அர்ஜுனன்.

ஆழ்ந்து சிந்தித்தால் அந்த கண்கள் என்ன என்று உங்களுக்கும் புரியும் ...


Sunday, October 12, 2014

கீதை - 11.19 - தொடக்கம், நடு , முடிவு இல்லாத

கீதை - 11.19 - தொடக்கம், நடு ,  முடிவு இல்லாத  


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....