Tuesday, July 21, 2015

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது - பாகம் 2

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது  - பாகம் 2


सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥

ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||

ஸர்வத:= அனைத்து பக்கங்களிலும்

பாணி = கைகள்

பாத³ம் = கால்கள்

தத் = அது

ஸர்வத் = அனைத்து பக்கங்களிலும்

அ க் ஷிஸிரோ முக ம் = கண்ககளும், தலையும், முகமும் கொண்டது

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸ்ருதி = செவி

லோகே = உலகில்

ஸர்வம் ஆவ்ருத்ய = எல்லாவற்றையும் சூழ்ந்து

திஷ்ட²தி = நிற்கிறது

அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

இது என்ன புது குழப்பமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கை கால்கள் இருக்கும், எங்க பார்த்தாலும் கண்ணும், வாயும் இருக்கும், செவி இருக்கும், எல்லாவற்றையும்  சூழ்ந்து நிற்கும் ஒன்றை எப்படி நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும்.  அப்படி ஒன்று கிடையவே கிடையாது. கீதை இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி  நம்மை குழப்புவது போலத் தெரியும்.

சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.

கீதை ஒரு புறம் இருக்கட்டும். அதுக்கு பின்னாடி வருவோம். நீங்கள் சில இந்து கடவுள்களைப்  பார்த்து இருகிறீர்களா ...நிறைய தலை இருக்கும், ஏகப்பட்ட கைகள்  இருக்கும், ஒவ்வொரு கையிலும் ஒரு பொருள் இருக்கும்...

அதுக்கு என்ன அர்த்தம் ?


நீங்கள் காலையில் எழுந்து புறப்பட்டு அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகிறீர்கள்.  நீங்களே எழுந்து, பல் துலக்கி, குளித்து, சிற்றுண்டி அருந்தி,  உடை மாற்றி, வண்டி பிடித்து அல்லது வண்டி ஓட்டி போய் சேர வேண்டிய  இடத்தை அடைகிறீர்கள் ...அப்படித்தானே ?

அது தான் இல்லை.

பல் விளக்க வேண்டும் - அந்த பற்பசையை செய்தது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில்  ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவற்குக்கும் ஒரு வேலை.  எல்லோரும் சேர்ந்து செய்தால் அந்த பற்பசை   உருவாகும். அப்புறம் அதை ஒரு டப்பாவில் போட்டு அடைக்க வேண்டும். அந்த டப்பாவை செய்வது இன்னொரு நிறுவனம். அங்கும் பல பேர்   வேலை செய்கிறார்கள். செய்த டப்பாவை பற்பசை செய்த நிறுவனதுக்கு கொண்டு செல்ல வேண்டும்.  கொண்டு செல்லும் நிறுவனத்தில் பல பேர் வேலை செய்கிறார்கள்.  அந்த வாகனம் செல்லும் வழி, அதை செய்தது எத்தனை  கைகள். அந்த வாகனத்தை செய்தது எத்தனை கைகள். செய்த பற்பசையை  நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எத்தனை கைகள் வேண்டும், எத்தனை கால்கள் வேண்டும், எத்தனை கண்கள் வேண்டும், எத்தனை செவிகள் வேண்டும் ?

சரி பற்பசை வந்தாயிற்று, குழாயை திறந்தால் நீர் வருகிறது. அந்த நீரை கொண்டு வர  எத்தனை கைகள், கால்கள், கண்கள் , செவிகள் வேலை செய்தால்  நீங்கள் திறந்தவுடன் நீர் வரும் பல் விளக்க ?

இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன செயலுக்கும் பின்னால் ஆயிரம் ஆயிரம் கைகள், கால்கள், கண்கள், செவிகள் வேலை செய்து உங்களுக்கு அவற்றை கொண்டு வந்து  சேர்கின்றன.

அதை உணர்த்துவது தான் அந்த பலப் பல கைகளை கொண்ட படங்கள், சிலைகள்.

குறைந்த பட்சம் நாலு கைகளாவது இருக்கும்.

ஏன் ?

உங்கள் இரண்டு கைகள் மட்டும் போதாது உங்கள் வாழ்வை சீராகச் கொண்டு செல்ல.

எத்தனையோ கைகள், கால்கள், கண்கள் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன  அந்த படங்களும், சிலைகளும். அவற்றைப் படைத்தவர்கள் முட்டாள்கள் அல்ல. ஒரு ஆழ்ந்த கருத்தை நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார்கள்.

அத்தனை கைகளும், கால்களும் உங்களுக்கு உதவி செய்கின்றன.  நமது ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஆயிரக் கணக்கான கை கால்கள் இருக்கின்றன.

இப்போது சுலோகத்திற்கு வருவோம்.

அதற்கு எங்கும் கால்கள், கைகைள், கண், செவி, முகம், தலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

சிந்திப்போம்....


============================ பாகம் 2 ====================================

இறைவனை யாரும் பார்த்தது இல்லை. அவன் இருக்கிறானா இல்லையா என்று கூட  சந்தேகம் இருக்கிறது. இறைவன் என்ற ஒருவன் இல்லாமலேயே இந்த  உலகையும் அதில் நிகழ்வனவற்றையும் விளக்க முடியும் என்றால்  இறைவன்  என்பவன் எதற்காக என்ற கேள்வி விடை இல்லாமல் தொக்கி நிற்கிறது.

வாதத்துக்கு இறைவன் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம்....அவன் ஆணா ? பெண்ணா ? அலியா ? விலங்கா ? செடி கொடியா? எப்படி இருப்பான் ?  உயரமா , குள்ளமா , கறுப்பா , சிவப்பா, குண்டா, ஒல்லியா ? எப்படி இருப்பான் ?

நாம் இப்படி எல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஏதோ "ஒன்று" என்று நினைத்து சிந்திக்கிறோம்.

ஏன் இறைவன் என்பது "ஒன்றாக" இருக்க வேண்டும் ? ஏன் பலவாக அல்லது பலவற்றின்  தொகுதியாக இருக்கக் கூடாது ?

பல அறைகள் கொண்ட இருப்பிடத்தை வீடு என்று சொல்கிறோம்.
பல வீடுகள் கொண்ட இடத்தை ஊர் என்று சொல்கிறோம்.
பல ஊர்கள் கொண்ட இடத்தை நாடு என்று சொல்கிறோம்.
இப்படி படிப் படியாக கூட்டிக் கொண்டே போனால் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது எது ?

அதற்கு கடவுள், ஆத்மா, இயற்கை, பரம் பொருள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு வாதத்துக்குத் தான். ஒன்றும் பயபடாதீர்கள்....

இப்போது ஸ்லோகத்தை பார்ப்போம்....


அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

அது எல்லாவற்றின் தொகுதி என்று வைத்துக் கொண்டால் அதற்கு எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலை, முகம் , செவி எல்லாம் இருக்கும் அல்லவா ?

அனைத்தையும் கொண்ட தொகுதி என்பதால் அது அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது என்று கொள்ளலாம் அல்லவா ?

உங்களையும், என்னையும், அவரையும், இவரையும், அதையும், இதையும் எல்லாம் தன்னுள் அடக்கியது தான் அது.

நம் அனைவரையும் சூழ்ந்து நிற்பது அது. நாம் எல்லாம் அதன் ஒரு பகுதி.

இறைவன் என்பது ஒரு தனித்த ஒன்று அல்ல.  எல்லாவற்றையும் சேர்த்த ஒன்று அது.

நான்கு கைகள், பட்டு பீதாம்பரம், சங்கு, சக்கரம், திரிசூலம், உடுக்கை, மான் தோல், பாற்கடல் என்றெல்லாம் கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள்.

இறை என்பது அனைத்தின் தொகுதி.

முந்தைய ஸ்லோகத்தில் அது சத் அல்ல, அசத் அல்ல என்று பார்த்தோம்.

சத் என்றால் அது ஒரு தொகுப்பில் (genre ) இருக்க வேண்டும். மனிதனாகவோ, மிருகமாகவோ, கல்லாகவோ, புல்லாகவோ என்தோவாக இருக்க வேண்டும். அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அது "சத்" ஆக இருக்க முடியாது.

அசத் என்றால் இல்லாத ஒன்று. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று எப்படி சொல்ல முடியும் ?

எனவே தான், முன்னோர்கள், அது இரண்டுமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி.

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க என்பார் மாணிக்க வாசகர்.

ஒன்றாகக் காண்பதுவே காட்சி என்றாள் ஔவை....

எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் "அது".






கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது - பாகம் 1

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது  - பாகம் 1 


सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥

ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||

ஸர்வத:= அனைத்து பக்கங்களிலும்

பாணி = கைகள்

பாத³ம் = கால்கள்

தத் = அது

ஸர்வத் = அனைத்து பக்கங்களிலும்

அ க் ஷிஸிரோ முக ம் = கண்ககளும், தலையும், முகமும் கொண்டது

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸ்ருதி = செவி

லோகே = உலகில்

ஸர்வம் ஆவ்ருத்ய = எல்லாவற்றையும் சூழ்ந்து

திஷ்ட²தி = நிற்கிறது

அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

இது என்ன புது குழப்பமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கை கால்கள் இருக்கும், எங்க பார்த்தாலும் கண்ணும், வாயும் இருக்கும், செவி இருக்கும், எல்லாவற்றையும்  சூழ்ந்து நிற்கும் ஒன்றை எப்படி நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும்.  அப்படி ஒன்று கிடையவே கிடையாது. கீதை இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி  நம்மை குழப்புவது போலத் தெரியும்.

சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.

கீதை ஒரு புறம் இருக்கட்டும். அதுக்கு பின்னாடி வருவோம். நீங்கள் சில இந்து கடவுள்களைப்  பார்த்து இருகிறீர்களா ...நிறைய தலை இருக்கும், ஏகப்பட்ட கைகள்  இருக்கும், ஒவ்வொரு கையிலும் ஒரு பொருள் இருக்கும்...

அதுக்கு என்ன அர்த்தம் ?


நீங்கள் காலையில் எழுந்து புறப்பட்டு அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகிறீர்கள்.  நீங்களே எழுந்து, பல் துலக்கி, குளித்து, சிற்றுண்டி அருந்தி,  உடை மாற்றி, வண்டி பிடித்து அல்லது வண்டி ஓட்டி போய் சேர வேண்டிய  இடத்தை அடைகிறீர்கள் ...அப்படித்தானே ?

அது தான் இல்லை.

பல் விளக்க வேண்டும் - அந்த பற்பசையை செய்தது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில்  ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவற்குக்கும் ஒரு வேலை.  எல்லோரும் சேர்ந்து செய்தால் அந்த பற்பசை   உருவாகும். அப்புறம் அதை ஒரு டப்பாவில் போட்டு அடைக்க வேண்டும். அந்த டப்பாவை செய்வது இன்னொரு நிறுவனம். அங்கும் பல பேர்   வேலை செய்கிறார்கள். செய்த டப்பாவை பற்பசை செய்த நிறுவனதுக்கு கொண்டு செல்ல வேண்டும்.  கொண்டு செல்லும் நிறுவனத்தில் பல பேர் வேலை செய்கிறார்கள்.  அந்த வாகனம் செல்லும் வழி, அதை செய்தது எத்தனை  கைகள். அந்த வாகனத்தை செய்தது எத்தனை கைகள். செய்த பற்பசையை  நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எத்தனை கைகள் வேண்டும், எத்தனை கால்கள் வேண்டும், எத்தனை கண்கள் வேண்டும், எத்தனை செவிகள் வேண்டும் ?

சரி பற்பசை வந்தாயிற்று, குழாயை திறந்தால் நீர் வருகிறது. அந்த நீரை கொண்டு வர  எத்தனை கைகள், கால்கள், கண்கள் , செவிகள் வேலை செய்தால்  நீங்கள் திறந்தவுடன் நீர் வரும் பல் விளக்க ?

இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன செயலுக்கும் பின்னால் ஆயிரம் ஆயிரம் கைகள், கால்கள், கண்கள், செவிகள் வேலை செய்து உங்களுக்கு அவற்றை கொண்டு வந்து  சேர்கின்றன.

அதை உணர்த்துவது தான் அந்த பலப் பல கைகளை கொண்ட படங்கள், சிலைகள்.

குறைந்த பட்சம் நாலு கைகளாவது இருக்கும்.

ஏன் ?

உங்கள் இரண்டு கைகள் மட்டும் போதாது உங்கள் வாழ்வை சீராகச் கொண்டு செல்ல.

எத்தனையோ கைகள், கால்கள், கண்கள் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன  அந்த படங்களும், சிலைகளும். அவற்றைப் படைத்தவர்கள் முட்டாள்கள் அல்ல. ஒரு ஆழ்ந்த கருத்தை நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார்கள்.

அத்தனை கைகளும், கால்களும் உங்களுக்கு உதவி செய்கின்றன.  நமது ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஆயிரக் கணக்கான கை கால்கள் இருக்கின்றன.

இப்போது சுலோகத்திற்கு வருவோம்.

அதற்கு எங்கும் கால்கள், கைகைள், கண், செவி, முகம், தலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

சிந்திப்போம்....


Friday, July 17, 2015

கீதை - 13.12 - உள்ளதும் அல்லாததும்

கீதை - 13.12 - உள்ளதும் அல்லாததும் 


ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥१३- १२॥

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்²நுதே |
அநாதி³ மத்பரம் ப்³ரஹ்ம ந ஸத்தந்நாஸது³ச்யதே || 13- 12||

ஜ்ஞேயம் = அறியப்பட வேண்டியது

யத் = எது

தத் = அதை

ப்ரவக்ஷ்யாமி = ப்ர + வாக் + ஷியாமி = உனக்கு சொல்கிறேன், விளக்குகிறேன் 

யத் = எது

ஜ்ஞாத்வ = எதை அறிந்தால்

அம்ருதம் = அம்ருதத்தை, சாகாமல் இருக்கும் நிலையை 

அஸ்நுதே = அடைவானோ

அநாதி = தொடக்கம் இல்லாதது

மத் பரம் ப்ரஹ்ம = பரம் என்றால் பழமையான. பரம்பரை, பரம சிவன், பரம பதம். பர ப்ரஹ்மம்.

ந ஸத் = இருப்பதும் இல்லை 

தந் = அது

நாஸது = ந அசத் = இல்லாததும் இல்லை

உச்யதே = சொல்லப்பட்டது

எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிந்தால் இறவா நிலை அடையலாமோ, எது தொடக்கம் இல்லாததோ, பர ப்ரஹமமோ , எது உருவமும் அருவமும் இல்லாததோ அதை பற்றிச் சொல்கிறேன். 

மிக மிக ஆச்சரியமான சுலோகம்.

மிக மிக ஆழமான சிந்தனையை கொண்ட சுலோகம்.

எது தொடக்கம் இல்லாததோ - தொடக்கம் இல்லாத ஒன்று இருக்க முடியுமா ?  ஒவ்வொன்றும் என்றோ ஒரு நாள் தொடங்கி இருக்க வேண்டும். ஏதோ ஒன்றை எடுத்துக்  கொண்டு, எது என்று வந்தது என்றால் அதன் தொடக்கத்தை நம்மால்  கண்டு பிடிக்க முடியும். ஏதோ ஒன்றில் இருந்து ஏதோ ஒரு கால கட்டத்தில்  அது வந்திருக்க வேண்டும்.

நான் என்று வந்தேன் என்று கேட்டால் , என் பிறந்த தினத்தை கூற முடியும். நான் பிறப்பதற்கு முன்னால்  என்னவாக இருந்தேன்  என்று கேட்டால் வேறு எதுவாகவோ  இருந்திருப்பேன். அந்த வேறு எது என்று பிறந்தது என்று கேட்டால்  அதற்கு ஒரு காலம் இருந்திருக்கும். இப்படியே ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே  பின்னால் போனால் எல்லாமும், இந்த உலகம், பிரபஞ்சம் எல்லாம்  என்று ஒரு நாள் தொடங்கி இருக்க வேண்டும் என்று அறிய முடியும்.

அறிவியலும் அதை ஏற்றுக் கொள்கிறது. மகா வெடிப்பு (Big Bang ) என்று சொல்கிறது  அறிவியல்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. ஏன் என்றால்  "முன்னால்" என்ற கேள்வியே காலத்தின் அடிப்படையில் பிறந்த கேள்வி.  காலமே அதில் இருந்துத்தான் தொடங்கியது என்றால் அதற்கு முன்னால் என்ற கேள்விக்கே அர்த்தம் இல்லை. அது தான் காலம் 0. அதுதான்  காலத்திற்கே  தொடக்கம்.

கீதை அந்த அனாதியான இடத்தை தொடுகிறது. அந்த நேரம், அது தான் ஆரம்பம். அதற்கு முன்னால் என்று எதுவும் கிடையாது.

தொடக்கம் இல்லாதது அது.


அனாதியிலே, வெளியில் விளைந்த வெறும் பாழை என்பார் அருணகிரிநாதர்.

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய  விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே



 அது சத் அல்ல, அது அசத் அல்ல .

சத் என்றால் என்ன ? அசத் என்றால் என்ன ?

சத் என்பது நிலையானது, மாறாதது, என்றும் உள்ளது. அதில் இருந்து வந்தது அசத் என்ற மாறும் தோற்றம் கொண்ட இந்த உலகம்.

இந்த சத் மற்றும் அசத்தை சந்தோக்ய உபநிஷத் மிக விரிவாக விளக்குகிறது.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

மண்ணில் இருந்து பானை, சட்டி, குடம் எல்லாம் செய்கிறோம். மண் சத். பானை, சட்டி குடம் எல்லாம் அசத்.

தங்கத்தில் இருந்து வளையல், சங்கிலி, மோதிரம் எல்லாம் செய்கிறோம். தங்கம் சத். ஆபரணங்கள் அசத் .

ஏன் ?

பானையும், சட்டியும், வளையலும், மோதிரமும் அழியும். வேறொன்றாக மாறும். மண்ணும், தங்கமும் அப்படியே இருக்கும். 

மாறுகின்ற வடிவங்களின் (அசத் ) பின்னால் மாறாமல் இருப்பது சத்.

கீதை சொல்கிறது. அது சத் அல்ல. அது அசத் அல்ல என்கிறது.

சரிரீ அன்று அசரீரி அன்று என்பார் அருணகிரி. சரீரம் உள்ளதும் அல்ல. சரீரம் அல்லாததும் அல்ல.


தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 

 

Thursday, July 9, 2015

கீதை - 13.11 - ஞானமும் அஞ்ஞானமும்

கீதை - 13.11 - ஞானமும் அஞ்ஞானமும்

अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥१३- ११॥

அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் |
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத³தோऽந்யதா² || 13- 11||

அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் = அத்(தி) + ஆத்ம + ஞான + நித்ய + த்வம் =  அதி என்றால் மேலான. உயர்வான.

அதி ஆத்மா என்றால் ஆத்மாவின் உயர்வு.

அதி ஆத்ம ஞானம் = ஆத்மாவின் உயர்வைப் பற்றிய ஞானம்

நித்ய த்வம் = எப்போதும் இருப்பது

தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் = தத்வ + ஞான + அர்த + தர்சனம்

தத்துவம் என்றால் உண்மை.

ஞான = ஞானம். உண்மையான ஞானம்

அர்த்த = அர்த்தம், பொருள்

தர்சனம் = அறிவது

ஏதத் = இது

ஜ்ஞாநம் = ஞானம்

இதி = எனவே

ப்ரோக்தம் = சொல்லப் படுகிறது

அஜ்ஞாநம் = அஜ்ஞானம்

யத = எது

அதோ அந்யதா = இதற்கு அந்நியமானது எல்லாம்



எது ஞானம் , எது அஞ்ஞானம் ?

நாம் படிப்பது எல்லாம் ஞானம் ஆகிவிடாது. நிறைய படித்தவன் ஞானியாக மாட்டான். சிலசமயம் கஷ்டப்பட்டு அஞ்ஞானத்தை கூட நாம் தேடிச் சேர்ப்பதும் உண்டு.

எது ஞானம், எது அஞ்ஞானம் என்று தெரியாவிட்டால் எப்படி அஞ்ஞானத்தை விடுத்து ஞானத்தை அடைய முடியும் ?

அறிவு அல்லது ஞானம் என்று சொல்கிறோமே, அப்படி என்றால் என்ன ? எது அறிவு ? அறிவின் தொடக்கமும் முடிவும் என்ன ?

ஒருவன் பெரிய அறிவாளி என்று சொன்னால் என்ன அர்த்தம் ? நிறைய புத்தகங்கள் வாசித்து மனப்பாடம் செய்திருக்கிறார் என்று அர்த்தமா ? 

நாம், வாழ்நாளில் பெரும் பகுதியை அறிவைப் பெருக்குவதில் செலவழிக்கிறோம். பள்ளிக் கூடம், பின் கல்லூரி, பின் புத்தகங்கள் வாசிப்பது, வாசித்தவர்கள் சொல்லக்  கேட்பது என்று வாழ்வில் பெரும் பக்தி ஞானத்தைப் பெருக்குவதிலேயே போய் விடுகிறது.

எதற்காக அறிவைப் பெறுகிறோம் ? கல்வியின் பயன் என்ன ? அறிவு நமக்கு எந்த விதத்தில் உபயோகமாக இருக்கிறது ?

சில சமயம் நாம் பெற்ற அறிவே கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

தவறான புத்தகங்கள், தவறான ஆட்களிடம் பெரும் அறிவு ஆபத்தை விளைவிக்கலாம்.

ஒரு பிரயாணம் கிளம்புகிறோம் என்றால் எந்த ஊருக்குப் போகப் போகிறோம் என்று முதலில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் அல்லவா ?

அது போல, அறிவை பெறத் தொடங்குமுன் எதற்க்காக இந்த அறிவு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பணம் சம்பாதிக்கவா ? சந்தோஷமாக இருக்கவா ? பிறருக்கு சேவை செய்யவா ? உண்மையை அறியவா ? வீடு பேறு அடையவா ?

எதற்காக ஞானத்தை தேடுகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் அறிந்து கொள்ள கீதை இரண்டு குறிப்புகளைத் தருகிறது.

ஞானம் என்பது ,

முதாலவது, ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வது. 

இரண்டாவது, தத்துவ + ஞான + அர்த்த + தர்சினம்

அதாவது, தத்துவ ஞானத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வது.


தத்துவ ஞானத்தின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சும்மா படித்துக் கொண்டே போவதாலோ, எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்பிபதாலோ ஞானம் வந்து விடாது.

தத்துவம் என்றால் - உண்மை.

ஞானம் என்றால் = உண்மையைப் பற்றிய அறிவு அல்லது மெய்பொருளைப் பற்றிய அறிவு.

அர்த்தம் = அந்த மெய் பொருளின் அர்த்தம்

தரிசனம் = அறிந்து கொள்வது.

தத்துவ ஞானத்தின் உண்மையை அறிய வேண்டும்.

இதுவே ஞானம்.

இது அல்லாத அனைத்தும் அஞ்ஞானமே.

கோவிலுக்குப் போகிறோம், சமய சின்னகளை அணிந்து கொள்கிறோம், நிறைய பாடல்களை   மனனம் செய்து ஒப்பிக்கிறோம், சமய சடங்குகளை செய்கிறோம்....இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ?

அர்த்தம் தெரிந்தால் - அது ஞானம்.

இல்லையென்றால் அது எல்லாமே அஞ்ஞானமே ....