Wednesday, September 23, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2


इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்


இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா? 
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.

======================== பாகம் 2 =====================================================

என் பக்தன் அறிவான் அறிவான் .

நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைவதில் ஒரு ஆர்வமும், ஒரு அர்பணிப்பான  (dedicated ) முயற்சியும், அடைய வேண்டும் என்பதில் ஒரு தீராக் காதலும் வேண்டும். அப்படி இருந்தால் தான்  நினைத்ததை அடைய முடியும். ஏனோ தானோ என்று செய்து, வந்தால் வரட்டும்,  வராவிட்டால் போகுது என்று என்று இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியாது. அப்படியே அடைந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருக்காது. 

உலகில் உள்ள சாதாரண பொருள்களுக்கே அப்படி என்றால், ஒரு இறை தன்மையை அடைய வேண்டும் என்றால்  எவ்வளவு அர்பணிப்பும் (dedication ) ஒரு விருப்பும் இருக்க   வேண்டும் ?

இறை தன்மையை அடைய வேண்டும் என்றால் அதன் மேல் ஒரு விருப்பும், இடையறாத முயற்சியும் வேண்டும் அல்லவா ?

பக்தி என்றால் என்ன ? பக்தி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. காதல், அர்பணிப்பு என்ற பொருள்கள் இந்த இடத்தில் பொருந்தி வரும். 

கண்ணன் மேல் காதலும், அவனை அடைய வேண்டும் என்ற அர்பணிப்பும் இருந்தால் கண்ணனை மட்டும் அல்ல நாமும் கண்ணன் போல ஆகி விடுவோம் என்று கண்ணனே கூறுகிறான். 


 இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 


என் பக்தன் அறிவான் என்றால், ஏதோ கண்ணன் என்ற ஒரு உருவத்தின் மேல் பக்தி கொள்வது என்று அர்த்தம் அல்ல. கண்ணன் என்பது ஒரு நிலை. ஒரு படி. அந்த நிலையின் மேல் பக்தி கொண்டவன் அந்த நிலையை அடைவான் என்கிறான். 

மேலும்,

இறைதன்மையை அடைய வேறு வழி இல்லையா ? படித்து பார்த்து அதன் மூலம் அடைய  முடியாதா  ? ஞான மார்க்கம் உதவாதா ? கர்ம மார்க்கம் உதவாதா ?

பக்தியே அவனை அறியவும், அவன் நிலையை அடையவும் உதவும் என்கிறான். 

பக்தி என்றால் ஏதோ பூஜை பண்ணுவது, கோவிலுக்குப் போவது, மொட்டை அடிப்பது, படியில் உருளுவது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 

பக்தி என்பது காதல். பக்தி என்பது சுயநலம் இல்லாத நிலை. எல்லாவற்றையும் அர்பணிப்பது. அப்படி அன்போடு அர்பணிக்கும் போது மனிதன் இறை நிலை அடைகிறான். 

சித்தமும் சொல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

என்பார் மணிவாசகர். அறிவு செல்லாது. ஞானம் உதாவது. ஆனால் பக்தி என்ற வலையில் அவன் அகப்படுவான் என்கிறார். 

அறிவு, ஞானம், க்ஷேத்ரம் இவற்றை பற்றி பேச வந்த கண்ணன், கடைசியில் என் பக்தன் இதை அறிவான் என்றான். 

அறிவுக்கும் பக்தியே அடிப்படை. 

அறிவு பக்தியில் தான் போய் முடியுமோ ?

கற்றதானால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

என்பார் வள்ளுவர். 

அவனைத் தொழுவது, அவனாகவே ஆக வேண்டும் என்று. 

அறிவு பக்தியில் கொண்டு போய் விடுகிறது. 

பக்தி இறைவனை தொழ வைக்கிறது. 

அந்த பக்தி இறைவனிடம் சேர்பிக்கும் என்கிறது கீதை. 






Sunday, September 20, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான்

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் 


इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்


இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா?
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.


கீதை - 13.17 - ஞான ஒளி

கீதை - 13.17 - ஞான ஒளி 


ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே |
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||

ஜ்யோதிஷம் = ஒளி வடிவானது, அனைத்து ஒளிகளுக்கும் மூலமானது 

அபி = இருந்தும்

தத் = அது

ஜ்யோதிஸ் =  ஒளி தருகிறது

தமஸ: = இருளிலும்

பரம் = உயர்ந்த

உச்யதே = கூறப்பட்டது

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறிதல் 

ஜ்ஞாநக³ம்யம் = அறியப்படுவது

ஹ்ருதி³ = மனதில்

ஸர்வ = அனைத்திலும்

ஸ்யவிஷ்டிதம் = இருப்பது


அது ஒளி வடிவானது. அனைத்து ஒளிகளுக்கும் ஆதாரமானது. 
உயர்ந்தது. இருளையும் அறியச் செய்வது. அதுவே அறிவு, அறிதல் மற்றும் அறியப்படுவது. அனைத்து உயிர்களின் மனதிலும் இருப்பது. 

இது வரை கண்ணன் ஞானத்தையும், ஞான க்ஷேத்ரத்தையும் பற்றி கூறி வந்தான்.

அந்த ஞானம் எங்கே இருக்கிறது, அதன் பலன் என்ன, அதை எப்படி அடைவது என்று  இங்கே சொல்கிறான்.

"அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது".

அது ஒளி வடிவானது. ஒளிகளுக்கெலாம் ஆதாரமானது.

அப்படி என்றால் என்ன ? அது என்ன ஒளி ? சூரிய ஒளியா ? விளக்கின் ஒளியா ?  என்ன  ஒளி அது ?

இங்கு ஒளி என்று சொல்லப் படுவது வெளி உலகின் ஒளி அல்ல. தெளிந்த அறிவே  அல்லது ஞானமே இங்கு ஒளி என்று சொல்லப் படுகிறது.

இப்போது ஸ்லோகத்தின் அர்த்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறது.

நாம் ஒரு பொருளை பார்க்கும் போது என்ன நிகழ்கிறது.

அந்தப் பொருளின் மேல் விழும் ஒளி , பிரதிபலித்து நம் கண்களை அடைகிறது. கண் திறந்து இருந்தாலும், ஒளி வந்து நம் விழித் திரையில் விழுந்தாலும் நம் அறிவு  அது இன்னது என்று அறிந்து சொல்லாவிட்டால் நம்மால் அந்தப் பொருள்  இன்னது என்று அறிய  முடியாது.

விளக்கின் ஒளியோ அல்லது சூரியனின் ஒளியோ அது எந்த ஒளியாக இருந்தாலும்  அந்த ஒளியையும் கண்டு  சொல்லுவது நம் அறிவே. அந்த அறிவே  ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக  விளங்குவது.

அதுவே இருளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.

எந்த வெளிச்சமும் இருளை அறிந்து கொள்ள முடியாது. ஒரு மெழுகுவர்தியின் சுடரிடம் இருள் எப்படி இருக்கும் என்றால் கேட்டால் அதற்குத்  தெரியாது. இருள் என்பதை ஒளி அறியவே முடியாது.

ஆனால் நம் அறிவென்ற ஒளி இருளையும் அறியும்.

அதுவே உயர்வானது.

அந்த அறிவு, ஞானம் இல்லை என்றால் எத்தனை வெளிச்சம் வெளியில் இருந்தாலும்  நம்மால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாது.

சரி, இது என்ன பெரிய  விஷயமா . நம் அறிவு நமக்கு உலகை அறிந்து கொள்ள உதவுகிறது. இதைச் சொல்ல கண்ணனும், வியாசரும் வேண்டுமா ?

 வேண்டாம்தான்.

ஆனால், அடுத்து சொல்லப் போகும் விஷயம் மிக மிக முக்கியமானது.

அந்த  அறிவை எப்படி பெறுவது ? எதைப் படித்தால் அதைப் பெற முடியும்  ? எந்த  குரு நமக்கு அதைத் தர முடியும் ?

கண்ணன் சொல்லுகிறான் - அந்த அறிவொளியானது அனைத்து உயிர்களின் மனத்திலும்  இருக்கிறது.

ஞானம் உள்ளே இருக்கிறது.  அது வெளியில் இருந்து வருவது இல்லை.

நமக்குள் இருக்கும் அந்த ஞானத்தை நாம் அறியாமல்  இருக்கிறோம்.

கீதை , அதை நமக்கு  உணர்த்துகிறது.

நீங்கள் எங்கும் போக  வேண்டாம்.யாரையும் கேட்க வேண்டாம். எதையும் படிக்க  வேண்டாம். உங்களுக்குள் அந்த உயர்ந்த ஞானம் இருக்கிறது என்று   நம்புங்கள்.  அதை  உணருங்கள்.

"உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற" என்பார் மணிவாசகர்.

"அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே " என்று அதிசயப்படுகிறார் அபிராமி பட்டர்.

அறிவோம்

  

Saturday, September 19, 2015

கீதை - 13.16 - அது பிரிந்தும் பிரியாமலும்

கீதை - 13.16 - அது பிரிந்தும் பிரியாமலும் 



अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥

அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||


அவிபக்தம் = பிரியாத, பிளவு படாத

 ச = மேலும்

பூதேஷு = அனைத்து உயிர்களிலும்

விப⁴க்தம் = பிரிந்து

இவ = இதே மாதிரி, இது போல

ச = மேலும்

ஸ்திதம் = இருந்து

பூத = உலகை

பர்த்ரு = தாங்கி

ச = மேலும்

தத் = அது

ஜ்ஞேயம் = அறிந்து கொள்

க்ரஸிஷ்ணு  = உள்வாங்கிக் கொள்வது  , கிரகித்துக் கொள்வது 

ப்ர பவிஷ்ணு = உற்பத்தி செய்வது 

ச = மேலும்


உயிர்களில் பிரிந்தும் பிரியாமலும் இருப்பது. அதுவே பூதங்களைத் உருவாக்கிறது, தாங்குகின்றது, பின் உள்வாங்கிக் கொள்கிறது. 


நவீன அறிவியலும், கணிதமும், தர்கமும் நம் அறிவை ஒரே வழியில் செலுத்துகின்றன. முரண்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

எப்படி ஒன்று பிரிந்தும் இருக்கும், பிரியாமலும் இருக்கும்.

உயிர்களை விட்டு பிரியாமல் அவற்றின் உள்ளே இருக்கும், பிரிந்து அவற்றிற்கு வெளியேயும்  இருக்கும் ?

ஒண்ணு உள்ளே இருக்கணும், இல்லை வெளியே இருக்கணும் என்று தான் நம் மனமும்  அறிவும் எண்ணும் .

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் மின்சாரம் எங்கும் இருக்கிறது. அதுவே ஒரு  விளக்கினுள், ஒரு தொலைக்காட்சி பெட்டியுனுள், ஒரு மின் விசிறியில் செல்லும்போது  அந்த கருவியின் உள்ளே சென்று ஒரு வித செயல் பாட்டைத் தருகிறது. ஒளியாக, நிழற் படமாக, காற்றாக வெளிப் படுகிறது.

மின்சாரம் அந்த கருவிகளுக்கு வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது. உள்ளே இருக்கும் போது , எதன் உள் இருக்கிறதோ அதற்கு தகுந்த  மாதிரி செயல் படுகிறது. எப்படி ஒரே மின்சாரம் குளிரவும் வைக்கிறது, சுடவும் வைக்கிறதோ அது போல எங்கும் நிறைந்திருக்கும் அந்த சக்தி ஒவ்வொரு   உயிரிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது.

மின்சாரம் பற்றி அறியாத ஒருவன் என்ன நினைப்பான் ? அது எப்படி ஒரே மின்சாரம் இப்படி மாறுபட்ட செயல்களைச் செய்ய முடியும் ? ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத செயல்களை செய்ய முடியும் என்று நம்ப மறுப்பான். மின்சாரம் பற்றிய அறிவை அடைந்தால், அது விளங்கும்.

அதைத்தான் வியாசர் இங்கு சொல்கிறார்.

மின்சாரம் போன்ற ஒரு சக்தி இருக்கிறது. அது என்னவெல்லாம் செய்கிறது தெரியுமா ?

அனைத்து பூதங்களையும் உருவாக்கிறது.
அவற்றை காக்கிறது.
அவற்றை உள் வாங்கிக் கொள்கிறது.

அப்படி ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு அப்புறம் வருவோம்.

அபப்டி ஒரு சக்தி இருக்க முடியும் என்று தோன்றுகிறது அல்லவா ?

அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.








Wednesday, September 16, 2015

கீதை - 13.15 - அது தூரத்தில் இருக்கிறது. அருகில் இருக்கிறது. - பாகம் 5

கீதை - 13.15 -  அது தூரத்தில் இருக்கிறது. அருகில் இருக்கிறது.   - பாகம் 5


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.


அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

======================= பாகம் 3 =========================================

உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய  பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.

மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான்  பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.

ஏன் ?

நான்கு பேர்  ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.


முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது  என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.

அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.

இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.

இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.

இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து  இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.

எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.

புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?


அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.

அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?

உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.

அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.

இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.

அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.

உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.

அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.

இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?

சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.

இதைத்தான் கீதை சொல்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.

சிந்திப்போம்.

===================பாகம் 4 ==============================================

ஸூக்ஷ்மத்வாத் = அது நுண்மையானது.

நுண்மையானது என்றால் என்ன. ரொம்ப ரொம்ப சின்னது என்று அர்த்தமா ?

இல்லை.

லட்டு தின்கிறோம். லட்டு கண்ணுக்குத் தெரிகிறது. அதன் எடை தெரிகிறது. அதன் நிறம் தெரிகிறது. ஆனால் சுவை தெரியாது. அந்த இனிப்பு நுண்மையானது. அந்த இனிப்பு எங்கே இருக்கிறது ? லட்டில் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனாலும் அது தெரிவது இல்லை.

சுவிட்சை ஆன் செய்தால் வெளிச்சம் வருகிறது. வெளிச்சம் வரும் பல்பு தெரிகிறது. அதன் கட்டமைப்பு தெரிகிறது. ஆனால் , அந்த வெளிச்சத்தை உண்டாக்கும்  மின்சாரம் தெரியாது. அது நுண்மையானது. அது தான் செயல் படுத்துகிறது.  ஆனால் , அது தெரியாது.

ஒருவர் நம்மிடம் பேசுகிறார்.  அவர் பேசுவது நமக்கு கேட்கிறது. அவர் வாய் அசைவது கண்ணுக்குத் தெரிகிறது. இன்னும் உற்றுப் பார்த்தால் அவர் நாக்கு அசைவது கூடத் தெரியும். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அவர் குரல் நாங்கள் (Vocal chord ) அசைவது கூடத் தெரியலாம். அந்த குரல் நாணை அசையச் செய்வது எது ? அது தெரியாது. அது தான் சப்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால், அது தெரியாது. அது நுண்ணியமானது.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும், செயல் பாடு தெரியும். செயல் படுத்தும் அந்த சக்தி தெரியாது. அது நுண்ணியமானது.

இந்த உலகம் தெரிகிறது. அதில் உள்ள பொருள்களும், உயிர்களும் தெரிகிறது. அவற்றின் செயல் பாடு தெரிகிறது. இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு நுண்ணிய ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ?  அதை அறிய வேண்டும். அதை அறிந்தால், அனைத்தும் அறிந்த மாதிரி தான்.

மின்சாரத்தை அறிந்து கொண்டால், அது எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் அல்லவா. ஒவ்வொரு பல்பாகப் போய் சோதனை செய்ய வேண்டாம். எல்லா பல்பிலும் அது அப்படித்தான் வேலை செய்யும் என்று நாம் அறிந்து கொள்வதைப் போல.

உலகத்தின் பின்னால் உள்ள அந்த நுண்ணிய ஒன்றை புரிந்து கொண்டால் எல்லாம் அறிந்து கொண்ட மாதிரிதான்.

இன்னமும் இருக்கிறது இந்த ஸ்லோகத்தில் ...


=================== பாகம் 5 =============================================


தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

அது எப்படி தூரத்திலும் அருகிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் ?

சில பேர் மூக்குக் கண்ணாடியை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து விட்டு பேசுவார்கள். பின் சிறிது நேரம் கழித்து , கண்ணாடியை எங்கே வைத்தேன் , எங்கே வைத்தேன் என்று வீடெலாம் தேடுவார்கள். யாரவது வந்து, "என்ன தேடுகிறீர்கள் " என்று கேட்டால், "இந்த மூக்குக் கண்ணாடியை எங்கேயோ வைத்து விட்டேன்..எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை ..தேடுகிறேன்" என்பார்கள். 

"அது தான் உங்க நெத்தி மேலேயே இருக்கே " என்று சொன்னவுடன் , "அட , ஆமா இங்கே தான் இருக்கு...இதை விட்டு விட்டு என்கலாமோ தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று அசடு வழிவார்கள். 

சட்டைப் பையில் பேனாவை வைத்துக் கொண்டு, வீடெலாம் தேடுவது இல்லையா...அது போலத்தான். 

புரியாதவரை , அறியாதவரை, அது தூரத்தில்தான் இருக்கும். புரியும் போது , அறியும் போது அது அருகில் இருக்கும். அருகில் என்ன அருகில், உங்களுக்குள்ளேயே இருக்கும். எங்கும் தேட வேண்டாம். 

உள்ளம் பெரும் கோவில்,ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர். 

 
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

இந்த உடம்பாகிய கோவிலுக்குள்ளே இருப்பான் அவன்  என்கிறார்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.

எப்போதும் உள்ளேயே இருப்பவன்.

ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க  மேலும் மேலும் பொருள் தருவது கீதை.












கீதை - 13.15 - அது நுண்மையானது - பாகம் 4

கீதை - 13.15 -  அது நுண்மையானது  - பாகம் 4


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.


அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

======================= பாகம் 3 =========================================

உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய  பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.

மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான்  பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.

ஏன் ?

நான்கு பேர்  ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.


முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது  என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.

அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.

இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.

இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.

இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து  இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.

எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.

புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?


அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.

அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?

உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.

அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.

இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.

அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.

உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.

அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.

இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?

சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.

இதைத்தான் கீதை சொல்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.

சிந்திப்போம்.

===================பாகம் 4 ==============================================

ஸூக்ஷ்மத்வாத் = அது நுண்மையானது.

நுண்மையானது என்றால் என்ன. ரொம்ப ரொம்ப சின்னது என்று அர்த்தமா ?

இல்லை.

லட்டு தின்கிறோம். லட்டு கண்ணுக்குத் தெரிகிறது. அதன் எடை தெரிகிறது. அதன் நிறம் தெரிகிறது. ஆனால் சுவை தெரியாது. அந்த இனிப்பு நுண்மையானது. அந்த இனிப்பு எங்கே இருக்கிறது ? லட்டில் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனாலும் அது தெரிவது இல்லை.

சுவிட்சை ஆன் செய்தால் வெளிச்சம் வருகிறது. வெளிச்சம் வரும் பல்பு தெரிகிறது. அதன் கட்டமைப்பு தெரிகிறது. ஆனால் , அந்த வெளிச்சத்தை உண்டாக்கும்  மின்சாரம் தெரியாது. அது நுண்மையானது. அது தான் செயல் படுத்துகிறது.  ஆனால் , அது தெரியாது.

ஒருவர் நம்மிடம் பேசுகிறார்.  அவர் பேசுவது நமக்கு கேட்கிறது. அவர் வாய் அசைவது கண்ணுக்குத் தெரிகிறது. இன்னும் உற்றுப் பார்த்தால் அவர் நாக்கு அசைவது கூடத் தெரியும். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அவர் குரல் நாங்கள் (Vocal chord ) அசைவது கூடத் தெரியலாம். அந்த குரல் நாணை அசையச் செய்வது எது ? அது தெரியாது. அது தான் சப்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால், அது தெரியாது. அது நுண்ணியமானது.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும், செயல் பாடு தெரியும். செயல் படுத்தும் அந்த சக்தி தெரியாது. அது நுண்ணியமானது.

இந்த உலகம் தெரிகிறது. அதில் உள்ள பொருள்களும், உயிர்களும் தெரிகிறது. அவற்றின் செயல் பாடு தெரிகிறது. இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு நுண்ணிய ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ?  அதை அறிய வேண்டும். அதை அறிந்தால், அனைத்தும் அறிந்த மாதிரி தான்.

மின்சாரத்தை அறிந்து கொண்டால், அது எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் அல்லவா. ஒவ்வொரு பல்பாகப் போய் சோதனை செய்ய வேண்டாம். எல்லா பல்பிலும் அது அப்படித்தான் வேலை செய்யும் என்று நாம் அறிந்து கொள்வதைப் போல.

உலகத்தின் பின்னால் உள்ள அந்த நுண்ணிய ஒன்றை புரிந்து கொண்டால் எல்லாம் அறிந்து கொண்ட மாதிரிதான்.

இன்னமும் இருக்கிறது இந்த ஸ்லோகத்தில் ...



















Tuesday, September 15, 2015

கீதை - 13.15 - அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 3

கீதை - 13.15 -  அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 3


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.


அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

======================= பாகம் 3 =========================================

உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய  பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.

மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான்  பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.

ஏன் ?

நான்கு பேர்  ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.


முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது  என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.

அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.

இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.

இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.

இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து  இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.

எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.

புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?


அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.

அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?

உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.

அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.

இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.

அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.

உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.

அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.

இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?

சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.

இதைத்தான் கீதை சொல்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.

சிந்திப்போம்.









Monday, September 14, 2015

கீதை - 13.15 - அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 2

கீதை - 13.15 -  அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 2 


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.


அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.








Saturday, September 12, 2015

கீதை - 13.15 - உள்ளும் புறமும், அருகிலும், தூரத்திலும் இருப்பது

கீதை - 13.15 - உள்ளும் புறமும், அருகிலும், தூரத்திலும் இருப்பது


बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||


பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

சரிதான். மண்டை குழம்ப வேறு எங்கேயும் போக வேண்டாம். கீதையில் இரண்டு சுலோகம்   படித்தால் போதும் போல் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

பொறுமையாக, ஒவ்வொரு சொல்லாக பிரித்துப் படித்தால் பொருள் விளங்கும்.

விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது

அது எப்படி ஒன்று உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் ? சாஸ்வதமான
உண்மை உள்ளும் புறமும் இருக்கும் என்றால் புரியுமா ? புரியாது.

சரி, ஒரு எளிய உதாரணம் பார்போம்.

உங்கள் வீட்டில் தொலைக் காட்சி பெட்டி இருக்கிறது. அதில் பல நிலையங்களில் இருந்து ஒலி ஒளி அலைகள் வந்து சேர்கிறது. ஆனால் , அனைத்து நிலையத்திலும் உள்ள அலைகள் ஒரே நேரத்தில் தெரிகிறதா என்றால் இல்லை. நீங்கள் எந்த நிலையத்தை தேர்வு செய்கிறீர்களோ அந்த நிலையத்தின் அலை வரிசையில் உள்ளதை நீங்கள் காண முடியும். அனைத்து நிலையங்களின் அலைகள் எங்கும் நிறைந்து இருக்கின்றன. அவை தொலை காட்சி பெட்டிக்கு  வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது. அது உள்ளே போய் விட்டால் , பின் வெளியே எப்படி இருக்கும் ? உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும்  அதே நிலையத்தின் ஒளி  பரப்பை பார்க்கிறார். உங்கள் பெட்டிக்கு உள்ளேயும்  இருக்கிறது. உங்கள் பெட்டிக்கு வெளியேயும் இருக்கிறது. அவர் பெட்டிக்கு உள்ளேயும் இருக்கிறது.

ஒன்று உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் என்பது புரிகிறது அல்லவா ?
இது தொலை காட்சி பெட்டிக்கு மட்டும் அல்ல.

வானொலிக்கும் பொருந்தும்.

அவ்வளவு ஏன் ?

ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது அனைத்து மாணவர்களின் காதிலும் விழுகிறது. அவர்களின் உடலுக்கு உள்ளே போகிறது. மூளையை சென்று அடைகிறது. அதே சமயம்,  முன் வரிசையில் உள்ள மாணவனின் மண்டைக்குள் சென்ற ஆசிரியரின் சொல் அந்த மாணவனுக்கு வெளியே   சென்று கடைசி வரிசையில் உள்ள மாணவனையும் சென்று அடைகிறது.

உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது.

அது போல, உண்மை  / ஆத்மா / உயிர் என்று சொல்லப்படும் அது அனைத்துக்கும் உள்ளேயும் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது.

உங்களுக்கு உள்ளும் இருக்கிறது.

உங்களுக்கு வெளியேயும் இருக்கிறது.

எனக்குள்ளும் இருக்கிறது.

அதற்கு பெயர் என்னவேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

உண்மை, பிரமம் , சக்தி, உயிர் , ஆத்மா...பெயரில் என்ன இருக்கிறது. ஏதோ ஒன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.



அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது...

அது எப்படி ஒன்று அசையும் செய்யும், அசையாமலும் இருக்கும்...

சிந்திப்போம்...