Thursday, August 7, 2014

கீதை - 11.9 - விஸ்வரூபம்

கீதை - 11.9 - விஸ்வரூபம் 


संजय उवाच
एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥११- ९॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே³ஸ்²வரோ ஹரி: |
த³ர்ஸ²யாமாஸ பார்தா²ய பரமம் ரூபமைஸ்²வரம் || 11- 9||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவ = அப்படி
உக்த்வா = அப்படி சொல்லிய பின் (உனக்கு ஞானக் கண்களைத் தருகிறேன் என்று சொல்லிய பின் )

ததோ = அதன் பின்
ராஜ = இராஜனே

மஹாயோகே³ஸ்²வரோ = மகா யோகேஸ்வரனான

ஹரி: = ஹரி

த³ர்ஸ²யாமாஸ = காண்பதற்கு அருளினான், காட்டினான் 

பார்தாய = பார்த்தனுக்கு 

பரமம் ரூபமைஸ்²வரம் = தன்னுடைய பரம ஐஸ்வர்ய வடிவை

சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, அவ்வாறு சொன்ன பின் , பெரிய யோகத் தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உன்னதமான தன் கடவுள் வடிவைக் காட்டினான்.


போர்க்களத்தில் நடப்பதை கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொல்லி வந்தான்.

இப்போது, கீதை போர்களத்தை விட்டு, அஸ்தினாபுரம் அரண்மனைக்கு போகிறது.

சஞ்சயன் சொல்கிறான் , "அவ்வாறு சொன்னபின் கண்ணன் தன் தெய்வீக வடிவை  அர்ஜுனனுக்கு காட்டினான் " என்று.

அர்ஜுனனுக்குத் தெரிந்தது. சஞ்சயனுக்கு தெரிந்தது. வேறு யாருக்கும் தெரியவில்லை.

அறிவுள்ளவர்களுக்கு உண்மை புலப்படும்.

திருதராஷ்ரனிடம் தான் கண்ட விஸ்வரூபத்தை சஞ்சயன் சொல்கிறான்.

 அவனுக்கு புரியவில்லை.

பக்குவப்  படவில்லை.அவன் அறிவுக்கு அது எட்டவில்லை.

புரிந்திருந்தால், ஒரு வேலை மாபாரதப் போர் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

சஞ்சயன் என்ன கண்டான் ?


No comments:

Post a Comment