Monday, August 25, 2014

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில் காண்கிறேன்

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில்  காண்கிறேன் 


अर्जुन उवाच
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसंघान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥११- १५॥

அர்ஜுந உவாச
பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பஸ்²யாமி = நான் காண்கிறேன்

தேவாம்ஸ் = தேவர்களை 

தவ = உன்னுடைய

தேவ = தேவா !

தேஹே = தேகத்தில்

ஸர்வாம்ஸ் = அனைத்தும்

ததா = அந்த வகையில்

பூதவிஸே = அனைத்து உயிர்களின் 

ஷஸங்கா⁴ந் = கூட்டத்தை

ப்ரஹ்மா = பிரம்மா

ஈசம் = ஈசன்

கமலாஸநஸ்தம் = தாமரை மலரில் அமர்ந்து இருப்பவன்

ரிஷி = ரிஷிகள்

ச = மேலும்

ஸர்வ = அனைத்து

உரகன்  = பாம்புகள்

ச = மேலும்

தி³வ்யாந் = தெய்வீகமான


அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே ! உன் உடலில் அனைத்து தேவர்களையும், ,தாமரை மலாரில் இருக்கும் ஈசனான பிரமனையும், எல்லா ரிஷிகளையும், அனைத்து பூதங்களின் தொகுதிகளையும், தேவ சர்பங்களையும்  இங்கு காண்கிறேன் 

அது என்ன பிரம்மா, பூதங்களின் தொகுதி  சொல்லி விட்டு உடனே தேவ சர்ப்பங்கள் என்று  சொல்கிறார்.அதில் என்ன அர்த்தம் இருக்கும் ?

விசரூபம் என்பது அனைத்தையும் தன்னுள் அடக்கியது என்று பார்த்தோம்.

ஒரு கோடியில் பிரம்மா. இன்னொரு கோடியில் கீழான பாம்பு.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்வது போல.

வானும் நிலமும் சாட்சியாக என்று சொல்வது போல.

இரண்டு எதிர் எதிர் துருவங்களை சொல்லிவிட்டால் இடையில் உள்ளதை அனைத்தும்  சொன்ன  மாதிரி.

உரகன் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு - மார்பில் நகர்வது என்று  பொருள்.உர்ஸ் என்றால்  மார்பு என்று பொருள். மார்பில் நகர்வது பாம்பு.

பிரமா முதல் பாம்பு வரை அனைத்து பூதங்களின் தொகுதிகளையும் நான் காண்கிறேன்  என்றான் அர்ஜுனன்.

பிரமாவும் , பாம்பும் ஏதோ ஒரு மாபெரும் சக்தியின் இரண்டு துருவங்கள். இடைப்பட்ட  அனைத்தும் அதில் அடக்கம்.

இதில் தாத்தா, மாமா, குரு , பங்காளிப் பிள்ளைகள் , அண்ணன் , தம்பி என்பதெல்லாம்  புறத்  தோற்றங்கள்.

பாசத்தைக் காட்டி, கடமையில் இருந்து விலகப் பார்த்தான் அர்ஜுனன்.

பாசம் என்பது பிரித்துப் பார்பதால்  வருகிறது.

பகையும் அப்படியே.

என் பிள்ளை, என்  மனைவி,என் நாடு, என்று பிரிக்கும் போது பாசமும் வருகிறது, பகையும் வருகிறது.

இதைப் போக்க கண்ணன் விஸ்வரூபத்தை  காட்டினான் அல்லது உணர்த்தினான்.

வெவ்வேறு நாடு, வெவ்வேறு சமயம், வெவ்வேறு உறவுகள் என்று பிரித்துப் பார்க்காமல்  அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் சக்தியை தந்தான் அர்ஜுனனுக்கு கண்ணன்.



No comments:

Post a Comment