Sunday, July 20, 2014

கீதை - 10.40 - முடிவில்லா மகிமை

கீதை - 10.40 - முடிவில்லா மகிமை 


नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥१०- ४०॥

நாந்தோऽஸ்தி மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தப |
ஏஷ தூத்³தே³ஸ²த: ப்ரோக்தோ விபூ⁴தேர்விஸ்தரோ மயா || 10- 40||



ந அந்தோ அஸ்தி = முடிவு  இல்லை 

மம் = என்

திவ்யாநாம் = ஒளி பொருந்திய, தெய்வீகத் தன்மை உள்ள

விபூதீநாம் = பெருமைகளை

பரந்தப  = எதிரிகளை வெல்பவனே

ஏஷ = இந்த 

தூ = மேலும் , அந்த

உத்தே³ஸ²த: = தோராயமாக. ஒரு குறிப்பிட்ட அளவில்

ப்ரோக்தோ = கூறினேன்

விபூ⁴தேர் = பெருமைகளை, வலிமையை

விஸ்தரோ  = விஸ்தாரமாக, விரிவாக

மயா = என்னால்

பார்த்தா, என் பெருமைகளுக்கு, வலிமைகளுக்கு முடிவே இல்லை.
விஸ்தாரமான என் பெருமைகைளில் சிலவற்றை மாத்திரமே உனக்கு நான் சொன்னேன்.

தெரிந்த ஒன்றைச் சொல்லித்தான் தெரியாத ஒன்றை விளங்க வைக்க முடியும்.

தன்னுடைய பெருமைகளை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்த கண்ணன்,  இதுவரை  சொல்லியது எல்லாம் சில உதாரணங்கள்  தான்.என் பெருமைக்கு முடிவே இல்லை என்கிறான் கண்ணன்.

தங்கத்தை வைத்து மோதிரம்  செய்யலாம்,வளையல் செய்யலாம் , சங்கிலி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவுதான் சொன்னாலும்  தங்கத்தின் பெருமையை முழுமையாக சொல்லி முடியாது. அது  போல...54 உதாரணங்களை சொன்னான் கண்ணன்.


முடிவில், என் மகிமைகளுக்கு முடிவே இல்லை என்று சொல்லி முடிக்கிறான்.

இந்த உதாரணங்களில் இருந்து நமக்குத் தெரிவது என்ன ?



No comments:

Post a Comment