Thursday, July 10, 2014

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 2

கீதை - 10.35 - மாதங்களில் நான் மார்கழி - பாகம் 2


बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத்சாமம்
ஸாம்நாம் கா³யத்ரீ  ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
 மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்


சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ ; சந்தங்களில்  நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் இளவேனில்.

மாதங்களில் நான் மார்கழி.....

மனிதனின் குணம் மாறிக் கொண்டே இருக்கும் என்று பார்த்தோம்.

கால நிலைகள் மனிதனின் குணத்தை பெரிதும் பாதிக்கின்றன.

காலையில் இருக்கும் மன நிலை, மதியம் இருப்பது இல்லை.

மதியம் இருக்கும் மன நிலை மாலை இருப்பது இல்லை.

இப்படி கால நிலைகள் மனித மனத்தை பாதிக்கின்றன.

ஒரு நிலையில் இருந்து காலம் மற்றொன்றுக்கு மாறும் அந்த நேரங்களில் மனம்  குழப்பம் அடைகிறது. அந்த குழப்பத்தை வழிபாட்டின் மூலம் சமம் செய்ய முடியும்  என்று நம் முன்னோர்கள் கண்டார்கள்.

அதாவது இரவு முடிந்து பகல் தோன்றும் அந்த அதிகாலை, பகல் முடிந்து இரவு தோன்றும்  அந்த அந்தி மாலை ...இவை மனதில் குழப்பம் ஏற்படுத்தும் நேரங்கள்.

அந்த நேரத்தில் வழிபாடு செய்து மனதை சம நிலை படுத்த முடியும் என்று உணர்ந்து  சொன்னார்கள்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் இடம் - சந்தியா காலம்.

அந்த நேரத்தில் செய்யும் வழிபாடு, வந்தனம் - சந்தியா வந்தனம்.

அந்த சந்தி நேரங்களில் மனதை ஒருமுகப் படுத்தி, வழிபாடு செய்வது சந்தியா வந்தனம்.

அது போல....

சூரியன் நில நடுக் கோட்டுக்கு மேலே இருக்கும் காலம் உத்தராயணம். கீழே இருக்கும் காலம் தக்ஷினாயனம் என்று அழைக்கப் படும்.

உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பிப்பது தை மாதத்தில் இருந்து.

அதாவது மார்கழி மாதம் என்பது தக்ஷினாயனம் கழிந்து உத்தராயணம் ஆரம்பிப்பது.

அந்த மாதத்தில் மிகுந்த வழிபாடு செய்வார்கள்...திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை என்பதெல்லாம் மார்கழி மாதத்தில் செய்யப்படும் பாராயணங்கள்.

எனவே, மார்கழி மாதம் புண்ணிய மாதம் என்று அழைக்கப் படுகிறது.

மாதங்களில் நான் மார்கழி.



No comments:

Post a Comment