Sunday, July 27, 2014

கீதை - பதினோராவது அத்யாயம் - ஒரு முன்னோட்டம்

கீதை - பதினோராவது அத்யாயம் - ஒரு முன்னோட்டம் 


முந்தைய அத்யாயத்தில் கண்ணன் தன் பெருமைகளை, மகிமைகளை வெகு நீளமாக எடுத்துச் சொன்னான்.

அர்ஜுனனுக்கு நம்பிக்கை வர வேண்டுமே.

நீ சொல்வது எல்லாம் சரிதான்...நீ என்ன பொய்யா சொல்லப் போகிறாய்...இருந்தாலும் இதை நான் எப்படி நம்புவது...நான் பார்த்தால் அன்றி என்னால் நம்ப முடியாது என்று நாசுக்காக சொல்கிறான்.

 இந்த குழப்பம் யாருக்குத்தான் இல்லை ?

கடவுளை மிக ஆழமாக நம்புபவர்கள் கூட சில சமயம் சந்தேகம் கொள்வார்கள்....ஒரு வேளை நாம் நம்பியது எல்லாம் தவறோ என்றோ சந்தேகம் சில சமயம்  எழலாம்.

கண்ணன் எதிரில் நிற்கிறான். அவனே சொல்கிறான். இருந்தும் அர்ஜுனனால் நம்ப முடியவில்லை.

நான் என் கண்ணால் பார்த்தால் அன்றி நம்ப மாட்டேன் என்று நேரடியாகவே சொல்லி விடுகிறான்.

கண்ணுக்குப் புரிந்து விட்டது. நாம் எவ்வளவு சொன்னாலும் இவன் நம்பப் போவது இல்லை. இவனுக்கு உண்மையை  காட்டி விட வேண்டியதுதான் , அப்போதுதான் இவன் நம்புவான் என்று கண்ணன் தன் உண்மையான சொரூபத்தை  காண்பிக்கிறான்.

சாதாரண கண் கொண்டு பார்க்க முடியாது. எனவே ஞானக் கண்ணைத் தந்து தன்னுடைய விஸ்வரூபத்தை பார்க்க வைக்கிறான்.

அந்த விஸ்வ ரூப தரிசனம்தான் இந்த அத்யாயம்.

 நாளை முதல் விஸ்வ ரூப தரிசனம் காண்போம்.




1 comment: