Sunday, July 6, 2014

கீதை - 10.33 - அகரம், அழிவற்ற காலம்

கீதை - 10.33 - அகரம், அழிவற்ற காலம் 


अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥१०- ३३॥

அக்ஷராணாமகாரோऽஸ்மி த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச |
அஹமேவாக்ஷய: காலோ தா⁴தாஹம் விஸ்²வதோமுக²: || 10- 33||


அக்ஷராணாமகாரோஸ்மி = எழுத்துக்களில் நான் அகரம்
 த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச  = எழுத்து புணர்ச்சிகளில் நான் இரட்டைப் புணர்வு
அஹமேவாக்ஷய: காலோ = அழியாத காலம் நான்
தாதாஹம் விஸ்²வதோமுக = அனைத்து திசைகளையும் பார்க்கும் விராட் ஸ்வரூபன் நான்


எழுத்துகளில் நான் அகரம்; எழுத்துப்  புணர்ப்புகளில் நான் இரட்டைப் புணர்ப்பு; அழிவற்ற காலம் நான் ; அனைத்து திசைகளையும் பார்க்கும் விராட் ஸ்வரூபன் நான் 


எழுத்துக்களில் நான் அகரம்....

அகரத்திற்கு என்ன சிறப்பு ?

அகரம் என்பது இயற்கையாகவே, வேறு ஒன்றின் துணை இன்றி தானாகவே உருவாவது அகரம்.

தொல்காப்பியர் , எழுத்து அதிகாரத்தில் சொல்கிறார்...

அவற்றுள்
அ ஆ ஆயிரண் டங்காந் தியலும்.

அவற்றுள் = அந்த உயிர் எழுத்துகளில்
அ ஆ = அ மற்றும் ஆ
ஆயிரண் டங்காந் தியலும் = அந்த இரண்டும் காற்று இயலும்

காற்றின் இயல்பாய் பிறக்கும். வாயைத் திறந்தால் தானாகவே பிறக்கும். 

மற்ற எழுத்துகள் நாக்கு, பல், மேல் அன்னம், உதடு இவற்றின் துணையால் பிறக்கும். அகரத்திற்கு அப்படி மற்ற ஒன்றின் துணை இன்றி பிறக்கும். 

அது போல, இறைவன் தானாகவே , மற்ற ஒன்றின் துணை இன்றி தோன்றியவன். 

அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு. 


எழுத்துப்  புணர்ப்புகளில் நான் இரட்டைப் புணர்ப்பு

சமஸ்க்ரிதத்தில் இரட்டை புணர்வு என்பது "துவந்துவ" என்று குறிப்பிடப் படுகிறது. இரண்டு எழுத்துக்கள் இணைந்து ஒரு புதிய எழுத்தை உருவாக்குகின்றன. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் கலந்து உயிரினங்கள் பிறப்பது போல,  Objective and Subjective இரண்டும் கலந்து உலக அனுபவங்கள் பிறப்பது போல. 

அழிவற்ற காலம் நான்


முந்தைய ஸ்லோகத்தில் (30) இயக்குபவற்றில் நான் காலம் என்று கூறினான்.  அங்கே காலம் இயங்கும் பொருள்களின் அடிப்படையில் கூறப்பட்டது. பிறப்பது, வாழ்வது, மரிப்பது என்ற ஒரு எல்லைக்கு உட்பட்ட காலம் கூறப் பட்டது. 

இங்கே "அழிவற்ற காலம் நான் " என்று கூறுகிறான்.

எது ஒன்றையும் சாராத காலம். அழியாத காலம். எனவே பிறக்காத காலம். 

இரவு பகல், 
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

என்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட காலம் இல்லை. அழிவற்ற காலம். 




No comments:

Post a Comment