Thursday, July 31, 2014

கீதை - 11.3 - உன் ஈஸ்வர ரூபத்தை காண விரும்புகிறேன்

கீதை - 11.3 - உன் ஈஸ்வர ரூபத்தை காண விரும்புகிறேன் 



एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥११- ३॥

ஏவமேதத்³யதா²த்த² த்வமாத்மாநம் பரமேஸ்²வர |
த்³ரஷ்டுமிச்சா²மி தே ரூபமைஸ்²வரம் புருஷோத்தம || 11- 3||

எவம் = அப்படியே 

தத் = இருக்கட்டும், உள்ளது

யதா = அது

அத்த = கூறியது

த்வம் = நீ

ஆத்மாநம் = தன்னைப் பற்றி (Self )

பரமேஸ்²வர = பரமேஸ்வர

த்ரஷ்டும் = காணும்படி

இச்சா²மி = இச்சை கொண்டு இருக்கிறேன்

 தே  = உன்னுடைய

ரூபம் = வடிவை

ஐஸ்வரம் = ஐஸ்வர்யமான, திவ்யமான, மங்களமான

புருஷோத்தம = புருஷ + உத்தமா = மனிதர்களில் உயர்ந்தவனே


உன்னைப் பற்றி நீ சொன்னபடியே உள்ள அந்த திவ்ய ரூபத்தை நான் காண விரும்புகிறேன்.

ஏவம் எதத் = அப்படியே ஆகட்டும்.

புருஷோத்தமா - நீ சொன்ன மாதிரியே ஆகட்டும். எல்லாம் உன்னில் இருந்து வந்தது  என்கிறாய். எல்லாம் உன்னில் அடங்கும் என்கிறாய். இந்த உலகை உன்  சக்தியின் ஒரு பகுதியால் நிர்வகிக்கிறேன் என்கிறாய்.

நான் அதை காண விரும்புகிறேன்.

தியரி புரிகிறது. இருந்தாலும் சோதனைச் சாலையில் சென்று அதை ஒரு முறை  செய்து பார்த்து உறுதி செய்து  கொள்வது போல...

இது வரை கண்ணன் சொன்னது புரிந்தது இருந்தும் இது எல்லாம் சரிதானா, இல்லை கண்ணன்  தன்னை போர் புரியச் செய்ய செய்யும் தந்திரங்களா என்று தெரியவில்லை  அர்ஜுனனுக்கு.

நீ சொன்ன மாதிரி உன்னை காட்டு  என்கிறான்.

கண்ணன் சற்று முகம் சலித்திருப்பான்...என்னடா இவன் இத்தனை சொன்ன பிறகும்  நம்மை நம்ப மாட்டேன் என்கிறானே என்று.

கண்ணனின் அந்த சலிப்பை கண்டவுடன் அர்ஜுனன் கொஞ்சம் சுதாரித்துக் கொள்கிறான்....

அடுத்து அவன் தன் வசனத்தை மாற்றுகிறான்....

அது ....

No comments:

Post a Comment