Monday, July 28, 2014

கீதை - 11.1 - மயக்கம் தீர்ந்தது

கீதை - 11.1 - மயக்கம் தீர்ந்தது 



अर्जुन उवाच
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥११- १॥

மத³நுக்³ரஹாய பரமம் கு³ஹ்யமத்⁴யாத்மஸம்ஜ்ஞிதம் |
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விக³தோ மம || 11- 1||



அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

மத் அநுக்ரஹாய = என் மீது அருள் கொண்டு

பரமம் கு³ஹ்ய = பரம இரகசியமான

அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம் = ஆத்ம ஞானம் என்ற

யத் = எந்த

த்வய = உன்னால் 

உக்டம் = சொல்லப் பட்டதோ

வசஸ் = வசனகளால்

தேந = அதனால்

மோஹோ = மயக்கம்

அயம் = அந்த

விகத = அகன்று விட்டது

மம = எனக்கு

அர்ஜுனன் சொல்லுகிறான்:  என் மீது அருள் கொண்டு, ஆத்ம ஞானம் என்ற பரம இரகசியத்தை நீ எனக்கு கூறியதன் மூலம் என் மயக்கம் தெளிந்தது.


மயக்கம் அல்லது குழப்பம் தெளிந்தது என்றால் அறிவு அல்லது ஞானம் பிறந்து விட்டது என்று அல்ல அர்த்தம். குழப்பம் தீர்ந்தது. அவ்வளவுதான். அதுவே அறிவு அல்ல.

அறிவு பெறுவதில் மூன்று படிகள் உண்டு.

ஐயம் திரிபற கற்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

முதலில் ஐயம் , பின் திரிபு பின் அறிவு தெளிவு பெறும் .

அது என்ன ஐயம் , திரிபு ?

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம். பாம்போ கயிறோ என்ற ஐயம். சரியா தவறா என்ற குழப்பம். இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகம்.

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைத்துக் கொள்வது. அது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

பாம்பை கயிறாகவும், கயிரை பாம்பாகவும் மாற்றி அறிந்து கொள்வது திரிபு.

கண்ணன் இது வரை சொன்னதை வைத்து தனது ஐயம் தீர்ந்து விட்டது என்கிறான். இருந்தாலும் தான் உண்மை எது என்று தெரியவில்லை.

பாம்பு இல்லை என்று தெரிந்து போனது. ஆனால் கயிறா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை.

விஸ்வரூப தரிசனம் தொடரும்....





No comments:

Post a Comment