Sunday, November 23, 2014

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம்

கீதை - 11.22 - தொடரும் ஆச்சர்யம் 


रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥११- २२॥

ருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |
க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||


ருத்ரா = ருத்திரர்களும்
ஆதித்யா = ஆதித்தன் வழி வந்தவர்களும்
வஸவோ = வசுக்களும்
யே = அவர்களும்
ச = மேலும்

ஸாத்யா =  சாத்யர்களும்

விஸ்²வே = அனைத்து கடவுள்களும்

அஸ்விநௌ = அஸ்வினி குமாரர்களும்

மருதஸ் = காற்றின் கடவுளும்

ச = மேலும்

உஷ்மபாஸ் = அக்னி கடவ்ளும்

ச = மேலும்

கந்தர்வ = கந்தர்வர்களும்

யக்ஷாஸுர = யக்ஷர்களும் அசுரர்களும்

ஸித்த = சித்தர்களும்

ஸங்கா = கூட்டம்

வீக்ஷந்தே = பார்க்கிறார்கள்


த்வாம் = உன்னை

விஸ்மித்தாஸ் = ஆச்சர்யத்துடன்

ச = மேலும்

இவ = நிச்சயமாக

ஸர்வே = அனைத்தையும்


ருத்திரர்களும், ஆதித்யன் வழி வந்தவர்களும் , வசுக்களும், சாத்யர், விசுக்களும் , அசுவினி தேவர்களும் , காற்று மற்றும் அக்னி தேவர்களும் , கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் என்று அனைத்து கூட்டத்தாரும் உன்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் 

எல்லோருக்குமே ஆச்சரியம்.

ஏன் ஆச்சரியம் ?

புரியாதது புரியும்போது அட, இது இப்படியா இருக்கிறது என்று ஆச்சரியம் விளையும்.

அறியும் வரைதானே ஆச்சரியம் இருக்க வேண்டும். மேலே கூறியவர்கள் விஸ்வரூபத்தை  அறியாதவர்களா ? பின் ஏன் ஆச்சர்யம் ?

ஆச்சர்யம் ஏன் என்றால், அவர்களால் அதை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை .

அறிய அறிய மேலும் மேலும் புதிதாக ஏதோ தோன்றிக் கொண்டே இருப்பதால் அவர்களின் ஆச்சர்யம் தீரவில்லை.

உயிர்ப்புள்ள எதுவும் மாறிக் கொண்டே இருக்கும். உயிரில்லாதது மாறாமல் அப்படியே இருக்கும்.

உண்மையான ரோஜா மாறிக் கொண்டே இருக்கும்.

காகிதப் பூ என்றும் அப்படியே இருக்கும்.

விஸ்வரூபம் என்பது உயிருள்ளதது. நாளும் விரிந்து கொண்டே போவது.

எனவே ஆச்சர்யம் தொடர்கிறது.



No comments:

Post a Comment