Thursday, April 3, 2014

கீதை - 9.19 - மாறுவதும், மாறாததும்

கீதை - 9.19 - மாறுவதும், மாறாததும் 


तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥९- १९॥

தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்³ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச |
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்²ச ஸத³ஸச்சாஹமர்ஜுந || 9- 19||

தபாமி = வெப்பத்தை தருவது 
அஹம் = நான்
அஹம் = நான்
வர்ஷம் = மழை
நிக்³ருஹ்ணாமி  = நிறுத்தி வைக்கிறேன்
யுத்ஸ்ருஜாமி = அனுப்புகிறேன் 
ச | = மேலும்
அம்ருதம் = சாகா நிலை
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ம்ருத்யு = இறப்பு 
ச = மேலும்
ஸத் = உள்ளதும்
அஸத் = இல்லாததும்
சா = மேலும்
அஹம் = நான்
அர்ஜுனா = அர்ஜுனா



நான் வெப்பம் தருகிறேன்; மழையை நான் தடுத்து நிறுத்துகிறேன் . மழையை பெய்விக்கிறேன். நானே சாகா நிலை. நானே மரணம்.  அர்ஜுனா, உள்ளதும் இல்லாததும் நான்.

எல்லாம் ஒன்றின் வெளிப்பாடே என்று சொன்னால் நம்புவது கடினம். எப்படி எல்லாம்  ஒன்று சொல்ல முடியும் ? எல்லாம் வேறு வேறாகத் தானே இருக்கிறது ?  ஒன்று என்று சொல்லுவது, தத்துவமாக வேண்டுமானால் நன்றாக  இருக்கலாம். நடை முறைக்கு ஒத்து வராது என்றே தோன்றுகிறது.

இதை வியாசர் விளக்குகிறார்....

இந்த உலகில் அனைத்தும் தாவரங்களை சார்ந்து  இருக்கின்றன. அத்தனை உயிர்களுக்கும்  அடிப்படை உணவு. உணவு இல்லாமல் எதுவும் இல்லை.

நான் இது வரை மாமிசம் சாப்பிடாதே இல்லை. இருந்தும் என் உடலில் இவ்வளவு  மாமிசம் எங்கிருந்து வந்தது ?

நான் உண்ட உணவில் இருந்து அந்த மாமிசம் வந்தது.

இப்படி அத்தனை உயிர்களுக்கும், உடல்களுக்கும் உணவே பிரதானம்.

உணவில் இருந்துதான் அத்தனையும் வந்தது.

அந்த உணவுக்கு அடிப்படை சூரிய ஒளியும் நீரும்.

இங்குள்ள அனைத்தும் வெப்பம் மற்றும் நீரின் பல்வேறு வடிவங்கள் என்று நம்மால்  உணர முடிகிறது அல்லவா ?

கிருஷ்ணன் நானே வெப்பம் , நானே மழை என்று கூறும்போது அவன் என்ன சொல்ல வருகிறான் என்றால் எல்லாம் ஒன்று தான், வேற்றுமை பாராட்டக் கூடாது  என்ற செய்தியை.

அதை நாம்  அறிந்து கொள்ள இது ஒரு தூண்டுகோல். 


நானே இறப்பு, நானே சாகா நிலை :  இறப்பு என்பது என்ன ? மாற்றம் தான் இறப்பு.  ஒன்று மாறும் போது என்ன நிகழ்கிறது. பழையது இறந்து புதியது பிறக்கிறது.  ஆனால், இந்த மாற்றம் நிகழும் என்பதில் மாற்றம் இல்லை. இந்த உலகம்  மாறிக் கொண்டே இருக்கிறது. அதாவது இது பிறந்து பிறந்து இறக்கிறது. என்னதான்  மாறினாலும்,அதன் அடிப்படை மாறாமல் இருக்கிறது. இன்று இருப்பது , நாளை இல்லாமல் போகும். இன்றைய கோபமும் காதலும் நாளை இல்லாமல் போகும். பாசம் மாறும். வெறுப்பு மாறும். மாறாதது எதுவும் இல்லை.



உள்ளதும் இல்லாததும்:  பொருள்களும், அவற்றைப் பற்றிய நம் எண்ணங்களும் சேர்ந்ததுதான் உலகம்.  Objective  and Subjective என்று சொல்லல்லாம்.

Objective  என்பது உள்ளது.

Subjective  என்பது வெளியே இல்லாத ஒன்று. நம்  எண்ணங்கள், நம் கற்பனைகள்.


மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய சுலோகம்.

 சிந்திப்போம்.


No comments:

Post a Comment