Monday, March 31, 2014

கீதை - 9.17 - அன்பு, கருணை, அறிவு இவை நான் - பாகம் 2

கீதை - 9.17 - அன்பு, கருணை, அறிவு இவை நான் - பாகம் 2

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥

பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||

பிதா = தந்தை
அஹம் = நான்
அஸ்ய = இந்த
ஜக³தோ = உலகின்
மாதா = தாய்
தா⁴தா = தாங்குபவன்
பிதாமஹ:  = பாட்டன்
வேத்³யம் = அறியபடுவன
பவித்ர = தூய்மை படுத்துவது
ஒம்கார = ஓம் காரம்
ருக் = ரிக்
ஸாம = சாம
யஜுர் = யஜுர்
எவ = நிச்சயமாக
ச = மேலும்


இந்த உலகத்தின் தாய் நான், தந்தை நான்,  எல்லாவற்றையும் தாங்குபவன் நான், இதன் முன்னோன் நான் ; இதில் உள்ள அறியப்படும் பொருள்கள் எல்லாம் நான்,  இவற்றை தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்;ஸாம; யஜுர் வேதங்கள்


நான் தாய், தந்தை, பாட்டன், எல்லாவற்றையும் தாங்குபவன் :  இந்த உலகம் எல்லாம்  ஒன்றானாது, பெயர்களும், வடிவங்களும் மாறுமே தவிர அடிப்படையில்  இந்த உலகம் ஒன்று தான் என்று முன்பு பார்த்தோம்.

ஒன்று தான் என்றால் அந்த ஒன்று எது என்ற கேள்வி வரும். அந்த ஒன்று ஒரு பொருளா ? ஆளா ? அறிவா ? சக்தியா ? எது அந்த ஒன்று என்ற கேள்விக்கு விடை  தந்தாக  வேண்டும்.

இங்கே சொல்கிறான். 


அந்த ஒன்றின் குணங்கள் என்ன ? 

அன்பு முதல் குணம்,  அனைத்தையும் கடந்து நிற்பது அன்புதான்.  

தாய், தந்தை, அவர்களின் தாய் தந்தை, அதாவது பாட்டன் என்று எல்லோரும் நான்  என்பதன் அர்த்தம் அளவு கடந்த அன்பு நான் என்பது. ஒரு குழந்தையின் மேல்  தாயும் தந்தையும் விட வேறு யார் அதிகம் அன்பு செலுத்தி விட முடியும் ? 

அன்புதான் அனைத்தையும் தாண்டி நிற்பது. 

தாய் , தந்தை, பாட்டன் / முன்னோன் என வழி வழியாக வரும் அன்பு எனும் ஆறு. 

 அனைத்தையும் தாங்குபவன்: ஒரு தாய், தந்தை தங்கள் குழந்தையிடம் அன்பு காட்டலாம்.  அது ஒரு விதத்தில் சுயநலம். இன்னொரு பிள்ளையின் மேல் அன்பு காட்டுவார்களா ?   எல்லோர் மேலும் அன்பு செலுத்த மனதில்  கருணை வேண்டும். எனவே, நான் அனைத்தையும் தாங்குபவன் என்றான். எல்லோரையும் காக்கும்  குணம் - கருணை.

இந்த அன்பும் கருணையும் எதையும் தூய்மை  படுத்தும்.பாவங்களை    மன்னிக்கும். துன்பங்களைத் துடைக்கும். எனவே, தூய்மை படுத்துபவன்  என்ற மூன்றாவது  குணத்தை சொன்னான். 

வெறும் அன்பு மட்டும் இருந்தால் போதுமா ? 

அன்போடு அறிவும் சேர வேண்டும். 

எனவே , அடுத்த குணமாக நானே நான்கு மறைகளும் என்றான். மறைகளில்  கண்ட  உண்மை மூன்றாவது குணம்.

அன்பு - கருணை - அறிவு. 

இந்த மூன்றும் எங்கிருந்து உதிக்கிறது ? இவை நமக்குள் இருந்து தோன்றுகின்றன. எங்கிருந்து இவை  தோன்றுகிறதோ அதுவே நான்.

எங்கிருந்து தோன்றுகிறது என்று சிந்திப்போம்.


1 comment:

  1. அன்பு - கருணை - அறிவு. If you have all three you are one in million....Nr

    ReplyDelete