Saturday, March 22, 2014

கீதை - 9.11 - நானே அனைத்திற்கும் உயர் நிலைத் தலைவன்

கீதை - 9.11 - நானே அனைத்திற்கும் உயர் நிலைத் தலைவன் 


अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥९- ११॥

அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||

அவஜாநந்தி = அறியாமல்
மாம்  = என்னை
மூடா⁴ = மூடர்கள்
மாநுஷீம்= மனித வடிவில் உள்ள
தநும் = வடிவம் 
ஆஸ்²ரிதம் = நினைத்து
பரம் = மேலான
பா⁴வ = இயற்கை
அஜாநந்தோ = அறியாமல்
மம = என்
பூ⁴தமஹேஸ்²வரம் = அனைத்தின் தலைவன்

மனித சரீரத்தில் இருப்பதால் மூடர்கள் என்னை உதாசீனம் செய்கிறார்கள். அனைத்து உயிர்களுக்கும் நானே உயர் நிலையில் உள்ள தலைவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் 



நாம் என்பது இந்த சரீரம் மட்டும் தானா ?  உடல் தான் நாம் என்றால் உடல் தான் மற்றவர்களும் உடல் மட்டும் தான்.

சரி, நான் என்பது உடல் மட்டும் தான் என்று வைத்துக் கொள்வோம்....எந்த உடல் நான் ?

சிறு வயதில் ஒரு அடி உயரம் இருந்த உடலா, பின் வளர்ந்து இளைஞனாக இருந்த உடலா, பின் வயதான பின் , முடி நரைத்து, பல் விழுந்த வயோதிக உடலா ?

எது நான் ?

எது நீங்கள் ?

உடலைத் தாண்டி "நான்" "நீங்கள்" என்பதில் ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா ?

நம் வாழ்க்கை உடல் சார்ந்ததாகவே அமைந்து இருக்கிறது.

எதிரில் இருக்கும் தாத்தா, குரு, உறவினர்கள் இவர்களை எப்படி கொல்வேன் என்று தயங்குகிறான்  அர்ஜுனன்.

இந்த விருப்பு, வெறுப்பு, பாசம், நேசம், அன்பு, கோபம் எல்லாம் உடல் சார்ததாகவே  இருக்கிறது.

நம் கடமையை செய்யத் தடையாக இருப்பது நாம் உடலோடு நின்று போவதால்.

"மனித சரீரத்தில் இருக்கும் என்னை மூடர்கள் உதாசீனம் செய்கிறார்கள்"

இப்படியும் யோசிக்கலாம்....

"மனித சரீரத்தில் இருக்கும் என்னை மூடர்கள் போற்றுகிறார்கள் அல்லது வணங்குகிறார்கள் "

மனித சரீரம் என்பது முடிவான ஒன்று அல்ல. அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது.

"அனைத்து உயிர்களுக்கும் நானே உயர் நிலையில் உள்ள தலைவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்"

இத முந்தைய ஸ்லோகத்தில் விரிவாக பார்த்தோம்.

பொருள்கள் (நகர்வன, நகராமல் இருப்பன) உருவாவதும், இயங்குவதும் இயற்கை மற்றும்  என் மேற்பார்வையில் என்று பார்த்தோம்.

ஒரு மகள் பிறக்கிறாள் என்றால் கூடவே தாயும் பிறக்கிறாள். மகள் இல்லாமல் தாய்  ஏது ? எப்படி ஒரு தாய் மகளை உருவாக்கினாளோ அதே போல் ஒரு மகளும் தாயை    உருவாகக் காரணமாய் இருக்கிறாள். 

இந்த உலகம் உருவாக இரண்டு காரணங்கள் வேண்டும்.

ஒன்று இயற்கை. 

மற்றொன்று தனி மனித அனுபவம். 

இந்த இரண்டும் சேர்ந்த கலவை தான் உலகம். 

இதில் ஒன்று இல்லாவிட்டாலும் இந்த உலகம் இல்லை. 

இதில், இயற்கை மட்டும் தான் (மனித சரீரம்) உலகம் என்று மூடர்கள் நினைக்கிறார்கள். 

பொருள்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. 

பொருள் முதல் வாதம் என்று சொல்லுவார்கள். 

Dialectical Materialism ...பொருள்தான் எல்லாம், பொருள்களைத் தாண்டி ஒன்றும் இல்லை  என்று மூடர்கள் கூறுவார்கள் என்கிறார்.

ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், இன்றைய நவீன அறிவியல் பார்பவரைப்  பொறுத்து உலகம் மாறுகிறது என்கிறது. 

Relativity என்பதன் அர்த்தம் அதுதான்.  உண்மை என்று எதுவும் தனியாக இல்லை. 

பார்ப்பவரை பொறுத்து உலகம் மாறுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

வியாசர் quantum physics ஐ கண்டு பிடித்தார் என்று சொல்லவில்லை. 

Subjective Objectivism பற்றிய சிந்தனைகள் இருந்திருக்கிறது. 

சிந்திப்போம் 




No comments:

Post a Comment