Monday, March 31, 2014

கீதை - 9.17 - தாய், தந்தை, பாட்டன், வேதங்கள் எல்லாம் நான் - பாகம் 1

கீதை - 9.17 - தாய், தந்தை, பாட்டன், வேதங்கள் எல்லாம் நான் - பாகம் 1

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥

பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||

பிதா = தந்தை
அஹம் = நான்
அஸ்ய = இந்த
ஜக³தோ = உலகின்
மாதா = தாய்
தா⁴தா = தாங்குபவன்
பிதாமஹ:  = பாட்டன் 
வேத்³யம் = அறியபடுவன
பவித்ர = தூய்மை படுத்துவது 
ஒம்கார = ஓம் காரம்
ருக் = ரிக்
ஸாம = சாம
யஜுர் = யஜுர்
எவ = நிச்சயமாக
ச = மேலும்


இந்த உலகத்தின் தாய் நான், தந்தை நான்,  எல்லாவற்றையும் தாங்குபவன் நான், இதன் முன்னோன் நான் ; இதில் உள்ள அறியப்படும் பொருள்கள் எல்லாம் நான்,  இவற்றை தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்;ஸாம; யஜுர் வேதங்கள்



No comments:

Post a Comment