Saturday, March 15, 2014

கீதை 9.2 - இராஜ வித்தை , இராஜ இரகசியம்

கீதை 9.2  - இராஜ வித்தை , இராஜ இரகசியம் 


ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் | 
ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம்

ராஜ வித்³யா = உயர்ந்த வித்தை
ராஜ கு³ஹ்யம் = உயர்ந்த இரகசியம்
பவித்ரம் = புனிதமான, தூய்மையான 
இதம் = இது 
உத்தமம் = கடந்த 
ப்ரத்யக்ஷா = நேரடியான அனுபவம் மூலம்
அவக³மம் =  அறிந்து கொள்ள முடியும்
த⁴ர்ம்யம் = தர்மம்
ஸுஸுக²ம் = மிக மிக மகிழ்ச்சியான
கர்தும் = செய்வதன் மூலம் 
அவ்யயம் = நிலைத்து நிற்கும்

இராஜ வித்யா, இராஜ குஹயம் = இராஜ வித்தை, இராஜ இரகசியம்.

அது என்ன "இராஜ". எல்லாவற்றிலும் உயர்ந்த வித்தை, உயர்ந்த இரகசியம்.

சமய மற்றும் இறை தத்துவங்கள் பொதுவாகவே கேட்க நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்துவராது. படிக்கலாம், கேட்கலாம், பேசலாம்....கடை பிடிப்பது மிக மிக கடினம்.

"தர்மம்" : இந்த உயர்ந்த வித்தை , இரகசியம் மிக மிக இயற்கையானது. தர்மம் என்றால்  இயற்கை. இயல்பு.  இயற்கைக்கு எதிரானது அதர்மம்.


 இரண்டாவது,  சமய கோட்பாடுகள், சமய நெறி முறைகள், இறை தத்துவங்கள்  அனுபவத்தில் அறிய முடியாத ஒன்று. சிந்திக்க முடியும், ஆனால்  அதை நம் அனுபவத்தில் அறிய முடியுமா ?

முடியும் என்கிறது கீதை.

அனுபவத்தில் அறிய முடியும் என்றால் செய்து பார்க்க முடியும். சரிதானா என்று  சோதித்து அறிய முடியும்.

இருந்து விட்டு போகட்டும், அது இயற்கையாகவே இருக்கட்டும், எளிமையானதாகவே இருந்து விட்டு  போகும், அதைப் பற்றி நமக்கு என்ன என்ற கேள்வி எழும்.

"இது மிக மிக மகிழ்ச்சி தரும்"  என்கிறார்.

மகிழ்ச்சி மட்டும் அல்ல, நிரந்தரமான மகிழ்ச்சி தரும் வித்தை இது.



இயற்கையானது
அனுபவத்தில் அறிந்து கொள்ள கூடியது
நிரந்தர மிகழ்ச்சி தரக் கூடியது

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment