Sunday, June 1, 2014

கீதை - 10.19 - முடிவில்லாத பெருமை

கீதை - 10.19 - முடிவில்லாத பெருமை 


श्रीभगवानुवाच
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥१०- १९॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
ஹந்த தே கத²யிஷ்யாமி தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
ப்ராதா⁴ந்யத: குருஸ்²ரேஷ்ட² நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10- 19||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

ஹந்த = இப்போது

தே = உனக்கு

கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்

தி³வ்யா = பூரணமான

ஹ்யாத்மவிபூ⁴தய: | = ஹத் + ஆத்ம + விபூதாய = என் பெருமைகளை

ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவைகளை

குருஸ்²ரேஷ்ட = குருகுலத்தில் சிறந்தவனே

நாஸ்த்யந்தோ = நாஸ்தி + அந்தோ = அந்தம் இல்லாத

விஸ்தரஸ்ய மே = மிக விரிவான

குருகுலத்தில் சிறந்தவனே, என் அளவற்ற பெருமைகளில் பிரதானமானவற்றை  உனக்குச் சொல்லுகிறேன். 

அளவற்ற ஒன்றை அளவான ஒன்றால் எப்படி அளப்பது ? இயற்கை, இறைவன், அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மனிதனின் அறிவுக்குள் அடங்காதது அது.

அறிவுக்கு, மனித ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. வரம்பற்ற ஒன்றை எப்படி மனித மனம்  அறிய முடியும் ?

கண்ணன் ஆரம்பிக்கும் போதே அதை சொல்லி வைக்கிறான்.

கண்ணன் என்ன சொல்கிறான் என்று மேலும் பார்ப்போம்.


1 comment:

  1. II need to realise this

    Our knowledge level is very limited

    அறிவுக்கு, மனித ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. வரம்பற்ற ஒன்றை எப்படி மனித மனம் அறிய முடியும் ?

    ReplyDelete