Friday, June 13, 2014

கீதை - 10.25 - வாக்கியங்களில் ஓம்

கீதை - 10.25 - வாக்கியங்களில் ஓம் - பகுதி 1


महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॥१०- २५॥

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ரஹம் கி³ராமஸ்ம்யேகமக்ஷரம் |
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா²வராணாம் ஹிமாலய: || 10- 25||

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ அஹம் = மகரிஷிகளில் நான் பிருகுவாக இருக்கிறேன்
கி³ராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி = வாக்குகளில் நான் ஓரெழுத்தாக இருக்கிறேன்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி = யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாக இருக்கிறேன்
ஸ்தா²வராணாம் ஹிமாலய: = மலைகளில் நான் இமாலயமாக இருக்கிறேன்

மகரிஷிகளில் நான் பிருகுவாகவும் ; 
வாக்குகளில் நான் ‘ஓரெழுத்தாகவும்;
யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாகவும் 
ஸ்தாவரங்களில் நான் இமாலயமாகவும் இருக்கிறேன் 

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.

ஒவ்வொரு செயலுக்கும், வினைக்கும், ஒரு பெயர் வைத்து இருக்கிறோம்.

ஒரு பொருளின் எடை, நிறம்,   அதன் செயல்பாடுகள் என்று எத்தனையோ இருக்கிறது. அத்தனையும் அந்த பொருளின் பெயரில் அடங்கி விடுகிறது.

உதாரணமாக டிவி என்று சொன்னால் அதன் வடிவம், அதன் பயன், அதன் எடை, விலை, யார் யாரெல்லாம் அதை உற்பத்தி செய்கிறார்கள், அது எப்படி வேலை  செய்கிறது என்று எல்லாம் நமக்கு விளங்கி விடுகிறது.

இறைவன், படைப்பு, காத்தல், பிறப்பு, வீடு பேறு என்று பலவற்றை உள்ளடக்கியது ஒரு சொல். அந்த ஒரு சொல் எது என்று இந்த சுலோகம் சொல்லவில்லை. அந்த ஒரு சொல் "ஓம்" என்று சொல்கிறார்கள், உரை எழுதுபவர்கள்.

எல்லா வாக்கியங்களிலும் மிகச் சிறப்பனாது "ஓம்" என்ற அந்த ஒற்றைச் சொல். அது அனைத்தையும் விளக்குகிறது.

எப்படி டிவி என்ற சொல் டிவி பற்றிய அனைத்தையும் விளக்குகிறதோ அது போல் ஓம் என்ற சொல் அனைத்தையும் விளக்கும்.

எத்தனையோ வழிகளில் அதை விளக்கினாலும், மிக சிறப்பான விளக்கம் ஓம் என்ற அந்த ஒற்றைச் சொல்.

ஓம் என்ற அந்த ஒற்றை சொல்லின் அர்த்தம் என்ன, அது எதைக் குறிக்கிறது, எதை விளக்குகிறது ?




1 comment:

  1. Through Great Sage Vysa, Krishna says I'm the omnipotent

    ReplyDelete