Monday, June 2, 2014

கீதை - 10.20 - உயிர்களின் தொடக்கம், நடு மற்றும் இறுதி நானே

கீதை - 10.20 - உயிர்களின் தொடக்கம், நடு மற்றும் இறுதி நானே 


अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥१०- २०॥

அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச || 10- 20||

அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்

கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)

ஸர்வ = அனைத்து

பூ⁴தாஸ²= பூதங்களின்

யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே

அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்

ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )

ச = மேலும்

பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி

ஏவ ச = நானே

அர்ஜுனா, உயிர்களின் உள்ளே இருப்பவன்  நான்.அவற்றின் தொடக்கம், நடு மற்றும் இறுதியும்  நானே. 

மேலோட்டமாக பார்த்தால் கண்ணன் அனைத்து உயிர்களின் தொடக்கம், நடு மற்றும்  இறுதி என்று சொல்லிவிட்டு மேலே போய் விடலாம்.

ஆத்மா என்ற சொல்லுக்கு நம் எண்ணங்கள் என்று வைத்து பொருள் சொல்லிப்  பார்ப்போம்.

நம் எண்ணங்கள் நம்மில் எழுகின்றன, நம்மில் நிலைக்கின்றன, பின் சிறிது காலம்  சென்ற பின் மறைந்து வேறு ஒரு எண்ணம்  தோன்றுகிறது.

இந்த எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன ?

நமக்குள்ளே இருந்து தோன்றுகிறது. அவற்றின் தொடக்கம், நடு மற்றும் இறுதி  நமக்குள்ளே  இருக்கிறது.நம்மில் இருந்து  தோன்றி,நம்மில்  நிலைத்து,பின் நமக்குள்  மறைந்து போகின்றன.

எண்ணங்கள் எப்படி எழுகின்றன, ஏன் எழுகின்றன ? பின் எப்படி வளர்கின்றன,  பின் எப்படி மறைகின்றன ?

மனிதன் எண்ணங்களால், உந்தப் பட்டு வாழ்கிறான்.

ஒரு சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல.

எண்ணங்கள் அவனை வழி நடத்துகின்றன.

வீடு வாங்கினால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் எழுந்தவுடன் அது பற்றிய  செயல்  பிறக்கிறது.

காதலிப்பது, திருமணம் செய்து  கொள்வது,வேலை, பிரயாணம், பொழுது போக்கு, நட்பு, பகை எல்லாம் எண்ணங்களில் இருந்து எழுவன.

எண்ணங்களை புரிந்து கொண்டால் வாழ்கையை புரிந்து கொள்ளலாம்.

எண்ணங்களை மாற்றினால் வாழ்கையை மாற்றலாம்.

 வெற்றியும்,தோல்வியும்,  இன்பமும்,துன்பமும் நம் மனதைப் பொறுத்த  விஷயங்கள்.

கண்ணன் எண்ணங்களின் அதிபதியாக இருக்கிறான்.

நாம் எண்ணங்களின் அடிமைகளாக இருக்கிறோம்.

நீங்களும் உங்கள் எண்ணங்களின் அதிபதியாக மாறுங்கள். எண்ணங்களை மாற்றுங்கள். வாழ்க்கை மாறும்.

நீங்கள் விரும்பும் வாழ்கை உங்கள் கையில்.


1 comment:

  1. "There is no use removing doubts. If we clear one doubt, another arises, and there will be no end of doubts. All doubts will cease only when the doubter and his source have been found. Seek for the source of the doubter, and you find he is really non existent. Doubter ceasing, doubts will cease."

    ReplyDelete