Wednesday, June 18, 2014

கீதை - 10.27 - குதிரை,யானை, மனிதர்

கீதை - 10.27 -  குதிரை,யானை, மனிதர் 


उच्चैःश्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ।
ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् ॥१०- २७॥

உச்சை:ஸ்²ரவஸமஸ்²வாநாம் வித்³தி⁴ மாமம்ருதோத்³ப⁴வம் |
ஐராவதம் க³ஜேந்த்³ராணாம் நராணாம் ச நராதி⁴பம் || 10- 27||


உச்சை:ஸ்²ரவஸம் = உச்சை சிரவம் 

அஸ்²வாநாம் = குதிரைகளில்

வித்தி = உணர் , அறிந்து கொள்

மாம் = நான்

அம்ருதோத்³ப⁴வம் = அமிர்தத்தில் தோன்றிய
|
ஐராவதம் = ஐராவதம்

க³ஜேந்த்³ராணாம் = யானைகளில்

நராணாம் = மனிதர்களில்

ச நராதி⁴பம் = நான் அரசன்

குதிரைகளில் நான் அமிர்தத்தில் இருந்து தோன்றிய உச்சை  சிரவம் என்ற குதிரை . யானைகளில் நான் ஐராவதம். மனிதர்களில் நான் அரசன்.

பாற்கடலை  கடைந்த போது பதிமூன்று பொருட்கள் வந்தன. அதில் உச்சை சிரவம் என்ற  பறக்கும் குதிரையும், ஐராவதம் என்ற வெள்ளை யானையும் உண்டு.  இந்த இரண்டையும் இந்திரனுக்கு தந்து விட்டார்கள்.

அது என்ன பாற்கடலை கடைவது ?

வாழ்க்கைதான் பாற்கடல்.  அமிர்தம் வேண்டி கடைகிறோம் . வேறு என்னனமோ  வருகிறது. வந்ததை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து விடலாம். வந்தது எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் - பறக்கும் குதிரை, வெள்ளை யானை   என்று - குறிக்கோளை அடையும் வரை நிறுத்தக் கூடாது. நடுவில் கிடைத்ததை இந்திரனிடம் கொடுத்து விட்டு அமிர்தம் கடையத் தொடங்கினார்கள். 

நாம் அமிர்தம் வேண்டி கடைவோம், ஆனால் கிடைப்பதோ ஆலகால விஷம். எவ்வளவு  பெரிய  நன்மை வேண்டுகிறோமோ , அதன் பக்க விளைவுகளும் அதே அளவு இருக்கும்.

இன்பம் தேடித்தான் போகிறோம். துன்பம் எதிரில் வந்து நிற்கிறது.

பெரிய இன்பம் வேண்டினால், பெரிய துன்பமும் வரத்தான் செய்யும்.

வாழ்வின் குறிக்கோளை நோக்கிப் பயணப் பட வேண்டும். நடுவில் சில சில்லறை  விஷயங்கள் வரும் - நல்லதும் வரும், கெட்டதும் வரும். தயங்கி நின்று விடக் கூடாது.

ஒரு அரசன் எப்படி நாட்டை ஆள்வானோ, அது போல புலன்களை அடக்கி ஆள வேண்டும். ஆசை என்ற எதிரிகள் மனம் என்ற கோட்டைக்குள் நுழைந்து விடாமல்  காக்க வேண்டும்.

யானை, குதிரை, அரசன்  என்பதெல்லாம் ஒரு குறியீடுகள்.

அவை என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

சிந்திக்க சிந்திக்க பொருள் தருவது கீதை.


No comments:

Post a Comment