Friday, June 20, 2014

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன்

கீதை - 10.29 - அநந்தன், வருணன், அரியமான், யமன் 


अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् ।
पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् ॥१०- २९॥

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||


அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம்  = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்

நாகர்களில் நான் அனந்தனாகவும், நீர் வாழ்வோரில் வருணனாகவும், பித்ருகளில்  அரியமானாகவும், அடக்கி ஆள்வோரில் யமனாகவும் இருக்கிறேன். 

நாகம் என்பது பல தலைகளை உடையது. பல தலை நாகம் உண்டா என்றால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு தலையும் ஒரு குணத்தை குறிப்பது. ஆசை, கோபம், காமம், வெறுப்பு, பொறாமை, என்று நமக்கு ஆயிரம் தலைகள். எல்லாம் தலையில் இருந்துதானே வருகிறது. ஒரு நாள் அன்பு, மறு நாள் கோபம், இன்னொரு நாள் பொறாமை, மற்றும் ஒரு நாள் காமம் என்று நமக்குத்தான் எத்தனை தலைகள்.

இவற்றை எல்லாம் அடக்கி ஆள்பவன் இறை தன்மை அடைகிறான்.

காளிங்க நர்த்தனம்.

ஆதிசேஷ சயனம்....எல்லாம்  புலன் வழி பிறக்கும் குணங்களை அடக்கி ஆண்டதின்  குறியீடு.

ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷனை  படுக்கையாக போட்டு, அதன் மேல்   நிம்மதியாக உறங்குவது என்றால் நடக்குமா ?

காமம் தலைக்கு ஏறினால் தூக்கம் வருமா ? பொறாமை நெஞ்சில் குடி கொண்டால் தூக்கம்   வருமா ?

அத்தனையையும் அடக்கி படுக்கையாக போட்டு ஒருவன் நிம்மதியாக தூங்குகிறான்  என்றால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்.

அவன் நாகமாகவும் இருக்கிறான், நாகத்தை அடக்கியவனாகவும் இருக்கிறான்.

ஆசையும் இருக்க வேண்டும். அது கட்டுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தொடரும்

1 comment:

  1. This is want is called contended mind

    ஆசையும் இருக்க வேண்டும். அது கட்டுக்குள்ளும் இருக்க வேண்டும்.

    ReplyDelete