Thursday, June 19, 2014

கீதை - 10.28 - நான் மன்மதன்

கீதை - 10.28 - நான் மன்மதன் 



आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् ।
प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः ॥१०- २८॥

ஆயுதா⁴நாமஹம் வஜ்ரம் தே⁴நூநாமஸ்மி காமது⁴க் |
ப்ரஜநஸ்²சாஸ்மி கந்த³ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 10- 28||

ஆயுதா⁴நாம் = ஆயுதங்களில்

அஹம் வஜ்ரம் = நான் வஜ்ராயுதம்

தேநூநாம் = பசுக்களில் 

காமது⁴க் அஸ்மி = நான் காமதேனு

ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிபவர்களில் நான் மன்மதன்

ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும், பாம்புகளில் நான் வாசுகி


ஆயுதங்களில் வஜ்ராமாகவும், பசுக்களில் காமதேனுவாகவும், பிறப்பிபவர்களில் மன்மதனாகவும், பாம்புகளில் வாசுகியாகவும் இருக்கிறேன். 


மதம் , மனிதனின் காம ஆசைகளுக்கு எதிரானதா ? காமம் கூடாது என்று சொல்கிறதா ?

கீதை அப்படி சொல்லவில்லை.

இந்த உலகம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால் பிறப்பு நிகழ வேண்டும். பிறப்பு  நிகழ வேண்டும் என்றால் ஆசை வேண்டும். ஈர்ப்பு வேண்டும்.

கண்ணன் சொல்கிறான், இந்த பிறப்புகளுக்கு பல விஷயங்கள் வேண்டும்....அவற்றில் நான் மன்மதனாக  இருக்கிறேன்  என்கிறான்.ஆசையைத்  தருவதே அவன் என்று சொல்லும் போது அந்த ஆசை  எப்படி தவறாக  முடியும்.

இந்து மதம் இல்லறத்தை போற்றுகிறது.


பாம்புகளில் நான் வாசுகியாக இருக்கிறேன்.

வாசுகி என்ற பாம்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய கயிறாக இருந்து  உதவியது.

வாழ்கை என்ற பாற்கடலை கடைந்து உண்மை என்ற அமிர்தத்தை அடைய நான்  உறுதுணையாக இருப்பேன் என்கிறான் கண்ணன்.

வாசுகி மிகப் பெரிய பாம்பு. மேரு மலையை சில சுற்றுகள் கயிறு போல சுற்றி அதை வைத்து கடைந்தார்கள்.

அதே வாசுகி என்ற பாம்பு சிவனின் கை விரல் மோதிரம் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி முடியும் ?

உண்மை எல்லாவற்றையும் விட பெரியது.

உண்மை எல்லாவற்றையும் விட நுணுக்கமானது.

அந்த உண்மை வாழ்வில் சாகா நிலை அடைய அமிர்தத்தை அடைய உதவும்.

உறவு கோல் நாட்டு உணர்வு கயிற்றினால் முருக வாங்கிக் கடைய முன் நிற்குமே என்றார் அப்பர்.


 இறை அருளால் அமிர்தத்தை கடைந்து எடுங்கள்.

அந்த பாலில் இருந்து வந்த வெண்ணை உண்ட கண்ணன், பாற்கடல் கடைந்த அமிர்தத்தை  அடைய அருள்  புரியட்டும்.

   

1 comment:

  1. Relating every thing to common man's plight is too good

    ReplyDelete