Tuesday, May 6, 2014

கீதை - 10.9 - மகிழ்ச்சிக்கும் இன்பத்திற்கும் வழி

கீதை - 10.9 - மகிழ்ச்சிக்கும் இன்பத்திற்கும் வழி 


मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥१०- ९॥

மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த: பரஸ்பரம் |
கத²யந்தஸ்²ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச || 10- 9||

மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி

மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து 
 பரஸ்பரம்  = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்


எப்போதும் சித்தத்தையும் , பிராணனையும் என்பால் வைத்து, சொன்னவற்றை அறிந்து, ஒருவர்க்கொருவர் பேசிக்கொண்டு,  இருப்பவர்கள் மகிழ்ச்சியும் இன்பமும் அடைகிறார்கள் 

நமக்கு நல்லது கெட்டது தெரியாமல் இல்லை. சமயத்தில் மறந்து விடுவோம். அதுதான் பிரச்சனை. இனிப்பு சாப்பிட்டால் கெடுதல் என்று தெரியும். இருந்தும் நம் முன் தட்டில் ஒரு லட்டை கொண்டு வந்து வைத்தால் அது மறந்து போகிறது.

கோபமும், காமமும், உணர்ச்சிகளும் அறிவை மயங்க  வைக்கின்றன.

கீதை வாசிக்கும் போது சில விஷயங்கள் மனதில் படுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்தில்  எல்லாம் மறந்து விட்டு வேறு பலவற்றை செய்யத் தொடங்குகிறோம்.

 எனவே,"எப்போதும் சித்தத்தையும் பிராணனையும் என் பால் வைத்து".

பிராணன் என்பதற்கு உயிர் மூச்சு அல்லது உயிர் என்று பொருள் கொள்வதை விட வாழ்க்கை, சிந்தனை, அறிவு, மனம் என்று கொள்வது சரியாக  இருக்கும்.

சிந்தையையும் மனதையும் எப்போதும் என் பால் வைத்து என்று சொல்லும் போது பொருள் சற்று விளங்கும்.

காரியங்கள் என்ன செய்தாலும், சிந்தனை எல்லாம் ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.

"போதனைகளை புரிந்து கொண்டு" .... புரியாமல் சும்மா மீண்டும் மீண்டும் மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதில் பலன் இல்லை.

"ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு" ... நமக்கு தெரிந்த அறிந்த உண்மைகளை நம்மோடு  வைத்துக் கொள்ள கூடாது. மற்றவர்களுக்கும் சொல்லி அவர்களையும் நல் வழி படுத்த முயல வேண்டும். அது மட்டும் அல்ல, மற்றவர்களோடு பேசும் போது , நாம் அறிந்து வைத்து இருப்பது சரிதானா  என்றும் அறிந்து கொள்ளலாம். இத்தனை ஆயிரம் உரைகள் கீதைக்கு ஏன் எழுதப் பட்டது ?  தெரிந்ததை,அறிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கீதை என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு என்று எழதப் பட்டது என்ற குற்றச் சாட்டு இந்த ஸ்லோகத்தில் அடிபட்டுப்  போகும்.

கீதை , உண்மைகள் எல்லோரையும் போய் சேர வேண்டும் என்று  எண்ணுகிறது. 

அப்படி செய்வதால் என்ன கிடைக்கும் ?

மகிழ்ச்சியும் இன்பமும் கிடைக்கும்.

முதலில் மனம் ஒன்று பட வேண்டும்.

இரண்டாவது போதனைகளை புரிந்து கொள்ள வேண்டும்

மூன்றாவது புரிந்து கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்


1 comment:

  1. I think this line can be avoided. no need to mention. We leave it to the readers to decide. As long as we say facts no issues.
    கீதை என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு என்று எழதப் பட்டது என்ற குற்றச் சாட்டு இந்த ஸ்லோகத்தில் அடிபட்டுப் போகும்.

    ReplyDelete