Friday, May 9, 2014

கீதை - 10.11 - அறியாமை விலகி அறிவு தோன்றும்

கீதை - 10.11 - அறியாமை விலகி அறிவு தோன்றும்

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः ।
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ॥१०- ११॥

தேஷாமேவாநுகம்பார்த²மஹமஜ்ஞாநஜம் தம: |
நாஸ²யாம்யாத்மபா⁴வஸ்தோ² ஜ்ஞாநதீ³பேந பா⁴ஸ்வதா || 10- 11||

தேஷாம் = அவர்களுக்கு
எவ = நிச்சயமாக
அநுகம்பார்த = சிறப்புடன் இரக்கப்பட்டு
அஹம் = நான்
அஜ்ஞாநஜம்= அறியாமை
தம: = இருள் 
நாஸயாமி = விலக்குகிறேன்
ஆத்ம பாவ = அவர்கள் மனதில்  
ஸ்தோ = இருந்து
ஞாந = ஞானம்
தீபேந = என்ற விளக்கை
பாஸ்வதா = ஒளி விளங்கச் செய்கிறேன்

அவர்களுக்கு இரங்கி, நான்,  நான் அவர்களின் மனதின் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றுவேன்.


வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறோம். இரவு ஒரு எட்டு மணி இருக்கும். கதவை திறந்து சுவிட்சை ஆன் செய்கிறோம். வீட்டில் மின்சாரம் இல்லை. பொருள்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை. தட்டு தடுமாறி முட்டி மோதிக் கொள்கிறோம்.

ஒரு வழியாக இடம் கண்டுபிடித்து அமர்கிறோம். சிறிது நேரத்தில் மின்சாரம் வருகிறது. விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அனைத்து பொருள்களும் தெளிவாகத் தெரிகின்றன.

இருள் நாம் பொருள்களை அறிந்து கொள்வதை தடுக்கிறது.

வெளிச்சம் நாம் பொருள்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

வெளிச்சம் பொருள்களை உருவாக்குவது இல்லை. அது இருக்கின்ற பொருள்களை சரியாக  புரிந்து கொள்ள உதவுகிறது.

அறியாமை என்ற இருள் நம் அறிவை சூழ்ந்து இருக்கும் வரை நம்மால் உலகை சரியாக அறிந்து கொள்ள முடியாது.

அறிவு வரும் போது , அதன் ஞான தீபத்தில் நம்மால் உலகை சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஞானம் வரும் வரை நாம் உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாது..இருட்டில் பொருள்களை அறிந்து கொள்வது மாதிரி இருக்கும்.

மின்சாரம் வந்தவுடன் விளக்கு எரிகிறது. விளக்கு எரியும் போது எல்லாம் தெளிவாகத் தெரிகிறது.

அன்பு ஞானத்தைத் தரும்.

ஞானம் அறியாமையை போக்கி அறிவைத் தரும்.



1 comment:

  1. RS Super explanation

    மின்சாரம் வந்தவுடன் விளக்கு எரிகிறது. விளக்கு எரியும் போது எல்லாம் தெளிவாகத் தெரிகிறது.

    அன்பு ஞானத்தைத் தரும்.

    ஞானம் அறியாமையை போக்கி அறிவைத் தரும்.

    ReplyDelete