Sunday, May 25, 2014

கீதை - 10.16 - அறிவின் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா?

கீதை - 10.16 - அறிவின் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா ?


वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥१०- १६॥

வக்துமர்ஹஸ்யஸே²ஷேண தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
யாபி⁴ர்விபூ⁴திபி⁴ர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட²ஸி || 10- 16||


வக்தும் = சொல்ல 
அர்ஹஸ் = உன் பெருமைகளை
அஸேஷேண = முழுவதும்
திவ்யா = தெய்வீக
ஹி = நிச்சயமாக
ஆத்ம = உன்
விபூ⁴தய:  = மகிமைகளை 
யாபி = எதனால்
விபூ⁴திபி = மகிமைகள்
லோகான் = அனைத்து உலகங்களும் 
இமாம் = இந்த
ஸ்த்வம் = நீ
வ்யாப்ய = சூழுந்து
திஷ்ட²ஸி = இருக்கிறாயோ

இந்த மகிமையால் இந்த உலகனைத்தும் நீ சூழ்ந்து இருக்கிறாயோ, அந்த பெருமைகளை நீ எனக்கு மிச்சமின்றி சொல்ல வேண்டுகிறேன். 

நம்பிக்கைக்கும் அறிவுக்கும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அறிவு அனைத்தையும் பகுத்துப் பார்க்க முயல்கிறது. எதையும் சரி பார்க்க விரும்புகிறது. எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறது.

நம்பிக்கை எதையும் ஆராய்வது  இல்லை.அது நம்புகிறது. அவ்வளவுதான். 

இருந்தும் அறிவு விடுவது இல்லை. கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

கண்ணன் சொல்கிறான் அனைத்து உலகுக்கும் ஆதாரம் நான்  தான் என்று. மனம் நம்பினாலும் அறிவு ஏற்க  மறுக்கிறது.

கடவுளே நேரில் வந்து நான் தான் கடவுள் என்று சொன்னாலும் அறிவு ஏற்க மறுக்கிறது. 

மீண்டும் அர்ஜுனன் கேட்க்கிறான், உன் பெருமைகளை நீ எனக்கு மிச்சமின்றி சொல் என்று. 

நீ எனக்கு உணர்த்து என்கிறான். அப்படி என்றால் இதுவரை சொன்னதை அவன் புரிந்து  கொள்ளவில்லை. சந்தேகம் இருக்கிறது. இதில் ஏதோ இன்னும்  இருக்கும் போல  இருக்கே.ஏதோ  குறைகிறதே.மீதியையும் சொல் கண்ணா என்று அவனிடமே கேட்க்கிறான்.

எவ்வளவு மிச்சம் என்று எப்படித் தெரியும் ? இது அறிவின் செயல். எப்போதும் முழுமை  காணாது. ஒன்றைச் சொன்னால் அதில் இருந்து ஆயிரம் மேல் கேள்விகள்  கேட்க்கும். கேள்வி கேட்பதும், சந்தேகப் படுவதுமே  அதன் வேலை. 

அறிவு என்றுமே நிறைவு காணாது. அதனால் உண்மையை ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. அது தேடிக் கொண்டே இருக்கும். 

இறைவனே நேரில் வந்து நான் தான் கடவுள் என்று சொன்னாலும்,  
நம்பாது.

அறிவின் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா ? முடியாது என்றே தோன்றுகிறது. 





1 comment: