Wednesday, May 14, 2014

கீதை - 10.14 - பக்தியும் ஞானமும்

கீதை - 10.14 - பக்தியும் ஞானமும் 


सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवाः ॥१०- १४॥

ஸர்வமேதத்³ருதம் மந்யே யந்மாம் வத³ஸி கேஸ²வ |
ந ஹி தே ப⁴க³வந்வ்யக்திம் விது³ர்தே³வா ந தா³நவா: || 10- 14||


ஸர்வம் = அனைத்தும்

எதத் = இந்த

ருதம் = உண்மை

மந்யே = நான் ஏற்றுக் கொள்கிறேன்

யந் = எதை

மாம் = எனக்கு

வத³ஸி = நீ சொன்னாயோ

கேஸ²வ  = கேசவா

ந = இல்லை

ஹி = உறுதியாக

தே = உன்

ப⁴க³வந்  =  இறை தன்மை

வ்யக்திம் = சொருபத்தை

விது³ர் = அறிதல்

தே³வா = தேவர்கள்

ந = இல்லை

தா³நவா: = அசுரர்கள்


கேசவா, உன்  பெருமைகளை உண்மை  என்று அறிந்தேன். தேவர்களும் அசுரர்களும் இந்த  உண்மையை அறிவார்களா ?

அர்ஜுனன் சொல்கிறான் தான் உண்மையை அறிந்து கொண்டதாக. அவனுக்குள்  ஒரு சந்தேகம், "இந்த உண்மையை தேவர்களும் அசுரர்களும் அறிவார்களா " என்று.

தேவர்கள் அறிய மாட்டார்கள் ஆனால் அர்ஜுனன் அறிந்து கொண்டான். எப்படி ?

அசுரர்கள் அறிய மாட்டார்கள் என்று சொல்லுவதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கலாம். ஆனால் தேவர்களும் அறிய மாட்டார்கள் என்று ஏன் சொல்ல வேண்டும் ?

தேவர்கள் அசுரர்கள் என்பதை ஏதோ ஆட்கள் என்று நினைக்க வேண்டாம்.

அசுரர்கள் எதையும் உணர்ச்சி பூர்வமாக அணுகுபவர்கள். தாங்கள் நினைத்ததை  அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள். சரியா தவறா என்பதெல்லாம்  தெரியாது.  மாற்றான் மனைவி அழகாக இருக்கிறாள் என்றால் தூக்கி  வந்து விட வேண்டியது.

தேவர்கள், படித்தவர்கள், நல்லது கெட்டது அறிந்தவர்கள்.

இப்படி அறிவாலும், உணர்ச்சியாலும் இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியாது.

ஞானமும் பக்தியும் உண்மையை அறிந்து கொள்ள முடியாது என்றால் பின் எதுதான்  உதவும் ?

இப்படி யோசிப்போம் ...

வெறும் அறிவு மட்டும் உதாவது.

வெறும்  உணர்ச்சி மட்டும் உதாவது.

இரண்டும் கலந்த ஒன்றால், முழுமையான மனிதனால் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

சிலர், ஞானம் மட்டுமே போதும் என்று அறிவின் பாதையில் போகிறார்கள்.

சிலர், பக்தி மட்டுமே போதும் என்று பதியின் பின்னால் போகிறார்கள்.

உண்மை என்பது முழுமையான ஒன்று. அதை முழுமையான மனிதனால்  மட்டுமே அறிந்து  கொள்ள முடியும்.

எனவே, அர்ஜுனன் வாயிலாக வியாசர் சொல்கிறார் "தேவர்களும் அசுரர்களும்  இதை அறிவார்களா" என்று.

பக்தி யோகத்தையும் ஞான யோகத்தையும் ஒரு புள்ளியில் நிறுத்தும் சுலோகம் இது.


1 comment:

  1. Good one Both are very important

    வெறும் அறிவு மட்டும் உதாவது.

    வெறும் உணர்ச்சி மட்டும் உதாவது.

    இரண்டும் கலந்த ஒன்றால், முழுமையான மனிதனால் உண்மையை அறிந்து கொள்ள முடியும்
    பக்தி யோகத்தையும் ஞான யோகத்தையும் ஒரு புள்ளியில் நிறுத்தும் சுலோகம் இது.

    ReplyDelete