Friday, May 2, 2014

கீதை 10.3 - நானே உலகின் பெருந்தலைவன்

கீதை 10.3 - நானே உலகின் பெருந்தலைவன் 



यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥१०- ३॥

யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 10- 3||

யோ = யாரேனும்

மாம் = என்னை

அஜம் = பிறப்பு இல்லாதவன்

அனாதிம் = தொடக்கம் இல்லாதவன்

ச = மேலும்

வேத்தி = அறிதல்

லோக = உலகில் 

மஹேஸ்²வரம்  = பெருந்தலைவன்

அஸம்மூட = மயக்கம் அற்ற

ஸ = அவன்

மர்த்யேஷு = இறக்கும் மனிதற்குள்ளே

ஸர்வபாபை: = பாவங்களில் இருந்து

ப்ரமுச்யதே  = விடுபடுகிறான்

என்னை பிறப்பு இல்லாதவன், தொடக்கம் இல்லாதாவன், உலகின் பெரும் தலைவன் என்று உணர்பவன் மாநிடற்குள்ளே மயக்கம் தீர்ந்தவன், பாவம் அனைத்திலும் இருந்து விடுபட்டவன்.

தெருவில் சென்று கொண்டு இருக்கிறோம். முன்னிரவு நேரம். சாலை ஓரம் ஏதோ நெளிந்து  கிடக்கிறது. பாம்பாக இருக்குமோ என்று நினைக்கிறோம். சற்று நெருங்கி பார்த்தால் தெரிகிறது அது  பாம்பு அல்ல கயறு என்று.

பாம்பு தோன்றியது, பின் மறைந்தது.

தோற்றங்கள் , தோன்றும் பின் மறையும்.

உண்மை அல்லாதது நிரந்தரம் அல்லாதது.

உண்மை என்பது எப்போது நிலைத்து நிற்கும். அது தோன்றியதும் இல்லை, மறைவதும் இல்லை. அது ஆதியில் இருந்தே இருப்பது. அந்த உண்மையை அறிந்தவன் பாவங்களில் இருந்து விடுபடுவான்.


" நான் இந்த உலகின் பெருந்தலைவன்"

"லோக" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு உலகம் என்று பொருள் சொல்கிறார்கள். அதை விட சிறந்த பொருள் "அனுபவம்" என்பது.

(Sanskrit; Pāli, world). The world or universe, in both a cosmological and psychological sense. In the former it is the habitat of gods and human beings, and in the latter all that can be known or experienced through the senses. 

Read more: http://www.answers.com/topic/loka#ixzz30ZwryzFw


நான் இந்த அனுபவங்களின் பெருந்தலைவன் என்று சொல்லும்போது, வியாசர் குறிப்பிடுவது அனுபவங்களை பெற்று, அவற்றை அனுபவிக்கும் "நான்" என்ற என்னை.

நமக்குள் இருக்கும் அந்த "நான்" தான் இந்த உலகங்களின் பெருந்தலைவன்.

நாம் இந்த புற மற்றும் அக உலகங்களை அறிவது நம் அறிவு,  ஞானம்,மனம் என்று  சொல்லப்படும் அதனால்.

இதை அறிபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.

பாவம் பயத்தில் இருந்து, அறியாமையில் இருந்து, ஆசையில் இருந்து  பிறக்கிறது.

உண்மை அறியப் படும்போது பயம் விலகுகிறது, ஆசை விலகுகிறது, அறியாமை விலகுகிறது...எனவே பாவமும் விலகும்.

சிந்திப்போம்





1 comment:

  1. I like this
    உண்மை அறியப் படும்போது பயம் விலகுகிறது, ஆசை விலகுகிறது, அறியாமை விலகுகிறது...எனவே பாவமும் விலகும்.

    ReplyDelete