Saturday, May 4, 2013

15. கீதை - இரண்டாம் அத்யாயம் - முன்னுரை


கீதை - இரண்டாம் அத்யாயம் - முன்னுரை

கீதையின் இரண்டாம் அத்யாயம் 72 ஸ்லோகங்களை கொண்டது. கீதையின் மொத்த சாரமும் இந்த அத்யாயத்தில் அடங்கி இருக்கிறது.

பக்தி , ஞான, கர்ம மற்று சன்யாச யோகங்களை ஒரே மூச்சில் சொல்லி முடிக்கிறது இந்த அத்தாயம்.

இதன் விரிவாக்கம் தான் மற்ற அத்யாயங்கள்.

இந்த அத்யாயத்திர்க்கு சாங்கிய யோகம் என்று பெயர். சாங்கிய என்றால் சிந்தனையின் தத்துவம் (philosophy of thought ) என்று பொருள்.

இந்த அத்த்யாயம் சரணாகதி தத்துவத்தையும் விளக்குகிறது.

பகவத் கீதை எழுதப்பட்ட காலம், இந்து சமயத்தை பொறுத்தவரை ஒரு குழப்பமான காலம். பக்தியா, ஞானமா, கர்மமா என்று பல் வேறு குழுக்களாக பிரிந்து, ஒன்றொன்று சண்டை இட்டுகொண்டிருந்த காலம்.

இவற்றை ஒன்றிணைத்து இந்து சமயத்திற்கு ஒரு புத்துயிர்ப்பை வியாசர் கீதையின் மூலம் தருகிறார்.

இந்த மூன்று மார்க்கங்களும் ஆத்மா இறைவனை அடையும் முயற்சியின் விளைவுகள் தான் என்று அவற்றை ஒருங்கிணைக்கிறார்.

மேலும் பார்ப்போம்....

No comments:

Post a Comment