Saturday, May 18, 2013

23 - கீதை - யாருக்காக கவலைப் படவேண்டும் ?


23 - கீதை - யாருக்காக கவலைப் படவேண்டும் ?



கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறான்.

அர்ஜுனா, நீ முதலில் குழந்தையாய் இருந்தாய், பின் பாலகனாய், இளைஞனாய் ஆனாய். இன்னும் கொஞ்ச நாளில் வயதான கிழவனாய் ஆவாய். உன் தோற்றம் மாறிக் கொண்டே இருக்கிறது அல்லவா. ஆனாலும் அர்ஜுனன் என்ற நீ அப்படியே இருக்கிறாய்.

எப்படி இந்த உடல் மாறிக் கொண்டே இருக்கிறதோ அது போல் உடலினின் உள் இருக்கும் ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்கு மாறி கொண்டு இருக்கிறது.

அர்ஜுனா, நீ துயர் படத் தகாதர் பொருட்டு துயர் படுகிறாய். அதே சமயம் ஞானப் பேச்சும் பேசுகிறாய் என்றான் கண்ணன்.

அது என்ன துயர் படத் தகாதார் ?

முதல் அத்யாயத்தில் அர்ஜுனன் சொன்னான், போரினால் குலம் அழியும், குலம் அழிந்தால் பித்ருக்கள் நீர் கடன் கிடைக்காமல் அவதி உருவார்கள் என்று. அப்படி என்றால் அர்ஜுனனுக்கு ஆத்மா என்பது பற்றி தெரிந்து இருக்கிறது. முன்னோர்கள் உடல் அழிந்த பின் ஆத்மாவாக இருப்பார்கள் என்று ஞானப் பேச்சு பேசுகிறான்.

அப்படி ஆத்மா  இருப்பது உண்மையானால், அப்படி  அர்ஜுனன் நம்பினால், உடல் இறப்பதை பற்றி ஏன் கவலைப் பட வேண்டும் ? அர்ஜுனன் வாசித்து இருக்கிறான் ஆனால் அவன் ஞானம் பெறவில்லை. கல்வி வேறு ஞானம் வேறு.

 அர்ஜுனா, இறந்தார்கேனும் இருந்தார்கேனும் அறிஞர்கள் துரப் பட மாட்டார்கள் என்றான் கண்ணன் ?

ஏன் ? இறந்தவர்களை பற்றி கவலைப் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை. இருப்பவர்கள் இறப்பது என்பது தவிர்க்க முடியாதது.  இருப்பும் இறப்பும் கடலின் அலை போல. விழுந்தாலும் எழுந்தாலும் அலை கடலைத் தவிர்த்து வேறு அல்ல.

ஐயோ, அந்த அலை போய் விட்டதே என்றோ, ஐயோ இந்த அலை போய் விடப் போகிறதே என்றோ கவலைப் படுவதில் ஒரு பலனும் இல்லை. மாறுகின்ற அலையின் அடியில் கடல் சாஸ்வதமாய் இருப்பதைப் போல மாறும் இந்த உடல்களுக்குப் பின்னே ஆத்மா சாஸ்வதமாய் இருக்கிறது....

ஆத்மாவின் குணங்களை பற்றியும், அதற்க்கும் இந்த உடலுக்கும் உள்ள தொடர்பை பற்றியும் மேலும் கண்ணன் சொல்கிறான்....

என்ன சொல்கிறான் ? பார்ப்போம்....

No comments:

Post a Comment