Saturday, May 18, 2013

26 - கீதை - கீதை இந்த கால கட்டத்திற்கு பொருந்துமா ?


26 - கீதை - கீதை இந்த கால கட்டத்திற்கு பொருந்துமா ?


எனக்கு தெரிந்த ஒரு மருத்துவர் இருந்தார். மிகச் சிறந்த மருத்துவர். இருபது வருடங்களுக்கு முன்னால் வயிற்று வலி என்று அவரிடம் போனேன். நல்ல மருந்து தந்தார். குணமாகி விட்டது.

இருபது வருடம் கழித்து மீண்டும் எனக்கு வயிற்று வலி. அன்று தந்த மாதிரையையை சாப்பிடலாமா ? மருத்துவர் சிறந்தவர் தான். மருந்தும் சிறந்த மருந்து தான். இருந்தாலும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் தந்த மருந்தை (புதிதாக அதை கடையில் வாங்கினாலும்) உண்பது சரியா அல்லது ஒரு மருத்துவரிடம் நம் உடலை காண்பித்து இப்ப வந்த வயிற்று வலிக்கு என்ன காரணம் என்று கண்டு அதற்க்கு தகுந்த மாத்திரை சாப்பிடுவது சரியா ?

அது போகட்டும்

என் நண்பர் ஒருவர் தலை வலி என்று ஒரு மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உண்டு குணமடைந்தார். எனக்கு தலைவலி வந்தால், அதே மருந்தை நானும் உண்ணலாமா அல்லது நான் ஒரு மருத்துவரிடம் போய்  என் உடலை காண்பித்து என் தலை வலிக்கு மருந்து கொள்வது சரியா ?

நண்பரின் மருந்து நமக்கு சரிப்படாது

நமக்கே இருபது முப்பது வருடங்களுக்கு முன் கொடுத்த மருந்து இப்போது சரிப்படாது

பின் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்கு, அந்த போர் களத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கிருஷ்ணன் என்ற மருத்துவன் தந்த மருந்து இன்று போர்க்களத்தில் இல்லாத நமக்கு சரிப்படும் ?

உறவினர்களையும், ஆசிரியரையும் நாம் கொல்வதற்கு நின்றால் ஒரு வேளை நமக்கும் கீதை பயன்படலாம்...நாம் என்ன யுத்தம் செய்யவா நிற்கிறோம்...எதற்கு அனாவசியமாய் கீதையையை படிக்க வேண்டும்....

No comments:

Post a Comment