Thursday, May 23, 2013

31 - பொருள்களின் ஆறு நிலைகள்

31 - பொருள்களின் ஆறு நிலைகள் 



ஆத்மா உண்டாவதும் இல்லை. ஆத்மா அழிவதும் இல்லை. அது உலகம் தோன்றிய காலத்தில் தோன்றவில்லை. உலகம் அழியும் போது அது அழிவதும் இல்லை. ஆத்மா பிறக்காதது, இறக்காதது, மாறாதது. மிகப் பழமையானது. இந்த உடல் அழிந்தாலும், ஆத்மா அழிவது இல்லை.

உலகில் உள்ள அனைத்து பொருள்களும் ஆறுவிதமான நிலைகளை அடைகின்றன. அவை

உண்டாவது
இருப்பது
வளர்வது
மாறுவது
தேய்வது
அழிவது

நாம் காணும் அனைத்தும் இந்த ஆறு வித நிலைகளுக்கு உட்பட்டவை.

தோன்றுவது என்றால் ஏதோ ஒன்றில் இருந்து தான் தோன்ற வேண்டும். அந்த ஏதோ ஒன்று ஆத்மாவிற்கு முந்தைய ஒன்றாக இருக்கும். ஆத்மா தோன்றுவதே இல்லை. எனவே அதற்க்கு முன்னால் என்று ஒன்று கிடையாது. தோன்றும் எதுவும் அழிய வேண்டும். ஆத்மா தோன்றாததால் அதற்க்கு அழிவு என்று ஒன்று கிடையாது.

அது என்றும் எப்போதும் நிரந்தரமாய் இருக்கிறது.

நான் என்பது இந்த உடல் அல்ல என்ற எண்ணம் ஏற்படும் போது, எதிரில் உள்ளவனும் உடல் அல்ல என்ற எண்ணம் ஏற்படும்.

எல்லாவற்றிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான் என்ற எண்ணம் உணரப்பட்டால் கொல்வதும், கொல்லப்படுவதும் வேறு அர்த்தம் கொள்ளும்.

இன்னும் கொஞ்சம் ஸ்லோகங்களை பார்த்து விட்டு இது பற்றி மேலும் சிந்திப்போம்,

No comments:

Post a Comment