Saturday, May 18, 2013

25 - கீதை - எது பொய் ?


25 - கீதை - எது பொய் ?


அர்ஜுனா, இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாதாகாது. உண்மையான ஞானிகள் இதன் உண்மையை அறிவார்கள்.

ரொம்ப ஆழமான வாக்கியம்.

எது உண்மையோ அது முதலிலும், நடுவிலும், இறுதியிலும் இருக்கும். இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

எது முதலில் இல்லையோ, அது உண்மையாகாது.
எது நடுவில் இல்லையோ, அது உண்மையாகாது.
எது இறுதியில் இல்லாமல் போகுமோ, அது உண்மையாகாது.

இந்த உடல் முதலில் இல்லாமல் இருந்தது, பின் வந்தது, இறுதியில் இல்லாமல் போய் விடும் எனவே இது உண்மையானது அல்ல.

உண்மை என்பது எல்லா காலத்திலும் நிரந்தரமாய் இருப்பது . தோன்றி மறைவது உண்மையான ஒன்றாய் இருக்க முடியாது.

தோன்றி மறைவன உண்மைகள் அல்ல.

இளமை, சுகம், துக்கம், செல்வம், உறவு இவை  எல்லாம் வரும், போகும். இவை நிரந்தரமானவை அல்ல.

நிஜம் இல்லாத ஒன்றுக்கு ஏன் கவலைப் பட வேண்டும் ?

சரி. அப்படி என்றால், எது தான் நிரந்தரம், எது தான் நிஜம், எது தான் சாஸ்வதம் என்ற கேள்வி எழும் அல்லவா ?

அந்த கேள்விக்கும் கிருஷ்ணன் பதில் தருகிறான்....

No comments:

Post a Comment