Saturday, May 18, 2013

24 - கீதை கொலையை ஞாபபடுத்துகிறதா ?


24 - கீதை கொலையை ஞாபபடுத்துகிறதா ?


இனிவரும் ஸ்லோகங்கள் சற்று சிக்கலானவை.

அர்ஜுனா, நானோ, நீயோ, இந்த மன்னர்களோ இதற்கு முன்னால் எப்போதும் இல்லாமல் இருந்தது இல்லை, இனிமேலும் இல்லாமல் இருக்கப் போவதும் இல்லை.

இதை எப்படி புரிந்து கொள்வது ?

சில உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

நாம், ஒரு நாற்பது வயது ஆளைப் பார்க்கும் போது அவர் முப்பது வயது, இருபது வயது, பத்து வயது என்று இருந்து இப்ப நாற்பது வயது ஆளாய் ஆகி இருக்கிறார். அவர் திடீரென்று நாற்பது வயது ஆளாய் தோன்றி விடவில்லை. தோற்றம் மாறி இருக்கிறது. ஆள் அதே தான். அவர் ஒன்றும் இல்லாமல் இருந்து திடீரென்று வந்து விடவில்லை.

அதே போல் நாம் இதுவரை இல்லாமல் இருந்து, ஒரு சூன்யத்தில் இருந்து முளைத்து விடவில்லை. ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாக நாம் இருந்து கொண்டு இருக்கிறோம்.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் கூட நாம் பல வேதி பொருள்களின் தொகுப்பு. கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் பாஸ்பரஸ், கொஞ்சம் இரும்பு , கொஞ்சம் கார்பன்  இவற்றின் தொகுப்பு தான் நாம். நாம் இறந்த பின் அந்த தனிமங்கள் பழையபடி அதனதன் நிலைமைக்கு திரும்பி போய் விடுகின்றன. அதில் ஒன்றும் சந்தேகம் கிடையாது.

நாம் என்றும் இருந்தோம். என்றும் இருப்போம். தோற்றம் மாறலாம். அணுக்களின் தொகுதி மாறலாம்.

நம் உடம்பில் உள்ள சில அணுக்கள் அர்ஜுனனின் உடம்பில் இருந்த அணுக்களாகக் கூட இருக்கலாம். சில அணுக்கள் தேய்ந்து (decay ) மற்றொரு அணுவாக மாறி விடுவது உண்டு. உதாரணமாக கார்பன் 12 அணு 5000 வருடத்தில் நைட்ரஜென் 12 அணுவாக மாறிவிடும். ஆனால் சில அணுக்கள் தேய்வதே இல்லை.

எனவே பிறப்பு, வளர்தல், இறத்தல் எல்லாமே இந்த அணுக்களை சேர்ப்பதும் பிரிப்பதும்தான்.

அப்படி என்றால், கொல்வது பாவம் இல்லையா ? யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாமா ? அர்ஜுனனுக்கு ஒரு நீதி நமக்கு ஒரு நீதியா ?

கீதை கொலையை ஞாயப் படுத்துகிறதா ? உயிர் கொலை பாவம் இல்லையா ?

மேலும் பார்ப்போம்....

No comments:

Post a Comment