Friday, May 3, 2013

14. பகவத் கீதை - அறம் இன்பத்தின் அடிப்படை


பகவத்  கீதை - அறம்  இன்பத்தின்  அடிப்படை



போர் ஆரம்பிக்கும் முன் துரியோதனன் துரோனாசாரியரிடம் சென்று, "ஆசாரியரே, பீமனால் அணி வகுக்கப்பட்ட அவர்களின் சேனை நன்றாக இருக்கிறது. நம்முடைய சேனை மன நிறைவை தரவில்லை " என்கிறான்

கௌரவர்களின் சேனையின் அளவு பதினொரு அக்ரோணி

பாண்டவர்களின் சேனையின் அளவு ஏழு அக்ரோணி

கௌரவர்களின் பக்கம் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் இருக்கின்றனர்

பாண்டவர்கள் பக்கம் சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை. கிருஷ்ணன் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்து இருக்கிறான்

இருந்தாலும் துரியோதனனுக்கு தன் சேனையின் மேல் நம்பிக்கை இல்லை

நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல நம் சந்தோஷத்திற்கு காரணம். அடுத்தவன் எவ்வளவு வைத்து இருக்கிறான் என்பதில் தான் நம் சந்தோஷம் அடங்கி இருக்கிறது

தனக்கு கிடைத்தவற்றில் சந்தோஷமோ, திருப்தியோ இல்லாதாவர்கள் வாழ் நாள் எல்லாம் எப்படி நிம்மதி இல்லாமல் அலைவார்கள் என்பதற்கு துரியோதனன் ஒரு உதாரணம்

துப்பாக்கி, பீரங்கி, படை பலம் எல்லாம் இருந்த ஆங்கிலேய அரசு இது எல்லாம் இல்லாத காந்திஜியை பார்த்து பயந்தது. அது சத்தியத்தின் பலம்.

படை பலம் எவ்வளவு இருந்தாலும், அறத்தின், தர்மத்தின் பலம் இல்லாவிட்டால் நிம்மதியும், சந்தோஷமும், நம்பிக்கையும் இருக்காது என்பது கீதையின் இன்னொரு பாடம்

No comments:

Post a Comment