Thursday, April 25, 2013

7. விஷாத யோகம்


விஷாத யோகம்


கீதையின் முதல் அத்தியாயம் விஷாத யோகம் என்று அழைக்கப் படுகிறது.

யோகம் என்றால் என்ன ?

யோகம் என்றால் ஒரு நெறிமுறை பட்ட வழியின் மூலம் குறிக்கோளை அடைவது (a disciplined way to achieving a goal).

ஒரு கட்டுப்பாட்டுடன், ஒரு ஒழுங்கு முறையான வழியில் எந்த ஒரு குறிக்கோளை அடைவதும் யோகம் எனப்படும்.

அது கர்ம யோகமாக இருக்கலாம், பக்தி யோகமாக இருக்கலாம், ஞான யோகமாக இருக்கலாம்....எல்லாம் யோகம் தான். (யோகா).

விஷாத என்றால் துன்பம், குழப்பம், சந்தேகம். "ஹத"  என்பது ஒரு மங்கலச் சொல். ஓம் என்பது மாதிரி. கீதை போன்ற ஒரு உயரிய நூல் துன்பம், குழப்பம் என்ற அமங்கலத்தொடு ஆரம்பிக்காமல் இருக்க விஷாத என்று ஒரு மங்கள சொல்லை சேர்த்து சொன்னார்கள்.

சந்தேகம், குழப்பம், துன்பம் இவை எல்லாம் எப்படி ஒரு யோகமாகும் ?

உண்மை, ஞானம் என்ற குறிக்கோளை அடைய சந்தேகம் ஒரு மார்க்கம். கேள்வி கேட்டு கேள்வி கேட்டு தான் தெளிவு பிறக்க வேண்டும்.

அர்ஜுனன் குழம்புகிறான். சந்தேகப் படுகிறான். உண்மையான சந்தேகம், பொய்யான நம்பிக்கையை விட உயர்ந்தது.

கீதை என்ற உயரிய ஞான நூல் அர்ஜுனனின் சந்தேகத்தால், அவனின் குழப்பத்தால் நமக்கு கிடைத்தது. ஒரு வேளை அவனுக்கு இந்த குழப்பமும், சந்தேகமும் வரமால் இருந்திருந்தால் நமக்கு கீதை என்ற பொக்கிஷம் கிடைத்து இருக்காது. சந்தேகமும், குழப்பமும் தர்மனுக்கோ, பீமனுக்கோ, நகுல சகாதேவர்களுக்கோ வரவில்லை. அர்ஜுனனும் அப்படி இருந்திருக்கலாம். அவன் அப்படி இல்லாதது நாம் செய்த புண்ணியம்.

விஷாத யோகம் நமக்கு அடித்த யோகம்.

அவனுக்கு என்ன குழப்பம், என்ன சந்தேகம், என்ன துன்பம் ?  பார்ப்போம்.

1 comment:

  1. Thought provoking. This is teaching us not to be intimidated by superiors. Ask questions, learn from the answers so that you can achieve your goal.

    ReplyDelete