Sunday, April 28, 2013

11. கீதை - 1.40 to 1.47 - வர்ணாசிரமம் - தர்ம சங்கடம்


கீதை - 1.40 to 1.47 - வர்ணாசிரமம் - தர்ம சங்கடம் 


இந்த எட்டு சுலோகங்களுடன் கீதையின் முதல் அத்தியாயம் முற்று பெறுகிறது.

சண்டை இடுவதால் என்ன பலன், உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று அதன் பின் வரும் அரசால் என்ன இன்பம், நான் சந்யாசியாக போகிறேன், என்று புலம்பிய பின், அடுத்த கட்டத்திற்கு போகிறான்.

மிக அதிகமான சர்ச்சைக்கு உள்ளான பகுதி இது.

வர்ணாசிரம தர்மம், ஜாதி அடிப்படையிலான ஒரு சமுதாயத்திற்கு கீதை அடிகோலுகிறது என்று விமர்சகர்கள் இந்த பகுதியை கடுமையாக தாக்கினார்கள்.

அர்ஜுனன் அப்படி என்ன சொன்னான் ?

யுத்தத்தால் ஆண்கள் மடிகிறார்கள். இதனால் குடும்பம் சிதைகிறது. குடும்பம் சிதைவதால், குலம் நாசம் அடைகிறது.

குலம் நாசம் அடைவதால், என்றும் உள்ள குல தர்மங்கள் சிதைகின்றன.

குல தர்மம் சிதைவதால், குலத்தினுள் அதர்மம் எழத் தலைபடுகிறது

குலத்தினுள் அதர்மம் எழுவதால், குலப் பெண்கள் நெறி பிறழ்வார்கள்.

குடும்பத்தின் ஆணி வேறான பெண்கள் நெறி தவறினால், வர்ண குழப்பம் உண்டாகிறது.

அப்படி வர்ண குழப்பத்தை ஏற்படுத்த்வோர்க்கும், அப்படி பட்ட குழம்பிய வர்ணத்தை சேர்ந்தவர்களுக்கும் நரகமே கிடைக்கும்.

வர்ண குழப்பம் ஏற்பட்டால், பிதுர்க்கள் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பிண்டமும் நீரும் இன்றி தவிப்பார்கள்

இதனால், தொன்று தொட்டு வரும் ஜாதி தர்மங்களும், குல தர்மங்களும் அழிந்து போகும்.

தர்மம் அழிந்த குலத்தில் உள்ள மனிதர்களுக்கு என்றென்றம் நரகமே கிடைக்கும்

நான் எவ்வளவு பெரிய தவறை செய்ய முற்படுகிறேன்

இதற்க்கு பதில், நிராயுத பாணியாக இருக்கும் என்னை அவர்கள் கொன்று விட்டால் கூட பரவாயில்லை

இப்படி சொல்லி விட்டு, வில்லையும் அம்புகளையும் போட்டு விட்டு, தேர் தட்டில் சோர்ந்து அமர்ந்து விட்டான்.

கீதை இதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறதா ? வியாசர் அர்ஜுனன் மூலம் இதைத்தான் சொல்ல வருகிறாரா ? இதற்க்கு கண்ணன் என்ன சொல்கிறான்.

இதை எல்லாம் கண்ணன் ஏற்றுக் கொண்டாலும் பிரச்னை, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பிரச்னை.

ஏற்றுக் கொண்டால், ஜாதியின் அடிப்படையில் கொண்ட ஒரு சமுதாயத்தை கண்ணன் ஏற்றுக் கொண்டதாக ஆகும்.

ஏற்றுக் கொள்ளாவிட்டால், குல தர்மம், ஜாதி விட்டு ஜாதி விட்டு திருமணம் செய்வது போன்றவற்றை கண்ணன் ஏற்றுக் கொள்வதாக ஆகும்.

இதற்கு என்னதான் தீர்வு ?

No comments:

Post a Comment