Friday, April 26, 2013

8. அர்ஜுனனின் குழப்பம் - யுத்தம் வேண்டாம், சன்யாசியாகப் போய் விடுகிறேன்


அர்ஜுனனின் குழப்பம் - யுத்தம் வேண்டாம், சன்யாசியாகப்  போய்  விடுகிறேன் 


நாம் சில சமயம் ஆசை பட்டு ஒரு விஷயத்தை தொடங்கி விடுவோம். வீடு வாங்குவது, கல்யாணம் பண்ணிக் கொள்வது, குழந்தைகளை பெற்றுக் கொள்வது, இப்படி பல விஷயங்களை நாம் அதில் உள்ள முழு சிக்கலையும், பிரச்சனைகளையும் அறியாமல் தொடங்கி விடுகிறோம்.

போகப் போக அதில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் நம்மை வாட்டத் தொடங்குகின்றன.

ஏண்டா இதில் காலை விட்டோம் என்று தவிக்கிறோம். எல்லாத்தையும் விட்டு விட்டு எங்காவது கண் காணாத இடத்துக்கு ஓடிப் போய் விடலாமா என்று தோன்றும். சன்யாசியாகப் போய் விடலாமா என்று தோன்றும்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்போம்.  அந்த தவிப்புதான் அர்ஜுனனுக்கு.

அர்ஜுனன் மிகப் பெரிய வீரன். பெரிய பலசாலி. வில் வித்தையில் அவனை மிஞ்ச ஆள் இல்லை...யுத்தம் என்று வந்து விட்டால் எல்லோரையும் வென்று இராஜியத்தை அடைந்து விடலாம் என்று நினைத்து இருந்தான்.

யுத்தம் தொடங்கப் போகிறது. கௌரவர்களின் சேனையையை பார்க்கிறான். அவனுக்கு சோர்வு உண்டாகிறது.

எப்படி நாம் இந்தப் படையை வெல்லப் போகிறோம் என்று சந்தேகம் வருகிறது. பயம் வருகிறது. வில் கையை விட்டு நழுவுகிறது. நா வரள்கிறது. ஆரம்பித்து விட்டோம், எப்படி முடிப்பது என்ற ஆயாசம் அவனை ஆட் கொள்கிறது.

அதை பயம் என்று அவன் சொல்லவில்லை. பூசி மெழுகுகிரான்.

புலம்ப ஆரம்பிக்கிறான். யுத்தமே வேண்டாம், சன்யாசியாகப் போய் விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறுகிறான்.

முன்பே கூறிய மாதிரி, நம் வாழ்க்கை களம் தான் குருஷேத்ரம். நாம் தான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மன நிலையில் இதுவரை எத்தனை முறை இருந்து இருக்கிறீர்கள் ?

அர்ஜுனன் என்னவெல்லாம் சொல்கிறான் தெரியுமா ?



No comments:

Post a Comment