Monday, April 22, 2013

3. கீதை - தர்மம் என்றால் என்ன ?


கீதை - தர்மம் என்றால் என்ன ?


தர்ம க்ஷேத்ர குரு ஷேத்ரே என்று கீதை ஆரம்பிக்கிறது.     

தர்மம் என்றால் என்ன ?    மிக மிக அடர்த்தியான ஒரு சொல்

தர்மம் என்றால் வைதீக கோட்பாடுகள் என்று ஒரு அர்த்தம் சொல்லப் படுகிறது. வேதம், உபநிடதம், சுருதி போன்றவற்றில் சொல்லப் பட்டது தர்மம் என்று குறிக்கலாம்

தர்மம் என்றால் நீதி, நியாயம், சரியான வழி என்றும்  ஒரு அர்த்தம் சொல்லப் படுகிறது

சமஸ்க்ரித மூல மொழியில் தர்மம் என்றால் எது தாங்கிப் பிடிக்கிறதோ, எது ஆதாரமாய் இருக்கிறதோ, எது துணையாக இருக்கிறதோ அது தர்மம் என்று சமஸ்கிரிதம் கூறுகிறது

எது இயற்கையோ, எது இயல்போ அது தர்மம். அப்படி என்றால் இயல்பு இல்லாதது அதர்மம். இயற்கைக்கு முரணானது அதர்மம்

இன்னும் ஒரு படி மேலே போவோம்.   எது இயற்கையோ, எது இயல்போ அது தர்மம்

எது இல்லாமல் ஒன்று இருக்க முடியாதோ, அது தான் அதன் இயற்க்கை, அதன் இயல்பு. எனவே, எது இல்லாமல் ஒன்றால் இருக்க முடியாதோ, அது அதன் தர்மம்

மென்மை மலரின் இயற்கை. மென்மை இல்லாவிட்டால், மலர் இல்லை. எங்காவது கடினமான மலர் இருக்கிறதா ?

எவ்வளவு ஆழமான விஷயம்...எவ்வளவு யோசித்திருந்தால் கீதை போன்ற ஒன்றை எழுதியிருக்க முடியும்...

No comments:

Post a Comment