Saturday, April 27, 2013

10. கீதையின் சிறப்பு அம்சங்கள்


கீதையின் சிறப்பு அம்சங்கள் 


மத்த புராண இதிகாசங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கீதை பல விதங்களில் வேறு பட்டு நிற்கிறது.

பொதுவாகவே இந்து மதத்தின் அனைத்து தத்துவார்த்த விளக்கங்களும் ஏதோ ஒரு கானகத்தில், ஒரு குரு அவருடைய சீடர்களுக்கு சொன்ன மாதிரி தான் இருக்கும். அனைத்து உபநிஷதங்களும் அப்படி சொல்லப்பட்டதுதான் (ஒன்றே ஒன்றை தவிர). உபநிஷத் என்றால் அருகில் அமர்வது என்று பொருள்.
இல்லை என்றால் ஒரு முனிவரோ, ரிஷியோ தங்களுக்குள் பிறந்த ஞானத்தை எழுதி வைத்து விடுவது உண்டு.

கீதை அப்படி அல்ல. போர்க் களத்தில், மிக  மிக ஒரு இக்கட்டான இடத்தில் கூறப் பட்ட ஒன்று.

கீதை யாருக்குச் சொல்லப் பட்டது ? வாழ்ந்து முடித்த வயதானவர்களுக்கு, போகும் வழிக்கு புண்ணியம் தேட சொல்லப் பட்டது அல்ல. குரு குலத்தில் கல்வி பயிலும் இளம் மாணவர்களுக்கு சொல்லப் பட்டது அல்ல.

வாழ்வின் நடுவில் நிற்கும், வாழ வேண்டிய, வாழ்க்கையோடு போராட வேண்டிய ஒரு பொறுப்புள்ள மனிதனுக்குச் சொல்லப் பட்டது.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திரு வாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.

மற்ற புராண இதிகாசங்களைப் போல் இல்லாமல் இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.

இப்படி பலப் பல சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டது கீதை.

No comments:

Post a Comment