Thursday, April 25, 2013

6. அர்ஜுனன் மன மாற்றம்


அர்ஜுனன் மன மாற்றம்


இரண்டு பக்கமும் சங்க நாதம் முழங்கியது. முரசு அதிர்ந்தது. வானமும் பூமியும் அந்த ஒலியில் அதிர்ந்தன.

அப்போது அர்ஜுனன் "கிருஷ்ணா, என் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து. என்னோடு சண்டையிட வந்திருப்பவர்கள் யார் என்று நான் பார்க்க வேண்டும்.

துரியோதனனுக்காக சண்டையிட வந்திருப்பவர்கள் யார் என்று நான் அறிய வேண்டும்."

அதை கேட்ட கிருஷ்ணன் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவில் செலுத்தினான்.

இந்த இடத்தில் நாமும் சற்று நிறுத்தி யோசிப்போம்.

சண்டை தொடங்குவது என்பது சர்வ நிச்சயமாகி விட்டது. யுத்தத்தை இனி தவிர்க்க முடியாது. அது நடந்தே தீரும்.

அர்ஜுனன் சண்டைக்கு தயாராகி விட்டான்.

மிக மிக தைரியாமாக, இரண்டு படைகளுக்கும் நடுவில் என் தேரை செலுத்து என்கிறான். எல்லோரையும் நோட்டம் விடுகிறான். அவனிடம் பயம் இல்லை. யுத்தத்துக்கு தயாராக இருக்கிறான். அது ஒரு முக்கியமான விஷயம்.

தேரை செலுத்திக்கொண்டே கிருஷ்ணன் சொல்கிறான் " அர்ஜுனா, குரு வம்சத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள்".

முதல் அத்தியாத்தில் கிருஷ்ணன் சொன்ன ஒரே ஒரு வாக்கியம் இது மட்டும் தான்.

அர்ஜுனன் பார்க்கிறான். மாமன், மைத்துனர்கள், வித்தை சொல்லிக் கொடுத்த குரு, பாட்டனார் பீஷ்மர், என்று அனைவரையும் பார்க்கிறான்.

அவன் மனம் மாறுகிறது......

No comments:

Post a Comment