Monday, April 29, 2013

12. கீதை - உண்மை எப்படி தரப்படுகிறது


கீதை - உண்மை எப்படி தரப்படுகிறது 



முதல் அத்தியாயத்தை தாண்டி அடுத்த அத்தியாயங்களை பார்க்கும் முன், முதல் அத்யாயத்தில் சில விஷயங்களை உன்னிப்பாக கவனிப்போம்.

முதலில், கீதை சொல்லப் பட்ட விதம். கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான். அதை சஞ்சயன் தன் ஞானகண்ணால் கண்டு கண் இல்லாத திருதராஷ்டிரனுக்கு சொன்னான்.

ஏன் இவ்வளவு சிக்கலான ஒரு முறை பாரதத்தில் கடை பிடிக்கப் பட்டது ?

வேறு எத்தனையோ வழிகளில் கண்ணன் கீதையை சொல்லி இருக்கலாம். பாண்டவர்கள் பதினான்கு வருடங்கள் கானகத்தில் இருந்த போது, எல்லோருக்கும் நிறுத்தி நிதானமாய் சொல்லி இருக்கலாம்.

உண்மை எப்போதுமே ஒருவருக்குத்தான் கிடைக்கிறது.

கூட்டங்களுக்கு அது வழங்கப் படுவது இல்லை.

அதீத தேடலும், முயற்சியும் உள்ள தனி நபர்களுக்கு உண்மை வெளிபடுகிறது.

ஒரு சங்கரர், ஒரு இராமானுஜர், ஒரு பரமஹசர்,ஒரு ஏசு கிறிஸ்து என்று எப்போதுமே அது தனி நபர்களுக்குத்தான் கிடைக்கிறது.

அப்படி கிடைத்த உண்மையை உலகுக்கு சொல்ல ஒரு தூதர், ஆசிரியர், குரு தேவைப் படுகிறது. எல்லோராலும் அந்த ஞானத்தை நேரே பெற முடிவதில்லை.

அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னதை, உலகுக்கு எடுத்துச் சொல்ல ஒரு சஞ்சயன் வேண்டி இருந்தது.

அர்ஜுனனே நேரே எல்லோருக்கும் சொல்லி இருக்கலாம். அவனிடம் உண்மையான தேடல் இருந்தது, தவிப்பு இருந்தது ஆனால் அந்த பிரசாதத்தை பெற்று மற்றவர்களிடம் தரும் பக்குவம் இல்லை. நடுவில் ஒரு சஞ்சயன் வேண்டி இருந்தது.

No comments:

Post a Comment