Wednesday, April 24, 2013

5. கீதை - பாரதப் போர் துவக்கம்


கீதை - பாரதப் போர் துவக்கம் 


அடுத்த எட்டு சுலோகங்களில் போர் ஆரம்பிப்பதை பற்றி சொல்கிறது கீதை.

துரியோதனன் துரோனாசாரியரிடம் பாண்டவர்களின் படைகளை பற்றியும் தங்களின் படை பலத்தையும் சொல்லிய பின், தன் படைத் தலைவர்களை பார்த்து "நீங்கள் எப்போதும் பீஷ்மரை பாதுகாக்க வேண்டும் " என்று சொன்னான்.

இதை கேட்டுக் கொண்டிருந்த பீஷ்மர், ஒரு சிங்க கர்ஜனை செய்து தன்னுடைய சங்கை ஊதினார்.

அந்த சங்க நாதம் தான் பாரதப் போரின் தொடக்கம்.

பாரதப் போரை தொடங்கியது கௌரவர்கள். பாண்டவர்கள் போரை ஆரம்பிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து கௌரவ சேனையில் உள்ளவர்களும் பாண்டவ சேனையில் உள்ளவர்களும் தங்கள் தங்கள் சங்கை ஊதினார்கள். முரசை அடித்து ஒலி உண்டாக்கினார்கள்.

யுத்தத்திற்கு இரண்டு பக்கமும் தயார்

அடுத்து என்ன ?

No comments:

Post a Comment