Friday, April 26, 2013

9. கீதை - 1.27 to 1.39 - இழப்பதும் பெறுவதும்


கீதை - 1.27 to 1.39 - இழப்பதும் பெறுவதும்


அடுத்து வரும் 13  சுலோகங்களில் அர்ஜுனனின் பயம், குழப்பம், சந்தேகம் எல்லாம் வெளிப்படுகிறது.

எதிர் அணியில் மட்டும் அல்ல தன அணியில் உள்ளவர்களையும் அவன் பார்க்கிறான். மாமா, மைத்துனர், பாட்டனார், குரு, உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரையும் பார்க்கிறான்.

என் மேனி நடுங்குகிறது, என் மயிர் கால்கள் குத்திட்டு நிற்கின்றன
என் காண்டீபம் என் கையையை விட்டு நழுவி போகின்றது.  என் மேனி முழுதும் எரிகின்றது.

நான் கெட்ட சகுனங்களை பார்க்கிறேன். என் உறவினர்களை யுத்தத்தில் கொல்வதால் நான் ஒரு பயனையும் காண்கிலேன்.

எனக்கு வெற்றியும் வேண்டாம், இராஜியமும் வேண்டாம், அது தரும் சுகங்களும் வேண்டாம். இத்தனை போரையும் கொன்று விட்டு வரும் அரசால் என்ன சுகம்.

என் பாட்டனாரையும், குருவையும் மற்ற உறவினர்களையும் கொன்று அதன் மூலம் இந்த இராஜ்ஜியம் மட்டும் அல்ல, மூன்று உலகங்களும் கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்.

இவர்களை கொல்வதால் நமக்கு பாவம் தான் வந்து சேரும்.
இவர்களை கொன்ற பின் நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்
அவர்கள்தான் அறிவில்லாமல் சண்டை இட வந்து இருக்கிறார்கள் என்றால் அதே முட்டாள்தனத்தை நாமும் ஏன் செய்ய வேண்டும்

அர்ஜுனன் பலனை மட்டும் எதிர்பார்த்து யுத்தத்திற்கு வந்து விட்டான். அதன் விளைவுகளை அவன் எடை போடவில்லை. எதை அடையப் போகிறோம் என்பதிலேயே கவனமாய் இருந்தான். எதை இழக்கப் போகிறோம் என்பதை அவன் அறியவில்லை.

ஒன்றை அடைய ஏதோ ஒன்றை இழக்க வேண்டியிருக்கும் என்ற முதல் பாடம் இங்கு கிடைக்கிறது.

அடுத்த முறை எதையாவது நீங்கள் அடைய முயன்று கொண்டிருந்தால், எதை இழக்கப் போகிறீர்கள் என்றும் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

"அர்ஜுனா, நீ சொல்வதும் சரிதான். எதற்கு இவ்வளவு உயிர் சேதம். அவர்களே ஆளட்டும். நீ சொன்னது போல் நீ சந்நியாசியகப்  போய் விடு. இந்த யுத்தமே வேண்டாம்" என்று கிருஷ்ணன் சொல்லி இருக்கலாம்.

சொல்லவில்லை. அதற்க்கு மாறாக வேறு சிலவற்றை சொல்கிறான்.

அது.....

No comments:

Post a Comment